Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarthirunthaal Varuven Vennilaviley...
Paarthirunthaal Varuven Vennilaviley...
Paarthirunthaal Varuven Vennilaviley...
Ebook135 pages45 minutes

Paarthirunthaal Varuven Vennilaviley...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வினோதினி ஒரு முன்னணி நாளிதழில் சீனியர் எடிட்டராக வேலை பார்க்கிறாள். அவளுடைய பாஸ் மாதவி. இருவருக்கும் இடையே வேலையை தாண்டி ஒரு நல்ல எண்ண அலைவரிசை உண்டு.

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் நாளிதழ் பொறுப்பை ஏற்று நடத்த வருகிறான் மாதவியின் தங்கை மகன் ஆகாஷ்.

அவனுக்கும் வினோதினிக்கும் இடையே ஏற்படும் வேலை சார்ந்த பிரச்சனைகள் எப்படி முடிகின்றன? தெரிந்துகொள்ள பயணியுங்கள்.

பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே...

இந்த நாவலைப் பற்றிய விமர்சனங்களுக்கு பரிசுகள் உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய ஈமெயில். lakshmisudha2010@gmail.com lakshmisudha2010@yahoo.com

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580140908345
Paarthirunthaal Varuven Vennilaviley...

Read more from Lakshmi Sudha

Related to Paarthirunthaal Varuven Vennilaviley...

Related ebooks

Reviews for Paarthirunthaal Varuven Vennilaviley...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarthirunthaal Varuven Vennilaviley... - Lakshmi Sudha

    http://www.pustaka.co.in

    பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே...

    Paarthirunthaal Varuven Vennilaviley...

    Author :

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 1

    காலங்கள் ஆறு

    உண்டு

    போர் காலம்

    அதில்

    இல்லை…

    உக்ரேனில்

    எப்பொழுது

    பொற்காலம் ?

    சமாதான

    புறா

    அங்கு

    சுட்டு

    வீழ்த்தப்பட்டு

    உள்ளது

    இக்கட்டிலிருந்து

    மக்களுக்கு

    எப்பொழுது

    விடுதலை?

    மதங்கள்

    போதித்த

    மனித நேயம்

    மண்ணில்

    ஏன்

    குரூரமாக

    புதைக்கப்பட்டுள்ளது...?

    வெள்ளை பனி

    குருதி சிகப்பாக ஏன்

    மாறியுள்ளது... ?

    நாடுகளின்

    அதிகார பதவி

    வேட்டை...

    முட்டுக்கட்டை

    போட முடியாமல் ஏன்

    மற்ற நாடுகள்

    மௌனம் ?

    போரின் எச்சங்கள்

    சிதைந்த

    குடும்பங்கள்

    அனாதை

    குழந்தைகள்

    சீரழிக்கப்பட்ட

    பெண்கள்

    சித்ரவதைக்கு

    உள்ளாகும் ஆண்கள்...

    எப்பொழுது மாறும்

    இவர்கள் வாழ்வின் விதி?

    ***

    அடுத்த நாள் பேப்பருக்கு தேவையான கவிதையை எழுதி முடித்தாள் வினோதினி.

    உக்ரைனில் நடக்கும் சம்பவங்கள் அவள் மனதை உலுக்கியது.

    இந்த காலத்தில் இந்த மாதிரி ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி மக்கள். படிப்பதற்காக இந்தியாவில் இருந்து எத்தனையோ பேர் அங்கு சென்று உள்ளனர் குறிப்பாக டாக்டர் ஆகும் கனவுகளோடு. அவர்கள் கனவுகள் தொலைந்து போய்விட்டது.

    அநியாயமாக சிலரின் உயிரும் போய்விட்டது மீண்டும் அங்கே அமைதி நிலவாத என்று யோசித்தபடியே இருந்தாள் அவள் யோசனையை கலைத்தது இன்டர்காம் ஒலி.

    மேடம் நாளைக்கு தேவையான எல்லா விஷயமும் பேப்பரில் இருக்கு. நீங்க அப்ரூவல் கொடுத்து விட்டீர்கள் என்றால் பிரிண்ட் தந்துவிடலாம். என்றாள் ப்ரியா மறுமுனையில்.

    ஓ இ-மெயில் பண்ணிட்டீங்க தானே

    எஸ் மேடம்.

    சரி எனக்கு ஒரு பதினைந்து நிமிடம் டைம் கொடுங்க நான் பார்த்துவிட்டு சொல்கிறேன்"

    ஓகே மேடம் என்றாள் பிரியா.

    வினோதினிக்கு லேசாக தலை வலிக்க தொடங்கியது. கை கடிகாரத்தை பார்த்தாள். இரவு பத்து மணி. காலையில் எட்டு மணிக்கு கேபினுக்குள் வந்தேன். இன்னும் வேலை முடிந்தபாடில்லை என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டாள். இன்று மட்டும் இல்லை கிட்டத்தட்ட ஒரு மாதமாக தினமும் இதே போல் தான் நடக்கிறது. காரணம் மாதவி மேடம் லீவில் இருப்பதால் பாவம் அவர்கள் உடல் நலம் சரியில்லை. அதனால் விடுப்பில் இருக்கிறார்கள். இந்த பத்திரிக்கை அவர்களுடைய குடும்ப பாரம்பரியம். தந்தையின் ஒரே மகளான மாதவி இப்பொழுது பேப்பரை கவனித்து வருகிறார்.

    வயது 60 ஆனாலும் அவர்கள் சுறுசுறுப்பு விடாமுயற்சி யாருக்கும் வராது என்று யோசனையில் சில நொடிகள் ஆழ்ந்தாள் வினோதினி. பேப்பரில் சில இடங்களில் எழுத்து பிழைகள் இருந்தன. அவற்றை சரி செய்தாள். ஒரு இடத்தில் முக்கிய பிரமுகரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது அதையும் சரி செய்தாள். மீண்டும் ஒரு தடவை தவறு ஏதேனும் இருக்கிறதா என்று சரி பார்த்தாள். ஏதும் இல்லை என்று கன்ஃபார்ம் செய்த பின்னர் பிரியாவை இன்டர்காமில் அழைத்தாள்.

    ஹலோ பிரியா கொஞ்சம் மிஸ்டேக் இருந்தது. பேப்பர் என்னிடம் இருக்கிறது நீங்கள் கலெக்ட் செய்து கொள்ளலாம்

    தேங்க்ஸ் மேடம் இதோ வருகிறேன் என்று சொல்லியபடியே வினோதினியின் அறையினுள் நுழைந்தாள் பிரியா.

    டேபிள் மேல் இருந்த பேப்பரை அவளிடம் நீட்டினாள் வினோதினி. சிகப்பு கலரில் வட்டமிட்டு தவறுகளை வினோதினி குறிப்பிட்டு இருந்தாள்.

    மேடம் உங்கள மாதிரி ரிவ்யூ செய்வதற்கு யாராலும் முடியாது. செக்க்ஷனில் உள்ள எல்லோரும் இதை பார்த்து இருக்கிறார்கள் .யார் கண்ணிலும் இந்த தவறுகள் படவில்லை. உங்கள் கண்ணில் எப்படியோ பட்டுவிட்டது. யூ ஆர் கிரேட் மேடம்

    அப்படியெல்லாம் இல்லை பிரியா. எக்ஸ்பீரியன்ஸ் வழியாக எல்லாமே வருகிறது. இதில் தவறு இருக்கும் என்ற கண்ணோட்டத்துடன் நான் பார்க்கிறேன் அதனால் கூட தவறுகள் என் கண்ணில் படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நாம் எதைத் தேடி கொண்டு இருக்கிறோமோ அது நமக்கு கிடைக்கும் என்பதை போலத்தான் என்று புன்னகைத்தாள் வினோதினி.

    இந்த ஒரு மாதத்தில் நீங்கள் மெலிந்து விட்டீர்கள் மேடம். ரொம்ப நேரம் இப்பொழுதெல்லாம் அலுவலகத்தில் நேரத்தை செலவிடுகிறீர்கள்

    மாதவி மேடம் இல்லை அதனால்தான் அவர்கள் வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்

    சரி கிளம்புங்க மேடம் ரொம்ப நேரம் ஆகிவிட்டது

    ஆமாம் பிரியா தலை வலிக்கிறது லேசாக. வீட்டிற்கு போய் படுத்து தூங்கினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். உன் வேலை முடிந்து விட்டால் நீயும் கிளம்ப வேண்டியது தானே.

    இன்னும் ஒரு பத்து நிமிஷத்தில் நானும் கிளம்பி விடுவேன் மேடம் குட் நைட்

    குட் நைட் ப்ரியா என்று சொல்லியபடியே வினோதினி லாப்டாப்பை ஷட் டவுன் செய்தாள்.

    அத்தியாயம் 2

    எந்த

    ஆர்ப்பரிப்பும்

    இல்லாமல்

    நதி

    ஓடிக்கொண்டிருக்கிறது...

    கடலலை

    ஆரவாரத்துடன்

    முன்னும்

    பின்னும்

    ஒரு

    உத்வேகத்துடன்

    காட்சியளிக்கிறது...

    நீயும்

    அதைப்போலவே

    சில நேரம்

    அமைதியாக

    இருக்கிறாய்

    சில நேரம்

    ஆர்ப்பரிக்கிறாய்...

    உன்னுடைய

    இயல்பு

    அது...

    அது

    மாற

    வேண்டாம்

    நீ

    நீயாகவே

    இரு

    ***

    "உள்ளே வா

    Enjoying the preview?
    Page 1 of 1