Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavu Vandhu Paadumo…
Nilavu Vandhu Paadumo…
Nilavu Vandhu Paadumo…
Ebook205 pages1 hour

Nilavu Vandhu Paadumo…

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

சகானாவிற்கு அவள் தோழி மஞ்சு தான் வேலை செய்யும் கம்பனியில் தனது எம்.டி-க்கு பி.எ-வாக வேலை காலியாக இருப்பதாக சொல்லவும், அந்த வேலைக்கு தன்னை சிபாரிசு பண்ண சொல்கிறாள் சகானா. அதற்கு ஒத்துக்கொண்ட மஞ்சு தனது எம்.டி-இன் விசித்திரமான சில விஷயங்களை சொல்லி அவளை இண்டர்வியூ-க்கு எக்காரணத்தை கொண்டும் அழகாக வரக்கூடாது என்று சொல்கிறாள் அவள். அதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்துகொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்!
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906599
Nilavu Vandhu Paadumo…

Read more from Lakshmi Sudha

Related to Nilavu Vandhu Paadumo…

Related ebooks

Reviews for Nilavu Vandhu Paadumo…

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavu Vandhu Paadumo… - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    நிலவு வந்து பாடுமோ...

    Nilavu Vandhu Paadumo…

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    முன்னுரை

    சகானாவிற்கு அவள் தோழி மஞ்சு தான் வேலை செய்யும் கம்பனியில் தனது எம்.டி-க்கு பி.எ-வாக வேலை காலியாக இருப்பதாக சொல்லவும், அந்த வேலைக்கு தன்னை சிபாரிசு பண்ண சொல்கிறாள் சகானா. அதற்கு ஒத்துக்கொண்ட மஞ்சு தனது எம்.டி-இன் விசித்திரமான சில விஷயங்களை சொல்லி அவளை இண்டர்வியூ-க்கு எக்காரணத்தை கொண்டும் அழகாக வரக்கூடாது என்று சொல்கிறாள் அவள். அதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்துகொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்!

    ***

    1

    பூங்காவைக் கடந்தபோது

    ஒரு புது

    இனிமையான நறுமணம்

    என்ன என்று

    திரும்பினால்

    அங்கே

    நீ அழகாக சிரித்துக்

    கொண்டிருக்கிறாய்!

    சூரியன் கம்பீரமாக தன் தங்கக் கரத்தால் பூமிக் காதலியை அணைக்கும் அழகிய காலைப் பொழுது. ‘கீச்கீச்சென’ மரக்கிளையில் கத்தியபடி ஜாலியாக துரத்தித் துரத்தி ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன இரண்டு அணில்கள், பள்ளிச் சீருடை அணிந்து தூக்கக் கலக்கம் தெளியாமல், ஸ்கூல் வேனிற்காகக் காத்திருக்கும் மாணவர்கள்!

    அந்தக் காலை நேர அவசரத்தை ஜன்னல் வழியாக சுவாரசியமாக கவனித்தபடி தேநீரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் சகானா. ‘அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட்டு விட்டு இப்படி வெட்டியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே’ என்று திட்டிய மூளையின் குரலை, மல்லிகைப் பூவைச் சுமந்துகொண்டு வந்த காற்றின் நறுமணம் ‘சும்மாயிரு கொஞ்ச நேரம்’ என்று அடக்கியது.

    சகானா, உனக்கு போன். எனக்குத் தெரியும் நீ காலையில் இங்கதான் டே ட்ரீம் பண்ணிகிட்டு இருப்ப, இந்தா என்று செல்போனை அவளிடம் நீட்டினாள் ரேகா.

    செல்போனின் திரையில் ‘மஞ்சு’ என்ற பெயர் பார்த்ததும் உற்சாகமானாள் சகானா. ஹலோ சகானா ஸ்பீக்கிங். சொல்லு மஞ்சு, எப்படியிருக்க? என்று ஆர்வமாகக் கேட்டாள்.

    "நான் நல்லாயிருக்கேன்டி. ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான், உன்னைக் கூப்பிட்டேன் சகா. எங்க எம்.டி.க்கு ஒரு பி.ஏ. அர்ஜெண்ட்டா வேணும்.

    கம்ப்யூட்டர் தெரிஞ்சிருக்கணும். ஐ மீன் மைக்ரோ சாஃப்ட் டூல்ஸ் எல்லாம் நல்லாத் தெரிஞ்சிருக்கணும். முன் அனுபவம் இருந்தா பெட்டர். ஆனா கண்டிப்பா முன் அனுபவம் தேவை அப்படின்னு இல்லை ஆனா... என்று இழுத்தாள் மஞ்சு.

    என்னடி, இழுக்கற. எனக்கு மைக்ரோசாஃப்ட் டூல்ஸ், வொர்ட், எக்செல், பவர் பாயிண்ட் எல்லாம் நல்லாத் தெரியும். அதோட எனக்கு மூன்று வருட வேலை அனுபவமும் இருக்கு. அதனால என்னோட சி.வியை நீ உங்க எம்.டி.க்கு அனுப்பு மஞ்சு, ப்ளீஸ். எனக்கு இப்ப ஒரு வேலை ரொம்ப அவசியமா வேணும் என்று மெதுவாக ஆனால் உறுதியாகக் கூறினாள் சகானா.

    ஏய், சகி. எனக்கு உன்னைப் பத்தித் தெரியாதா? உனக்கு இந்த வேலைக்குத் தேவையான எல்லாத் தகுதியும் இருக்கு. அப்படிங்கறது எனக்கு நல்லாத் தெரியும். ஆனா ஒண்ணுதான்டி அடிவாங்குது.

    ஏய், சஸ்பென்ஸ் வைக்காம, என்ன அது சீக்கிரம் சொல்லு.

    ம். உன்னோட அஞ்சரை அடி உயரம், கோதுமை நிறம், அறுபது கிலோ எடை, தங்கச் சிலை போன்ற ஃபிகர், பெண்களே பார்த்துப் பொறாமைப்படற அழகு அதுதாண்டி பிரச்சினையே.

    ஏய், என்னடி காலையில படுத்தற? புரியற மாதிரி சொல்லு. நான் அழகா இருக்கறது எப்படி ஒரு வேலை கிடைக்கறதுக்குத் தடையா இருக்க முடியும்? என்று சற்றே கோபத்தோடு கேட்டாள்.

    நான் என்னடி பண்ணட்டும்? எங்க எம்.டி. அதுல ரொம்ப பர்டிகுலரா இருக்கார் சகி. அழகான பெண்கள், பி.ஏ. வேலைக்கு இருக்கக் கூடாதாம். மாடலிங், ஏர் ஹோஸ்டஸ் அதுக்குதான் போகணும். அதோட எனக்கு பி.ஏ.வா இருக்கிறவங்க நான் சொல்றதை டைப் பண்ற மெஷினா இருக்கக்கூடாது. இன்டெலிஜண்டா இருக்கணும். நான் ஆபீஸில் இல்லாட்டிக்கூட என்னைக் கேட்காமலே முடிவு எடுக்கக்கூடிய திறமை உடையவங்களா இருக்கணும் அப்படின்னு ரொம்ப உறுதியா இருக்கார்.

    இதென்னடி நான்சென்ஸா இருக்கு. அழகா இருக்கறவங்க எல்லாம், அலங்கார பொம்மைகள் அப்படின்னு ஏன் நினைக்கிறார்? சரியான மேல் ஷாவனிஸ்டாக இருப்பார் போலயிருக்கு என்று சீறினாள்.

    ஏய், இது அவரோட கம்பெனி. அவருக்கு எப்படிப்பட்ட நபர் பி.ஏ.வா இருக்கணும். அப்படின்னு அவர் முடிவு செஞ்சு வச்சுட்டார். அவர் பிடிச்ச முயலுக்கு மூணு கால். அவர் முடிவை மாத்திக்கவே மாட்டார். அதான் என்ன செய்யறதுன்னு யோசிக்கறேன் சகி. சம்பளம், மாதம் பிடித்தம் போக முப்பதாயிரம் இருக்கும்! அதோடு தங்குவதற்கு குவார்ட்டர்ஸ், வருஷத்திற்கு முப்பது நாள் விடுமுறை, என நிறைய சலுகைகள்.

    மஞ்சு, ப்ளீஸ் எனக்கு இந்த வேலை கண்டிப்பா வேணும். அப்பாவோட மருந்து செலவு நிறைய ஆகுது. என்ன பண்றது, அப்படின்னே தெரியலை. இண்டர்வியூவில் நான் வேணா உங்க எம்.டி.யை கன்வின்ஸ் பண்ண முயற்சி பண்றேன். எனக்கு இண்டர்வியூ மட்டும் எப்படியாவது அரேன்ஜ் பண்ணுடி.

    சகி, சொன்னா புரிஞ்சுக்கோ. அவர் ரொம்ப அடமெண்ட் டைப். நீ இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணே நேரே ரிஜக்ட்தான். அதான் இதை எப்படி அப்ரோச் பண்றது அப்படின்னு யோசிக்கறேன்.

    ஏய். அவ்வை சண்முகி மாதிரி, ஏதாவது வேஷம் போடச் சொல்லுவ போல, போ மஞ்சு. எனக்கு இந்த வேலை கிடைக்கும்னு தோணலை என்றாள் கம்மிய குரலில்.

    சகி. இப்படிச் செஞ்சா என்ன? என்று உற்சாகமாகக் கத்தினாள், மஞ்சு.

    சொல்லுடி சீக்கிரம் என்று அவசரப்படுத்தினாள் சகானா.

    நீ சொன்ன அவ்வை சண்முகிதான். ஆனா என்ன நீ செய்யப் போறேன்னா, உன் அழகை மட்டுப்படுத்தி, எவ்வளவு தூரம், மட்டுப்படுத்த முடியுமோ, அவ்வளவு தூரம் மட்டுப்படுத்தி இண்டர்வியூக்கு வர்ற, உன் ஹேர் ஸ்டைலிலிருந்து ஸ்லிப்பர் வரைக்கும், ஜஸ்ட் சேன்ஜ் எவ்ரிதிங் அண்ட் கிவ் எ ட்ரை. எனக்கு இது நல்லபடியா முடியும் அப்படின்னுதான் தோணுது.

    ம்ம். புரியுது மஞ்சு. நீ சொல்றது நல்ல ஐடியா வாத்தான் தோணுது. செலக்ட் ஆயிட்டேன்னாலும் நான் அதே கெட் அப்பை மெயின்டெயின் பண்ணணும். கொஞ்சம் டென்ஷனாத்தான் இருக்குடி.

    முயற்சி பண்ணிப் பார் சகி. இன்னைக்கு ஈவினிங் நான் உன்னோட ஹாஸ்டலுக்கு வரேன். நல்லா விவரமாப் பேசலாம், சரியா?

    சரிடி, கண்டிப்பா வா. நான் உனக்காக வெயிட் பண்ணுவேன்.

    அன்று முழுவதும் சகானாவின் எண்ண அலைகள். அந்த வேலையை நோக்கியே சுழன்று வந்தன. கடவுளே இந்த வேலை. எப்படியாவது எனக்குக் கிடைக்க வேண்டும். விபத்தால் கண்களை இழந்த அப்பாவை நினைத்து, அவள் மனம் வாடியது. அப்பாவின் மருந்து செலவுகளுக்கு ஈடு கட்டுவதற்காகவாவது இந்த வேலை எனக்கே கிடைக்க வேண்டும், என்று மனமுருக வேண்டினாள். பழைய வேலையிலேயே பல்லைக் கடித்துக் கொண்டு இருந்திருக்கலாமோ என கேட்ட மனசை அடக்கினாள். மனம் அவளையறியாமல் பின்னோக்கிச் சென்றது.

    ‘சில்வர்லைட்’ எனும் சாப்ட்வேர் கம்பெனியில் கல்லூரிப் படிப்பு முடிந்த பின் சேர்ந்தாள். அந்த வேலை அவளுக்கு காலேஜ் காம்பஸ் இண்டர்வியூ மூலம் கிடைத்தது. அங்கிருந்த அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜருக்கு, பி.ஏ.வாக இருந்தாள். அந்தக் கம்பெனியின் ஹெட் ஆபீஸ் மும்பாயில் இருந்தது. அவளுடைய வேலை வருகின்ற கொடேஷன்களை பரிசீலிப்பது, வெளிநாட்டிலிருந்து கிளையண்ட் வரும்போது அவர்களை நன்றாகக் கவனிப்பது, தங்குவதற்கு வசதிகள் செய்து தருவது போன்றவை.

    முதல் இரண்டு வருடங்கள் நன்றாக ஓடியது. அதற்குக் காரணம் அட்மின் மானேஜர் ‘பாலாஜி’தான். கம்பெனியில் தனக்கிருக்கும் பதவியை துஷ்பிரயோகம் செய்யாத ஒரு நேர்மையான சின்சியரான மானேஜர் அவர். அவர் ரிடையர்டு ஆன பிறகு சகானாவுக்கு நேரம் சரியில்லை.

    அவர் இடத்தை நிரப்புவதற்காக புதிதாக வந்த மாதவன் அவருக்கு நேர் எதிர். சகானா பரிசீலித்த கொடேஷன்களை அப்ரூவ் பண்ண மாட்டார். தனக்கு வேண்டியவர்கள், சொந்தக்காரர்கள் அவர்களிடம் இருந்து வரும் கொடேஷன்களை அப்ரூவ் செய்வார். அவர்களிடம் இருந்து வரும் பொருள் தரமானதாகவே இருக்காது.

    அதோடு விலையும் கூடுதலாகவே இருக்கும். இதை அவள் இரண்டு மூன்று தடவை எம்.டி.க்கு ஆதாரத்தோடு தெரிவித்தாள். அப்போது அவளுக்குத் தெரியாது எம்.டி.க்கும் மாதவனுக்கும் இதில் பங்குண்டு என்று.

    கடைசியாக இதற்கு மேல் மனசாட்சிக்கு விரோதமாக அங்கே வேலை செய்யப் பிடிக்காமல் ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆனால் சென்னையில் அவள் எதிர்பார்க்கும் சம்பளத்தோடு வேலை கிடைக்காததால், என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தான் மஞ்சுவின் போன்கால் அவளுக்குப் புதுத் தெம்பை ஊட்டியது.

    அவளும் மஞ்சுவும் பள்ளியிலிருந்து நல்ல தோழிகள். அவர்கள் இருவர் வீடும் அடுத்தடுத்த தெருவில் இருந்ததால், அடிக்கடி சந்திப்பதும் சுலபமாக இருந்தது. மஞ்சுவைக் காட்டிலும், சகானா அதிக மதிப்பெண் ப்ளஸ் டூ தேர்வில் எடுத்த போதிலும், பொறியியற் கல்லூரியில் படிக்க வைக்கப் போதுமான பணம் இல்லாததால், குடும்ப நிலைமை உணர்ந்து சகானா, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தாள். படிக்கும் போதே பள்ளி மாணவர்களுக்கு, டியூஷன் எடுப்பாள். அவளுடைய கல்லூரி செலவுக்கு, அதிலிருந்து வந்த வருவாய் உதவி புரிந்தது.

    படிப்பு முடிந்த பின் வேலைக்குச் சென்ற பிறகும், மஞ்சுவுடன் தொடர்பு விட்டுப் போகாமல் இருக்க போன், ஈ.மெயில் என நிறைய தொழில் நுட்ப சாதனங்கள் உதவியாக இருந்தது. ஏனெனில் மஞ்சு மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தாள். சகானா அப்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது மஞ்சுவிடமிருந்து வரும் ஈ.மெயிலைப் பார்த்தவுடன் மனம் துள்ளிக் குதிப்பதை நினைத்துத் தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்.

    அமெரிக்காவிலிருந்து படிப்பை முடித்து வந்த மஞ்சு சென்னையில் ‘ஜே.ஜே. கம்ப்யூட்டர்’ நிறுவனத்தில், வேலைக்குச் சேர்ந்தாள். அதற்கு பின் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். சகானா வேலையை ராஜினாமா செய்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.

    அவளுக்கு, இந்நிலையில் ஆதரவாக இருப்பது மஞ்சுவே, சகானாவின் அப்பாவுக்குக் கூட அவள் வேலையை விட்டது தெரியாது. மஞ்சு சீக்கிரம் வரமாட்டாளா என மனம் தவித்தது.

    ***

    2

    எனக்கு எப்போதும்

    உன்

    நினைவு தான்

    பூக்களைப் பார்க்கும்

    போது

    உன் சிரிப்பு

    நினைவுக்கு வருகிறது - கண் சிமிட்டும்

    நட்சத்திரங்களைப் பார்க்கும்

    போது

    அழகான உன் கண்கள்

    நினைவுக்கு வருகிறது

    மழைத்துளியில் கூட

    உன் முகம் தெரிகிறது

    ஆனால்

    உன் நினைவு மட்டும் எனக்குப் போதாது

    நிஜமான நீ

    எப்போது என்னிடம்

    சேரப் போகிறாய்?

    மேடம் உங்களுக்கு விசிட்டர், வாசலில் வெயிட் பண்றாங்க என்று வாட்ச்மேன் சொன்னவுடன் சகானா ரூம் கதவை சும்மா சாத்திவிட்டு, துள்ளிக் குதித்து ஓடினாள்.

    விசிட்டர் ஏரியாவில் இருந்த நாற்காலியில் மஞ்சு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, ஏய் மஞ்சு, நீ எப்ப வருவ அப்படின்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்டி, வழி மேல் விழி வைச்சு காத்துகிட்டு இருந்தேன், தெரியுமா?

    விழியை எடுத்துக்கோடி, யாராவது மிதிச்சிடப் போறாங்க என்று அதே கிண்டலோடு மஞ்சுவும் அவளை எதிர்கொண்டாள்.

    வாடி, உள்ள போய் பேசலாம் என்று அவள் கைகளைப் பிடித்து ரூமிற்குள் அழைத்துச் சென்றாள் சகானா.

    "என்னடி,

    Enjoying the preview?
    Page 1 of 1