Vizhigal Ezhuthiya Kavithai
By R. Manimala
()
About this ebook
ரேகா, அரவிந்தன் இருவருக்கிடையே சிறு வயதில் ஏற்பட்ட மனகசப்புகள், நாளடைவில் பெரிய பகையாக மாறி, இருவர் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றது. இருவரும் வாழ்வில் சாதிக்க நினைத்து தன் குறிக்கோளை வென்று பிறகு, தாம் யார் என்று தெரியாமல் சிறு வயதில் ஏற்பட்ட பகையை மறந்து மணவாழ்வில் இணைந்தார்களா? அன்பினால் சிங்கத்தின் மீசையைக்கூட பிடுங்க முடியும் அதுபோல அன்பால் இவர்கள் தன் பகையை வென்றார்களா? வாசிக்கலாம்… மணிமாலாவின் எழுத்துச்சாரலில்…
Read more from R. Manimala
Kalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsNee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsKanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Un Ninaivil Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Ponmayiley! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Megangal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Veedhiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsMugarasi Rating: 0 out of 5 stars0 ratingsNinaivennum Sannathiyil? Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mounama? Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Amaithi Theda…! Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Naanum Veru... Rating: 0 out of 5 stars0 ratingsNinaithathu Yaro... Neethaney! Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Rajiyam Enathu! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkenave... Nee… Kidaithai! Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Nee... Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsKannathil Muthathin Eeram! Rating: 0 out of 5 stars0 ratingsPennalla... Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vizhigal Ezhuthiya Kavithai
Related ebooks
Vaasamilaa Malaridhu Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Poo Vaasam Purappadum Penney Rating: 4 out of 5 stars4/5Ponnaadai Rating: 4 out of 5 stars4/5Indru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsPoi Kaal Purushan Rating: 3 out of 5 stars3/5Poo Parikka Ithanai Naala Rating: 0 out of 5 stars0 ratingsNilave Mugamkaattu Rating: 5 out of 5 stars5/5Kaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsPenn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Ondru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsOctober Pouranami Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsPottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Aval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Mounam Pesattum Rating: 5 out of 5 stars5/5Pon Malar Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Naalai Mudhal Kadhali Rating: 5 out of 5 stars5/5Mogathirai Rating: 0 out of 5 stars0 ratingsEn Su(vaasa) Malare... Rating: 5 out of 5 stars5/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vizhigal Ezhuthiya Kavithai
0 ratings0 reviews
Book preview
Vizhigal Ezhuthiya Kavithai - R. Manimala
https://www.pustaka.co.in
விழிகள் எழுதிய கவிதை
Vizhigal Ezhuthiya Kavithai
Author:
ஆர். மணிமாலா
R. Manimala
For more books
https://www.pustaka.co.in/home/author/r-manimala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
இராணிமேரிக் கல்லூரி!
புராதனக் கட்டிடங்களும், கண்கள் திரும்பும் இடமெல்லாம் பசுமையான மரம் செடி கொடிகளும் அழகிற்கு அழகு சேர்த்த டீன் ஏஜ் தளிர்களுமாய்... ஏக அமர்க்களமாய் இருந்தது.
உள்ளே நுழைந்ததும் வலது பக்கமாய் நான்கைந்து படிக்கட்டுகள் இறங்கினால் புல்வெளிகளும், செடிகளுமாய்... ஒரு சிறிய நந்தவனம் இருந்தது.
மீன்கள் துள்ளியோடும் அல்லிக்குளம்... அதைச் சுற்றி... சருகுகளுடன், உதிர்ந்திருந்த மகிழம்பூக்கள்.
அல்லிகுளத்தின் சுவற்றை சுற்றி மாடர்ன் யுவதிகள் அமர்ந்திருந்தனர்.
அனு ரேகா மகிழம்பூவை முகர்ந்தபடி, ஏதோ யோசனையில் ஆட்பட்டிருந்தாள்.
அனு... எங்கோ போய்ட்டேப் போலிருக்கு.
அவள் தோள் தொட்டு அசைத்தாள் ஷகிலா.
ப்ச்... அதெல்லாம் ஒண்ணுமில்லே
குரலில் வருத்தம் இழையோடியது.
அனு இருக்கிற இடமும், அணுகுண்டு இருக்கிற இடமும் ஒண்ணு தான். எப்பவும் பரபரப்பா இருக்கும். ஆனா, இன்னைக்கு இந்த இடம் சைலண்ட்டா இருக்குதுன்னா... இயற்கைக்கு முரணான விஷயமாச்சே? அனுவின் கவலைக்கு என்ன காரணம்?
என்றாள் மௌரியா.
அனு சுற்றிலும் ஒரு பார்வைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.
என்னாச்சு இவளுக்கு?
ரேணு அவள் அருகே வந்தமர்ந்தாள்.
இன்னும் எத்தனை நாள் இந்த சந்தோஷமெல்லாம்?
எந்த சந்தோஷமெல்லாம்?
இந்த கார்டன், இந்த அல்லி குளம், ஒண்ணா சேர்ந்து அரட்டையடிக்கிறது... எல்லாமே இருபது நாளைக்குள்ளே முடியப்போகுது!"
சட்டென அந்த இடத்தில் கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது. அனு சொல்வதில் இருந்த நிஜம்... யுவதிகளை சுட்டது. ஒருவரையொருவர் ஏக்கத்துடன் ஏறிட்டுக் கொண்டனர்.
எக்ஸாம் முடிஞ்சதும் ஆளுக்கொரு திசையிலே காணாமப் போய்டுவோம். ஒவ்வொரு நாளும் காலேஜுக்குள்ளே நுழைஞ்சதும் ஃப்ரெண்ட்ஸெல்லாம் வந்துட்டாங்களான்னுதான் கண்கள் தேடும். நம்பள்ல ஒருத்தி ஒரு நாள் வரலேன்னாக்கூட எப்படித் துடிச்சிப் போயிடறோம்? இந்தப் துடிப்பு, பரபரப்பு, அன்பு, எல்லாத்துக்கும் ஆயுள் மூணு வருஷம்தானா தீப்தி?
அதுவரை அவள் சொல்வதை அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்த தீப்தி வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள்.
யூ ஆர் ராங் அனு! ஏன் நெகடிவ்வா திங்க் பண்ணனும்? சயின்ஸ் எவ்வளவோ முன்னேறியிருக்கு. உலகத்தை சுருட்டி கம்ப்யூட்டர்க்குள்ளே திணிச்சு வச்சிருக்கு. தினமும் போன்ல பேசிக்கலாம். வீக்லி ஒன்ஸ் ஆர் மன்த்லி ஒன்ஸ் கம்பல்ஸரி மீட் பண்ணிக்குவோம். சந்தர்ப்ப சூழ்நிலையினால வெளியூர்ல செட்டிலாய்ட்டாலும் இன்டர்நெட் இருக்கு. சாட்டிங் பண்ணிக்கலாம். வில்லேஜ் கேர்ள் மாதிரி ஃபீல் பண்றியே
கிட்டத்தட்ட ஃபைனல் ஸ்டேஜ்ல நம்பளைப் போலவே எல்லா காலேஜ் ஸ்டூடண்ட்ஸும் இதே மாதிரிதான் திட்டம் போடுவாங்க. ஆனா, எல்லாமே காலப் போக்குல காலாவதியாயிரும். இப்ப நமக்கு படிப்பைத் தவிர வேறு எந்த பொறுப்பும் இல்லே. ஆனா, அப்புறம்?
அனு சொல்றதும் நிஜம்தான். படிப்பு முடிஞ்சதும் நம்மள்ல சில பேர் வேலைக்குப் போவோம், சில பேர் கல்யாணம் பண்ணிக்கிட்டு லைஃப்ல செட்டிலாய்டுவோம்.
நீ எப்படி ரேணு? உன் ஃப்யூச்சர் ப்ளான் என்ன?
என்று கேட்டாள் தீப்தி.
என்னடி தெரியாத மாதிரி கேக்கறே? நானும் விஸ்வமும் வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்கவங்க வீட்லே இருக்கிறோம். என் படிப்பு முடியறதுக்காகத் தான் காத்திருக்கிறார். முடிஞ்சதும் தனிக்குடித்தனம் தான்
ரேணு... நீ என்ன பண்ணப் போகிறே?
அப்பா இல்லாத எங்களை அம்மாதான் கஷ்டப்பட்டு ஆளாக்கி, படிக்க வச்சாங்க. ரெண்டு அக்காவுக்கு இன்னும் கல்யாணமாகலே எனக்கு அடுத்து ஒரு தங்கையும் தம்பியும் இருக்கிறாங்க எத்தனையோ கவலைகள் எனக்குள் இருக்கு. அதையெல்லாம் இந்த காலேஜ் காம்பவுண்ட்டுக்குள்ளே வந்ததும் காணாமல் போய்டும். இனி பொறுப்பை உணர்ந்து பொருளைத் தேடணும். அக்கா ரெண்டுபேருக்கும் கல்யாணத்திற்கு பணம் சேர்க்கணும். இன்னும் எத்தனையோ கடமைகள் இருக்கு. எனக்குன்னு கல்யாணம், குடும்பம்னு நினைச்சுப் பார்க்க பத்து வருஷம் ஆகும். படிப்பை முடிச்சதும் கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கி வேலை கிடைக்கவே குறைந்தபட்சம் ஒரு வருஷம் ஆகுமே!
எப்போதும் கலக்லவென சிரித்துக் கொண்டிருக்கும் ரேணுவின் குரலில் இருந்த வலியும், வார்த்தையில் இருந்த வலிமையும் ஒரு சேர தோழிகளை தாக்கியது.
தீப்தி அவள் தோளை தட்டிக்கொடுத்தாள்.
டோண்ட் ஒர்ரி ரேணு. வேலையைப் பத்தியக் கவலை விடு. எங்க மாமா பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்ட்டுனு உனக்குத்தான் தெரியுமே! அவர் கிட்டே சொல்லி ஒரு சூட்டபிள் ஜாப் வாங்கித் தர்றது என்னோட பொறுப்பு. ஓக்கே?
தாங்க்ஸ் தீப்தி
எல்லோரையும் கேள்வி கேட்கறியே! நீ என்னப் பண்ணப் போகிறே? லவ்விக்கிட்டிருக்கிற உன் ராகேஷை கல்யாணம் பண்ணிக்கிட்டு வயிறை வீங்க வச்சுக்கப் போகிறியா, இல்லே வேலைக்குப் போகப் போறியா?
தீப்தி பணக்கார வீட்டுப் பொண்ணு. வேலைக்குப் போய்தான் ஆகணும்ங்கற கட்டாயமா என்ன?
என்றாள் மௌரியா.
பணக்கார வீட்டுப் பொண்ணுன்னா வேலைக்குப் போகக் கூடாதா? படிச்ச படிப்பை எதுக்கு வீணாக்கணும்? அனுவைப் போலவே பேஷன் டிஸைனிங்லே எனக்கும் இன்ட்ரஸ்ட் உண்டு. அதை வச்சு பெரிய அளவுல சாதிச்சு பேர் வாங்கணும்னு ஆசையிருக்கு. ஆனா, ராகேஷ் ஒத்துக்க மாட்டேங்கிறார். இன்னும் ரெண்டு வருஷம் ஜாலியா லவ் பண்ணிட்டு, அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டு மூணு குழந்தைகளை பெத்ததுக்கப்புறம்... வீட்லே சும்மா தானேயிருப்பே! உடம்பு பெருத்துப் போகும்... அப்ப உன் இஷ்டப்படி சாதிச்சு காட்டுங்கிறார்.
ராகேஷ் பக்காவா ப்ளான் பண்ணியிருக்கிறார். அவர் சொல்றதும் கரெக்ட்டாதான் இருக்கு
என்றபடி சிரித்தாள் அனு.