Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vandhana Oru Kelvikuri!
Vandhana Oru Kelvikuri!
Vandhana Oru Kelvikuri!
Ebook162 pages59 minutes

Vandhana Oru Kelvikuri!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நாவல் நாயகன் மாசிலாமணி, அவன் மாசில்லாத மணியாக இருந்தவன் தான். ஆனால் குடும்ப பொறுப்பு, பாசம், பெற்றோரிடம் மரியாதை இவற்றை விட பணத்தையே நேசிக்கத் தொடங்கியதும், அவன் வாழ்க்கையில் சறுக்கல் தொடங்கியது.

அமுதா,வந்தனா இருவருமே இந்த நாவலின் நாயகிகள்.இவர்கள் இருவரையும் மாசிலாமணி காதலித்தான், கூடவே பணத்தையும். இதன் விளைவாக அவன் பாதையைத் திருப்பியது. அமுதாவும் வந்தானவும காதலில் என்ன முடிவு எடுத்தார்கள். விறு, விருப்பமான இந்த நாவலை படித்து, உங்கள் விமர்சனங்களை தாருங்கள், நன்றி.

நட்புடன்
காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128604671
Vandhana Oru Kelvikuri!

Read more from Kanchi Balachandran

Related to Vandhana Oru Kelvikuri!

Related ebooks

Reviews for Vandhana Oru Kelvikuri!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vandhana Oru Kelvikuri! - Kanchi Balachandran

    http://www.pustaka.co.in

    வந்தனா ஒரு கேள்விக்குறி!

    Vandhana Oru Kelvikuri!

    Author:

    காஞ்சி பாலச்சந்திரன்

    Kanchi Balachandran

    For more books

    http://pustaka.co.in/home/author/kanchi-balachandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    என் நாவலைப் பற்றி

    ஒரு நடிகனைப் பார்த்து ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறான் கிராமத்து இளைஞன் ஒருவன். அதற்காக உழைத்து முன்னேறாமல் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து தன்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்கிறான்.

    பாசமிகு வாசக உள்ளங்களுக்கு என் பணிவான வணக்கம் கண்மணியின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

    என் படைப்பில், நாயகன் மாசிலாமணி! அவன் மாசில்லாத மணியாக இருந்தவன் தான். ஆனால் குடும்பப் பொறுப்பு - பாசம் பெற்றோரிடம் மரியாதை இவற்றைவிட பணத்தையே நேசிக்கத் தொடங்கியதும் அவன் வாழ்க்கையில் சறுக்கல் தொடங்கியது.

    அமுதா, வந்தனா இருவருமே இந்த நாவலின் நாயகிகள். அவர்கள் இருவரையும் மாசிலாமணி காதலித்தான். கூடவே பணத்தையும்!

    இதன் விளைவாக வாழ்க்கையின் பாதையே திரும்பியது அமுதாவும், வந்தனாவும் அவன் மீது என்ன முடிவு எடுத்தார்கள்?

    படியுங்கள்! வழக்கமான விமர்சனங்களை எழுதுங்கள்! காத்திருக்கிறேன்.

    நன்றி வணக்கம்!

    என்றும் அன்புடன்

    காஞ்சி. பாலச்சந்திரன்.

    1

    அத்திவாக்கம் கிராமம், ஏதோ பாரதிராஜா படத்திலே வந்த பசுமை நிறைந்த அழகிய கிராமமாக நினைக்கக்கூடாது. எப்போதும் சில்லென்று ஓடையில் தண்ணீர் ஓடுகின்ற ஆறோ அந்த கிராமத்தில் பறவைகள் கூடுகட்டி வாழ்ந்ததாகவோ கிடையாது. வெட்ட வெளியாய் கரம்பாய் ஆடுமாடு மேய்ச்சலுக்குப் பயன்பாட்டிலுள்ள நிலம் ஊரில் என்னமோ ஒரு ஏரி உள்ளது உண்மைதான். மழை வந்தால் மட்டுமே ஏரியின் கொள்ளளவில் ஒரு காலோ அரையோ நிரம்பும். அந்த ஏரியும் வறண்ட வெளியாகவே எப்போதும் காட்சி தரும்.

    ஊருக்கு போக்குவரத்து வசதி உண்டு. ஆனால் நினைத்த நேரத்தில் நினைத்தபடி பயணம் செய்ய முடியாது. விடியற்காலை ஐந்து மணிக்கு ஒரு பஸ் வரும். மீண்டும் மாலை மூன்று மணிக்கு அதே பஸ் வந்து திரும்பும்.

    கிராமத்தில் மொத்தமே முப்பது நாற்பது குடும்பங்கள் தானிருந்தது. பிழைப்புக்கு வழியில்லாத காரணத்தால் அடுத்த நகருக்கு வேலைக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டவர்களும் உண்டு. மழை வந்தால் விவசாயம். மற்றபடி வயதான பெரிசுகள் ஆடு, மாடுகளை ஒருபக்கம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விடுவார்கள். பெண்களும் அரசின் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கிடைத்த பணத்தில் ஜீவனம் நடத்தி வந்தனர். ஊரில் படித்தவர்கள் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையிலேயே இருந்தது. அவர்களும் சென்னைப் பக்கம் குடியேறி விட்டார்கள். ஆண்டுக்கொருமுறை புரட்டாசி மாதம் பெருமாளுக்கு பூஜை போட வருவார்கள்.

    அப்படிப்பட்ட அந்த கிராமத்தில் ஒரு சின்னஞ்சிறு விநாயகர் கோயில் முன்பக்கம் டைல்ஸ் பதியப்பட்ட கொஞ்சம் இடம் ஏதாவது விசேஷம் என்றால் தான் ஊர்மக்கள் இந்த கோவிலில் கூடுவார்கள். மற்றபடி இந்த இடம் இளைஞர்கள் கேரம் விளையாட பயன்படுத்துவார்கள்.

    மாசிலாமணி காத்திருந்தான். நண்பர்கள் வருகை தாமதமானது. அவன் படிப்பு என்னவோ பாலிடெக்னிக்கோடு சரி. அவன் அப்பா அவனை எப்படியோ கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். சண்முகத்திற்கு ரெண்டு பிள்ளைகள். பெரியவன் மாசிலாமணி, இளையவன் முகிலன், இளையவனுக்கு படிப்பு ஒத்து வரவில்லை. அவன் சென்ட்ரிங் வேலைக்குச் சென்று வந்தான். சண்முகத்திற்கு ஊரில் ஒரு செண்ட் நிலம் கூட கிடையாது. இந்த வயதிலும் எந்த வேலை கிடைத்தாலும், செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

    மாசிலாமணி படித்திருந்தாலும் அவன் எந்த வேலைக்கும் முயற்சி பண்ணியதில்லை. குடும்ப சூழ்நிலை, வறுமை அவன் கண்களுக்குத் தெரியவில்லை. ஏதாவது கம்பெனிகளுக்குச் சென்றால் கூட ஓரளவு குடும்பத்தைக் கவனிக்கலாம். வறுமை ஓரளவு நீங்கும். சின்ன வயதா அடித்து வளர்க்க! தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டான். அடித்தால் திருப்பி அடிக்கிற காலமாச்சே.

    ஆனால் அவன் சிந்தனையே வேறு. எப்படியும் பணக்காரனாக வேண்டும். கார் பங்களா வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். உழைப்பைக் காட்டிலும் அதிர்ஷ்டத்தை நம்புபவன்.

    நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். இப்போது தான் அவனுக்கு நிம்மதியாயிற்று. கேரம் போர்டை எடுத்து காய்களை அடுக்கினான்.

    ஏண்டா இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க. எங்கே நீங்க வராமல் போயிடுவீங்களோன்னு குழப்பமாயிடுச்சு! அப்படி என்னடா உங்களுக்கு அவ்வளவு வேலை!

    மாசிலாமணி! இனிமேல் கேரம் விளையாட நாங்கள் யாரும் வர்றமாட்டோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் உன்னை சந்திப்போம். எங்களுக்கு பேரிங் கம்பெனியிலே வேலைக் கிடைச்சிருக்கு. நாளைக்குப்போய் வேலையிலே சேரப்போறோம்.

    எந்த இடத்திலேயிருக்கு?

    ஒரகடம் பக்கத்தில் மாசம் ஏழாயிரம் சம்பளம்.

    நீங்கள் சொல்றது நியாயமில்லே. உங்கக்கூடவே இருக்கேன். நீங்க மட்டும் வேலை வாங்கிட்டீங்களே. என்னை மறந்துட்டீங்களே.

    உன்னை மறக்கல்லே! நீ பாலிடெக்னிக் படிச்சவன். அதோடு உன் கனவே வித்தியாசமானது. நாங்கள் போறது லேபர் வேலைக்கு. உனக்கு சரிப்படுமா?

    யோசித்தான் மாசிலாமணி. தற்போதைக்கு கனவை ஒதுக்கி வேலைக்குச் சேரவேண்டும். நண்பர்கள் இல்லையென்றால் ஊரில் போரடிக்கும்.

    என்னடா யோசிக்கிறே? இப்போ என் குடும்பம் இருக்கிற நிலைமைக்கு நான் ஏதாவது வேலை பார்த்தால்தான் சரியாயிருக்கும். நீங்க சொன்ன மாதிரி என் கனவு, என் படிப்புக்கு ஒரு நாள் நிச்சயம் பலன் கிடைக்கும். அப்போ பார்த்துக்கிறேன். எனக்கு வேலை வாங்கித்தாங்கடா.

    சரி! நாளைக்கு எங்களோடு வா! கம்பெனி சூப்பர்வைஸர்கிட்டே சொல்லி ஏற்பாடு பண்றோம். உனக்கு வேலைக் கிடைச்சா அங்கேயே ரூம் எடுத்து தங்கலாம்.

    மறுநாள் காலை பெட்டியை ஆராய்ந்தான். இருந்ததிலே சுமாரான சர்ட் பேன்டை எடுத்து உடுத்தினான்.

    அப்பா, நான் ஒரகடம் வரை போயிட்டு வர்றேம்பா?

    அப்பா எதுவும் பேசவில்லை. அவருக்குத் தெரியும். உள்ளூரில் சுற்றி போரடிச்சிருக்கும், வெளியேப்போய் சுற்றிவருவான். இதற்குப் பணம் எதிர்பார்க்கிறான்.

    அப்பா, நான் சொன்னது காதில் விழல்லையா?

    கேட்குதுப்பா சொல்லு

    அதான் சொன்னேனே ஒரகடத்திற்கு வேலை விஷயமாய் போயிட்டு வர்றேன்.

    வேலை விஷயமாய் சொன்ன வார்த்தை அவருக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. சந்தேகத்தோடு பார்த்தார்.

    நினைத்தது ஒன்று! நடப்பது வேறே!

    மாசிலாமணியே தொடர்ந்தான். என் பிரண்ட்ஸ் எல்லாரும் வேலைக்குப் போறாங்க. எனக்கும் வேலை வாங்கித் தர்றதாக சொல்லியிருக்காங்க!

    இதே மாதிரி எத்தனையோ முறை பணம் வாங்கிப் போயிருக்கான். இந்த முறையும் அப்படித்தானோ? நினைத்தார்.

    கமலா! அழைத்தார். உள்ளேயிருந்து வந்தாள்.

    உன் பையன் என்ன சொல்றான்னு கேளு?

    மாசிலாமணிக்கு கடுகடுப்பாகிவிட்டது.

    என்ன சொல்றாரு! ஒவ்வொருத்தராக் கூப்பிட்டு, என்ன கதை கேட்கிறீங்களா?

    .............

    அவரே தொடர்ந்தார். உன் பையன் வேலைக்குப் போகப் போறானாம். நேற்று பஞ்சாயத்து ஆபீஸிலிருந்து பணம் கொடுத்தாங்களே அதிலிருந்து இருநூறு ரூபாய் எடுத்துக்கொடு.

    டப்பாவிலிருந்து பணத்தை கமலா எண்ணினாள். மூன்னூற்று ஐம்பதிருந்தது. இரண்டு நூறு தாள்களை எடுத்துக் கொடுத்தாள்.

    பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.

    படித்திருந்தாலும் மாசிலாமணி சதா நண்பர்களோடு கேரம் விளையாட்டிலேயே பொழுதைக் கழிப்பான். அவனுக்கும் பொறுப்பு வந்து விட்டதே என்று எண்ணி சண்முகம் பெருமூச்சுவிட்டார். அந்த மூச்சு கமலாவின் மீதும் பட்டது. அதை அவளும் உணர்ந்தாள்.

    2

    இருட்டு மை போல் கப்பிக் கிடந்தது. ஜன்னலைத் திறந்து பார்த்தாள் அமுதா. பொழுது விடியவில்லை. மீண்டும் படுத்தாள். ஓடு வேயப்பட்ட வீட்டில் சின்ன ஹால், ஒரு குட்டி சமையலறை, படுக்கை அறை. உள்ளிட்ட சின்னஞ்சிறு வீடு. அந்த வீட்டின் காம்பவுண்டு சுவருக்கு பதிலாக செடி கொடிகள் சுற்றி வளர்த்திருந்தார்கள். அந்த குடும்பத்துக்கு சொந்தமாய் ரெண்டு ஏக்கர் நிலமிருந்தது. வானத்தை நம்பிய பூமி! மழை வந்தால் அப்பா ஏதாவது வேர்க்கடலை, கம்பு, விதைப்பார். மற்றபடி நிரந்தர வருமானம் கிடையாது. அமுதா அரசு பள்ளியில் பிளஸ்டூ படித்தாள். அதற்கு மேல்

    Enjoying the preview?
    Page 1 of 1