Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Oru Marmadesam
Manam Oru Marmadesam
Manam Oru Marmadesam
Ebook234 pages2 hours

Manam Oru Marmadesam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580100704996
Manam Oru Marmadesam

Read more from Indira Soundarajan

Related to Manam Oru Marmadesam

Related ebooks

Related categories

Reviews for Manam Oru Marmadesam

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Oru Marmadesam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    மனம் ஒரு மர்மதேசம்

    Manam Oru Marmadesam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    மர்மதேசம்! இந்த பெயரை கேட்ட மாத்திரத்தில் நான் எழுதிய தொலைக்காட்சி தொடர்தான் நினைவுக்கு வரும். சிலபெயர்களுக்கு காலம் கடந்து வாழ்ந்திடும் ஒரு அமைப்பு இருக்கிறது. பாமரன் முதல் படித்தவர் வரை எல்லோருமே ஏதோ ஒரு தருணத்தில் அந்தப் பெயரை, அல்லது அந்த வினைச் சொல்லை அதுவுமல்லது குறிப்பிட்ட சப்தத்தை புரிய வைக்கும் ஒரு சொல்லாக உள்ளதை அனைவருமே பார்க்கிறோம்.

    'வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், கோவிந்தா, கோவிந்தா, டமால்னு ஒரு சப்தம், வீல்னு அலறினான். இப்படி பல உதாரணங்களைக் கூறலாம். இதில் சமீப காலத்தில் சேர்ந்து கொண்டது தான் மர்மதேசம் என்னும் வார்த்தை. இந்த தொலைக்காட்சித் தொடர் வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இதை பலரும் பல தருணங்களில் பயன்படுத்துவதை கண்டேன். குறிப்பாக இலங்கைப் பிரச்சனை பற்றி பேசும்போது 'அது ஒரு மர்மதேசம் - அங்க என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டேங்குது' என்றார் ஒருவர். வீரப்பன் விஷயம் பட்டை கிளப்பிக் கொண்டிருந்த நாளில் ‘வீரப்பன் விஷயமே ஒரு மர்மதேசம் தான்' என்றார் ஒருவர்.

    நமது மத்திய மந்திரி திரு. ப. சிதம்பரம் கூட ஒரு முக்கியமான கூட்டத்தில் பேசும்போது இந்த வார்த்தையை ஒரு உதாரணமாக பயன்படுத்தினார்.

    மர்ம தேசத்துக்கு எதற்கு இத்தனை பீடிகை என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது... எனக்கென்னவோ நமது ஒவ்வொருவரின் மனதே கூட ஒரு மர்மதேசம் தான் என்று தோன்றுகிறது.

    சிலர் வரையில் அது சாதாரண மர்ம தேசம் கூட இல்லை. சூப்பர் ஸ்பெஷல் மர்ம தேசமாகவெல்லாம் பலர் இருக்கிறார்கள். எப்படி என்று சற்று விஸ்தாரமாகவே பார்ப்போமா?

    நான் யந்திர துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த நாளில் சக பணியாள நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு சுலைமான் என்று ஒரு பெயர் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்களேன். இந்த சுலைமானுக்கு தான் என்ன செய்கிறோம் என்பதை விட தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் அதை ஒன்றுக்கு பத்தாக உள்வாங்கிக் கொள்வதும்தான் மிக பிடித்த விஷயங்கள்.

    ஒரு பத்து நிமிடம் இந்த மனிதரோடு ஒருவர் இருந்தால் போதும் நமது மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஏராளமான குப்பைகளை அவர் போட்டு விட்டு போய் விட்டதை அவர் போன பிறகே உணர முடியும்.

    'என்ன சார் நீங்க... உங்களுக்கும் நம்ம ராமச்சந்திரனுக்கும் ஏதாவது பிரச்சனையா சார்? நேத்து நீங்க இல்லாத நேரத்துல உங்களை பத்தி கண்டபடி பேசிட்டான்...' என்று ஆரம்பமாகும் பேச்சு ராமச்சந்திரனை நமக்குள் ஒரு குற்றவாளிப் பட்டியலில் இழுத்து நிறுத்திவிடும். அடுத்த பேச்சு அவர் பார்த்த ஒரு திரைப்படம் பக்கம் செல்லும். நேத்து ஒரு படம் வந்தது... தியேட்டர் மேனேஜர் எனக்கு மாமா முறை! அவர் பாட்டுக்கு டிக்கெட்டை போட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாரு. வேற வழியில்லாம படத்துக்கு போனேன். படம் ஒண்ணும் சரியில்லை. ஒரு பாடல் காட்சியை ஸ்விட்சர்லாந்துல எடுத்ததா பேப்பர்ல பார்த்தேன். அது நம்ம மூணாறு! ஸ்விட்சர்லாந்துன்னு புளுகி இருக்கான். படம் பாக்கிறவங்க அவ்வளவு பேரையும் கேனப்பயன்னு நினைச்சுட்டான் போல. இங்க எமலோகத்துக்கெல்லாம் போய்ட்டு வந்தவங்க இருக்கோம்ல...?' என்று கித்தாப்பாய் கேள்வி எழுப்பியபடியே விமர்சனம் செய்து முடிப்பார். நிஜத்தில் பிளாக்கில் டிக்கெட் எடுத்து விழுந்து விழுந்து ரசித்துவிட்டு வந்திருப்பார்! பேச்சு இத்தோடெல்லாம் முடியாது. அரசியல் பக்கமும் செல்லும். லோக்கல் கவுன்சிலர் ஒருவர் பெயரை சொல்லி 'ஒரு காலத்தில் என்கிட்ட அம்பது ரூபா கைமாத்தா வாங்குன பய இவன்... இன்னிக்கு ஒண்ணரை கோடில பங்களா வாங்கியிருக்கான். இவன் ஏரியாவுல ஒரு புறம்போக்கை விடலை. அவ்வளவையும் ஆட்டையப் போட்டுட்டான்... சுருட்றதுல ஒரு பங்கு மினிஸ்டர் வரை போகுது. ஆனா என்னப் பாத்தா மட்டும் கொஞ்சம் பயம், நாமதான் எதுன்னாலும் பட்டு பட்டுன்னு கேட்ருவோம்ல?'

    இப்படி அந்த நபர் வந்து நின்றால் பேசப்படும் விஷயங்களுக்கும் ஒரு வரையறை கிடையாது. அதனுள் இருக்கும் பொய்களுக்கும் ஒரு வரையறை கிடையாது. சில பொதுவான விஷயங்கள் நம்மை எதுவும் செய்யாது. ஆனால் நம்மை பற்றிய விஷயங்கள் சாக்கடைப் புழு போல நமக்குள்ளேயே நம்மை நெளிய வைத்துவிடும்.

    கேட்பதற்கு காதுகள் கிடைக்கின்றன என்கிற காரணத்தாலேயே இப்படி நம் மனதுக்குள் குப்பைகளை கொட்டுவதற்கு பலரும் தயாராக இருக்கிறார்கள். இந்த பேசுவது - அதை கேட்பது... இந்த இரண்டும் தான் மனித வாழ்வின் மகத்தான விஷயங்கள். ஆனால் இது மலிவான, விஷயமாக இருப்பதுதான் கொடுமை! ஆற்றலின் செயல்பாடு இது! இதன் காரணமாக மனம் என்பது தோன்றி மனதை உடையவர்கள் மனதர்கள் என்றாகி - பின் மனிதர்கள் என்றானது.

    உலகில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள்! அவைகளில் மனித இனம் மட்டும் உருவைப் பொருள் கொண்டு அழைக்கப்படாமல் உள்ளத்தை பொருள் கொண்டு அழைக்கப்படுவதன் பின்புலத்தில்தான் அதன் மகத்தான சிறப்பே ஒளிந்துள்ளது.

    ஆறாம் அறிவின் காரணமாக மனம் கொண்ட மனிதன் தான் உலகின் மேலான உயிரினம். அதனால்தான் இவனால் உருவத்தில் பெரிய யானையை கூட ஒரு அங்குசம் கொண்டு ஆட்டிப் படைக்க முடிகிறது.

    விண்ணில் ஏறி பறவைகளுக்கும் மேலாக பறக்க முடிகிறது. தண்ணீரில் மூழ்கி சுறாக்களுக்கு இணையாக நீந்த முடிகிறது. இவ்வளவு சிறப்புக்களோடும் இவனுக்கொரு சிறுமையும் இருக்கிறது. ஆம்...!

    தன்னையறிந்த காரணத்தாலேயே இவனுக்கு தான் ஒரு நாள் மரணமடையப் போகிறவன் என்பதும் தெரிந்திருக்கிறது. அப்படியே, தனது மரணத்தை சற்று முயன்றால் தள்ளி வேண்டுமானால் போடலாம், ஆனால் தவிர்க்க முடியாது என்பதும் இவனுக்கு தெரிந்திருப்பதுதான் விந்தை!

    இதுதான் மனிதக் குலத்தை மற்ற உயிரினங்களில் இருந்து மட்டுப்படுத்தியும் வைத்துவிட்டது. ஒரு புல் பூண்டாக பிறந்தாலும் ஒரு நாள் அவைகளுக்கு அழிவு உண்டு என்பதே உலக இயற்கை. ஆனால் இது அந்த புல் பூண்டுக்கு தெரியுமா என்றால் தெரிய வாய்ப்பில்லை என்பதே நிஜம். இதன் காரணமாக மரண பயம் என்பதே இல்லாதபடி அவ்வளவு உயிரினங்களும் திகழ்கின்றன என்பதுதான் இதன் அடிக்கருத்து, அது மட்டுமா? மற்ற எந்த ஒரு சிங்கத்துக்கும் தான் சிங்கம் என்பதோ, தான் பூ உலகில் வசிப்பதோ, தனக்கும் ஒரு நாள் முடிவு வரும் என்பதோ தெரியவே தெரியாது. நாம் என்ன தான் முயன்றாலும் தெரிவிக்கவும் முடியாது.

    மனிதன் நீங்கலாக மற்ற எல்லா உயிர்களும் உணர்வால் வாழ்பவை! உடல் இயக்கம் காரணமாக பசிப்பதால் இரை தேடுகிறது - காமம் ஏற்படுவதால் தன் இனத்தோடு கூடுகிறது. தூக்கம் வருவதால் தூங்குகிறது. உபாதை ஏற்படும் போது வருந்துகிறது.... இந்த செயல்பாடுகளை திரும்பத் திரும்ப செய்து கொள்ளும் ஒரு அறிவும் எச்சரிக்கை உணர்வும் மட்டுமே இவைகளுக்கு உண்டு.

    ஆனால் மனிதன் என்ன இப்படியா?

    அறிவைப் பெற்று ஆனால் இவன் அறியப் பெற்றவை களுக்கு ஒரு அளவு இருக்கிறதா? மண்ணில் இருந்தபடியே விண்ணையும் அளந்து நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்குமே சென்று வர முடிந்த அளவு பரந்து விரிந்தவனாக அல்லவா இருக்கிறான்!

    ஆனாலும்...

    ஆனாலும்... இவனுக்கு உயிரின் ரகசியம் எது என்று தெரியவில்லை. இறந்துவிடாது வாழும் வழிமுறை புரியவில்லை... எப்பொழுது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் ஒருவர் வாழ்வில் நிகழலாம் என்பது தெரிந்தவனாக இவன் இருப்பதால் இவனுக்குள்ளே ஒரு நெருக்கடியும் இருக்கிறது. அதுதான் அன்றன்றைக்கு இன்பங்களை எல்லாம் அனுபவித்து வாழ்தல் என்பது...! ஆனால் அனுபவித்து வாழ முடிகிறதா என்றால் அங்கேயும் பலவிதமான சிக்கல்கள்... இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற நெறிமுறைகள், பல நேரங்களில் ஒரு மனிதன் அனுபவிக்க எண்ணும் இன்பங்களுக்கு தடை விதிக்கிறது. எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கை ஒரு நாள் அதற்கான தண்டனைகளை தந்து நிற்கிறது.

    மொத்தத்தில் ஒரு அர்த்தமுள்ள இனிய வாழ்க்கை வாழ்வது என்பது லாட்டரிப் பரிசு போல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அமைகிறது.

    நன்றாக கவனிக்க வேண்டும். இனிய வாழ்க்கை என்பது அமைந்தால் மட்டுமே உண்டு. அமைத்துக் கொள்வதற்கோ போராட வேண்டியுள்ளது. ஒவ்வொரு நொடியும் போராட்டம் தான். உடம்பில் இருந்து உயிர் பிரியும் வரை இந்த போராட்டம் தொடர்வதுதான் கொடுமை.

    எவ்வளவுதான் போராடினாலும் சிலருக்கு அற்ப இன்பங்கள் கிட்டுவது கூட பெரும்பாடாக உள்ளது. பட்டம் பதவி பணம் என்று ராஜ வாழ்க்கை வாழுகின்றவர்களும் கூட அவர்கள் அனுபவிக்கின்ற இன்பங்கள் ஒரு நாள் அலுத்துப் போய் வேறு புதிய இன்பங்கள் ஏதாவது உள்ளதா என்று தேடத் தொடங்கி விடுகின்றனர்.

    மொத்தத்தில் மனித இனத்தில் ஒருவரிடம் கூட பூரண மனநிறைவு இல்லை; ஒரு ஏக்கம், ஒரு வருத்தம், ஒரு ஆயாசம், ஒரு அலுப்பு என்று தான் எல்லோருமே இருக்கிறார்கள். அறிய உதவிய அறிவால் வந்த வினையா இது?

    இந்த அறிவே இல்லாத நிலையில் ஒரு அற்ப புழுவும் பூச்சியும் கூட கவலைப்படாத ஜீவராசியாக இருந்திட அனைத்தும் அறிந்த மனித இனத்துக்கும் மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு? ஏன் இவன் மனம் மட்டும் ஒரு விளங்கிக் கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது? இதனுள் எதனால் கவலை என்னும் வலை விழுகிறது?

    மனதை தூய்மையாக ஆனந்த மயமாக வைத்துக் கொள்வது சாத்யமே இல்லாத ஒன்றா...? அறிவுக்கு அதை அளிப்பது என்பது இயலாத ஒரு விஷயமா...? அறிவே பகையா? அறியாமை தான் வரமா? அடுக்கடுக்காய் வினாக்கள்... மனமெனும் அந்த மர்ம தேசத்துக்குள் இந்த வினாக்களுடன் நுழைந்து விடை தேடிப் பார்ப்போம்.

    2

    இந்த தொடர் பற்றி சிந்திக்கும்போது எனக்குள் இரண்டு சித்தர் பெருமக்களின் எண்ணம் எழும்புகிறது. கோரக்கரும் பிரம்மமுனியும்தான் அவர்கள்...!

    மனித இனத்தில் மனத்தை அடக்கி ஆள முடிந்தவர்களை வேறுபடுத்திப் பார்த்து அவர்களை தவசிகள் அல்லது முனிவர்கள் என்போம். இப்படிப்பட்டவர்களிலும் பல்வேறு உட்பிரிவுகள் இருக்கிறது. இந்த முனிவர்களிலேயே விசேஷமான உயரங்களைத் தொட்டவர்களை ராஜரிஷி என்பார்கள். இவர்களுக்கு நடுவே புரிந்து கொள்ள சிரமமானவர்களாக காட்சி தருபவர்கள் தான் சித்தர்கள்!

    சித்தர்கள் என்ற மாத்திரத்தில் பதினெட்டு சித்தர்கள் என்று ஒரு எண்ணிக்கையும் ஞாபகத்திற்கு வரும். அது என்ன பதினெட்டு என்று ஒரு கணக்கு... இந்த உலகில் மொத்தமே பதினெட்டு சித்தர்கள் மட்டும்தானா? அதற்கு மேல் சித்தர்களே இல்லையா என்றும் கேள்விகள் எழலாம்.

    உண்மை அதுவல்ல! பல நூறு சித்தர்கள் இந்த உலகில் உள்ளனர். 18 என்பது ஒரு குறியீடு!

    இந்த 18க்குள் அடங்கிவிட்ட சித்தர்களை நாம் கசடறப் புரிந்து கொண்டாலே போதும். நம்மாலும் சித்தம் என்னும் கோட்டைக்குள் ஒரு மாணவனாய் நுழைய முடியும் என்பதுதான் இதன் முடிவான கருத்து. ஏனென்றால் இந்த 18 சித்தர்களுமே 18 விதமாய் இருப்பதுதான் காரணம்.

    ஒரு சித்தர் அக்கடாவென்று தவம் செய்தவர்! இன்னொரு வரோ யாகம், ஹோமம் என்று செய்து பலவிதமான சக்திகளை அடையப் போராடியவர்...

    ஒருவர் கடவுளே நேரில் வந்து வரம் தருகிறேன் என்று சொன்னபோதும் வாங்கிக் கொள்ள மறுத்தவர்.

    ஒருவர் மூட்டை மூட்டையாக தங்கம் கிடைத்தும் அதை உயிர்க்கொல்லி என்று கூறி அதை கையில் கூட தொடாதவர்!

    ஒருவர் தானறிந்த மருத்துவ ரகசியங்களை மக்களுக்குப் பயன்படுத்தி தீராத நோயையும் தீர்த்தவர்.

    ஒருவர் மனிதர்கள் முகத்திலேயே விழிக்கக்கூடாது என்று காட்டுக்குள்ளே தனித்து வாழ்ந்தவர்!

    ஒருவர் ஆடுமாடுகளின் வருத்தத்தைப் பார்த்து அவைகளின் கண்ணீரைத் துடைக்க கூடுவிட்டு கூடு பாய்ந்தவர்!

    ஒருவர் அழகான பெண்ணிடம் மயங்கி தன் தவத்தையே மறந்தவர்! இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்! இந்த விதங்களில் தான் நாம் சிந்திப்பதற்கு விஷயங்களும் உள்ளன.

    இவர்களுக்கும் முனிவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. முனிவர்கள் சில நியமங்களை கட்டாயம் கடைபிடித்தவர்கள் ஆவார்கள். காஷாயம் தரிப்பது, திருநீறு அணிவது, ருத்ராட்சம் அணிவது, இறைவழிபாடு புரிவது, சிவம், விஷ்ணு, பிரம்மதேவன் என்று குறிப்பிட்ட இறைவர்களை எண்ணி அவர்களுக்கான நாமம் கூறி தவம் செய்வது என்பதெல்லாம் முனிவர்கள் செயல்.

    சித்தர்களுக்கு இப்படி ஒரு வழிமுறை கட்டாயமில்லை. இவர்கள் தங்களுக்குள் தங்களைத் தேடி நான் யார்? என்னும் கேள்விக்கு விடை கண்டவர்கள். சித்தம் தெளிவு பெற்றதால் சித்தர்கள் எனப்பட்டார்கள். சித்தத் தெளிவு பெற உடம்பும் உதவ வேண்டும் என்று ஒரு சித்தர் கூறினால் இன்னொரு சித்தர் அதை மறுத்து உடம்பு எக்கேடு கெட்டால் என்ன... எண்ணத்தில்தான் எல்லாம் உள்ளது என்றார்! 'காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா...!' என்று பாடினார்.

    இப்படிப்பட்ட சித்தர்கள் வரிசையில் வந்தவர்கள்தான் கோரக்கரும் பிரம்ம முனியும்...!

    இவர்களுக்கு இந்த உலகம் பிடிக்காமல் போய் விட்டது... காரணம் என்ன தெரியுமா? ஒரு நல்லவன் இருந்தால் ஒன்பது கெட்டவன் இந்த பூமியில்

    Enjoying the preview?
    Page 1 of 1