Nijam Pondra Poi
()
About this ebook
சந்தியா,கணவர் ராஜேஷ்ஐ பிரிந்து தாய் வீட்டுக்கு வருகிறாள். எதிர் வீட்டில் புரொபசர் மனைவியுடன் குடியிருக்கிறார். அவர் வீட்டில் வசந்த் என்ற இளைஞன் குடியிருக்கிறான். வசந்த் சந்தியாவை அடைய நினைக்கிறான். அதற்காக அந்த பகுதியில் நல்லவன் போல் நடிக்கிறான்.ஒரு கட்டத்தில் சந்தியாவின் கணவனிடம் இவளைப்பற்றி அவதூறு பரப்பி அவளை அவனிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறான். புரொபசர் மனைவி வங்கி லாக்கரிலிருந்து நகைகளை வீட்டிற்கு எடுத்து வந்தது,களவு போகிறது. அவள் தோழி மஞ்சுவும் இந்த நாவலில் முக்கியம். சந்தியா வாழ்க்கை என்ன ஆனது? புரொபசர் மனைவி என்ன ஆனாள்? விறு விறுப்பாக செல்லும் இந்த நாவல் ஒரு திரைப்படத்தைப் பார்த்தது போல, அல்லது தொடரை ரசித்தது போல் கண்டிப்பாக இருக்கும். இந்த நாவலில் பதினாறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உங்களோடு பேச வருகிறார்கள்." சந்தியா" கண்டிப்பாக உங்கள் இதயத்தில் இடம் பிடிப்பாள்.
Read more from Kanchi Balachandran
Kannile Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Ennidam Rating: 5 out of 5 stars5/5Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKadavul Thantha Irumalargal Rating: 0 out of 5 stars0 ratingsMaranthean, Mannithean Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsManam Pona Pokkile Rating: 0 out of 5 stars0 ratingsPanama? Pasama? Rating: 0 out of 5 stars0 ratingsVaarangal Valartha Nila Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsVandhana Oru Kelvikuri! Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Poonthotiti... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nijam Pondra Poi
Related ebooks
Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsNizhalattam Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Eppodhumalla, Eppodhavathu Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Vaanavil Manithargal Rating: 5 out of 5 stars5/5Manathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Regai Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Enakkena Viriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Enna Thavam Seithanai Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Vaigarai Ragangal Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Mayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Mu(yu)tham Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaathal Crime Rating: 0 out of 5 stars0 ratingsMazhaithuli Mattum Unakku Rating: 5 out of 5 stars5/5Unnai Kandu Uyirthean Rating: 4 out of 5 stars4/5Mannikka Mudiyatha Kutram Rating: 0 out of 5 stars0 ratingsPuyalai Oru Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Kanavu Manam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nijam Pondra Poi
0 ratings0 reviews
Book preview
Nijam Pondra Poi - Kanchi Balachandran
http://www.pustaka.co.in
நிஜம் போன்ற பொய்
Nijam Pondra Poi
Author:
காஞ்சி பாலச்சந்திரன்
Kanchi Balachandran
For more books
http://pustaka.co.in/home/author/kanchi-balachandran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
(காணிக்கை)
ஊக்கமும், உற்சாகமும் அளித்து சிறுகதை, நாவல் என்று படிப்படியாக எழுத்துலகில் எனக்கும் ஒரு அங்கீகாரம் அமைய காரணமாக இருந்த சென்னை திரு. K. ஜேம்ஸ் அவர்களுக்கு இந்நூலினை காணிக்கையாக்குகிறேன்.
முன்னுரை
நிஜம் போன்ற பொய் என்ற நெடுங்கதை மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
எத்தனையோ நாவல்கள் திரைப்படங்களாக உருவெடுத்து, அவை என்றும் நம்முடைய இதயங்களிலே நிழலாடிக் கொண்டிருக்கின்றன. அந்த ஆசையில் நானும் இக்கதையை நீங்கள் படிக்கும்போது ஒரு திரைப்படத்தைப் பார்த்தது போல அல்லது தொடரை ரசித்தது போல இருக்க வேண்டும் என்று முயற்சி செய்துள்ளேன்.
ஒரு நாவலில் குறைந்த பட்சம் ஆறு கதாபாத்திரங்கள் போதுமானது. இந்த நாவலில் பதினாறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உங்களோடு பேச வருகிறார்கள்.
இந்த நாவலில் பெண்களைச் சுற்றியே நிகழ்வுகள் வருகின்றன. அகிலா, சந்தியா, மஞ்சு என்று பெண்கள் உங்களைச் சந்திக்க துடிக்கிறார்கள்.
வழக்கமாக என்னுடைய சிறுகதைகளிலும் சரி, நாவல்களிலும் சரி முடிவில் ஒரு படிப்பினை வைப்பது வழக்கம். இந்த நாவலைப் படிக்கும்போது அந்த படிப்பினை ஒரு எச்சரிக்கையை உங்களுக்கு உணர்த்தும்.
பிழைத்திருத்தம் பணியினை சிறப்பாக செய்து ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியை திருமதி. சசிகலா மற்றும் ஆர். பூவிழிச்செல்வி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!
என்றும் நட்புடன்
காஞ்சி.பாலச்சந்திரன்.
1
ரம்மியமான இரவு நேரம். சின்னச் சின்னதாய் மேகக் கூட்டங்கள் அலைந்து கொண்டிருந்தன. நட்சத்திரங்கள் வைரங்களாய் அங்கங்கே ஜொலித்துக் கொண்டிருந்தன. யார் வீட்டு மரமோ அதில் பூத்த பூக்கள் மணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.
அறையில் டியூப் விளக்கைப் போட்டுவிட்டு, ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தாள் சந்தியா. தாழ்வான ஜன்னல் வழியே வானம் தெரிந்தது. மேகம் ஓடியது. மேகங்களுக்கிடையே நிலவு குளிர்ச்சியாய் அடைக்கலம் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தது.
இயற்கை வெறுப்பு விருப்பு இல்லாமல் தன் பங்கினை செவ்வனே செய்து கொண்டிருந்தன. செடி கொடிகள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பூக்களையோ, காய்களையோ, பழங்களையோ தந்து கொண்டு தான் இருக்கின்றன.
மனிதன் கடவுளை நம்புகின்றானோ இல்லையோ, பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயத்தை நம்பித்தான் ஆக வேண்டும்.
நம்மை வாழ வைப்பதும் வீழ வைப்பதும் இந்த பஞ்ச பூதங்கள்தானே!
மிருகங்களுக்குக் கூட அதற்கென்று சுதந்திரமாய் வாழ்க்கை அமைந்து விடுகிறது. ஆனால் மனிதர்கள் வாழ்க்கையில் மட்டும் எத்தனை மேடு பள்ளங்கள். எத்தனை ஏற்றத் தாழ்வுகள், அவனுக்கு கிடைத்த வாழ்க்கையை அவன் முழுமையாகப் புரிந்து கொள்கிறானா? அவனாக அல்லது அவளாகட்டும் வாழ்க்கை என்னும் சந்தோஷக் கோட்பாட்டை எத்தனை பேர் தொட்டிருப்பார்கள்.
சந்தியா மனதில் குளுமையில்லை. வேதனையிருந்தது. வருத்தம் மண்டியிருந்தது. வேதனைக்குக் காரணம் அம்மாவின் பேச்சு.
உன் மனசுலே என்னடி நினைச்சிக்கிட்டிருக்கே? புருஷனிடம் கோவிச்சுட்டு வர்ற வயசா இது? நெருப்பை அள்ளி எங்க தலையில போடற மாதிரி இப்படி திடீர்னு வந்து நிக்கறியே?
வாயிலில் அம்மா ரெளத்திரமாகிக் கத்தினாள்.
கொஞ்சம் பேசாம இரு மீரா. அவ உள்ளே வரட்டும். எதுவானாலும் அப்புறம் பேசிக்கலாம்
ஜானகிராமன் சாந்தப்படுத்தினார்.
அவளை இதுக்கு மேலே என்ன விசாரிக்கிறது? எல்லாம் நீங்க கொடுத்த செல்லம். சொல்லாம கொள்ளாம பொட்டியைத் தூக்கிட்டு வந்து நிக்கறா! எல்லாம் உங்க திமிர்ல ஆடறா?
கோபம் சிறிதும் தனியாமல் மீரா சீறினாள்.
இல்லேம்மா நான் வந்து...
சந்தியா ஏதோ சொல்ல வாயெடுத்தாள்!
நீ எதுவும் சொல்ல வேண்டாம். சொன்னாலும் நான் கேட்கத் தயாரில்லே, போதும்! கஷ்டப்பட்டு படிக்க வெச்சி அங்கே இங்கே கடன் வாங்கி உன்னை நல்ல எடமாப் பார்த்து கட்டிக் கொடுத்தேனே எதுக்கு! நல்லா வாழ்வேன்னுத்தானே! இப்படி வாழா வெட்டியா கிடுகிடுன்னு வந்து நிக்கிறியே! இது நியாயமா? உன் எதிர்காலத்தை நெனைச்சிப் பார்த்தியா? எங்க காலத்துக்கு அப்புறம் உன் கதி? உன்னை நான் பொண்ணா பெத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்.
அம்மாவுக்கு இத்தனை நேரமிருந்த கோபம் துக்கமாய் மாறியது. குரல் உடைந்து கரகரத்தது. சந்தியாவுக்கு அம்மாவைப் பார்க்கப் பாவமாயிருந்தது. இந்த வேதனையெல்லாம் என்னால் தானே? மனசு துடித்தாள் சந்தியா.
'என் நல்லதுக்கு, என் எதிர்காலத்துக்குத் தானே அம்மா இப்படியெல்லாம் பேசுகிறாள். ஆனால் நான் எடுத்த இந்த முடிவு நியாயம் தானே! என்ன ஏதுனு விசாரிக்காமல், அம்மாவே பேசிக் கொண்டிருக்கிறாளே? நான், எடுத்த முடிவு என்னளவில் அசட்டுத் துணிச்சலாகத் தெரியும். ஆனால் அது அம்மாவை அதிக அளவில் பாதித்திருக்கிறது. பெத்த வயிறு படபடவென்று பேசி விட்டாலும் பாசம் விட்டுப் போகுமா?'
அப்பாவைப் பார்த்தாள் சந்தியா. அவர் கண்களில் கண்ணீர். இதை மீராவும் பார்த்துவிட்டாள். பார்த்த மீரா ஆடிப் போயிட்டாள். எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள். சந்தியாவும் அமைதியாக உள்ளே வந்து அப்பாவின் பக்கத்திலே அமர்ந்தாள். அவர் கைகளைப் பற்றி தன் கண்களிலே ஒத்திக்கொண்டாள்.
என்னம்மா ஆச்சு உனக்கு? ஏன் இந்த திடீர் முடிவு?
அப்பா இத்தனை வருஷமா என்னை கண்ணும் கருத்துமா வளர்த்தீங்களே. உங்க பொண்ணுப்பா நான். என்ன நடந்தது? ஏன் வந்தேன்னு ஒரு வார்த்தைகூட கேட்காம அம்மா இப்படி கோபப்படறாங்களே. இது எந்த விதத்திலே நியாயம்ப்பா. குற்றம் சுமத்தப்பட்டவன்கிட்டே கூட நீதிபதி கேள்வி கேட்டுத் தானே நீதி வழங்குறாரு. ஆனா இங்கே என் நியாயத்தைக் கேட்க ஆளில்லே. ஏம்ப்பா நான் பொண்ணாப் பிறந்தது தப்பாப்பா?
ஏம்மா நீ ஏதேதோ பேசறே! உனக்கு அங்கே என்ன நடந்தது? யாரு உன்னைக் கொடுமைப்படுத்தினாங்க! சொல்லும்மா. நான் கேட்கிறேனில்லே
சந்தியா விம்மினாள்.
***
விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டாள் சந்தியா.
குளித்துவிட்டு, வாசலிலே கோலம் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள்.
படுக்கை அறைக்குள் ராஜேஷ் ஆழ்ந்த உறக்கத்திலேயிருந்தான். அவனது லுங்கியைச் சரி செய்து போர்வையைப் போர்த்திவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
சூடாகக் காப்பி கலந்து மொதல்லே ருசி பார்த்தாள். குளிர்ந்த காற்று தேகத்தை வருட அந்த காலைப் பொழுதை ரொம்பவும் ரசித்தாள்.
எனக்கு காப்பியில்லையாம்மா!
குரலைக் கேட்டுத் திரும்பினாள்.
மாமியார் புன்முறுவலுடன் நின்றிருந்தாள்.
இதோ! ஒரு நொடியில் வர்றேன்
ஓடினாள் சமையலறைக்கு. அடுத்த நொடியில் மாமியாருக்கு காப்பி டம்ளரைத் தந்தாள்.
அத்தே! நர்மதா இன்னும் எழுந்திருக்கலையா?
அது சோம்பேறிம்மா. இப்படியே தூங்கிட்டுயிருந்தா போற எடத்திலே என்ன நினைப்பாங்க? வளர்ப்புச் சரியில்லேன்னு என்னைத்தான் திட்டுவாங்க. எப்போதுதான் பொறுப்பு வரப்போவுதோ
எல்லாம் போகப் போக சரியாயிடும். அவ எழுந்ததும் சொல்லுங்க. அவளுக்கு நானே காபி போட்டுத் தர்றேன்
. எழுந்தாள் சந்தியா.
அத்தே அவரு இன்னும் தூங்கிட்டுயிருக்காரு. ஆபீஸ்லே ஏதோ முக்கிய வேலையாம். சீக்கிரம் எழுப்பச் சொன்னாரு
சொல்லிக் கொண்டே ஓடினாள். போர்வையை விலக்கினாள். ராஜேஷ் நன்றாக குறட்டைச் சத்தத்தோடு தூங்கிக் கொண்டிருந்தான்.
'என்ன இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாரே' தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.
சத்தத்தைக் கேட்டு விழித்தான் ராஜேஷ். சற்றும் எதிர்பாராத நேரத்திலே அவளை வளைத்து, தன் மீது இழுத்து அணைத்துக் கொண்டான்.
இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் பிடியில் அவள் திணறிப் போனாள்.
"சரியான போக்கிரி தான்! யப்பா! விடுங்க மூச்சு