Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Mazhai Ennul...!
Poo Mazhai Ennul...!
Poo Mazhai Ennul...!
Ebook109 pages51 minutes

Poo Mazhai Ennul...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யாமினி தன்னுடைய பத்து வயதில் தன் தந்தையை இழந்தாள். தன் தந்தையின் இறப்பிற்கு காரணமான கிரண் – பிரபல வழக்கறிஞரை பழிவாங்க தன் சிறுவயதிலே சபதம் எடுத்தவள். படித்து, வளர்ந்து, வழக்கறிஞரின் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டே பழிவாங்குகிறாள். ரோஹித் கிரணின் மகன், அவன் அந்த அலுவலகத்தைப் பொறுப்பேற்று நடத்துகிறான். ரோஹிதின் சந்திப்பால் அவனை திருமணம் செய்து கொண்டு பழிவாங்க துடிக்கிறாள்.

ரோஹித்துடன் திருமணம் நடந்ததா? கிரணை பழிவாங்கினாளா? இறுதியில் நடந்தது என்ன? வாசித்து தெரிந்து கொள்ளாமா… வாருங்கள்…

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580140907129
Poo Mazhai Ennul...!

Read more from Lakshmi Sudha

Related to Poo Mazhai Ennul...!

Related ebooks

Reviews for Poo Mazhai Ennul...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Mazhai Ennul...! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    பூ மழை என்னுள்..!

    Poo Mazhai Ennul…!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    "பூ இங்கே

    நறுமணம் அங்கே!

    வானம் இங்கே

    நீலம் அங்கே

    நீயும் நானும்

    எப்பொழுது இணைவோம்?"

    குல்மொஹர் மரத்தில் இருந்து உதிர்ந்த பூக்கள், தீப்பிழம்பான சிவப்பு நிறத்தில் பூமியைப் போர்த்தியிருந்த ஒரு இளவேனில் பருவத்துக் காலைப் பொழுது...

    யாமினி நடந்து சென்று கொண்டிருக்கிறாள். இருள் இன்னும் முற்றிலுமாக அகலவில்லை. அந்தத் தெருவில் யாரும் இல்லை. அவள் சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.

    சட்டென விக்ரம் அவள் முன்னே தோன்றுகிறான்.

    இவன் எப்படி இங்கே? என்று விழிகள் அகல அவனைப் பார்க்கிறாள் அவள்.

    நடந்தது எல்லாம் விக்ரமிற்குத் தெரிந்து இருக்கும். அதனால்தான் அவன் முகம் சோர்ந்து போய் களையிழந்து இருக்கிறது என நினைத்தபடியே அவனை நோக்கி நடக்கிறாள் யாமினி.

    யாமினி, உன்னை என்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. இதுவே நம் கடைசி சந்திப்பு. குட் பை! என்று சொல்லி விட்டு அவளைத் திரும்பிப் பார்க்காமல் விக்ரம் நடந்து போகிறான்.

    விக்ரம். ப்ளீஸ்... வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள்! என்று கதறுகிறாள் யாமினி.

    யாமினி எழுந்திரு. ஏய்... ஏதோ கனவு உனக்கு. கெட்ட கனவா! என்று யாரோ அவள் தோளைப் பிடித்து உலுக்குவது அவளுக்குத் தெரிந்தது.

    கஷ்டப்பட்டு கண்களைத் திறந்தாள் யாமினி. எதிரே வாணியின் கவலை தோய்ந்த முகம் தெரிந்தது.

    ஏய் யாமினி, என்ன ஆச்சு? நீ கத்தறதைக் கேட்டு நான் ரொம்பப் பயந்திட்டேன். யாரோ திருடன் வந்திருப்பான்னு பதறிக் கண் விழிச்சேன்.

    யாமினி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

    கெட்ட கனவு வாணி. ஸாரி. உன் தூக்கமும் என்னால் கலைந்து விட்டது... ஸாரிடி!

    என் தூக்கம் போனால் போகிறது. நீ கத்துவதைக் கேட்டு நான் ரொம்ப பயந்திட்டேன்டி. உனக்கு ஒண்ணும் இல்லையே? என்று அவள் கையை ஆதரவாகப் பற்றினாள் வாணி.

    ஐயாம் ஓ.கே வாணி. எனக்கு என்ன கனவுன்னு ஞாபகம் இல்லை. ஏதோ கெட்ட கனவு! என்று பொய் சொன்னாள் யாமினி.

    ஓ... அப்ப நீ ‘விக்ரம் வேண்டாம்... ப்ளீஸ்!’ அப்படின்னு கத்தினதை வெச்சு உனக்கு விக்ரம்ன்னு யாரையோ தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்.

    விக்ரம்... ஓ... எ... எனக்குத் தெரியலை! என்று மழுப்பினாள் யாமினி.

    இல்லை யாமினி. நீ தெளிவா அந்தப் பேரைச் சொன்ன. ஒரு தடவை இல்லை. நிறையத் தடவை திரும்பித் திரும்பிக் கத்தின. அதனால நல்லா யோசிச்சுப் பாரு... அந்தப் பெயர் உன் ஞாபகத்திற்கு வரலாம்.

    வாணி, போதும். திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கழுத்தறுக்காதே. நான்தான் தெரியாதுன்னு சொல்றேனில்ல? அப்புறம் அதே கேள்வியைக் கேட்டா எப்படி? என்று சீறினாள் யாமினி.

    வாணியின் முகம் வாடியது. ஏதும் சொல்லாமல் குளியலறை நோக்கிச் சென்றாள் அவள்.

    அவள் வாட்ட முகத்தைப் பார்த்த யாமினி தன்னையே கடிந்து கொண்டாள்.

    ‘சே! பாவம் வாணி. நான் ஏன் அவள் மேல் இப்படி வள்...ன்னு விழுந்தேன். நான் ஒரு முட்டாள்!’ எனத் தன்னையே நொந்து கொண்டாள் யாமினி.

    வாணி ஸாரிடி. நான் தெரியாமல் ஏதோ கோபத்தில் உன்னைத் திட்டிட்டேன். இந்தா நியூஸ் பேப்பர்... நீயே முதல்ல படி! என்று குளியல் அறையிலிருந்து வெளி வந்தவளிடம் பேப்பரை நீட்டினாள் யாமினி.

    ம்… நல்லாவே தாஜா செய்யற யாமினி. காலையில காளி ஆட்டம் ஆடின. அதுக்கு இப்ப ‘பேப்பர் அபிஷேகம்’ செஞ்சு சரி செய்யறியா...

    அவள் சொன்னதைக் கேட்டுக் கலகலவெனச் சிரித்தாள் யாமினி.

    அவள் சிரிப்பில் இணைந்து கொண்டாள் வாணி.

    சரி யாமினி, இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்? ஈவினிங் ஏதாவது படத்துக்குப் போகலாமா? சத்யம்ல ‘பயணம்’ இன்னும் ஓடுது. உனக்குப் பிடிக்கும் அந்தப் படம்...

    ம்... ஐடியா நல்லாத்தான் இருக்கு. பட் இன்னிக்கு ஒரு ரிசப்ஷன் இருக்கு. எங்க ஆபீஸில் வேலை பார்க்கும் நீலாவிற்கு நாளைக்குக் கல்யாணம். ரிசப்ஷன் இன்னிக்கு ‘ஹோட்டல் தாஜில்’ இருக்கு. நான் போகாட்டி நல்லா இருக்காது வாணி. நீலா மனசு கஷ்டப்படுவா. ப்ளீஸ்... நெக்ஸ்ட் வீக் போகலாமா, படத்துக்கு!

    ஓ.கே... அப்படியே செய்யலாம். சரி ரிசப்ஷன் போறதுக்கு என்ன டிரஸ்? உன்னோட வழக்கமான பட்டுப் புடவையா? வேண்டாம், நல்லா டிரெண்டியா நிறையப் புடவைகள் இருக்கு. டிஸைனர், பிரிண்டட், ஷிஃபான் அப்படின்னு கவர்ச்சியா எவ்வளவோ புடவை ரகம் வந்திருக்கு. உன்னோட உடல் வாகுக்கு சும்மா சூப்பரா இருக்கும். ப்ளீஸ் யாமினி… எனக்காக உன் பட்டுப் புடவையை மூட்டை கட்டி வெச்சுடு.

    ஓ... வாணி நீ எப்ப இந்த மாதிரிப் புடவைக் கெல்லாம் அட்வர்டைஸ் செய்ய ஆரம்பிச்ச?

    நீ என்ன வேணா செய். எதை வேணா உடுத்திக்கோ. சரியான திமிர் பிடிச்ச அழகுப் பிசாசுடி, நீ! போ... உன்னோட அந்த நீல நிறப் புடவையையே உடுத்திட்டுப் போ... நீ முடிவு செஞ்சா செஞ்சது தானே. உன்கிட்டே இதுக்கு மேல் பேசறது வேஸ்ட்.

    தேங்க்ஸ் வாணி. நீதான் நண்பிடி.

    ஏய் கிண்டலா!

    பாஸ் என்ற பாஸ்கரன் ஸ்டைல்ல பேசற! என்று சிரித்தாள் வாணி.

    சரி வாடி. குளிச்சுட்டு சாப்பிடப் போகலாம். இன்னிக்குச் சனிக்கிழமை. நான் விரதம். தண்ணி குடிச்சபடியே உனக்குக் கம்பெனி கொடுக்கறேன்.

    "அது எப்படித்தான் இவ்வளவு தீவிரமா உன்னால விரதம் இருக்க

    Enjoying the preview?
    Page 1 of 1