Anbulla Alli
By Rajashyamala
()
About this ebook
Read more from Rajashyamala
Ithanai Naalai Engirunthai? Rating: 5 out of 5 stars5/5Suriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsUyire... Uyire... Rating: 0 out of 5 stars0 ratingsEngey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Thalli Ponal Theipirai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsAnnaparavai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMaya Pozhuthugal... Rating: 4 out of 5 stars4/5Rajashyamalavin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Ungal Kaiyil Rating: 0 out of 5 stars0 ratings
Related to Anbulla Alli
Related ebooks
Pala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsOonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Roja Malarae Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsEnkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsEzhiloviyam Rating: 0 out of 5 stars0 ratingsManathellam Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsInba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Innoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsVannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsInaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Iththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Kalanthuvidu! Rating: 0 out of 5 stars0 ratingsOonjalaadum Nenjam Rating: 4 out of 5 stars4/5Enna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Radhai Manadhil...! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Devathai Rating: 1 out of 5 stars1/5Vilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Engiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Anbulla Alli
0 ratings0 reviews
Book preview
Anbulla Alli - Rajashyamala
https://www.pustaka.co.in
அன்புள்ள அல்லி
Anbulla Alli
Author:
ராஜ சியாமளா
Rajashyamala
For more books
https://www.pustaka.co.in/home/author/rajashyamala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
முன்னுரை
சூழ்நிலை காரணமாக சென்னை வரும் அல்லி, தனது பாஸ் யுவன் தன்னிடம் லிப்டில் தனியே வரும் சமயம்‘டேட்டிங் பற்றி என்ன நினைக்கிறாய்?’என்று கேட்கிறான். அந்த கேள்வி அவளை மனதளவில் பெரும் பாதிப்பை தருகிறது. அந்த ஒரு கேள்வியே அவளுக்கு அவனை வெறுக்க வைக்கிறது. உண்மையில் யுவன் தவறானவனா? இல்லை அல்லிக்கு வேறு பல பிரச்சனையினால் அப்படி இருக்கிறாளா? என்பதை அறிய இக்கதையை தொடர்ந்து படியுங்கள்!
***
1
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இந்த ஆள்? வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு வலையில் சிக்க வைக்கப் பார்க்கிறானா? ஏழைப் பெண் என்றால் எதற்கும் சம்மதிப்பாள் என்று அழுக்கான எண்ணம் கொண்டு அலையும் இவனை இப்படியே விட்டுவிடுவதா?
"டேட்டிங் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அல்லி?" மூன்றாவது மாடியில் உள்ள அலுவலகத்தை நோக்கி லிஃப்ட் போய்க்கொண்டிருக்கும் போது தன்னுடைய பாஸ், யுவன் கேட்ட கேள்வியில் அப்படியே ஆடிப் போனாள் அல்லி முகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பிற்று. கால்கள் தடதடவென ஆடின.
அல்லிக்கு உள்ளுக்குள் பிரவாகமாய் ஓர் எரிச்சல் உண்டாக ஆரம்பிக்க மறுபடியும் கேட்டான் யுவன். டேட்டிங் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அல்லி?
எரிச்சலோடும் கோபத்தோடும் அல்லி அவனை நிமிர்ந்து பார்ப்பதற்குள் மூன்றாவது மாடியில் லிஃப்ட் நிற்க, கதவு திறந்தவுடன் இவளின் பதிலையோ, இவளிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டோமே என்ற உறுத்தலோ எதுவுமின்றி சர்ரென்று பளபளப்பான ஷு சத்தமிட யுவன் மிக அலட்சியமாய்த் தன்னுடைய குளிர்சாதன அறைக்குள் நுழைந்தான்.
அல்லிக்குச் கோபம் வந்தது. லிஃப்டிலிருந்து இறங்கக் கூடத் தோன்றாமல் அப்படியே நின்றாள். எல்லாம் பணத் திமிர். ராஸ்கல், ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறோமே, கூப்பிட்டால் வந்துவிடுவாள் என்று நினைக்கிறான் போலிருக்கிறது. பாஸ்டர்ட்.
லிஃப்ட் கதவு திறந்திருந்ததால் கீழிருந்து ‘பீப் பீப்’என்று சப்தம் வெளிவரவே அப்போதுதான் நினைவு வந்தவளாய்க் கதவைச் சாத்திவிட்டு அலுவலகம் நோக்கி நடந்தாள்.
மணியைப் பார்த்தாள். சரியாய் ஒன்பது முப்பது.
நல்லவேளை...கொஞ்சம் தாமதமாய் ஆகியிருந்தாலும் பாஸ்...பாஸ் என்ன பாஸ், கிட்டத்தட்ட என்னை விட ஐந்தாறு வயதுதானே கூடுதலாக இருக்கும் யுவனுக்கு. சத்தம் போடுவான். இடியட்.
பஸ்ஸில் வந்து...நடந்து வந்து எத்தனை இயற்கைத் தடங்கல்களில் மாட்டிக்கொண்டு, கஷ்ட்டப்பட்டு...ஆபீஸ் வருகிறோம் என்பது இவனுக்கு எப்படித் தெரியும்? பளபளவென்று வெளிநாட்டுக் காரில் அழுக்குப்படாமல் பழகிப் போனவனுக்கு டாக்டர் அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் பற்றி என்ன தெரியும்? தங்கக் கரண்டியிலேயே சாப்பிட்டுப் பழகியவன்.
அல்லி, தட்டச்சராய் இந்த யுவன் அண்டு கம்பெனியில் சேர்த்து இரண்டு மாதமாகிறது. நல்ல சம்பளம். கம்பெனிக்கும் நல்ல பெயர் என்றாலும் இருபத்தெட்டு வயதே ஆன இந்த நிறுவனத்தின் முதலாளி யுவனின் பார்வையும் பேச்சும் மட்டும் அல்லிக்கு வந்த அன்றிலிருந்தே பிடிக்கவில்லை, அவனுடைய பேச்சில் தெரியும் அசும்பாவமும் குரலில் தெரியும் பணத் திமிரும் அல்லிக்குக் கோபத்தையே தந்தன. பணம் இருந்தால் அது அவனுக்கு. அதற்காக வேலை பார்க்கும் மற்றவர்களிடம் மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொள்வதா? ராஸ்கல். இவனுக்குச் சரியாய்ப் பாடம் கற்பிக்க வேண்டும்.
டேட்டிங் பற்றி என்ன நினைக்கிறீர்களாம்? என்ன எதிர்பார்க்கிறான்?
ஒரு மாதிரி வழிசலாய்ப் பதில் சொன்னால் மடக்கி விடலாம் என்ற மடமனசு. இதே கேள்வியை இவன் தங்கையிடம் கேட்க வேண்டியது தானே? அம்மாவிடம் கேட்க வேண்டியது தானே? வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்ச் சொல்லிவிட வேண்டியதுதான். இவனைப் போன்ற ஆட்களையெல்லாம் பெண் போலீசார் கைது செய்து, பெண்கள் கோர்ட்டில் தண்டனை நிறைவேற்றி, பெண்களே இல்லாத தனித் தீவில் கொண்டு போய்த் தள்ள வேண்டும்.
சகோதரி, அம்மா, உறவினர்கள் தவிர மற்ற பெண்களிடம் ஆண்கள் எல்லோருமே ஏன் காமம் கலந்து பார்வையும் கேள்வியும் வீசுகிறார்கள் என்று அல்லிக்குக் கஷ்டமாய் இருந்தது.
யுவனுடைய அறை கண்ணாடி அறை. குளிர்சாதன வசதியோடு அறையும் குளிர்ச்சிக் கண்ணாடியால் முழுக்க முழுக்கப் பொருத்தப்பட்டிருந்தது. அறை. அலுவலகத்தின் மத்தியில் இருந்ததால் கண்ணாடி வழியே எல்லோரையும் பார்க்க முடியும். என்ன செய்கிறார்கள். வேலை ஒழுங்காக நடக்கிறதா? என்று கவனிக்க முடியும். ஆனால் அவனுடைய அறையை யாரும் பார்க்க முடியாது. குளிர்ச்சிக் கண்ணாடி என்பதால் வெளியில் இருப்பவர்களுக்குக் கறுப்பாக மட்டும் தெரியும். இருக்கிறாரா இல்லையா என்பது கூடத் தெரியாது. பெண்களைச் சைட் அடிப்பதற்காகவே இதுபோல் கண்ணாடி அறை வைத்துக் கொண்டிருக்கிறான் என்று