Enna Solla Pogirean
By Jaisakthi
()
About this ebook
போதைக்கு அடிமையாகி தன்னிலை மறந்த அண்ணனிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் சுகீர்த்தியும், அவளது தாயாரும். அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அமைப்பின் மூலம் இந்த குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வருகிறான் சந்திரமௌலி. அவனது வருகையால் அந்த குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? சந்திரமௌலியிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?சந்திரமௌலியினால் அந்த குடும்பம் பாதுகாப்பை உணர்ந்ததா என்பதை கதையுடன் பயணித்து உணரலாம்.
Read more from Jaisakthi
Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsAnalukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsNee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Oviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Megam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsSudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsIlankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5
Related to Enna Solla Pogirean
Related ebooks
Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Uyiraaga Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Nesa Kavithai Solladi Rating: 4 out of 5 stars4/5Seettu Kattu Maaligai Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUllathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Idhaya Karuvaraiyil Rating: 4 out of 5 stars4/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Kanavugal Manathiley Malaruthey... Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Andhi Nera Thendral Kaatru! Rating: 4 out of 5 stars4/5Hello... Mister Yethirkatchi! Rating: 5 out of 5 stars5/5Vaana'madhu' Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Sonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsMazhaiyodu Uravadi Rating: 4 out of 5 stars4/5Unnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Engirundho Vandhan Rating: 1 out of 5 stars1/5Vannam Konda Pennilave! Rating: 1 out of 5 stars1/5Puthagam Moodiya Mayiliragu Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Mega Mayilgal Rating: 5 out of 5 stars5/5Azhagai Pookkuthe... Rating: 5 out of 5 stars5/5Azhagooril Poothavaley Rating: 5 out of 5 stars5/5Avalukkendru Oru Manam Rating: 2 out of 5 stars2/5
Reviews for Enna Solla Pogirean
0 ratings0 reviews
Book preview
Enna Solla Pogirean - Jaisakthi
https://www.pustaka.co.in
என்ன சொல்லப் போகிறேன்
Enna Solla Pogirean
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் – 14
ஆசிரியர் உரை
அன்பு நிறை வாசக நெஞ்சங்களே!
ஜெய்சக்தியின் வணக்கங்கள்.
எனது நாவல்களுக்குத் தொடர்ந்து வரவேற்பு அளித்து வருகிறீர்கள். இது ஒரு எழுத்தாளருக்கு மிகவும் ஊக்கம் தரும் நல்ல விஷயம் ஆகும்.
படித்ததோடு மட்டும் அல்லாமல் தொலைபேசியிலும் ஈ-மெயில் மூலமாகவும், ஃபேஸ்புக்கிலும், கடிதங்கள் வாயிலாகவும் உங்கள் கருத்துக்களை தொடர்ந்து கொடுத்து வருகிறீர்கள். இதுவே எழுத்தாளருக்கு வாசகர்களிடமிருந்து கிடைக்கும் மிகப்பெரிய பரிசாகும். அதற்கு என் ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘என்ன சொல்லப் போகிறேன்!’ என்ற இந்த நாவல் உங்கள் கருத்தைக் கவரும் என்று நம்புகிறேன். எனது நாவல்களில் பி.எச்.டி., மற்றும் எம்.ஃபில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கும் எனது நன்றிகள்.
புத்தகங்கள் மட்டுமன்றி யூ-டியூப்பில் தமிழ்ச் சுரங்கம் என்ற சேனலின் மூலமாகவும் உங்களைத் தொடர்ந்து நான் சந்திக்க இருக்கிறேன். அதிலே இலக்கியம், ஆன்மீகம், பொது அறிவு தொடர்பான விஷயங்களை நான் உரைகளாக அளித்து உங்களோடு தொடர்பு கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்.
எண்ணற்ற விஷயங்கள் தமிழில் கொட்டிக் கிடக்கின்றன. அதை உங்களுக்கு ரெடிமேட் உணவு மாதிரி கொடுப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் படைப்புக்களை நான் உங்களுக்கு வழங்குவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் எனது குடும்பத்தாருக்கும் என் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்ள விரும்புகிறேன்.
எனக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் இன்று நிலவுகிற நல்லுறவு என்றும் இதேபோன்று நிலவவும், வளரவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ஜெய்சக்தி.
அத்தியாயம் - 1
நல்லா இருக்கேன் மேடம். இல்லல்லே, இப்ப எல்லாம் அப்படி ஒண்ணும் பிரச்சினை இல்லை மேடம். ஏதாவது இருந்தா கண்டிப்பா சொல்றேன்!
என்று சொல்லிவிட்டு புன்சிரிப்புடன் திரும்பினாள் சுகீர்த்தி.
திடுக்கிட்டுப் போனாள். ஏனென்றால் பின்னாலே அவளுடைய சகோதரன் ராஜ்குமார் விகாரமாக சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். என்னது நல்லாயிருக்கீங்களா? பிரச்சினை ஒண்ணும் இல்லையா? ம்ஹும்... அப்படி இருக்க விடலாமா உங்களை?
என்றான்.
அவள் செல்ஃபோனை ஆஃப் செய்திருக்கிறோமா என்று ஒரு தடவை பார்த்துக் கொண்டாள்.
பிறகு இப்ப உனக்கு என்ன வேணும்ண்ணா!
என்றாள்.
என்ன வேணுமாம்? உனக்குத் தெரியாதா? எத்தனை நாளா கேட்டுகிட்டிருக்கேன். என்னமோ புதுசா என்ன வேணும்னு கேட்டுகிட்டிருக்கே?
என்றான்.
இத பாருண்ணா! உன் பங்கைக் கொடுத்தாச்சு. உனக்குன்னு ஒரு வீட்டைக் கொடுத்தாச்சு. நீ அந்த வீட்டை வித்து வெட்டிச் செலவு பண்ணிட்டு இப்ப வந்து அம்மாவைத் தொந்தரவு பண்ணிகிட்டிருக்கே? ஏதோ அவங்களுக்கு இருக்கறதே இந்த ஒரு வீடும் பக்கத்து வீடும்தான். பக்கத்து வீட்டு வாடகைதான் வயித்தை கழுவறதுக்காவது ஹெல்ப் பண்ணிட்டு இருக்கு. ஏண்ணா இப்படித் தொந்தரவு பண்றே?
என்றாள் சுகீர்த்தி.
என்னடி வயித்தைக் கழுவறதுக்கு இவ்வளவு பணம் வேணுமாக்கும். உங்களுக்கு அவ்வளவு பெரிய வயிறா என்ன? நீ தள்ளுடி, உங்கிட்டே என்ன பேச்சு? நான் அம்மாகிட்டே பேசிக்கறேன்!
என்றவன், ஏய் அம்மா, என்னைப் பெத்தவளே! வெளியிலே வா!
என்று கத்தினான்.
வித்யாலட்சுமி உள்ளே ஏதோ வேலையாக இருந்தவள் திடுக்கிட்டுப் போனவளாக வெளியே வந்தாள். என்ன? ஒரு மனுஷன் கரடியாக் கத்திகிட்டிருக்கேன். உன் காதிலே விழலையா?
என்றான்.
இப்ப உனக்கு என்னடா வேணும்!
என்றாள் வித்யாலட்சுமி.
என்ன வேணுமா? இந்த வீட்டை எழுதிக் கொடுன்னு கேட்டுகிட்டிருக்கேன்ல. என்னமோ பெரிய மங்காத்தா மாதிரி வீர நியாயம் பேசிட்டு இருக்கே?
என்றான்.
இத பார்றா! உனக்குன்னு ஒரு வீடு கொடுத்தாச்சு. இப்ப இந்த ஓட்டு வீடுதான் இருக்கு. பின்னேயும் உனக்கு எழுதிக் கொடுத்தது ஆர்,சி வீடு. அதையும் நீ வித்துத் தொலைச்சுட்டு கிடைச்ச காசையெல்லாம் தாம் தூம் பண்ணிட்டு சும்மா எங்களை வந்து இங்கே தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்கே?
.
அவன் முறைத்தான்.
இதை நான் எழுதிக் கொடுக்க மாட்டேன்டா. ஏதோ பக்கத்திலே மூவாயிரம் ரூபாய் வாடகை வருது. அதை வச்சுட்டு நாங்க ஏதோ வயித்தை கழுவிகிட்டிருக்கோம். அது கூட உனக்குப் பொறுக்கலையா?
என்றாள்.
இங்கே பாரு, நீ வயித்தைக் கழுவினா என்ன? தொடைச்சா எனக்கென்ன? காயப் போட்டா எனக்கென்ன? அதெல்லாம் எனக்குத் தேவை இல்லை. வீட்டை எழுதிக் கொடு. நல்ல ஒரு பார்ட்டி இந்த பிசாத்து வீட்டுக்கு பதினைந்து லட்சம் தரேங்கறான். எனக்குப் பணம் வேணும்!
என்றான்.
கொடுக்க முடியாது போடா!
என்று சொல்லிவிட்டு வித்யாலட்சுமி உள்ளே போய் விட்டாள்.
இத பாரு, அண்ணா! வந்தியா, ஏதோ ஒரு டம்ளர் காஃபி குடிச்சியா? இல்லே எங்க வீட்ல இருக்கறதை சாப்பிட்டியா? சாப்பிட்டுட்டுப் போ. உன்னோட பொறுக்கித்தனத்துக்கெல்லாம் அம்மாவும் நானும் இடம் கொடுக்க மாட்டோம்!
என்றாள்.
என்னடி ஓவரா பேசிகிட்டிருக்கே? ஏதோ இந்த மூவாயிரத்தை வச்சுத்தான் சாப்பிடற மாதிரி பேசறீங்க. நீ வேலைக்குப் போறயில்லே? அதிலே ஒரு எட்டாயிரம் வருதில்லே?
என்றான்.
வருதுதான். அம்மாவுக்கு மருந்து செலவுக்கு வேண்டாமா? மாசம் மளிகை செலவு அது இதுன்னு ஒரு ஏழெட்டு ரூபாய் ஆகாதா ரெண்டு பேருக்கு?
என்றாள்.
அப்ப அந்த மூவாயிரம் மிச்சம்தானே? அதைக் கொடுக்க வேண்டியதுதானே?
என்றான்.
அதுதான். நீ எக்கச்சக்கக் கடனை வாங்கி வச்சுட்டுப் போனியே? அதை அடைச்சுகிட்டிருக்கோமே?
என்றாள்.
அதுதாண்டி நான் சொல்றேன். எதுக்கு அந்த மூணு லட்ச ரூபாய் கடனை வச்சுகிட்டுக் கஷ்டப்பட்டுகிட்டிருக்கணும்? பதினைஞ்சு லட்ச ரூபாய்க்கு இந்த வீட்டை வித்துக்கலாம். உங்களுக்கு வேண்ணா இரண்டு லட்ச ரூபாய் தரேன். மூணு லட்ச ரூபாய் கடனை அடைச்சர்லாம். பத்து லட்ச ரூபாய் எனக்கு வேணும்!
என்றான்.
அடி செருப்பாலே!
என்று வந்தார் வித்யாலட்சுமி. உனக்கு ஏற்கெனவே இருபது லட்ச ரூபாய்க்கு அந்த ஆர்,சி வீட்டைக் கொடுத்தாச்சு. அப்ப இவளுக்குக் கல்யாணம் காட்சின்னு செய்ய வேண்டாமா?
என்றாள்.
இவதான் அழகா இருக்காளே அம்மா? ஆள் பார்க்க அம்சமா இருக்கா. இவ சரின்னா எத்தனை பேர் லவ் பண்ணுவானுக. பெரிய பெரிய பணக்காரனெல்லாம் பின்னாடி சுத்தறானாம்
என்றான். சுகீர்த்தியின் கண்கள் கலங்கிவிட்டன.
ஒரு.அண்ணன் பேசற பேச்சா பேசறே நீ?
என்றாள்.
இங்க பாரு. அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குப் பத்து லட்ச ரூபாய் பணம் வேணும்.
சரிடா எதுக்கு?
என்றார் வித்யாலட்சுமி.
எதுக்கானா என்ன? என் ஃப்ரெண்டு ஒருத்தன் சினிமா படம் எடுக்கறான். நாற்பது லட்ச ரூபாய் பட்ஜெட். என்னைக் கூட்டு சேர்த்துக்கறேங்கறான். எனக்குப் பணம் வேணும்!
என்றான்.
"இத பார்றா! இந்த சினிமா எடுக்கறது இதெல்லாம் நம்ம தகுதிக்கு மீறினது.