Ilankaalai Olikeetru!
By Jaisakthi
5/5
()
About this ebook
Read more from Jaisakthi
Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsAnalukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Oviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsNee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsIlaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Kaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNaaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsSudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsUllathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5
Related to Ilankaalai Olikeetru!
Related ebooks
Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Vanna Sudar Oliye...! Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavar Kalvan! Rating: 5 out of 5 stars5/5Nee Andha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Ithu Varai Sollatha Kavithai Rating: 3 out of 5 stars3/5Nesa Kavithai Solladi Rating: 4 out of 5 stars4/5Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Naan Nila! Nee Kathir! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyirin Urave Rating: 3 out of 5 stars3/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsVelli Nila Muttrathile! Rating: 5 out of 5 stars5/5Nesathin Thottililey! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Paattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5
Reviews for Ilankaalai Olikeetru!
1 rating0 reviews
Book preview
Ilankaalai Olikeetru! - Jaisakthi
http://www.pustaka.co.in
இளங்காலை ஒளிக்கீற்று!
Ilankaalai Olikeetru!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 1
பொழுது மெல்ல விடிந்து கொண்டிருந்தது! கண்ணுக்கு இதமாக இருந்தது. மொட்டை மாடியிலே நின்று கொண்டிருந்தாள் மானஸா.
லேசான சிவப்புடன் கிழக்கு திசையிலே சூரியன் எழுவதையும் தங்கப் பந்து போல மின்னிக் கொண்டே மேலே மேலே நகர்வதையும் ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மானஸா. அந்த ஐந்து நிமிடங்கள் சுகமாகக் கடந்தது. பிறகுதான் சுயநினைவுக்கு வந்தாள்.
அடடா! இன்றைக்கு இது வேறே இருக்கிறதே!
என்று எண்ணிக் கொண்டாள். அப்போது அவள் தங்கை ரூபிணி, அக்கா, அக்கா!
என்று அழைத்தபடி வந்தாள்.
என்னக்கா? அம்மா கீழே கூப்பிட்டுட்டே இருக்காங்க. நீ ஏதோ கேட்காத மாதிரி இங்கே நின்னுகிட்டிருக்கே?
என்று திரும்பியவள், ஓ! சூரிய உதயமாக்கும். அதான் அம்மணி ஆழ்ந்து போயிட்டீங்களோ?
என்றாள்.
ஆமாடி, கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டீங்களே? அதான் என் நிம்மதியை கெடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களே!
என்றாள்.
அய்யோ அக்கா! நீ ஒரு அசடு அக்கா. இப்ப உன்னைக் கேட்கறதுக்கு பதிலா என்னைக் கேட்டாங்கன்னு வச்சுக்கோ, நான் ஓ.கே. சொல்லிருவேன்!
என்றாள் ரூபினி.
மானஸா சுற்றும் முற்றும் பார்த்தாள். என்ன பார்க்கறே?
என்றாள் தங்கை.
குச்சி தேவை நல்லா நாலு சாத்தறதுக்கு! இப்பத்தான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்திருக்கா. இவளுக்கு இப்பவே கல்யாணம் கேட்குதா? எனக்கே வேண்டாம்னு நான் பார்க்கறேன்!
என்றாள் மானஸா.
ஏன் வேண்டாம்? இது ரைட் ஏஜ்க்கா. கரெக்டா டிகிரி முடிச்சிருக்கே. அழகா குடித்தனம் பண்றதுக்குப் பாரு!
இத பார்றி. உனக்குத் தெரியுமில்லே? எனக்கு மேல படிக்கணும்னு ஆசை இருக்கு. அப்பா சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாரு.
ரூபிணியின் முகம் சற்றே தீவிரமாக மாறியது. அக்கா, அப்பா சொல்றதிலேயும் நியாயம் இருக்குக்கா. அப்பாவுக்கு இன்னும் எட்டு வருஷம் தான் இருக்கு ரிட்டையர் ஆகறதுக்கு. அட்லீஸ்ட் என்னை டிகிரியாவது படிக்க வைக்கணும். தம்பி இன்ஜினியரிங் காலேஜ் எய்ம் பண்றான். கண்டிப்பா மார்க் எடுத்துருவான். அவனைப் படிக்க வைக்கணும். அதனாலே அப்பா எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சுத்தான் உனக்கு இந்த ஐடியா பண்ணியிருக்கார். அதுமட்டும் இல்லக்கா, மாப்பிள்ளை ரொம்ப அழகா இருக்கார். அவங்க அப்பாவுக்கு வசதி இருக்கு. இருந்தாலும் அவரோட பணம் வேண்டாம்னுட்டு இவரே சொந்தமா ஒரு தொழில் தொடங்கி வேலை பண்ணிகிட்டிருக்காராம். இப்படி ஆளு தாங்க்கா நம்ம குடும்பத்துக்கு நல்லது.
என்றாள் ரூபினி.
மானஸா நீண்டதொரு பெருமூச்சுவிட்டாள். சரி, அம்மா எதுக்குக் கூப்பிட்டாங்க?
என்றாள்.
பேச்சை மாத்திடுவியே?
என்றவள், இல்லே, கீழே வந்து தலைக்குக் குளிக்கச்சுட்டு உன்னை டிபன் சாப்பிடச் சொன்னாங்க!
என்றாள்.
ஆமா, தலைக்குக் குளிச்சு ஃப்ரெஷ்ஷா வேற வர்ற மாப்பிள்ளை முன்னாடி நிக்கணுமாக்கும்!
என்று முணுமுணுத்துக் கொண்டே கீழே வந்தாள் மானஸா.
அன்றைக்கு வீடே பரபரப்பாக இயங்கியது. மானஸா மனதுக்குள் பெரிதும் ஆர்வம் இல்லாதவளாக இருந்தாலும் அப்பாவை நோகடிக்கக் கூடாது, அம்மாவை நோகடிக்கக் கூடாது என்பதற்காக அவர்களுடைய ஏற்பாடுகளுக்கு ஒத்துழைத்தாள். ஆனால், மனதுக்குள்ளே திட்டம் போட்டுக்கொண்டாள்.
மாலை நேரமும் வந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் வந்து சேர்ந்தார்கள். தன்னுடைய அறையிலே இருந்து ஜன்னல் வழியாக லேசாகத் திரையை விலக்கி விட்டுப் பார்த்தாள் மானஸா.
செழியன் காரிலே இருந்து இறங்கினான். கூடவே அவனுடைய தாய், தந்தை இருவரும் இறங்கினார்கள். ஒரே மகனாம். அப்பா ஓரளவுக்கு வசதியானவராக இருந்தார். ஆனால் மகன் தன்னைக் கொண்டேதான் முன்னேற வேண்டும் என்று அரசாங்க வங்கியிலே லோன் போட்டு சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறான் என்பதே மானஸாவின் தந்தை தேவராஜனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அதனால் தான் இந்த வரனை விட்டு விடக் கூடாது என்பதிலே அவர் உறுதியாக இருந்தார்.
பெண் பார்த்தார்கள். செழியன் குறும்போடிய கண்களோடு அவளைப் பார்த்தான். அந்தக் கணத்திலே மானஸாவுக்கும் சற்றே வெட்கமாகத்தான் இருந்தது. ஆள் அழகாகத்தான் இருக்கிறான். அதற்காகத் தன்னுடைய திட்டத்தை மாற்றிக் கொள்ள முடியுமா என்று எண்ணிக் கொண்டாள்.
காஃபியைக் கொடுக்கிற சாக்கிலே உள்ளங்கையை விரித்துக் காட்டினாள். அதிலே ‘உங்களோடு தனியாகப் பேச வேண்டும்’ என்று எழுதியிருந்தாள். ‘தனியாகப் பேச வேண்டும்’ என்பதை மட்டும் பெரிதாக எழுதியிருந்தாள்.
அவன் அதை ஓரக்கண்ணால் பார்த்த வண்ணம் கவனிக்காதவன் போல இருந்துகொண்டான். அவளுக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது.
‘பாவி, கவனிக்கலையா என்ன?’ என்று எண்ணிக்கொண்டாள். ஆனால், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, உங்க பொண்ணுகிட்டே ஒரு ஐந்து நிமிடம் தனியா பேசலாமா?
என்று கேட்டான். உள்ளே இருந்து அவன் சொல்வதைக் கேட்ட மானஸாவுக்குப் பெருத்த நிம்மதி ஏற்பட்டது.
‘பரவாயில்லை, இடம் தெரிந்து நடந்துக்கறாரு’ என்று எண்ணிக்கொண்டாள். அதற்கேற்ப உள்ளே வந்தான். அவளுடைய அறைக்கே வந்தான்.
வந்தவன் சுற்றிலும் கண்களை ஓடவிட்டான். உங்க ரூமா?
என்றான்.
ம்...!
என்றாள் அவள்.
நல்லா வச்சிருக்கீங்க!
என்றவன். சரி, என்ன பேசணும்?
என்றான்.
அவள் இல்லே, எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம். என் பேரன்ட்ஸ் கிட்டே சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க!
என்றாள். ஏன்?
என்றான் அவன். எனக்கு மேலே படிக்கணும். படிப்புத்தான் எனக்கு முக்கியம்!
என்றாள்.
அவன் சட்டென்று சிரித்து விட்டான்.
இங்கேயும் அதே கதைதானா? நானும் இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம் அப்படின்னுதான் சொன்னேன். ஆனால், எங்க பேரன்ட்ஸ் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. ஆக்சுவலா எனக்கு வேற ஒரு காரணம்...!
என்று இழுத்தவன், சரி, அதை எதுக்கு உங்ககிட்டே சொல்லிக் கிட்டு. பரவாயில்லை விடுங்க. இப்ப என்ன செய்யணுங்கறீங்க?
என்றான்.
இல்லே, இப்ப உடனே பதில் சொல்லாதீங்க. பத்து நாள்லே லெட்டர் போடறோம்னு போய் அப்புறமா நெகட்டிவா சொல்லிடுங்களேன்.
ம்... எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. இந்த ஏற்பாடு எனக்கும் நல்லாத்தான் இருக்கு!
என்றான்.
அவள் முகம் மலர்ந்தது. அவள் முகத்தை சற்றே ஆழ்ந்து பார்த்துவிட்டு ஒரு விதமான புன்னகையோடு வெளியே வந்தான். வெளியே வந்தவன் அப்பாவிடம் குசுகுசுவென்று ஏதோ சொன்னான். அவரும் தலையாட்டிக் கொண்டார். அதற்குப் பிறகு சற்றுநேரம் வேறு விஷயங்களைப் பேசி விட்டுத் தந்தையின் முகம் பார்த்துக் கிளம்பலாமா?
என்றான்.
அப்பா பார்த்திபனும், அம்மா பூமாவும் எழுந்து நின்றார்கள். சரி, நாங்க கிளம்பறோம். ஒரு வாரத்திலே உங்களுக்கு நாங்க கண்டிப்பா ரிப்ளை கொடுக்கறோம்.
என்றார்.
தேவராஜன் முகத்தில் சற்றே ஏமாற்றம் நிலவியது. அவர்கள் கிளம்பினார்கள். இவர்கள் குடும்பமே போய் நின்று வழியனுப்பினார்கள்.
உள்ளே வந்தவுடன் தேவராஜன் மிகவும் ஆர்வமாக மகளைப் பார்த்து, "ஏய்