Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Megangal
Kanavu Megangal
Kanavu Megangal
Ebook105 pages34 minutes

Kanavu Megangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

படித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவள் மாயா. இவள் இருக்குமிடத்தில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. கலகலவென இருப்பாள். அப்படிப்பட்ட மாயாவின் மகிழ்ச்சியை மாயமாக்கியது எது? அவள் நிம்மதியை நாசம் செய்தது எது? நடந்தது என்ன? என்பதைக் காண வாசிப்போம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580140609930
Kanavu Megangal

Read more from R. Manimala

Related to Kanavu Megangal

Related ebooks

Reviews for Kanavu Megangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Megangal - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கனவு மேகங்கள்

    Kanavu Megangal

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    தனக்கு கல்யாணம் நடந்ததை முன்னிட்டு ஒரு புலி தன் நண்பர்களுக்கு விருந்து வச்சதாம். அந்த விருந்தில் ஒரு பூனையும் கலந்துகிட்டு டான்சு ஆடுச்சாம்! புலி, அதைப் பார்த்து நீ யார்? என்று கேட்டதாம்.

    நானும் புலிதான், என் கல்யாணத்துக்கு முன்னாடி வரை! என்றதாம், பூனை.

    மாயா அதைச் சொல்லி முடித்ததும், அங்கிருந்த அத்தனை பேரும் ‘கொல்’லென சிரித்தார்கள்.

    மணி இரவு பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

    இன்னொரு ‘ஜோக்’ சொல்லேன், மாயா!

    போதும் ரீட்டா... பசிக்குது... அதோடு, நேரமாகுது. கிளம்பலாமா என்றாள். தன் கம்ப்யூட்டர் திரையை அணைத்து.

    கேன்டீனுக்கு ஆள் அனுப்பிட்டேன். கொஞ்சம் பொறு... ‘பீட்சா’ வந்துடும்... சாப்பிட்டுட்டே கிளம்பலாம்.

    பீட்சாவா, இந்த நேரத்திலா... வேண்டாம், இந்திரா. அம்மா கையால் மிளகு ரசம் சாதம் சாப்பிட்டுட்டு படுக்கணும் போலிருக்கு. வரட்டுமா, குட்நைட்... சாரி... குட்மார்னிங்!

    எங்களோடு வேனில் வந்துடேன், மாயா. நடுராத்திரியிலே தனியா போகணுமா? அக்கறையுடன் கேட்டவள், ஆர்த்தி.

    எனக்கென்ன பயம்? வரட்டுமா? தன் ஹேண்ட்பேக்கை இடப்பக்க தோளில் மாட்டி, வலப்பக்க இடுப்பில் தொங்கவிட்டபடி நடந்த மாயா... நேர்த்தியான அழகி. தலை முதல் கால்வரை பொங்கும் இளமையுடன் வசீகரமாய் இருந்தாள்.

    மாயா படித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாள். கவர்ச்சிகரமான சம்பளம்.

    அந்த நிறுவனத்தில் ஏகப்பட்ட ஆண்களும், பெண்களும் பணிபுரிந்தனர். மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள் இம்மாதிரி ‘ஓவர் டைம்’ வேலை உண்டு. அப்போது ஆண்களுக்கு வேலை கிடையாது. அப்படியொரு கட்டுக்கோப்பான நிறுவனம்.

    மாயா இருக்குமிடத்தில் சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது. எப்போதும் கலகலவென இருப்பவள், மற்றவர்களையும் சிலிர்க்க சிலிர்க்க பேசி சிரிக்க வைப்பாள்.

    தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்த அவள் விர்ரென புறப்பட்டாள்.

    மார்கழிக் குளிர் ஓடிவந்து அவளை இறுக அணைத்துக் கொண்டது. அணிந்திருந்த சல்வாரையும் மீறி மேனியை முத்தமிட்டு கிச்சுக்கிச்சு மூட்டியது.

    சாலை வெறிச்சோடிக் கிடக்க... சோடியம் விளக்குகள் வரிசையாய் வெளிச்சத்தைத் துப்பிக்கொண்டிருந்தன.

    தலைதெறிக்கும் வேகத்தில் ஐந்து நிமிடத்திற்கொரு லாரி, பயங்கர உறுமலோடு எதிர்ப்பட்டுக் கடந்தன.

    வீடு நெருங்க. நெருங்க அலுப்பு கூடியது.

    வண்டியின் சத்தம் கேட்டு, படுத்துக்கிடந்த தெரு நாய் ஒன்று வாலை சுருட்டி, கோபமாய் குரைத்தது. தெரிந்த ஆள் என்றறிந்ததும், முனகிக்கொண்டே பழையபடி படுத்துக்கொண்டது.

    வீட்டு முன் வண்டியை நிறுத்தினாள்.

    தாழ் மட்டுமே போடப்பட்டிருந்த கேட்டைத் திறந்து உள்ளே செல்ல, கேட்டிலிருந்த வாடகைக்கு விடப்படும் என்ற வாசகம் தாங்கிய போர்டு கையில் இடித்தது.

    தன்னிடமிருந்த சாவியை எடுத்தாள். கதவைத் திறந்தாள்.

    விசாலமான வராந்தா! நடுவில் துளசிமாடம். வானத்து நிலா வெளிச்சம் வஞ்சனையின்றி ஊடுருவிய வசீகர முற்றம்.

    மாயாவுக்கு தன் வீட்டை ரொம்பவே பிடிக்கும். வேலையற்ற ஓய்வான நேரங்களில் வீட்டின் அமைப்பை நிதானமாய் ரசிப்பாள்.

    பழமையான வீடு! அவளின் தாத்தா சோமசுந்தரம் மலிவான விலைக்கு வாங்கி, தன் ரசனைப்படி மாற்றி இருந்தார். நிஜமாகவே தாத்தா நல்ல ரசனையானவர்தான் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள்.

    ஏழெட்டு அறைகளோடு ரொம்பவே தாராளமாய் இருந்தது, வீடு.

    பின்பக்கம் நிறைய இடம்விட்டு கட்டி இருந்தார்கள். அடுத்த தெருவுக்குப் போக கதவும் உண்டு. கொல்லைப் புறத்தில் வற்றாத, சுவையான நீருடன் கிணறு. தென்னை, மா, சப்போட்டா, வாழை என அணில்குட்டி துள்ளி விளையாடும் தோட்டமும் இருந்தது. கூடவே, காய்கறிச் செடிகளும்.

    படுக்கை அறையைவிட பெரியதாய் இருந்தது, சமையலறை! அப்பளம் செய்ய தரையில் அமைக்கப்பட்டிருந்த பள்ளம்.

    ‘மொசைக்’ மார்பிள் எதற்கு? இன்னமும் வழுவழுவென்று இருந்தது, சிகப்பு நிற சிமெண்டு தரை!

    வாசல் புற கதவைத் தாண்டி ஒரு அறை உண்டு. தாத்தா தன் சகாக்களுடன் உட்கார்ந்து பேசுவதற்காக ஒதுக்கப்பட்டது. அதை எதற்கு சும்மா விடுவானேன்? என்று, இப்போது சமையலறையும், குளியலறையும் கட்டி, ‘வாடகைக்கு விடப்படும்’ என்று போர்டு மாட்டிவிட்டார்.

    கதவைத் திறந்து உள்ளே வந்ததும் முதல் அறை மாயாவோடது. முற்றத்திலிருந்தே மாடிக்குச் செல்ல படிக்கட்டுகள்.

    பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதாகட்டும்,

    Enjoying the preview?
    Page 1 of 1