Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Swasakaattru Nee...!
En Swasakaattru Nee...!
En Swasakaattru Nee...!
Ebook171 pages1 hour

En Swasakaattru Nee...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாதுரியா என்ற பெண் பத்திரிக்கை தொழிலில் பணிப்புரிந்து வருகிறாள். இவள் துப்பறியும் தொழில் மூலம் பிரித்திவ்ராஜ் என்பவரின் வீட்டிற்குள் நுழைகிறாள். இதற்கிடையில் பிரித்திவ்வின் தங்கை ரஞ்சனாவை கடத்தி செல்லப்படுகின்றாள். ஏன் ரஞ்சனாவை கடத்த வேண்டும்? மாதுரியா என்ற பெண் பிரித்திவ் வீட்டில் ஏன் ரகசியமான முறையில் துப்பறியும் பணியை தொடர வேண்டும்? மாதுரியாவின் பணி நன்றாக அமைந்ததா? ரஞ்சனாவை கடத்தியவர் யார்...? எதற்காக கடத்த வேண்டும்...?

Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580140906972
En Swasakaattru Nee...!

Read more from Lakshmi Sudha

Related to En Swasakaattru Nee...!

Related ebooks

Reviews for En Swasakaattru Nee...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Swasakaattru Nee...! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    என் சுவாசக்காற்று நீ...!

    En Swasakaattru Nee...!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    "வெண்ணிலா

    வானில்

    தனியாகப்

    பவனி

    வந்துக்

    கொண்டு

    இருக்கிறது!

    தனியே...

    தன்னந்தனியே

    நான்

    விண்மீன்களை

    எண்ணியபடியே

    உனக்காகக்

    காத்துக் கொண்டு

    இருக்கிறேன்!"

    வானம் மப்பும் மந்தாரமுமாகக் காட்சி அளித்தது. சாலையில் மஞ்சள் கம்பளம் விரித்தது போன்ற தோற்றத்தை, உதிர்ந்து கிடந்த சரக்கொன்றைப் பூக்கள் ஏற்படுத்தின.

    காற்றைக் கிழித்தபடி, தனது ஸ்கூட்டியில் சென்றுக் கொண்டு இருந்தாள் மாதுரியா. ‘மழை வருவதற்குள் வீட்டிற்குள் சென்று விட வேண்டும்...' என்று நினைத்தபடியே வேகத்தை அதிகரித்தாள் அவள்.

    வேகத்தடையாக, திடுக்கென ஒரு நாய்க்குட்டி அவள் ஸ்கூட்டியின் முன் பாய, அதன் மேல் வண்டியை ஏற்றாமல் இருக்க முயற்சி செய்ததால், நாய்க்குட்டி பின்னால் வந்த அந்த சைக்கிளில் வந்த சிறுவனைக் கவனிக்கத் தவறினாள்.

    விளைவு, அவளது ஸ்கூட்டி அந்தச் சைக்கிள் மேல் மோதி, சிறுவன் கீழே விழ, இவளும் ஸ்கூட்டியுடன் அவன் மேல் விழுந்தாள்.

    ஸ்கூட்டியின் கனம் முழுக்க உடலில் பரவி இருந்ததால், அவளால் எழுந்து இருக்க முடியவில்லை.

    'வீல்' என்று அலறிய சிறுவனின் குரல் பரிதாபமாக அவள் காதில் ஒலித்தது. சாலையில் அப்பொழுது ஒரு கார் அவர்கள் அருகே வந்து நின்றது.

    காரில் இருந்து, ஒரு ஆறடி உயரம் மிக்க இளைஞன் ஒருவன் அவசரமாக இறங்கினான்.

    என்ன ஆச்சு...? என்றபடியே பதை பதைத்தபடியே அவள் மேல் பரவி இருந்த ஸ்கூட்டியைத் தூக்கி நிறுத்தினான்.

    தேங்க்ஸ் ஸார்... என்றபடியே எழ முயன்றாள் அவள்.

    அவள் எழுந்திருக்க உதவி புரிந்தான். அவள் அடியில் இருந்த சைக்கிள் கீழே இருந்த சிறுவனைப் பார்த்தான்.

    அதே நேரம், அவனைப் பார்த்த மாதுரியா அதிர்ச்சி அடைந்தாள். காரணம், கீழே இருந்த ஒரு கல் மேல் சிறுவனின் தலை உராய்ந்ததால், ரத்தம் கசிந்துக்கொண்டு இருந்தது.

    கடவுளே...! தலையில், அடிபட்டு விட்டதே... என்று பதறினாள் அவள்.

    ஆமாம். தலையில் அடிபடுவது ரொம்ப ஆபத்தில் முடியலாம். அதனால் விரைவாக, இவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கமான், என் காரில் இவனைப் படுக்கவைக்கலாம், வாங்க... என்றான் இளைஞன்.

    ஓ.கே... என்றபடி எழுந்தாள்.

    நீங்க கார் கதவைத் திறங்க. நான் இவனைப் படுக்கவைக்கிறேன்... என்றான் அவன்.

    அவன் சொன்னபடியே கார் கதவைத் திறந்தாள் அவள். சிறுவன் மயங்கிய நிலையில் இருந்தான். அவனைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது.

    நீங்க முன்னாடி வந்து உட்காருங்க மேடம்...

    சரி... என்றவளுக்கு, அப்பொழுதுதான் முழங்கையின் எரிச்சல் உரைத்தது. ஏன் என்று கையைத் திருப்பிப் பார்த்தவளுக்கு, விஷயம் அப்பொழுதுதான் புரிந்தது. கரடு முரடான சாலையில் முழங்கையை ஊன்றி, ஏடாகூடமாக விழுந்ததால் தோல் அங்கே சிதைந்து, ரத்தம் லேசாகக் கசிந்து கொண்டு இருந்தது. வலி பொறுக்காமல் ஸ்ஸ்... என்றாள் அவள்.

    என்ன ஆச்சு...? என்றவனின் குரலில் பதட்டம் தெரிந்தது.

    இல்லை... கை முட்டியில், லேசான காயம். அது தான் கையில் எரிச்சல்...

    ஓ...! வினை விதைப்பவன் வினை அறுக்க வேண்டியதுதானே... என்றவனின் குரலில் குத்தல் தெரிந்தது.

    என்ன சொல்றீங்க...?

    ம்... நீங்கதானே இவன் கீழே விழக் காரணமாக இருந்தீங்க...

    லுக் மிஸ்டர். நடந்தது என்ன என்று தெரியாமல் பேசாதீங்க...

    என்ன நடந்தது என்று இந்தச் சிறுவனைப் பார்த்தாலே தெரிகிறதே...

    லுக்... என் மேல் எந்தத் தப்பும் இல்லை. என் வழியில் திடீரென வந்தது இவன்தான். கூடவே... ஒரு நாய்க்குட்டி. நான்... என்று அவள் முடிக்கும் முன்பு அவன் குரல் இடை மறித்தது.

    சரி, அநாவசியமாகப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். சீக்கிரம் ஹாஸ்பிடலுக்குப் போக வேண்டும். வா என்னோடு...

    நான் வரவில்லை, உங்களுடன்... என்றவள் ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள்.

    ம்... தப்பு செய்துவிட்டு, இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து போவது சரி இல்லை... என்றான் கோபமாக அவன்.

    அவள், அவன் சொல்வதைக் காதில் வாங்காமல் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

    ம்... சே...! கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல்... வா, என்னோடு... என்றவன், ஸ்கூட்டியின் சாவியைப் பிடுங்கி சட்டைப் பாக்கெட்டினுள் போட்டுக் கொண்டான்.

    என்ன இது... கொடுங்க, என் சாவியை... என்று கத்தினாள் அவள்.

    வா என்னோடு... என்று அவள் கையைப் பற்றி முரட்டுத்தனமாகக் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.

    விடு என் கையை... என்று தன் கையை அவன் பிடியில் இருந்து விடுவிக்கப் போராடினாள் அவள்.

    ஆனால், அவன் காரில் அவளைத் தள்ளி, கதவை மூடி, காரை ஸ்டார்ட் செய்தான். கார் சீறிப் பாய்ந்தது.

    கார் கதவைத் திறக்கலாம் என்று முட்டாள்தனமாக யோசிக்காதே. இது 'சென்ட்ரல் லாக்' முறை. என் பக்கம் உள்ள கதவில்தான் கன்ட்ரோல் உள்ளது... என்றான் அவன்.

    அவளுக்குக் கோபம், அலைபோல் உடல் முழுவதும் பரவியது.

    நான் போலீசைக் கூப்பிடப் போகிறேன்... என்று கைபேசியை எடுத்தாள்.

    ம்... தாரளமாகக் கூப்பிடுங்கள்... முதலில் உங்களைத்தான் பிடிப்பார்கள்...

    ம்... அதற்கு எந்தச் சாட்சியும் இல்லை...

    முட்டாள். உன் கைரேகைகளை வைத்தே, அவர்களால் நடந்த விஷயத்தை யூகிக்க முடியும். அதனால் பேசாமல் இரு...

    அவன் சொன்னதிலும் அர்த்தம் இருந்ததால், அமைதியாக இருந்தாள் அவள்.

    ஸோ, கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல், தப்பு செய்துவிட்டு, அங்கு இருந்து தப்பித்துச் சென்று விடுவதுதான் உன்னோட பாலிஸியா...? என்று கூர்மையாக விழுந்தன வார்த்தைகள்.

    மிஸ்டர்... என் மேல் தப்பு இல்லை. தப்பு செய்து விட்டு, ஓடுவது என் வழக்கம் இல்லை. ஆனால், உங்களுடன் வருவதற்கு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் இங்கு இருந்து கிளம்பத் துடிக்கிறேன். நீங்கள் வரவில்லை என்றால் நானே இவனை ஹாஸ்பிடலில் சேர்த்து இருப்பேன்...

    குட் ஜோக்... நான் வரவில்லை என்றால், நீ இந்த இடத்தை விட்டு ஓடி இருப்பாய்...

    உங்களுக்கு என்னைப் பற்றிப் புரியவைக்க அவசியம் இல்லை...

    ஓ.கே... உன் பெயர் என்ன...? படிக்கிறாயா... இல்லை, வேலை பார்க்கிறாயா...?

    என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

    ம்... தேய்ந்து போன ரெக்கார்ட் மாதிரி அதையே சொல்லாதே...

    சே...! யார் முகத்தில் விழித்தேனோ, இந்த மாதிரி ஒரு ஆளுடன் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது... என்று அலுத்துக் கொண்டாள் அவள்.

    "ரொம்பவும் நடிக்காதே. இன்னும் ஐந்து நிமிஷத்தில் ஹாஸ்பிடல் வந்து விடுவோம். அதனால் அமைதியாக வா. இந்தப் பையன் யார் என்று தெரியவில்லை. அவனுக்குப் பெரிதாக எதுவும் ஆகி இருக்காது என்று நம்புகிறேன்.

    அடுத்த தடவை, ஸ்கூட்டி ஓட்டும் பொழுது, ஜாக்கிரதையாக ஓட்டு. சாலை முழுக்க உன்னுடையது போல் ஓட்டாதே..."

    ஷட் அப். என் மேல் தப்பு இல்லை என்று எத்தனை தடவை சொல்வது. தப்பு நடந்தால் அதைத் தட்டிக் கேட்கும் பொறுப்பில் நான் இருக்கிறேன். நான் ஒன்றும் கோழை இல்லை. தப்பு என் மேல் இருந்தால் அதை ஒத்துக்கொள்ள நான் தயங்கமாட்டேன்... என்று படபடக்காள் அவள்.

    ம்... ஸோ, என்ன பொறுப்பான வேலை என்று நான் தெரிந்து கொள்ளலாமா...?

    ம்... நான் ஒரு பத்திரிகை நிருபர்.

    ஓ... இருப்பதை இல்லை என்று சொல்வதும், இல்லாததை இருக்கு என்று சொல்வதும் உன் வேலையா...?

    உங்களின் எண்ணம் அது. நல்லதுகூட உங்கள் கண்களுக்குக் கெட்டதாகத் தெரியும்...

    என்னிடம் யாரும் இப்படி ஏட்டிக்குப் போட்டியாகப் பேசியது இல்லை...

    ம்... எல்லாவற்றுக்கும் முதல் முறை என்று உண்டு ஸார்... என்றாள் குத்தலாக அவள்.

    ஸார் என்றும் மிஸ்டர் என்றும் கூப்பிட்டு என்னை 'டார்ச்சர்' செய்யாதே. என் பெயர் பிரித்விராஜ்...

    அவள் ஒரு நொடி மவுனமாக இருந்தாள்.

    என்ன, பேச்சு மூச்சைக் காணோம். உன் பெயர் என்ன...?

    என் பெயர் மாதுரியா... என்றாள் மெல்லிய குரலில்.

    ம்... அழகான பெயர். அட்லீஸ்ட் பெயராவது அழகாக இருக்கிறதே... என்றான் கிண்டலாக.

    அவள் மீண்டும் மவுனம் சாதித்தாள்.

    "என்ன யோசனை...?

    Enjoying the preview?
    Page 1 of 1