Nee Pogum Paathaiyil...
()
About this ebook
சேவை மனப்பான்மை அதிகமுள்ள டாக்டர் அக்ஷரா. தன்னுடைய பணியை நேர்மையாகச் செய்பவள். ஆயில்-ரிக்கில் வேலை செய்யும் அபிலாஸ். அபிலாஸ், டாக்டர் அக்ஷராவை விரும்புகிறான்... அக்ஷரா ஒரே ஒரு காரணத்தினால் அபிலாஸை வெறுக்கிறாள். அக்ஷரா அபிலாஸை வெறுக்க காரணம் என்ன? அபிலாஸை விரும்புவாளா அக்ஷரா? இவர்களுக்கு இடையேயான காதல் பாதை தொடருமா? நாமும் இவர்கள் போகும் பாதையில்...
Read more from Lakshmi Sudha
Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsSaaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Ennai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Pookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Paarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsSagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsThullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Ithu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Roja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Pookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Urugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsMayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Athu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Manathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPoo Parikka Nee Pogathey! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Kaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5Poo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Paniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nee Pogum Paathaiyil...
Related ebooks
En Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesuthey... Rating: 0 out of 5 stars0 ratingsThanjam Eppothadi Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Poo Parikka Nee Pogathey! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Thediya Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsNee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Sirippinile... Rating: 0 out of 5 stars0 ratingsPani Vizhum Malar Vanam! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsKarpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Ithu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Anandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Vanavil En Vaasalil! Rating: 1 out of 5 stars1/5Yaathumagi Nindrai! Rating: 0 out of 5 stars0 ratingsOli Pookkum Malai... Rating: 0 out of 5 stars0 ratingsMounam Un Mozhiya? Rating: 0 out of 5 stars0 ratingsVaanamenum Veedhiyiley...! Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsKuyilosai Kettayo! Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Vaa Nila Rating: 0 out of 5 stars0 ratingsVaanmathiye Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagave Naan Rating: 0 out of 5 stars0 ratingsEnnamo Yetho… Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Tholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Pon Maalai Pozhuthu Rating: 2 out of 5 stars2/5
Reviews for Nee Pogum Paathaiyil...
0 ratings0 reviews
Book preview
Nee Pogum Paathaiyil... - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
நீ போகும் பாதையில்...
Nee Pogum Paathaiyil…
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
கடற்கரை
மணல்வெளியில்
உன்
ஒற்றைக் கொலுசு!
புதையல்
போல்
என்
கண்களுக்கு
அது
காட்சி
அளிக்கிறது!
அதைப்
பத்திரமாக
நான்
கைவிரல்களில்
மூடிக் கொள்கிறேன்!
அப்பொழுது நான்
நினைக்கவில்லை...
என்னிடம் உன்
ஞாபகமாக அது
மட்டுமே மிஞ்சும் என்று!
காட்! இந்த ஆண்கள்... சே... ஏன்தான் இப்படி நடந்துகொள்கிறார்களோ... அவர்கள் இல்லாவிட்டால் லைஃப் இஸ் ஈஸி அண்ட் நைஸ்...
என்று அலுத்துக்கொண்டாள் அக்ஷரா.
அவன் வேண்டும் என்றே முகத்தில் வெட்டுக் காயத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை
.
அதை நினைவில் வைத்துக்கொண்டு பேசு!
என்றான் தீபக்.
அவர்கள் இரண்டு பேரும் வேண்டும் என்றே சண்டை போட்டார்கள்... தீபக்!
ஸ்கூல் பசங்க மாதிரி சண்டை போட்டிருக்கிறார்கள். வளர்ந்த ஆண்கள் இந்த மாதிரி காட்டுமிராண்டிகள் மாதிரி சண்டை போட்டதால் உன்னுடைய ஒரு மணி நேரமும் என்னுடைய ஒரு மணி நேரமும் வீணானது.
அந்தத் தேவையில்லாத வேலையை நாம் தவிர்த்திருக்கலாம். நான் ஆண்களைத் தவிர்ப்பது போல...!
நீ என்னைச் சொல்லவில்லை என்று நான் நம்புகிறேன் அக்ஷரா!
நான் உன்னைச் சொல்லவில்லை... தீபக். சீஃப் டாக்டர் இல்லாத நேரத்தில் நீயும் இல்லை என்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியவில்லை
.
வர பேஷண்ட்ஸ் எல்லாரையும் என்னால் மேனேஜ் செய்ய முடியாது. எமர்ஜென்ஸி கேஸ் வந்தால் அதை வேறு அட்டெண்ட் செய்ய வேண்டும்...
ஸோ! நீ இருப்பது நன்மைதான். அதை என் வாயால் கேட்பதில் உனக்கு ஒரு திருப்தி
என்றாள் புன்முறுவலோடு அக்ஷரா.
தேங்க்ஸ்... பாவம் நம்ம சீஃப் டாக்டர் ஹாஸ்பிடலில் இன்னொரு புதிய பிரிவு கட்டுவதற்காக தன்னால் முடிந்ததை எல்லாம் செய்கிறார்...
பட்! நோ லக் டில் நவ். அவருக்கு உடம்பு வேறு மோசமாகிப் போய்க்கொண்டிருக்கிறது.
அவர் கட்டியிருக்கிற ஹாஸ்பிடலில் அவர் வந்து பேஷண்ட்டாகப் படுக்காமல் இருக்க வேண்டும்...?
ஆமாம்... நீ சொல்வது சரிதான்...
என்றாள் பெருமூச்சோடு அக்ஷரா.
என்ன ஆச்சு உனக்கு? யூ லுக் டயர்ட் சீஃப் டாக்டர் இல்லாதபொழுது அவருக்குப் பதில் நீதானே இன்சார்ஜாக இருப்பாய். இது உனக்குப் புதிது இல்லை
.
நீ எப்பவும் இந்த மாதிரி டல்லாக இருக்க மாட்டியே...! நீயே ஒரு டாக்டர். உனக்கு உன் உடல்நிலையைப்பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...
ம்... ஐ நோ! நாம் வழக்கமான அளவைக் காட்டிலும் இப்பொழுது அதிகமான நோயாளிகளைப் பார்க்க வேண்டியுள்ளது
.
இது ஏதோ முடிவில்லாத ஒன்று மாதிரி இருக்கிறது. என்ன செய்வது நம் ஹாஸ்பிடலில் இடப்பற்றாக்குறை வேறு... இப்பொழுது...!
அதைச் சமாளிக்கத்தான் நம்ம சீஃப் போயிருக்காரே...! பில்டிங் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்குத்தானே அவர் வெளிநாடு போயிருக்கார்?
யெஸ். மும்பை ஹையில் சட்டென ஜனத்தொகை இரண்டாகிவிட்டது போல் எனக்குத் தோன்றுகிறது
.
எல்லாமே இந்த ஆயில் கம்பெனிகளால் வந்தது. இங்கே புதிதாக ஒரு இடத்தில் எண்ணெய் கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதால் எல்லாக் கம்பெனிகளும் இங்கே முற்றுகையிட்டு உள்ளன.
ஓ.என்.ஜி.சிக்கு எங்கே எண்ணெய் கிணறு உள்ளது என்று கண்டுபிடித்து தகவல் தெரிவிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு போல...
இவர்களால்தான் நமக்குத் தொந்தரவே... இந்த எண்ணெய் வளங்களால் நகரத்தின் தூய்மை, அழகு எல்லாமே போய்விடுகிறது...
என்றாள் அக்ஷரா.
ம்... நீ ஒரே ஒரு கோணத்தில் யோசிக்கிறாய்! இந்தக் கோணத்தில் யோசித்துப் பார்...
எந்தக் கோணத்தில் தீபக்?
எண்ணெய் வளம் கூடினால் நம் நாட்டின் வணிகம் டெவலப் ஆகும்...
பெட்ரோல் விலை குறையும். இப்ப எல்லாருமே பெட்ரோல் அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள்.
நம் தேவைக்குப் போக, மீதம் இருந்தால் நாம் ஏற்றுமதி கூடச் செய்யலாம்...
இப்ப நீ எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப்படற... ஆனால் நான் நிகழ்காலத்தைப்பற்றி யோசிக்கிறேன். மும்பை ஹை. மக்கள் பெருக்கத்தால் வெடித்துவிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது
.
நம் ஹாஸ்பிடலில் போதிய வசதி இல்லை. தேவையான டாக்டர்ஸ் இல்லை... நர்ஸ் இல்லை... எல்லாமே பற்றாக்குறையாக இருக்கிறது...
சீஃப் டாக்டர் வேறு போவதற்கு முன்பு ‘இங்கே எண்ணெய்க் கிணற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதை நாம் பார்த்துக்கொள்வோம்...’ என்று அவர்களிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஐயாம் டயர்ட் தீபக். ஆக்டோபஸ் போல் எட்டுக் கைகள் வேண்டும் நமக்கு...
கூல்... எமர்ஜென்ஸி நேரத்தில் மட்டுமே நாம் எண்ணெய்க் கிணற்றில் வேலை பார்ப்பவர்களைக் கவனிக்க வேண்டும்
.
அங்கே அவர்களுக்கு என்று ஒரு மெடிக்கல் குழு இருக்கிறது. ஹாஸ்பிடல் இருக்கிறது... அவர்களால் முடியாவிட்டால்தான் நாம் கவனிக்க வேண்டும்.
அப்புறம் அந்த ஹாஸ்பிடலில் நல்ல வசதிகள் உள்ளதுபோல... சீஃப்தான் சொன்னார்... ஒரு நாள் போய் அதைப் பார்க்க வேண்டும்.
ம்... நம் ஹாஸ்பிடலுக்கும்... அந்த மாதிரி ஒரு ஆயில் கம்பெனி செலவுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அந்த மாதிரி இருந்தால்தான் நம் ஹாஸ்பிடலுக்கு விடிவுகாலம் பிறக்கும்!
என்றாள் பெருமூச்சோடு அக்ஷரா.
சரி... சீஃப் டாக்டரிடம் இருந்து ஏதாவது ஃபோன் வந்ததா?
இல்லை... தீபக். கொஞ்சம் நேரம் முன்பு வேறு ஒருவன்தான் வந்தான். காட் நான் இதுவரை அந்த மாதிரி ஒருத்தனை என் அனுபவத்தில் பார்த்தது இல்லை
.
ஐ ஜஸ்ட் காண்ட் ஃபர்பெக்ட் ஹிஸ் ஃபேஸ்...!
அப்படி என்ன இருந்தது அவன் முகத்தில்?
என்று உற்சாகமாக ஒரு குரல் கேட்டது, பின்னால் இருந்து.
ஹாய் சங்கீதா... வா... வா...
என்றாள் அக்ஷரா, புன்முறுவலோடு.
ஹாய்... அக்ஷரா! யார் அந்த ஆள்? நீங்கள் பேசிக்கொண்டு இருந்தீர்களே...!
அதற்கு முன்பு நீ ஒன்று சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
தெரபிஸ்ட் எல்லாம்... இந்த மாதிரி இரவு நேரத்தில் வேலை பார்க்கக்கூடாது!
என்ன செய்வது? என் வுட்பியைப் பார்க்க இதுதான் சமயம்...
டாக்டரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பது என் தலையில் எழுதியிருக்கிறது...
என்றாள், பொய்யாக சலித்தபடி சங்கீதா.
ஏய்... உன்னை...?
என்று பொய்யாக அடிப்பதுபோல் பாவனை செய்தான் தீபக்.
சங்கீதா அவன் கையைப் பற்றினாள்.
இது ஹாஸ்பிடல்... ஞாபகம் இருக்கட்டும்!
என்றாள் அக்ஷரா.
சரிங்க மேடம்... அப்புறம் நான் வரும்பொழுது பேசிட்டிருந்தீங்களே... அது யார்?
முகத்தில் வெட்டுக் காயத்தோடு ஒருவன் வந்திருந்தான். காட்! அவன் முகத்தில் நாற்பது தையல்கிட்ட போட வேண்டியிருந்தது...
ஓ... காட்! எப்படி ஆனது முகத்தில் வெட்டுக் காயம்?
அவன் ஃபிரண்ட் ஒருவன் அவனை விஸ்கி பாட்டிலால் முகத்தில் அடித்துவிட்டான்.
காட்! விஸ்கியை இப்படியா வேஸ்ட் செய்வார்கள்?
என்றான் தீபக்.
அதிலும் ஒரு நன்மை... எந்த இன்ஃபெக்ஷனும் ஆகாமல் இருந்தது அவன் முகம்... அதற்குக் காரணம் விஸ்கிதான்!
என்ன சண்டையாம்? ஏன் அப்படி விஸ்கி பாட்டிலால் அடித்தானாம்?
என்றாள் சங்கீதா.
லேசாக அடிக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு பலமாக அடித்துவிட்டான் போல... அப்படித்தான் அவனை அழைத்துக்கொண்டு வந்தவன் என்னிடம் சொன்னான்
.
நல்ல காலம் கண்களில் காயம் படவில்லை. தட்ஸ் எ லக் ரியலி!"
அடித்துக்கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சனை?
வேறு என்ன காரணமாக இருக்கும்? பெண்கள்தான்... பிரச்சனை வருவதெல்லாம் அவர்களால்தானே!
என்றான் தீபக்.
திஸ் இஸ் டூ மச் தீபக்... சங்கீதா! நீ அவனை அழைத்துக்கொண்டு போய்விடு, இல்லாவிட்டால்... கோபத்தில் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது!
சங்கீதா வேகமாக தீபக்கின் கையைப்பற்றி இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த அக்ஷராவின் இதழ்களில் புன்னகை படர்ந்தது.
ஏனோ அவள் மனதில் கூடவே ஒரு வெறுமையும் எட்டிப் பார்த்தது. தனக்கு ஏன் இந்த மாதிரி யாரிடமும் ஒரு ஈர்ப்பும் ஏற்படவில்லை என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
டாக்டர் அக்ஷரா...
என்று ஒரு குரல் அவள் யோசனையைக் கலைத்தது.
புதிதாக சேர்ந்திருந்த பணியாள் அங்கு நின்றுகொண்டிருந்தான்.
என்ன விஷயம்?
டாக்டர், ஒரு பேஷண்ட்டை திரும்ப வீட்டிற்கு அழைத்துப்போக ஒருத்தர் வந்திருக்கிறார்...
ஆனால் சிஸ்டர் உங்கள் அனுமதி இல்லாமல் அந்தப் பேஷண்ட்டை அனுப்ப மறுத்துவிட்டார்கள்...
அந்த ஆள் பேஷண்ட் இல்லாமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்...
ம்... சரி நான் வருகிறேன். நீ போ!
கேஷுவாலிடி ரூமை நோக்கி நடந்தாள் அவள். ஏனோ உடலும் மனமும் சோர்ந்ததுபோல் இருந்தது அவளுக்கு.
தீபக் சொன்னது போல் நான் என் உடல்நிலையில் இனி கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் அவள்.
2
நேற்று
நான்
அங்கே
சென்றிருந்தேன்!
நீயும்
நானும்
வழக்கமாக
சந்திக்கும்
அந்தப்
பூங்கா!
அங்கே
நிறைய
மாற்றங்கள்!
வண்ண
மலர்கள்
முன்னைக்