Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rajashyamalavin Sirukathaigal
Rajashyamalavin Sirukathaigal
Rajashyamalavin Sirukathaigal
Ebook131 pages52 minutes

Rajashyamalavin Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.

Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).

Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"

Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation

Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.

Married to Priya Kalyanaraman , also a journalist

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580126004712
Rajashyamalavin Sirukathaigal

Read more from Rajashyamala

Related to Rajashyamalavin Sirukathaigal

Related ebooks

Reviews for Rajashyamalavin Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rajashyamalavin Sirukathaigal - Rajashyamala

    http://www.pustaka.co.in

    ராஜசியாமளாவின் சிறுகதைகள்

    Rajashyamalavin Sirukathaigal

    Author:

    ராஜசியாமளா

    Rajashyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajashyamala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    2. அம்மா

    3. பாசக்கண்டு

    4. தந்தையுமாகி

    5. பந்தம் பிறந்தது

    6. இடம் இல்லை

    7. அம்மா என்றொரு வயர்ந்த மனுஷி…

    8. முடிவு

    9. பிள்ளை மனசு

    10. வதம்

    11. கொஞ்சம் அன்பு ப்ளீஸ்…

    12. மீனாவும், சித்ராவும் ஒரு காதலும்…

    13. அஸ்தமன உதயம்

    14. பிராயச்சித்தம்

    15. மகேசு

    16. மனதில் சுமந்தவள்!

    1. முகங்கள்

    'இந்தப் பூ நாளை வரை இருக்குமா? ஒரு நாள் வாழ்க்கை! இருந்தும் எத்தனை மலர்ச்சி! மனிதனால் ஏன் அப்படி இருக்க முடிவதில்லை?'

    வெள்ளைப் பனிமுத்தைத் தன் சிவந்த இதழில் தாங்கித் தாலாட்டும் பூவைப் பார்த்தவுடன் அனிதாவுக்கு இப்படித்தான் தோன்றியது. ஜன்னல் திரையை மேலும் அகலத் திறந்தாள். சில்லென்ற காற்று பூ வாசத்தோடு முகத்தில் வீசியது. இவள் படுக்கை அறையை ஒட்டி, ஜன்னலுக்கு வெளியே மல்லியும் நித்தியமல்லியும் கொடிகளாய்ப் படர்ந்திருந்தன. கரும்பச்சைச் செடிகள் முழுதும் வெள்ளை வெள்ளைப் பூக்கள் வானில் நட்சத்திரச் சிதறல்களாய் மின்னிக் கொண்டிருந்தன.

    சுகந்த காற்றை சுகமாய் உள்ளிழுத்து அனுபவித்தாள் அனிதா.

    என்ன மகாராணி இயற்கையை ரசிச்சுக் கிட்டிருக்கீங்களா? குளியலறையிலிருந்து வெளியே வந்த அவள் கணவன் ஆனந்த், கேட்டபடி டிரெஸ்ஸிங் டேபிள் முன் நின்றான். அவளின் நிதானத்திற்கு நேர்மாறாய் பரபரப்பில் இருந்தான். வேக வேகமாய் தலை சீவினான். உடலில் டியோடரன்ட்டை ஓடவிட்டான். க்ரீமையும் பவுடரையும் தடவிக் கொண்டு, முதல் நாள் இரவே எடுத்து வைத்திருந்த ஷர்ட்டையும் பேண்டையும் மாட்டிக் கொண்டான். குறுகுறுவென்று அவனையே பார்த்தபடி நின்றாள் அனிதா.

    என்ன அனி அப்படிப் பார்க்கறே? குடும்பமாய் டையைக் கட்டியபடி கேட்டான்.

    இரவு பன்னிரண்டு இருந்தும் மணி முதல் அவள் அவனிடமிருந்து என்று எதிர்பார்த்த வார்த்தைகள் மட்டும் இதுவரை வரவில்லை.

    ஆயிற்று... கீழே சாப்பிடப் போய்விடுவான். சமையல்காரம்மாள் தயாரித்து வைத்திருக்கும் உணவை, யார் தயவும் எதிர்பாராமல் டைனிங் டேபிளில் அமர்ந்து, தானே பரிமாறிக் கொண்டு மறுகையில் எகனாமிக் டைம்ஸ் படித்துக் கொண்டு சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி விடுவான். தானே நினைவு படுத்த வேண்டியதுதான்.

    இன்னைக்கு என்ன நாள்?

    அவன் அசிரத்தையாய், அவசரமாய், என்ன நாள்? என்றான்.

    அவள் சற்றே அடிபட்டவளாய், என் பிறந்தநாள் இல்லையா...? என்றாள்.

    ஓ! மெனி ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே. பீரோல பணம் இருக்கும். எவ்வளவு வேணும்னாலும் எடுத்து எது வேணும்னாலும் வாங்கிக்க. பை த வே, இன்னைக்கு சாயந்திரம் நம்ம வீட்ல பார்ட்டி இருக்கு. அரேன்ஜ் மென்ட்ஸை சரி பார்த்துடு.... பை... வரட்டா

    மெல்ல குளிக்கப் போனாள். குளியல் ஷவரின் நீரோட்டத்தோடு அவள் கண்ணீரையும் கரைத்துவிட்டு வெளியே வந்தாள். ஸ்வாமி அறையில் மாமியார் விளக்கேற்றி இருந்தார். டைனிங் அறைக்குச் சென்று இரண்டு இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டாள். வகை வகையாய் உணவுப் பதார்த்தங்கள் இருந்தும் உண்ணத் தோன்ற ஜீவன்கள் கூடவில்லை. அப்படியே கைகழுவி எழுந்தாள்.

    பெரியம்மாவும் ஐயாவும் அவங்க மக இங்கே தான் வீட்டுக்குப் போயிருக்காங்க. உங்ககிட்ட சொல்லிடச் சொன்னாங்கம்மா... சமையல்காரி சொல்லிவிட்டு அகன்றாள்.

    அவள் மெல்ல வந்து தோட்டத்தில் உலவினாள். தோட்டத்தின் ஓரத்தில் சிறு பொந்து. அதை நோக்கி ஒரு அம்மா எலியும் சின்னச் சின்ன அதன் குட்டிகளும் வேகமாய் ஓடின. ஐந்தறிவு ஜீவன்கள் கூட குடும்பமாய் வாழ்கின்றன. மனிதர்கள் நிறைந்ததாய் இருந்தும் இங்கேதான் ஒவ்வொரு வரும் தனித்தனித் தீவாய் வளைய வருகிறார்கள்! அவள் பெருமூச்சுவிட்டாள்.

    போன வாரம் சந்தித்த இவளுடைய கல்லூரித் தோழி வனிதாகூட இவளின் பணக்கார வாழ்வைக் கண்டு பெருமூச்சுதான் விட்டாள். என்னைப் பாரு, வீட்லயும் வேலை. ஆபீஸ்லையும் வேலை. உன்னை மாதிரி காலை ஆட்டி ஹாயா அஞ்சு நிமிஷம் உட்கார முடியாது என்னால. ரெண்டு நாள் நான் வீட்ல இல்லாம பிறந்த வீட்டுக்குப் போயிட்டா என் வீடே நாறிப் போயிடும். எதுக்கும் கொடுப்பினை வேணும். ஆமா, காலேஜ் டேஸ்ல கவிதை எழுதுவியே இப்ப எழுதுறியா? ஆனா, இப்ப உனக்கு அதெல்லாம் வேஸ்ட் இல்ல? இருக்கற பணத்துக்கு பத்திரிகை ஆபீஸ் அனுப்புற பணமா ஒரு பொருட்டு?

    தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிப் போன வனிதாவுக்கு இவள் வாழ்வின் வெறுமை எங்கே புரியப் போகிறது? ஆனந்தைப் பொறுத்தவரை மனைவி என்பவள் அவனுடைய ஸ்டேட்டஸ் சிம்பல். அவ்வளவுதான்.

    இன்னிக்கு சினிமா எதாவது போலாமா ஆனந்த்?

    நோ மை லவ். இந்த வாரம் பூரா ஆபீஸ்ல ஆடிட்டிங். அதான் வீடு பூரா வி.சி.டி. இறைஞ்சு கிடக்கே

    எனக்குத் தேவை மூன்று மணி நேரப் படம் அல்ல. அதன் பொருட்டு கிடைக்கும் உன் அருகாமை. அவள் கண்களிலிருந்த இறைஞ்சலைப் புரிந்து கொள்ள அவன், தான் பார்த்துக் கொண்டிருந்த பைலிலிருந்து பார்வையை நிமிர்த்தினால் தானே!

    ஒரு நாள் பொறுக்க முடியாமல் சொல்லியே விட்டாள்.

    நான் ஜடமில்ல ஆனந்த்.... ஐ நீட் யுர் கம்பெனி.

    உனக்கு என்ன குறை இந்த வீட்ல?

    உங்க தோழமைதான்

    முப்பத்தஞ்சு - நாப்பது வயசுல எல்லா ஆண்களுமே தங்கள் கேரியர்லதான் குறியா இருப்பாங்க. கை கோர்த்து சுத்தித் திரிய நாம டீன்-ஏஜ் காதலர்கள் இல்ல.

    எந்த வயசிலும் வாழ்க்கையின் அடிநாதமா நல்ல தோழமையோடு கூடிய காதல் வாழ்வு அவசியம் ஆனந்த்...

    உனக்கு உருப்படியா செய்ய வீட்ல எந்த வேலையும் இல்லை. அதான் இப்படி என்னையே சுத்தி வந்து...

    ரைட், அப்ப நான் வேலைக்குப் போகட்டுமா?

    ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் குடும்பத்தைச் சேர்ந்த நீ, சராசரி வேலைக்குப் போறது சரியில்ல. நம்ம கம்பெனி வேலைகளைப் பார்த்துக்க அண்ணன் தம்பிங்க நாங்க இருக்கோம். நீ வீட்ல இருந்த படி தோட்டத்தைப் பராமரி. பூ வேலை, எம்ப்ராய்டரினு செய்...

    அதெல்லாம் எத்தனை நேரம் செய்ய? ஏதாவது சோஷியல் சர்வீஸ் செய்யட்டா?

    சேரி சேரியா திரியப் போறியா? நோ நோ… வேணா பணம் கொடுக்கறோம். அதுவே போதும். நீ... பேசாம லேடீஸ் கிளப் போ.

    நீங்க சொல்ற கிளப்ல எல்லா பெண்களும் வெட்டி வம்பு அளப்பாங்க. உருப்படியா ஏதாவது செய்யற லேடீஸ் கிளப் உங்க தகுதிக்கு ஏத்ததா இல்லைனு சொல் வீங்க...

    ரைட்... அப்ப சும்மா இரு.

    அப்ப போர்டிங் ஸ்கூல்ல போட்டிருக்கற நம்ம குழந்தைகளையாவது இங்க கூட்டிக்கிட்டு வந்து விடுங்க

    என்ன பேசற அனிதா... நானெல்லாம் போர்டிங் ஸ்கூல்லதான் படிச்சேன். அங்கதான் டிஸிப்ளின், நாலு நல்ல விஷயம், படிப்புனு எல்லாம் நல்லா கத்துக்க முடியும். அடுத்த வருஷம் மனோ பிலானிக்குப் போகணும். ரேணுவை படிக்க அமெரிக்கா அனுப்பணும். நோ வே! குழந்தைகளை இங்க கூட்டி வரதைப் பத்திப் பேசவே பேசாதே

    ஆயிற்று... குழந்தைகள் இப்போது அமெரிக்காவில்.

    ஹாய் மம்

    Enjoying the preview?
    Page 1 of 1