Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thullatha Manamum Thullum
Thullatha Manamum Thullum
Thullatha Manamum Thullum
Ebook95 pages37 minutes

Thullatha Manamum Thullum

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

தீபிகாவிற்கு வாழ்க்கையில் இருக்கும் ஒரே ஆதாரம், அவள் தாத்தா தான். தன் வீட்டில் அழகாக தோட்டம் அமைத்து, அதை பராமரித்து வந்தார் அவளின் தாத்தா.
அதற்கு ஒத்தாசையாக இருந்தாள் தீபிகா. அமைதியாக இருந்த அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது, காரணம் சஞ்சய். மீண்டும் தீபிகாவின்
வாழ்வில் அமைதி திரும்புமா? படித்து பார்த்தால் உங்களுக்குத் தெரியும்!
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906586
Thullatha Manamum Thullum

Read more from Lakshmi Sudha

Related to Thullatha Manamum Thullum

Related ebooks

Reviews for Thullatha Manamum Thullum

Rating: 2 out of 5 stars
2/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thullatha Manamum Thullum - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    துள்ளாத மனமும் துள்ளும்

    Thullatha Manamum Thullum

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 1

    ஒரு நாள்

    கதிரவன்

    போல் என்

    வாழ்வில்

    நீ

    வந்தாய்!

    என்னை

    நேருக்கு

    நேர்

    பார்த்தாய்!

    என் வாழ்வின்

    எல்லா இருள்களும்

    அந்த நொடியில்

    என்னை விட்டுத்

    தொலைதூரம்

    போயின!

    அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மழை வரும்போல் தோன்றியது தீபிகாவிற்கு. மணி நான்குதான் ஆகிறது. அதற்குள் இரவு ஏழு மணிபோல் இருட்டி விட்டதே என்று திகைத்தாள்.

    ம்.... ம். இப்பொழுது எல்லாம் இயற்கை எப்படி மாறி விட்டது. வெயில் காலத்தில் அதுவும் கத்திரி அக்கினி நட்சத்திரத்தில் புயல் கூட வருகிறது.

    இயற்கையை மனிதன் தன் பேராசையால் வசப்படுத்த நினைத்தால் இப்படித்தான் ஆகும். காலம் மாறுகிறது... மனிதன் மாறுகிறான். இயற்கையும் மாறுகிறது.

    நல்ல காலம் தாத்தா வீட்டில் இருக்கிறார். இங்கே வந்து கடையில் இருந்திருந்தால் பதட்டமாகி விடுவார். பாவம்! அவருக்கும் வயதாகிறது இல்ல, அதான். வயதுக்குரிய மறதி, சோர்வு எல்லாம் இருக்கிறது.

    ஆனால் தோட்டத்தில் வேலை செய்வது என்றால் அதெல்லாம் தோன்றவே தோன்றாது அவருக்கு. நேரம் காலம் இன்றி உழைப்பார்.

    உழைக்க அஞ்சவே மாட்டார் தாத்தா. எழுபது வயதில் இந்தச் சுறுசுறுப்பு ரொம்ப அதிகம்தான் என்று யோசித்தபடியே கடையை ஒழுங்குபடுத்தத் தொடங்கினாள் தீபிகா.

    கார்டன் ஃபிரஷ் என்ற பெயர் கொண்ட அவளுடைய கடை அந்த லோக்கல் ஏரியாவில் ரொம்ப பிரபலம்.

    தோட்டத்தில் விளையும் கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை ஃபிரஷ்ஷாக விற்பனை செய்வதில் இந்தக் கடையைத் தோற்கடிக்கவே முடியாது என்ற கருத்து அங்கிருக்கிற உள்ளூர் மக்களிடம் இருந்தது.

    அதில் என்ன வித்தியாசம் என்றால் எல்லாம் விளைவிப்பதற்கு எந்தச் செயற்கைப் பூச்சிக்கொல்லியும் உபயோகப்படுத்துவதில்லை.

    முழுக்க முழுக்க இயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

    தாத்தாவின் கண்ணும் கருத்துமான பராமரிப்பில் காய்கறிகள் பச்சைப் பசேல் என்று புதிதாக எப்பவும் இருக்கும். பார்க்கப் பார்க்க வாங்கத் தூண்டும்.

    பழங்கள் மட்டும் சோடை போகுமா என்ன? அந்தந்தப் பருவ நிலைக்கு ஏற்ற பழங்கள் அங்கே தவறாமல் இருக்கும்.

    மனதை மயக்கும் மாம்பழம், தித்திக்கும் சப்போட்டா, பதமான பக்குவத்தில் பப்பாளி, வாழைப் பழம் என எல்லாப் பழங்களும் அழகாகக் கடையில் டிஸ்பிளே செய்து இருக்கும்.

    கூடவே, டிஸ்பிளேயில் ஏதாவது ஒரு வெஜிடபிள் கார்விங் தவறாமல் இருக்கும்.

    பப்பாளியில் சூரியன், வெங்காயத் தாளில் ரோஜா, தர்பூசணியில் படகு எனப் புதிது புதிதாகத் தினம் ஏதாவது ஒன்று கடையில் இருக்கும்.

    அதைப் பார்ப்பதற்கே சின்னப் பசங்கள் கடைக்கு ஆர்வமாக வருவார்கள். தீபிகா கல்லூரிப் படிப்புப் படிக்கும்பொழுதே... முறைப்படி வெஜிடபிள் கார்விங் கற்றுக் கொண்டதால் அதைச் செய்வது சுலபமாக இருந்தது.

    சரி, மழை வரும்போல் தெரிகிறது. அதனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் கடையை மூடிவிட வேண்டியதுதான் என்று நினைத்தபடி பூட்டு சாவியைத் தயாராக எடுத்து வைத்தாள்.

    அதற்குள் கைபேசி சிணுங்கவே டேபிளிலிருந்து அதை எடுத்தாள். திரையில் தோன்றிய தாத்தாவின் நம்பரைப் பார்த்துச் சிரித்தபடி பட்டனை அழுத்தினாள்.

    தாத்தா... நான் தீபிகாதான் பேசறேன். சொல்லுங்க. ஏதாவது வாங்கிட்டு வரணுமா? என்றாள் அக்கறையாக.

    ம்ஹு... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ சீக்கிரம் வீட்டுக்கு வந்திடு. மழை வர்ற மாதிரி இருக்கு. நியூஸ்லேயும் சொல்லிக்கிட்டே இருக்காங்க. அதனால கடையை மூடிட்டு வந்திடு. பார்த்து வாம்மா. பதட்டப்படாம வா... என்றார் அக்கறையாகத் தாத்தா.

    சரி தாத்தா... நானே உங்களுக்கு ஃபோன் செய்து சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே கால் செஞ்சிட்டீங்க. இதோ நான் கடையைப் பூட்டிக்கிட்டே இருக்கேன். நீங்க பத்திரமா இருங்க தாத்தா. நான் வந்திடுவேன். என்று ஆதரவாகச் சொன்னாள் தீபிகா.

    சரிம்மா... தாத்தா சூடா டீ போட்டு வெச்சிருக்கேன். மழையில நனையாமப் பார்த்து வாம்மா... என்று சொல்லியபடியே ஃபோனைத் துண்டித்தார் கணேசன்.

    அவரின் ஒரே செல்லப் பேத்தி தீபிகா. வாழ்க்கையில் அவருக்கு இருக்கும் ஒரே பிடிப்பு அவள்தான்.

    தீபிகாவின் பெற்றோர்கள் ஒரு கார் விபத்தில் இறந்தபொழுது, அவளுக்கு வயது பதினாறு. கல்லூரியில் அடியெடுத்து வைக்க வேண்டிய பருவம்.

    திடீரென ஏற்பட்ட அந்தச் சோகம் அவளை ரொம்பவே உலுக்கியது. அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் தவித்து நின்ற பொழுது ஆதரவாகத் துணை நின்றது கணேசன்தான்.

    தீபிகாவின் சாயல் அவருக்குத் தன் மகள் சந்தியாவை

    Enjoying the preview?
    Page 1 of 1