Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urugiyathey En Ullam!
Urugiyathey En Ullam!
Urugiyathey En Ullam!
Ebook88 pages36 minutes

Urugiyathey En Ullam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ப்ரியா, ரோஜா இதழ்களின் மென்மை போன்றவள், ஆனால் குணத்தில் சற்று கண்டிப்பானவள் – கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் போது மட்டும். தாய், தந்தையை இழந்து சித்தியின் அரவணைப்பில் வளர்ந்தவள். நாளைடைவில் சித்தியும் இறந்துவிட, தனித்து நின்று கல்லூரி பேராசிரியராக வளர்ந்தவள்.

இனிதே தொடர்ந்த பயண வாழ்வில் விஷால் என்பவன் குறிக்கிடுகிறான், அவளை பிடித்து போய், அவள் போகும் இடமெல்லாம் கண்காணித்து, பின்பு அவளை தானாகவே தன்னிடம் வந்து தன் காதலை ஏற்க வைக்க அவன் நடத்தும் காதல் விளையாட்டுக்களைச் சற்றும் குறையாத சுவாரஸ்சியத்துடன், வாசிப்போம் காதலை சுவாசிப்போம்… வாருங்கள்…

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580140906964
Urugiyathey En Ullam!

Read more from Lakshmi Sudha

Related to Urugiyathey En Ullam!

Related ebooks

Reviews for Urugiyathey En Ullam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urugiyathey En Ullam! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    உருகியதே என் உள்ளம்!

    Urugiyathey En Ullam!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    "இசை

    அருவியில்

    நான்

    மூழ்கி இருந்தேன்!

    ஹலோ

    என்றாய் நீ!

    தேன் அருவியில்

    தொலைந்து விட்டேன் நான்!"

    அன்று சனிக்கிழமை என்பதால் கடற்கரை கூட்டமாக இருந்தது.

    சுண்டல் விற்கும் சிறுவனின் முகத்தில் சந்தோஷம் பூத்து இருந்தது.

    அதிகமான கூட்டம் என்றால் சுண்டல் விற்பனையும் கூடுதலாகத் தானே இருக்கும்! ஆரஞ்சு வண்ணப் பந்தாக வானில் காட்சி அளித்தான் சூரியன்.

    ப்ரியா... போகலாமா? என்றாள் மாலினி.

    ம்... போக மனம் இல்லை தான். கடற்கரைக் காற்று, காலைக் கொஞ்சி விளையாடும் அலைகள்... இவை எல்லாம் எவ்வளவு இனிமையா இருக்கு.

    இங்கேயே இருக்கலாம் போல இருக்கு, மாலு. கடலைப் பார்த்தாலே மனசில் உற்சாகம் பொங்கி வழியுது.

    ஏய்... எனக்கு அந்த மாதிரி எல்லாம் ஏதும் இல்ல. நான் இங்க வந்ததற்குக் காரணமே வேறு.

    தெரியுமே... பச்சை மிளகாய் பஜ்ஜிக்குத் தானே நீ வந்த...

    யெஸ்... யெஸ்... அப்படி ஒரு ஸ்பெஷல் டேஸ்ட் இந்தப் பஜ்ஜியில் எப்படி வருதுன்னு தெரியலை, ப்ரியா. ஆனால் ஏதோ மேஜிக் இருக்கு. அவங்க கடையைக் கூட எவ்வளவு அழகா அலங்காரம் செஞ்சிருக்காங்க பார்த்தியா?

    அவள் கைகாட்டிய திசையில் திரும்பிப் பார்த்த ப்ரியா ஆமோதித்துத் தலை அசைத்தாள்.

    ஆமாம் மாலு. இந்த நீளமானப் பச்சை மிளகாயை வைத்தே தோரணம் மாதிரி கடையின் முன்னால் கட்டி வைத்து இருக்கிறார்கள்.

    ரொம்ப அழகா இருக்கு. அப்புறம் தர்பூசணி, தக்காளிப் பழத்தை வைத்தே அழகாக திருஷ்டி பொம்மை வேறு வாசலில் வைத்திருக்காங்க பார்.

    ஆமா... வெஜிடபிள் கார்விங் படிச்சவங்க கூட இவ்வளவு சூப்பராக செய்வாங்களா அப்படின்னு ஆச்சரியமா இருக்கு.

    படிப்பு ஒரு கருவி தான் மாலு. படிக்காமலே நிறையப் பேர் சாதிச்சு இருக்காங்க.

    ஒரு லெக்சரர் இந்த மாதிரிப் பேசுவது சரி இல்லை, மேடம்! என்றாள் சிரித்தபடியே மாலினி.

    ப்ரியாவும் அவளின் சிரிப்பில் இணைந்து கொண்டாள்.

    எனக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கக் கூடாதா என்ன? இப்ப காலம் ரொம்ப மாறிடுச்சு மாலு. முன்னாடி குருகுல காலக் கட்டத்தில் குருவுக்கு மாணவர்கள் பணிவிடை செய்வார்கள்.

    படிப்பைச் சொல்லித் தரும் குரு தெய்வத்திற்கு ஒப்பானவர் என்ற கருத்து எல்லோர் மனதிலும் அப்பொழுது பதிந்து இருந்தது. ஆனால் இப்ப ஆசிரியர்கள் பாடு திண்டாட்டமாகி விட்டது. குழந்தைகளைத் திட்டுவதற்குக் கூட ரொம்ப யோசிக்க வேண்டி உள்ளது.

    ம்... கரெக்ட்தான். இப்ப மாணவர்களின் டாலரன்ஸ் லெவல் ரொம்பக் குறைந்து விட்டது.

    முணுக்கென்றால் வன்முறையில் இறங்கி விடுகிறார்கள். இல்லை தற்கொலை.

    சே... சே... இதுக்கெல்லாம் எப்ப தீர்வு வரும்? எப்படித் தீர்வு வரும் என்றே தெரியவில்லை. நம்முடைய பாடத் திட்டத்தில் மாரல் சயின்ஸ் அதாவது நல்லொழுக்கம் அப்படின்னு ஒரு சப்ஜெக்ட் இருக்கு. ஆனால் நிறையப் பள்ளிகளில் அதைக் கணக்கு... இல்லை சயின்ஸ் பீரியடாக மாற்றி விடுகிறார்கள்.

    போர்ஷன்ஸ் அதிகமாகி விட்டது! பாவம்... டீச்சர்ஸ் என்ன செய்வார்கள்? பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பிரஷர் வேறு, செண்ட் பர்செண்ட் ரிசல்ட்ஸ் எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்று.

    ரிப்போர்ட் கார்டில் நன்றாகப் படிக்காத மாணவர்களுக்கு என்ன கமெண்ட் எழுதுவது என்று எல்லா ஆசிரியர்களும் இப்பொழுது பயத்தில் இருக்கிறார்கள்.

    ஆமாம்... கணினியின் ஆதிக்கம் ஒரு பக்கம், தொலைக்காட்சி போன்றவற்றின் ஆக்கிரமிப்பு இன்னொரு பக்கம்... மாணவர்களைச் சுண்டி இழுக்கிறது.

    நல்ல விஷயங்களைக் காட்டிலும் கெட்டவை வேகமாகப் பரவி விடுகின்றன. என்ன செய்வது? பொழுது போக்கு அம்சங்கள் மாணவர்களை இழுக்கிறது, தங்கள் பக்கம். அவர்களை நல்வழியில் நடத்தும் கடமை இப்பொழுது பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் மட்டுமே உள்ளது மாலு.

    இது கொஞ்சம் சவாலான விஷயமாகி விட்டது. இப்பொழுது உள்ள சூழலில். தோல்விகளைச் சந்திக்கும் மனப்பக்குவத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் எப்பொழுதுமே எல்லாக் கட்டங்களிலும் வெற்றி கிடைக்காது எல்லோருக்கும்.

    தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி... என்பது அவர்களுக்குப் புரிய வேண்டும்.

    "நீ அதைத்

    Enjoying the preview?
    Page 1 of 1