Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panneeril Nanaintha Pookkal
Panneeril Nanaintha Pookkal
Panneeril Nanaintha Pookkal
Ebook98 pages51 minutes

Panneeril Nanaintha Pookkal

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

சஹானா - கிண்டலும், கேலியும் நிறைந்த பெண். தன் அக்கா சஞ்சனாவை சந்திக்க, அக்கபவின் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள் சஹானா.
சஞ்சனாவின் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தனித் தனி துருவங்களாக இருக்கிறார்கள்.
டாக்டரான வருண் இப்படியும் ஒரு பெண்ணால் இருக்க முடியுமா என சஹானாவை பார்த்து திகைத்து போகிறான். சஞ்சனாவின் மாமியாரான அம்புஜத்திற்கு
சஹானாவைத் துளிக் கூட பிடிக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் எப்படி சஹானா மாற்றுகிறாள் என்பது தான் இந்தக் கதை!
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906583
Panneeril Nanaintha Pookkal

Read more from Lakshmi Sudha

Related to Panneeril Nanaintha Pookkal

Related ebooks

Reviews for Panneeril Nanaintha Pookkal

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panneeril Nanaintha Pookkal - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    பன்னீரில் நனைந்த பூக்கள்!

    Panneeril Nanaintha Pookkal!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    முன்னுரை

    பாவனாவுக்கு அவளுக்கு கிடைத்த வேலை காரணமாக, அவளது அக்காவின் திருமணத்திற்கு வர இயலாமல் போய்விடுகிறது. அதனால் தனது அக்காவை பார்க்க அவளுக்கே தெரியாமல் அவளது வீட்டிற்கு செல்கிறாள். எப்பொழுதுமே துடுக்குத்தனமாக இருக்கும் அவளுக்கு அவள் அக்காவின் மாமியார் எல்லோரிடமும் காட்டும் வறட்டு பிடிவாதமும், அதனால் அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களும் அங்கே தங்கும்  அவளால் தாக்கு பிடிக்க முடிந்ததா? எப்படி? என்பதை தெரிந்துகொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!

    1

    மார்கழி மாதம்

    அதிகாலை நேரம்

    பூக்கோலம்

    போடுகிறாய்,

    நீ

    என்

    இதயத்தில்!

    கதிரவன் வானில் இருந்து மெல்ல மறைந்து கொண்டு இருந்தான். இருள் கசியத் தொடங்கியது எங்கும். சென்னையில் தாம்பரத்தில் அமைந்து இருந்த அந்த பிரபல கல்லூரி வளாகம் களை கட்டி இருந்தது.

    காரணம், கல்லூரியில் படிக்க வந்து இருக்கும் முதலாம் ஆண்டு மாணவ மாணவியரை சீனியர் மாணவ மாணவியர் ‘ஃபிரெஷ்ஷர்ஸ் டைம்’ எனும் நிகழ்ச்சி மூலம் சந்தித்துப் பேசலாம்.

    கல்லூரி நிர்வாகமே அதை அனுமதித்துப் பல ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது. கல்லூரிகளில் ‘ராகிங்’ தடை செய்யப்பட்டதால் ஜூனியர்ஸை சந்திக்க இந்த ஏற்பாட்டைச் செய்து இருந்தது கல்லூரி நிர்வாகம்.

    ஜூனியர்ஸின் மனம் புண்படாதபடி ஒரு ஆரோக்கியமான நட்பு உருவாவதற்கு இந்த நிகழ்ச்சி நன்றாக உதவி புரியும் என்பதே நிர்வாகத்தின் நம்பிக்கை.

    எலெக்ட்ரிக் டிரெயினில் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் பயணம் செய்து கொண்டு இருந்த சகானாவின் பார்வையில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த கல்லூரி கண்ணில்பட்டது.

    கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. இருந்தாலும் பசுமையான நினைவுகள் மனதில் அழகாகப் பதிந்து உள்ளன.

    கல்லூரியில் நடந்த ஜாலி கலாட்டாக்கள், கல்சுரல் பொழுது வெளிப்பட்ட திறமைகள், லெக்சரர்ஸிற்கு வைத்த பட்டப் பெயர்கள், நட்பு வட்டத்தில் இருந்த சிலரின் முதல் காதல் என எத்தனையோ சுவாரசியமான சம்பவங்கள் நினைக்க நினைக்கத் திகட்டாதவை என நினைத்தபடியே ஸ்டேஷன் வந்தவுடன் டிரெயினில் இருந்து இறங்கினாள் சகானா.

    ‘சொர்க்கமே என்றாலும்

    நம்மூரைப் போல் வருமா?’

    என்ற பாடலை அவள் உதடுகள் சத்தமாக முணுமுணுத்தன. பிளாட்பார்மில் நடந்து போய்க் கொண்டு இருந்த சிலர் அவளை வித்தியாசமாகப் பார்ப்பது போல் அவளுக்குத் தோன்றியது.

    அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் பாடலைப் பாடியபடியே நடந்தாள் அவள்.

    சின்னக் குயில் சித்ரான்னு நினைப்பு! என்று எதிரில் வந்த இளைஞன் அவளைப் பார்த்துக் கிண்டல் செய்தான்.

    "ஹலோ...உங்க காதைச் சீக்கிரமா நல்ல டாக்டரிடம் காட்டிப் பரிசோதனை செஞ்சுக்கோங்க. சித்ரா மேடம் குரல் என்னமா சூப்பரா இருக்கும். அவங்களோட ‘பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நான் அறியேன்’ பாட்டு எவ்வளவு அருமையா இருக்கும்!

    சே...அவங்க குரல் எங்க...என் குரல் எங்க! மலைக்கும் மடுவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். அதனால இனிமே இந்த மாதிரி உளறாதீங்க...என்ன நான் சொல்றது...புரிந்ததா? என்று படபடத்தாள் சகானா.

    அந்த இளைஞன் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி ரேகைகள் தெரிந்தன. சும்மா ஒரு கமெண்ட் அடித்ததற்கு இப்படிப் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டு பட்டாசு போல் படபடக்கிறாளே என்று திகைத்துப் போய் நின்றான் அவன். 

    என்ன...சொன்னது புரிஞ்சுதா, இல்லையா?

    புரிந்தது...ஸாரி... என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து அகன்றான் அவன்.

    சகானா எப்பவுமே அப்படித்தான். மனதில் உள்ளதைப் பட்டெனக் கேட்டு விடுவது அவள் வழக்கம். எதிராளி யார்... தெரிந்தவரா தெரியாதவரா என்றெல்லாம் அவள் கவலைப்பட மாட்டாள்.

    அவள் அக்கா சஞ்சனா அவளுக்கு நேர் எதிர். அமைதியின் சிகரம் அவள். அநாவசியமாகப் பேச மாட்டாள். பேசினாலும் வார்த்தையை அளந்து பேசுவாள்.

    எதிராளியின் மனம் புண்படாமல் பேசுவதில் சஞ்சனாவை மிஞ்ச யாராலும் முடியாது. அக்கா தங்கை என்றாலும் கூட எதிர் எதிர்த் துருவங்களாகத்தான் இருவரும் இருந்தனர்.

    சஞ்சனாவின் வீட்டிற்குத்தான் சகானா ஆர்வமாகச் சென்று கொண்டு இருந்தாள். மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் இருந்ததால், அக்காவின் திருமணத்திற்குக் கூட வர முடியாத சூழ்நிலை அவளுக்கு.

    அக்காவின் திருமணம் இந்தத் தேதியில்தான் நடக்க வேண்டும் என்று மாப்பிள்ளையின் அம்மா கறாராகச் சொல்லி விட்டதால் திருமணத் தேதியை மாற்றி அமைக்க வாய்ப்பே இல்லை என்று அப்பா கை விரித்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. 

    படிப்பை முடித்தவுடன் வேலை ஆர்டர் உடனே கையில் கிடைக்க, சந்தோஷத்தில் இறக்கையில்லாமலே வானில் ஒரு நொடி பறந்தாள் சகானா. 

    அதுவும் ஒன்று இல்லை...

    Enjoying the preview?
    Page 1 of 1