Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Varai Sollatha Kavithai
Ithu Varai Sollatha Kavithai
Ithu Varai Sollatha Kavithai
Ebook225 pages1 hour

Ithu Varai Sollatha Kavithai

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580106004205
Ithu Varai Sollatha Kavithai

Read more from Jaisakthi

Related to Ithu Varai Sollatha Kavithai

Related ebooks

Reviews for Ithu Varai Sollatha Kavithai

Rating: 2.5 out of 5 stars
2.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Varai Sollatha Kavithai - Jaisakthi

    http://www.pustaka.co.in

    இது வரை சொல்லாத கவிதை

    Ithu Varai Sollatha Kavithai

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    நல்லாச் சிரிடி! என்றாள் கற்பரசி அல்லியிடம்.

    அல்லி உண்மையாகவே சிரித்தாள்.

    ஏண்டி.. இப்படிப் பண்றே! என்று கடிந்து கொண்டார்கள் தோழிகள்.

    எப்படிப் பண்றேன்? என்று மறுபடியும் சிரித்தாள் அல்லி.

    எல்லாரையும் முட்டாள் பண்றியே என்றாள் இந்துமதி.

    இதபாரு! நான் முட்டாள் பண்றேனா? நீங்க முட்டாளாயிக்கறீங்க..! அதுக்கு.. நானா.. பொறுப்பு..? என்றாள்.

    கற்பரசியும், இந்துமதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

    அவ சொல்றதும் நிஜம்தான்டி..! என்றாள் இந்துமதி.

    மறுபடியும் இடிஇடியென்று சிரித்த அல்லி யதேச்சையாகத் திரும்பியவள் யார் மீதோ மோதிக் கொண்டாள்.

    நிமிர்ந்து பார்த்தாள்!

    நல்ல உயரமாக கண்களில் குறும்புச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.

    மேடம்! இதே நாங்க இடிச்சா.. ஈவ் டீஸிங்.. ம்பீங்க..! அலையறீங்களா அப்படீம்பீங்க..! இப்ப என்ன சொல்லட்டும்! என்றான்.

    அல்லி குற்றம் செய்தவள் போல நின்றாள்.

    நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு... தொரியலை..! ஆனா நான் சொல்றேன்.. ஐ ம் வொரி.. சாரி..! என்றாள்.

    அவன் பக் கென்று சிரித்து விட்டான்.

    ஒ.கே..! ஒ.கே..! நோ பிராப்ளம் என்றான். நகர்ந்து விட்டான்.

    அல்லி தன்னுடைய தோழிகளோடு சிரித்துக் கொண்டே நகர்கையில் அவள் அப்பா எதிரில் வந்தார்.

    என்னம்மா.. நீ? எங்கெல்லாம் உன்னைத் தேடறது? என்றார்.

    குல தெய்வத்துக் கோயிலுக்கு வந்திருந்தார்கள். திருவிழாக் கூட்டம் என்பார்களே.. அது மாதிரி கூட்டம்!

    விழாக் காலங்களில் முளைக்கிற தற்காலிகக் கடைகள்.

    அப்பா! கிராமத்துத் திருவிழா.. நேர்ல பாத்தது இல்லைப்பா.. போலாம்ப்பா..! என்று அடம் பிடித்து அழைத்து வந்திருந்தாள்.

    குடை ராட்டினம், மற்ற வகை ராட்டினங்கள் எல்லாவற்றிலும் ஏறி இறங்கி பஞ்சு மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டு நாக்குச் சிவப்பைப் பார்த்துக் கொண்டு இளமைக்கே உரிய அர்த்தமில்லாத சிரிப்பைச் சிரித்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள்.

    தோழிகளை வேறு அழைத்து வந்திருந்தாள். அவளைத் தவிர இரண்டு பேர்.

    அம்மா! பொங்கல் வைக்கிற நேரமாச்சு. அம்மா தேடறா.. வா..! என்றார்.

    அம்மா அருள்நங்கை அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

    எங்கடி.. போனீங்க? என்றார்.

    அம்மா..! சூழ்நிலை எவ்வளவு வித்தியாசமா இருக்கு! குடை ராட்டினத்தில சுத்தினேன். அம்மா! மிட்டாய் பாத்தியா.. வித விதமான வடிவத்தில செஞ்சிருக்காங்க" என்றாள் ஆர்வமாக.

    அருள்நங்கை சிரித்தார்.

    சாரிடி! பொங்கல் வைக்கணும்.. வா! என்றார்.

    நானா? நான் பொங்கல் வச்சா.. விடிஞ்சுடும்.. போ!

    "நீ வைக்க வேண்டாம்டி! ஹெல்ப் பண்ணு! என்று அடுப்பில் விறகு வைத்து பற்ற வைத்தார்.

    நெருப்பு பற்றிக் கொள்ள கொஞ்ச நேரம் போராட வேண்டியிருந்தது.

    நெருப்பு பற்றிக் கொள்ளவும் நானும் விறகைத் தள்ளி விடறேம்மா! என்று அமர்ந்தாள் அல்லிமலர்..

    கோணல் மாணலாக அவள் நகர்த்திய வேகத்தில் நெருப்பு குறைந்து போய் புகை வர ஆரம்பித்தது.

    கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. கையிலிருந்த கர்சீஃபால் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

    அம்மா! கண்ணைக் காரிக்குது! என்று கண்னைத் தேய்க்கப் போனாள்.

    "ஹல்லோ! கண்ணைத் தேய்க்காதீங்க! கண்ல ஏதாது காரித் தூள் போயிருந்தா.. செவந்திடும்.. என்றது ஒரு குரல்!

    அதுவும் காதோரத்தில்! திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்!

    அந்த உயர்ந்த இளைஞன்தான்.

    ஐயோ! ரொம்பத்தான் அக்கறை! என்று பழிப்புக் காட்டினாள்.

    சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்! குறும்பாகச் சிரித்தான். போதும்! சுளுக்கிக்கப் போகுது! என்றான்.

    அவள் கப்பென வாயை மூடிக் கொண்டாள். அதற்கும் சிரித்தான். ஆனால் நிற்காமல் போய்விட்டான்.

    அல்லி திரும்பினாள்!

    நடந்து முடிந்த விஷயத்துக்கெல்லாம் ஒரு நிமிடம்தான் ஆனது!

    அதற்குப் பிறகு அம்மா பொங்கல் செய்வதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    முதலில் அந்தப் பானையில் இருந்து நுரை பொங்கி வழிந்தவுடனே எல்லாரும் பொங்கலோ! பொங்கல்! என்று கூவவும் போது அவளும் சேர்ந்து கொண்டாள்.

    அவளுக்கு இதெல்லாம் வியப்பாக இருந்தது.

    இந்துமதி போதும்டி.. வாயைப் பிளக்காதே! என்றவுடனேதான் சத்தத்தைக் குறைத்துக் கொண்டாள்.

    அம்மா! இவ்வளவு ஈஸியாச் செய்யறயே! எப்படி? என்றாள் ஆச்சாரியமாக.

    ஆமா! அந்தக் காலத்துல ஏது.. காஸ் ஸ்டவ்! விறகு அடுப்புத்தான். அதுல சமைப்போம். அப்புறம் மண்ணென்ணெய் ஸ்டவ் வந்தது. அதுக்கப்புறம்தானே காஸ் ஸ்டவ் என்றார் அம்மா.

    இது நாள் வரை அம்மாவிடம் அது பற்றியெல்லாம் கேட்பதில்லையென்பதாலோ என்னவோ.. இப்போது கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தது.

    இப்போது மீண்டும் ஃபாஷனாகியிருந்த பாவாடை தாவணியில் வேறு இருந்தாள்.

    தோழிகளின் அருகாமை புதிய சூழல் என்று மிகவும் அனுபவித்து மகிழ்ந்தாள்.

    எப்போதாது அப்பாவுடன் கிராமத்துக்கு வருவாள். ஆனால் தோட்டத்துக்கு வந்து விட்டுப் போய் விடுவாள்.

    இப்போது அப்பா அந்தத் தோப்பையும் குத்தகைக்கு விட்டு விடவே அதிகம் வருகிற வேலையில்லை.

    தோப்போரத்தில் ஒரு பொரிய வீடு மட்டும் இருந்தது. இந்த முறை அதில்தான் வந்து தங்கினார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக அப்பாவின் பிஸினஸில் அடியாம்! கொஞ்சம் நிதி நிலைமை சாரியில்லை என்பது போல அம்மாவும், அப்பாவும் பேசிக் கொண்டதைக் கேட்டிருந்தாள்.

    அது பற்றி அப்பாவிடம் பேசிய போது அவர் எளிதாக விளக்கம் சொல்லிவிட்டார்.

    பிஸினஸ்ன்னா.. எல்லாம்.. வந்து போறதுதான். ஒண்ணும் பொரிசா - ஆயிடலம்மா! ஆனா.. கொஞ்சம் அடிதான்! என்றார்.

    கொஞ்சம் கவலையுடன் அப்பாவின் முகம் பார்த்த மகள் கேட்டாள்.

    "ஏம்ப்பா! நான் ஏதாவது செய்ய வேண்டியிருக்குமா?

    ஒண்ணும் வேண்டாம்மா! ஆனா.. என்னோட கொஞ்சம் நிர்வாகம் கத்துக்கிட்டியானா நல்லா இருக்கும்?

    சாரிப்பா! என்றாள் கவலையுடன்.

    அம்மா! நம்ம அரிசிக் கடையைப் பாத்துகிட்டாப் போதும். அப்புறம் ரைஸ் மில்.. இது ரெண்டையும் பாத்துகிட்டாப் போதும் ஆனா.. இப்ப இல்லே! உன் படிப்பை முடிச்சுகிட்டு வந்தாப் போதும்! என்றார்.

    முதுகலைப் பட்டப் படிப்பில் இருந்தாள். இரண்டாம் ஆண்டில் இருந்தாள்.

    கிராமத்துக்குப் போகலாம் என்ற பேச்சு வரும்போதெல்லாம் அப்பா அதைத் தவிர்ப்பதைக் கவனித்திருக்கிறாள்.

    ஒரு நாள் ஏம்ப்பா! கிராமத்துக்குப் போகப் பிடிக்கறதில்லையா? என்றாள்.

    அப்பா உச்சுக் கொட்டினார்.

    போலாம்! போனா.. அங்கே சத்திய மூர்த்தியைப் பாக்கணும். அவரைப் பாக்கறதுன்னா.. ஒரு சங்கடம் என்றார்.

    ஏம்ப்பா!

    அது.. ஒரு நாளைக்கு விவரமா சொல்றேன். ஆனா.. சுருக்கமா.. சொன்னா.. நான் அவனுக்கு நியாயம் செய்யலேங்கற உறுத்தல் இருந்துகிட்டே இருக்கு..! அத விடும்மா! இன்னொரு நாள் சொல்றேன் என்று பேச்சை மாற்றி விடுவார்.

    ஒரு நாள் சத்தியமூர்த்தி யாருப்பா? என்று கேட்டாள்.

    ரொம்ப நெருங்கின ஃபிரண்டும்மா! பார்ட்னர்ஸ் கூட! ஆனா.. இப்பக் கொஞ்சம் சங்கடம்! என்றார்.

    அடிக்கடி.. அப்பாவிடம் அது பற்றிப் பேசி அவர் மனத்தில் இருக்கிற ஏதோ ஒரு காயத்தைக் கிளற வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டாள்.

    இந்த முறை அம்மாதான் வற்புறுத்தினார். எனக்கென்னமோ.. நம்ம ஊர் அம்மனுக்குப் பொங்கல் வைக்கிற வழக்கத்தை விட்டதுனாலதான் இத்தனை பிரச்சினையும்னு தோணுது. இத்தத் தடவை பொங்கல் சமயத்துல கண்டிப்பா ஊருக்குப் போறோம்! என்றார் அருள்நங்கை.

    "அப்பாவுக்கும் ஊரைப் பார்க்க வேண்டும் என்று இருந்தது போலும்.

    ஒத்துக் கொண்டார்!

    வெள்ளாங்குடி என்ற அந்த ஊர் பொள்ளாச்சி அருகிலே இருந்தது.

    அம்பராம்பாளையத்து ஆறு ஒடிக் கொண்டிருந்த பகுதி.

    இரண்டு புறமும் தோப்புக்கள் அடர்ந்த பகுதியில் பிரயாணம் செய்வதே சுகமாக இருந்தது. அதிலும் அவர்கள் புறப்பட்டுப் போன நேரம் அதிசயமாக மழை வேறு துளிர்தது.

    சின்ன வயதில் வந்திருந்தாலும் இன்று அந்த நினைவுகள் எல்லாம் எதுவுமே மனத்தில் இருக்கவில்லை.

    பொரிய தொப்டிக் கட்டி வீட்டில் தங்கிய அந்த அனுபவமும், கோலம் போடுவதும் செம்மண் கறை கட்டுவதும் ஆக பொழுது வேடிக்கையாகக் கழிந்தது.

    பெண்கள் போட்ட குலவை சத்தத்தில் திடுக்கிட்டு இந்த உலகத்திற்கு வந்தாள்.

    பொங்கல் ஆவதை பக்கத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பொங்கிய ----------- சோற்றுக்குத் துணையாக மஞ்சள் பூசணிக்காய்க் கூட்டு செய்திருந்தார்கள். இன்னொரு புறத்திலே ஒரு அடுப்பில் சக்கரைப் பொங்கல் கிளறினார்கள்.

    சினிமாக்களில் பார்க்கிற திருவிழாக் காட்சி மாதிரித்தான் இருந்தது.

    குடும்பம், குடும்பமாக ஒவ்வொரு பக்கமும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

    வட்ட வட்டமாக அவரவர் குடும்பம், சுற்றம், நண்பர்கள் என்று அமர்ந்து உண்டார்கள்.

    வெட்ட வெளியில் அப்படி அமர்ந்து உண்டது மிக நல்ல அனுபவமாக இருந்தது. ஆனால் கண்கள் என்னமோ அந்த உயர்ந்த மனிதனைத் தேடியது.

    அவன் கண்ணில் படவேயில்லை! அன்றைக்கெல்லாம் தோழிகளோடு அந்த மைதானத்தில் சுற்றி வந்த போதும் அவன் கண்ணில் படவேயில்லை!

    கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது!

    வீடு வந்து சேர அன்று மாலை நான்கு மணியாகிவிட்டது.

    அதிகாலை ஐந்து மணியிலிருந்தே கிளம்புகிறோம் என்று பரபரப்பாக இருந்தார்கள் என்பதால் எல்லாரும் ஏனோ களைப்பாகவே உணர்ந்தார்கள்.

    "டீ.. நாங்க எல்லாருமே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறோம். என்று தோழிகள் அவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட இரண்டு அறைகளில் போய் அடைந்து கொள்ள அவளுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லாமல் போனது.

    அவளுக்கும் களைப்புத்தான்! ஆனால் உறக்கம் பிடிக்கவில்லை.

    அநேகமாக அடுத்த நாள் மாலை கிளம்பி விடுவார்கள். அதற்குள்ளாக அந்த ஊரின் அழகை எவ்வளவு சுற்றிப் பார்க்க முடியுமோ அவ்வளவு சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

    அம்மா! நான் இந்தத் தோப்புக்குள்ளே நடந்துட்டு வரேன்மா! என்றாள்.

    பாத்துடி! நம்ம தோப்பக்[குள்ளே மட்டும் சுத்திட்டு வந்துடு. அங்க இங்க போயிடாதே என்று எச்சாரித்தபடி அம்மா அனுமதி கொடுத்தார்.

    அவள் லேசாக ஆடிக் கொண்டு நடந்தாள்!

    தோப்பு முழுக்க சொட்டு நீர்ப் பாசனம் இருந்தாலும் வரப்போரத்தில் சின்ன வாய்க்கால் போல வெட்டி விட்டிருந்தார்கள். அதில் சல சலவென்று நீரோடுவதை ரசித்துப் பார்த்தபடி தோப்பின் அந்தக் கோடிக்கு வந்து விட்டாள்.

    அப்போதுதான் கவனித்தாள்! பக்கத்து தோப்பு எல்லைக்கு வந்து விட்டோம் என்பதை!

    கண்களில் ஆச்சாரியமும், வெளிச்சமும் பரவியது.

    அடுத்த தோப்பில் கடைசியில் அந்த உயர்ந்த மனிதன் நின்று கொண்டிருந்தான்.

    தன்னையறியாமல் புன்னகைத்து விட்டாள். அவனும் புன்னகைத்தான். ஆள்காரர் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவன் அவனை அனுப்பி விட்டு அவளை நோக்கி வந்தான்.

    ஹல்லோ! கண்ணெல்லாம் பரவாலையா என்ன?என்றான் குறும்பாக.

    ம்..! என்றவள் நான்.. அல்லி.. என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

    தொரியும்! கலிவரதன் சாரோட மகள்! என்றான்.

    ஒ.. நீங்க!

    நான் காண்டீபன் சத்தியமூர்த்தியின் மகன் என்றான்.

    ஒ..! என்று அவள் முகம் வாடியது. தன்னையுமறியாமல் அந்த வார்த்தைகளை உளறிவிட்டாள்.

    அவன் கண்களில் சுவாரசியம் கூடியது! உங்களை நான் தனியாச் சந்திக்கணுமே! ஆனா.. உங்க பேரண்ட்ஸுக்குத் தொரியாமே! என்றான்.

    அவள் ----- --------- என்பது போலத் தலையாட்டி விட்டுத் திரும்பிப் போவதை அவன் கண்களில் ஒரு வித சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்.

    ***

    2

    எப்ப சொன்னாரு.. அப்படி? என்று கேட்டான் காண்டீபன்.

    "அடிக்கடி..

    Enjoying the preview?
    Page 1 of 1