Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pei... Pisasu... Bootham
Pei... Pisasu... Bootham
Pei... Pisasu... Bootham
Ebook108 pages1 hour

Pei... Pisasu... Bootham

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580100700195
Pei... Pisasu... Bootham

Read more from Indira Soundarajan

Related to Pei... Pisasu... Bootham

Related ebooks

Related categories

Reviews for Pei... Pisasu... Bootham

Rating: 4.444444444444445 out of 5 stars
4.5/5

9 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    இலக்கு உடையது இலக்கியம் என்பார்கள். கதையின் நடுவே பல அருமையான கருத்துகளை வைத்து சுவாரசியம் குன்றாமல் எழுதியுள்ள பாங்கு பாராட்டிற்கு உரியது. [ பண்டிட் இராம. தட்சிணாமூர்த்தி )

Book preview

Pei... Pisasu... Bootham - Indira Soundarajan

http://www.pustaka.co.in

பேய்… பிசாசு… பூதம்…!

Pei… Pisasu… Bootham…!

Author:

இந்திரா செளந்தர்ராஜன்

Indira Soundarrajan

For more books

http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

1

‘ஒ

ரு உடம்பிலிருந்து அதன் உயிர் உரிய காலத்தில் தானாகப் பிரிய வேண்டும். பிறக்கும் போதே உயிர் பிரியப் போகும் நேரமும் பதிவு செய்யப்பட்டிருக்கும். பிறந்தால் இறந்தே தீர வேண்டும். இந்த உலகின் ஒருவர் கூட இறவாமல் வாழ்ந்தது கிடையாது. உடம்பை ஜெயித்து உயிரின் மூலத்தைக் கண்டறிந்த சித்த புருஷர்கள் கூட மரணமில்லாமல் வாழ்ந்து கொண்டே இருந்ததில்லை.

இந்த உலகில் பிறந்தவர்களில் 2000 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாக நம்பப்படும் விக்கரமாதித்தன் கூட, ஒருநாள் தன் உயிரை விட்டான். பூமியில் மனிதனாக அவதாரம் எடுத்த அந்த மகா விஷ்ணவே கூட ராமனாக, கிருஷ்ணனாக அவதாரம் எடுத்த போது, பிறந்தது போலவே ஒருநாள் இறந்தும் போனார்.

இந்த உதாரணங்களில் இருந்து ஒரு உண்மை நிதர்சனமாகத் தெரிய வரும். ‘பிறந்தால் இறந்தே தீர வேண்டும்’ என்பதுதான் அது!

போகட்டும்…

பிறப்பு நமக்கெல்லாம் தெரியும்.

இறப்பு என்றால் என்ன…?

எத்தனை பேருக்கு இதற்குச் சரியான பதில் தெரியும்?’

தனது தனியறைக்குள் மும்முரமாகப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். வர்ஷினி. வெளிர் நீல சுடிதாரில் எண்ணெய் தேய்த்துக் குளித்த தலைமுடியை ஒதுக்கி ஒதுக்கி விட்டபடியே அவள் நடப்பதும். அப்படி நடந்தபடியே அவள் புத்தகத்தில் கண்ணாக இருப்பதும் பார்ப்பதற்கே ஒரு தனி அழகாகத்தான் தெரிந்தது.

எம்.ஏ. வரலாற்றுப் பாடத்தில் பல்கலைக்கழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவள், இந்த வர்ஷினி! இன்று பி.ஏ., எம்.ஏ, வெல்லாம், ப்ளஸ் டூவில் ஐம்பது, அறுபது சதவிகிதம் மதிப்பெண்கள் வாங்கினவர்களுக்கு என்றாகி விட்டது.

‘பி.ஏ., படிக்கிறேன்’ என்று எம்.ஜி.ஆர் நடிக்க வந்த காலத்தில் சொன்னால் அதிசயமாகப் பார்ப்பார்கள். இன்று அந்தப் பார்வை அப்படியே கேலிக்குரியதாகி விட்டது. ‘ப்ளஸ் டூவில் தேறவில்லை போல் இருக்கிறது’ என்று மனதுக்குள் தீர்மானமே போட்டு விடுவார்கள்.

படிப்பில் கூட ஏற்றத்தாழ்வு புகுந்து விட்டது.

ஆனால், வர்ஷினி பி.ஏ., எம்.ஏ., வைத் தேடிப்பிடித்து படித்தாள். இத்தனைக்கும் ப்ளஸ் டூவில் பள்ளியில் முதல் மாணவி அவள்!

ஒரு முதல் மாணவி வரலாற்றுப் பாடத்தை விரும்பித் தேர்ந்தெடுத்துப் படிக்க முன் வந்தது கல்லுரி பேராசிரியர்களுக்கே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அதேபோல் அந்த பாடங்களிலும் வர்ஷினி முதல் மதிப்பெண் பெற்று ஒரு சாதனை செய்து முடித்தாள்.

அதற்காக அவளை ஒரு நாளிதழில் பேட்டி கூட எடுத்தார்கள். அந்தப் பேட்டியில் அவள் மனம்விட்டுப் பேசியது பலரைச் சிந்திக்க வைத்து விட்டது. வர்ஷினி இங்கே பாடம் படிக்கட்டும். நாம் அவள் பேசியதைக் கொஞ்சம் கேட்போம்.

இன்னிக்கு படிப்புன்னா அது ‘டாக்டருக்குப் படிக்கறதும் என்ஜினியரிங் படிக்கறதும்தான்’ னு ஆகிடிச்சு. யார்கிட்டையாவது ஆசீர்வாதம் வாங்கப் போனா அவங்களும் நீ பெரிய டாக்டரா வரணும், பெரிய என்ஜினியரா வரணும்’னுதான் வாழ்த்தறாங்க. மத்த படிப்பெல்லாம் படிப்பே இல்லாத மாதிரியும், இந்த இரண்டு படிப்புத்தான் படிப்புங்கற மாதிரியும் பெரியவங்களும் நினைக்கறது கொஞ்சமும் சரியில்லை.

அவங்க அப்படி நினைக்கக் காரணம் என்னன்னு யோசிச்சுப் பார்த்தேன். டாக்ரானா உக்காந்த இடத்துல ஆயிரக்கணக்குல சம்பாதிக்கலாம். என்ஜினியர் விஷயமும் அப்படித்தான்.

லட்சக் கணக்குல சம்பாதிக்கணும்னா இந்தப் படிப்புதான் படிக்கணும்னு ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. பொருளாதாரம் படிச்சாலோ, சரித்திரம் படிச்சாலோ ஒரு க்ளார்க்கா ஆகலாம். மாசாமாசம் வீட்டுலயும் பஞ்சப்பாட்டுதான்.

வருமானத்தைத் தராத படிப்பு எவ்வளவு பெருசுன்னாலும் வேண்டாம்கற எண்ணம்தான் இதுக்கெல்லாம் காரணம். என்வரைல படிப்புங்கறது ஒரு அடையாளம். நம்மோட அறிவைப் பட்டை தீட்டிக்க கிடைக்கற ஒரு சந்தர்ப்பம். அதை சம்பாதிச்சு கொடுக்கப் போற ஒரு குதிரையாவோ, இல்ல ஒரு டாக்சியாவோ நான் பார்க்கலை.

என்ஜினியர், டாக்டராகி உருப்படாம போனவங்களும் உண்டு. பட்டப்படிப்பு என்ன… பள்ளிக்கூட படிப்புகூட படிக்காம கோடீஸ்வரன் ஆனவங்களும் உண்டு. எப்பவும் வித்யாசமா யோசிக்கணும். யாரைப் பார்த்தும் நாம காப்பி அடிக்கக் கூடாது. நம்மைப் பார்த்துத்தான் இந்த உலகம் காப்பி அடிக்கணும். இதுதான் உன் உறுதியான எண்ணம்!"

வர்ஷினியின் இந்தக் கருத்து பல பேரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கல்லூரி பேராசிரியர்களே அவளின் தெளிவைப் பாராட்டினர். ஆனால், அவளுக்கொரு மாமன் மகன் இருக்கிறான். ரவிச்சந்திரன் என்று அவனுக்கு ஒரு பெயர். அவனுக்கு ‘வர்ஷினி ஒரு டாக்டர் ஆக வேண்டும்’ என்பதுதான் விருப்பம்.

வர்ஷினியும் கூறினாள்:

மை டியர் மாமாப்பையா! நானும் டாக்டர் ஆவேன். ஆனா ஸ்டெதஸ்கோப் பிடிச்ச ஊசி போட்ற எம்.ப.பி.எஸ். டாக்டரா இல்ல… எதாவது தீசிஸ் பண்ணி அதுல டாக்டர் ஆவேன்…

அந்த டாக்டர் பட்டத்துக்கெல்லாம் மதிப்பு இருக்குனு நினைக்கறியா வர்ஷ்…?இப்படித்தான் அவனும் திருப்பிக் கேட்டான்.

என் வரைல அதுக்குத்தான் மதிப்பு ஜாஸ்தி. ஒரு ஆராய்ச்சி செய்து அதுல டாக்டராகறதுங்கறது என்ன சாதாரண விஷயமா?

சரி வர்ஷ்… அப்படி நீ எதை ஆராயப் போறே?

அதுசரி… ஆராயறதுக்கு இந்த நாட்டுல விஷயங்களுக்கா பஞ்சம்?

"விஷயங்கள் பஞ்சமில்லாம இருக்கலாம். ஆனா, உன் ஆராய்ச்சியால சமுதாயத்துக்கு ஒரு பயன் இருக்கணும். அப்படி ஒரு ஆராய்ச்சி செய்யணும்னா ஒண்ணு நீ வேளாண்மைங்கற அக்ரிகல்ச்சர் சைட்ல விவசாய ஆராய்ச்சி எதாவது செய்யணும். இல்லையா மருத்துவத் துறைல அதாவது மருந்து கண்டுபிடிச்சு நோய்களை விரட்ட வழி பார்க்கலாம். நீயே ஒரு அகடமிக் ஸ்டூடண்ட்.

அதுலையும்

Enjoying the preview?
Page 1 of 1