Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vasantham Varum Neram
Vasantham Varum Neram
Vasantham Varum Neram
Ebook114 pages40 minutes

Vasantham Varum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் நாவல்களிலே குறைந்த கதாபாத்திரங்களே இடம் பெறும். இந்த நாவலில் அதிகமான கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அத்தனை கதாபாத்திரங்களையும் முடிவில் நேர் கோட்டில் கொண்டு வந்ததை ஒரு சவாலாகவே உணர்கிறேன்.1. கமலநாதன்,பாலாம்மாள்,மகன் பிரவீண் அமெரிக்கா வாசம்2,அண்ணா காந்திதான்,மைதிலி மகள் விஸ்வா கணினி பொறியாளர்3,ராஜலட்சுமி டிபன் கடை நடத்துபவர்,அவர் மகன் கவிஅரசன், டிப்ளமோ ஒல்டர், 4,நவநீத கிருஷ்ணன்,அலுமேலு மகள் கியூரி,கணி அலுவலக ஊழியர்.விஸ்வா சகோதரரின் நண்பர் கோபி தொடர்ச்சியான கதாபாத்திரங்கள், யார்,யாருக்கு காதல்,கல்யாணம் படிக்க படிக்க சுவையாகதானிருக்கும். ஒவ்வொரு அத்தியாயமும் அறிமுகப்படுத்துவதிலிருந்தே வேகம் அதிகரிக்கும்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580128605023
Vasantham Varum Neram

Read more from Kanchi Balachandran

Related to Vasantham Varum Neram

Related ebooks

Reviews for Vasantham Varum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vasantham Varum Neram - Kanchi Balachandran

    http://www.pustaka.co.in

    வசந்தம் வரும் நேரம்

    Vasantham Varum Neram

    Author:

    காஞ்சி பாலச்சந்திரன்

    Kanchi Balachandran

    For more books

    http://pustaka.co.in/home/author/kanchi-balachandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    பகல் உச்சி வெயில் தலையை பதம் பார்த்தது. செஞ்சிக்கோட்டை சுற்றுலா வருபவர்களுக்கு வேண்டுமானால் வியப்பாக இருக்கலாம். அங்கேயே தங்கி வாழ்கின்ற மக்களுக்கு இந்த வெயில் காலக்கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல! கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மலை! மலை! விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டி கிணறு தோண்டினால் கூட பாறைகள்தான்! ஆழத்திலும் கிடக்கும் பாறைகளை உடைத்து தண்ணர் கொண்டு வருவதற்குள் விவசாயிக்கு போன உயிர் திரும்பாத கதைதான்.

    செஞ்சிக்கு வடக்கே முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது பஞ்சம்பட்டி. குக்கிராமம்.

    செந்தில் ஏதோ ஒரு வேகத்தில் சென்னையிலிருந்து புறப்பட்டான். செஞ்சி அருகில் இருப்பது போல் நினைத்தான். அவனுக்குத் தெரியாது தூரம் அதிகம் நீண்டது.

    அமெரிக்காவில் ஆயிரம், இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காரில் பயணம் செய்தவனுக்கு இது ஒன்றும் பிரச்சினையேயில்லை. அங்கே காரிலே பயணம் செய்து அலுப்படைத்தவன் இங்கே பைக்கில் பயணம் செய்ய விரும்பினான்.

    பஞ்சம்பட்டி கிராமத்தில் கமலதாதன் - பாலாம்மாள் குடும்பம்தான் முன்னேறிய குடும்பம். தன் ஒரே மகன் பிரவீணை பிளஸ்டூ வரை செஞ்சியில் படிக்க வைத்தனர். பிறகு கோயம்புத்தூருக்கு பி.ஈ. படிப்பிற்கு அனுப்பி வைத்தனர். நான்காம் ஆண்டு படிக்கும் போதே அவன் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆனான். முதலில் சென்னையில் வேலை. பிறகு அமெரிக்காவில் வேலை கிடைக்கவே பறந்து விட்டான்.

    கமலநாதனுக்கு விவசாயம் மட்டுமே தெரிந்த தொழில். அவருக்கு தன் வீடு, நிலம்தான் உலகம். வீட்டிலிருந்த போன் இருவாரங்களாக வேலைச் செய்யவில்லை. நகரமாக இருந்தால் உடனே ஆட்களை கூப்பிட்டு சரி செய்யலாம், குக்கிராமத்திறகு அவ்வளவு சீக்கிரம் வந்து பழுதுபார்ப்பார்களா என்ன? செல்போனிலும் பையனிடம் பேச முடியவில்லை. சிக்னல் சரியாக கிடைக்கவில்லை.

    பிரவீணை அமெரிக்காவுக்கு அனுப்பும் போது ஊர்க்காரர்கள், உறவினர்கள் எல்லாம் ஆலோசனை என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் சொன்னார்கள்.

    உனக்கு இருக்கிற சொத்துக்கு ஒரே புள்ளையை எதற்கு வெளிநாடு அனுப்புறே! உன் கூடவே வெச்சிருக்க வேண்டியதுதானே! கடைசி காலத்திலே உன்னை எடுத்துப் போடக்கூட உன் பையன் வரமாட்டான்...

    உபதேசத்தை காதில் வாங்கிக் கொள்ளவில்லை கமலநாதன்.

    பாலாம்மாளுக்கு மட்டும் கொஞ்சம் வருத்தம்தான். ஒரே மகனை இவ்வளவு தூரம் அனுப்பித்தான் ஆகணுமா! இருக்கிற சொத்தெல்லாம் யாருக்கு! இவனுக்குத்தானே! மேலும் மேலும் சம்பாதித்து எங்கே வைக்கப் போறோம்.

    கமலநாதன் எப்போதுமே நிலம், வீடு என்று தன் வாழ்நாளை அதை ஒட்டியே வாழ்ந்து விட்டார். செஞ்சி, திருவண்ணாமலையைத் தவிர வேறு எந்த ஊரையும் பார்த்ததில்லை. கோயம்புத்தூரிலே பையன் படிக்கும் போது ஒருமுறை மட்டும் அங்கே போய் விட்டு வந்தவர்... மற்றபடி அவர் உலகம் ஒரு வட்டத்துக்குள் அடங்கியிருந்தது.

    அந்த ஒரு தாக்கம் பையனாவது வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று நினைத்தார்.

    கமலநாதன் வயக்காட்டை சுற்றிவிட்டு தோட்டத்தில் விளைந்த கத்தரி, வெண்டைப் பிஞ்சுகளை ஒரு பையில் நிரப்பிக் கொண்டு உள்ளே நுழைந்தார். கால்களில் சேறு அப்பிக் கொண்டிருந்தது. வீட்டினுள் நுழைந்தவர் கால்களை கழுவிக் கொண்டு அமர்ந்தார்.

    வந்துட்டீங்களா அங்கிள்! குரல் கேட்டு நிமிர்ந்தவருக்கு ஆச்சரியம்! நாற்காலியில் நாகரீக உடையில் அமாந்திருந்த செந்தில் புதுமுகம். அவனை செஞ்சியில் பார்த்ததாக ஞாபகமில்லை.

    புதிருக்கு முடிச்சை அவிழ்த்தாள் பாலாம்மாள்.

    தம்பி சென்னையிலிருந்து வந்திருக்கு! நம்ம பிரவீணோடு ஒண்ணா வேலை பார்க்குதாம்! அமெரிக்காவிலிருந்து பிரவீண் தந்த லெட்டரையும் பொருளையும் கொண்டாந்திருக்கு.

    நிலைமையை புரிந்து கொண்டார் கமலநாதன்.

    தம்பிக்கு ஏதாவது கொடுத்தியா....

    காபி கேட்டேன்.... வேண்டாம்னு சொல்லிருச்சி, மோர் கொடுத்தேன்!

    பேரு என்ன தம்பி? எங்கே வீடு?

    என் பேரு செந்தில் அங்கிள்.... மடிப்பாக்கத்திலே வீடு. ஒரு மாசம் லீவிலே வந்தேன்! பிரவீணோடத்தான் தங்கியிருக்கேன். ஊருக்குப் புறப்படும் போது இதை உங்ககிட்ட கொடுக்கச் சொல்லி உங்க விலாசத்தையும் கொடுத்தான். உங்களுக்கு போன் போட்டேன்! எடுக்கவேயில்லை. அதான் நேரிடையாக வந்துட்டேன்.

    சரி தம்பி! கை, கால் கழுவிட்டு வாங்க! சாப்பிடலாம்.

    வேண்டாம் அங்கிள்! நான் உடனே புறப்படணும்.

    தம்பி! எங்க வீட்டுக்கு வந்தவங்களை நாங்க சாப்பிடாமல் அனுப்ப மாட்டோம்! இருந்து சாப்பிட்டு கிளம்புங்க! பாலா சீக்கிரம் சமையல் பண்ணு! மனைவியிடம் உத்தரவிட்டவர், ஆமாம் தம்பி! உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா! என்றார்.

    இல்லை அங்கிள்! இனிமேல்தான் பெண் பார்க்கப் போறாங்க!

    அங்கே எப்படிப்பா சாப்பாடெல்லாம்!

    நானும் பிரவீணும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமைச்சி பிரிட்ஜில் வெச்சிடுவோம். ரெண்டு, மூணு நாளைக்கு அதை வெச்சே சமாளிப்போம்!

    என்னப்பா சொல்றே! இங்கே காலையிலே சமைச்சாலே ராத்திரிக்கு சாப்பிட மாட்டாரு இவரு! பாலாம்மாள் சமயம் பார்த்து வாரிவிட்டாள்! "பாவம்ங்க... பிரவீணும்,

    Enjoying the preview?
    Page 1 of 1