Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendu(m) Varuven
Meendu(m) Varuven
Meendu(m) Varuven
Ebook101 pages49 minutes

Meendu(m) Varuven

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580100704638
Meendu(m) Varuven

Read more from Indira Soundarajan

Related to Meendu(m) Varuven

Related ebooks

Related categories

Reviews for Meendu(m) Varuven

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendu(m) Varuven - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    மீண்டு(ம்) வருவேன்

    Meendu(m) Varuven

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    சிவ வாக்கு வேறு

    சித்தன் வாக்கு வேறில்லை!

    - சித்தன் வாக்கு

    அந்த வேன் ஸ்ரீ வில்லிபுத்தூரை கடந்து குற்றாலம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.

    இந்த கால நவீன வேன் - ஆகையினாலே உள்ளே போன வாரம் ரிலீசாகியிருந்த புதிய திரைப் படம் ஓடிக் கொண்டிருந்தது!

    உள்ளே மொத்தமாய் பத்து பேர். அதில் இரண்டு பேர் தான் படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். மீதி உள்ள எட்டு பேரில் இரண்டு பேர் செல்போனில் யாருடனோ கதைத்தபடி அமர்ந்திருக்க மீதி ஆறு பேரும் சீட்டுக் கச்சேரியில் மூழ்கியிருந்தனர்.

    பாட்டில் சரக்கும் உள் ஏறியிருந்தது.

    அதன் காரணமாக முகத்தில் கோணா மாணலாக சிரிப்பு.

    முன் பக்கம் டிரைவரை ஒட்டி அமர்ந்தபடி இருந்தான் கணேசன். பதினோறாவது நபர்! டி.வி. செல்போன், சீட்டாட்டம், தண்ணி என்று எதிலும் தொடர்பில்லாதபடி நழுவும் சாலையைப் பார்த்த படி அமர்ந்திருந்தான்.

    டிரைவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

    என்ன சார் கம்முன்னு வர்றீங்க... உங்க ஆளுங்களோட நீங்க கூடி கும்மி அடிக்கலையா? - என்று தன் பாணியில் கேட்டான். கணேசன் அதற்கு வார்த்தைகளில் பதில் கூறாமல் உதட்டை சுழித்தான்.

    எல்லாம் ஒண்ணா தானே வேலை பாக்கறீங்க?

    ம்…

    இப்ப ஜாலியா இருக்கலாம்னுதானே குற்றாலம் போறீங்க?

    ம்…

    அப்பால நீங்க மட்டும் இப்படி ஒதுங்கி வந்தா என்ன சார் அர்த்தம்?

    நீ பொத்திகிட்டு வண்டிய ஓட்டு… - என்று சற்று காட்டமாய் பதிலைச் சொன்னான். அந்த பதிலை டிரைவரும் எதிர்பார்க்கவில்லை. முகம் வாடிப் போனது. அதை விடவே கணேசன் முகமும் கலங்கத் தொடங்கியது.

    இடையில் அவன் பாக்கெட்டில் செல்போனின் அழைப்பு வேறு. எடுத்து திரையை பார்த்தான். ராவுத்தர் என்கிற பெயர் தெரியவும் தவிக்க ஆரம்பித்தான். எடுத்து பேசவும் முடியாமல் இடையில் கட் பண்ணவும் விரும்பாமல் அவன் கிடப்பதில் ஏதோ பொருள் இருப்பது போல் தோன்றியது டிரைவருக்கு.

    பின்னால் டி.வி. பார்த்தபடி இருந்த சந்தானம் மட்டும் குரல் கொடுத்தான்.

    ஏண்டா இப்படி அதை அலற உட்டு கிட்டே இருக்கே... ஒண்ணு அதை கட் பண்ணு. இல்லாட்டி பேச வேண்டியது தானே?

    சந்தானம் கேட்டு முடிக்கவும் அதுவாய் அடங்கவும் சரியாக இருந்தது. 'அப்பாடா...' என்று தற்காலிகமாய் கணேசனிடம் ஒரு பெருமூச்சு.

    வெளியே காற்றிலும் அதீதமான சிலுசிலுப்பு.

    வானிலும் மோடம் போட்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

    வேனின் விண்டோவை திறந்து காற்றை முகத்தில் மோதவிட்ட சந்தானம் இந்த வட்டம் சீசன் எதிர்பார்த்ததை விடவே நல்லா இருக்கும்போல என்று முணுமுணுத்துக் கொண்டான்.

    இடையில் கடையநல்லூர் குறுக்கிட்டது.

    சிறிய ஊர் - ஆனாலும் அங்கேயும் டிராஃபிக் நெருக்கடி. வேன் சற்று ஊர்ந்து செல்ல நேரிட்ட போது பக்கவாட்டில் திபுதிபுவென்று சிலர் ஓடி வந்து வெள்ளரிப் பிஞ்சையும், உரித்த பலாச்சுளையையும் தலையில் கட்டப் பார்த்தனர்.

    சந்தானம் ஒரு பெண்ணிடம் எவ்வளவு என்று கேட்டான். 'அப்படியே பத்து ரூவா சாமி' - என்று மூன்று வெள்ளரிப் பிஞ்சை ஒரு பாலிதீன் தாளில் போட்டு நீட்டினான்.

    இந்த மூணு பத்து ரூவாயா?

    வேணும்னா இன்னும் ஒண்ணு தரேன் சாமி...

    ஒண்ணு எட்டணா - மூணு ஒண்ணரை ரூவா - போனா போவுதுன்னு இரண்டு ரூபா தரேன். என்ன சொல்றே?

    ஐயோ சாமி கட்டுப்படியாவது சாமி. - வியாபார பேரம் முட்டி மோதி இறுதியில் ஐந்து ரூபாயில் முடிந்தது. அதற்குள் இன்னொருவன் ஐந்து பிஞ்சுகளை தந்து நீ இதுக்கு அஞ்சு ரூவா கொடு சாமி... என்று அந்த பெண்ணின் வியாபாரத்தை தன் பக்கம் திருப்பப் பார்த்தான்.

    அதற்குள் டிராஃபிக் கிளியராகவும் வேன் வேகமெடுத்தது. சந்தானம் வெள்ளரிப் பிஞ்சில் ஒரு துண்டை வாயில் போட்டபடி மற்றதை உள்ளே சுற்றலில் விட்டான்.

    என்னடா.... ஒரு வழியா மலை ஏறி மாங்கா பறிச்சிட்டே போல...

    என்னடா சொல்றே?

    வெள்ளரிக்காய்க்கெல்லாமாடா பேரம் பேசுவே?

    ஏண்டா இ.பி.கோ. செக்ஷன்படி வெள்ளரிக் காய்க்கெல்லாம் பேசக் கூடாதா?

    இந்த கிருத்தனத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. போய் டாடா செருப்புக் கடைலயும், போத்திஸ் குமரன்னு துணிக் கடைலயும் பேசிப் பாரேன்...

    நாங்க ரேஷன்லயே பேரம் பேசுவோம்ல…?

    கிழிச்சே.... உன் ஜம்பம்லாம் இந்த மாதிரி தெருவுல அல்லாட்ற ஜென்மங்ககிட்ட தான். ஷோரூம் கடை பக்கம் போனா அவங்க ஃபிக்சட் ரேட்னு நல்லா யானைக்கு நாமம் போட்ற மாதிரி போட்டு அனுப்புவாங்க. அங்க நெத்தியை மட்டுமில்ல முதுகு கை கால்னு எல்லா பாகத்தையும் காட்டுவீங்கடா...

    சீட்டாடியபடியே நண்பர்கள் பீராய்ந்து கொள்ளத் தொடங்கினர். அப்போதும் கணேசன் மெளனமாகவே அமர்ந்து வந்தான். அவன் கையில் சந்தானம் தந்த வெள்ளரிப் பிஞ்சுத் துண்டு அப்படியே இருந்தது.

    டேய் மாப்ள... சாப்பிட்றா…

    வேணாண்டா... இந்தா...

    "எந்த கப்பல்டா கவுந்துடிச்சு. இப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1