Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naaga Panchami
Naaga Panchami
Naaga Panchami
Ebook114 pages1 hour

Naaga Panchami

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703006
Naaga Panchami

Read more from Indira Soundarajan

Related to Naaga Panchami

Related ebooks

Related categories

Reviews for Naaga Panchami

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naaga Panchami - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    நாக பஞ்சமி

    Naga Panchami

    Author :

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    ***

    1

    திதிகளிலேயே பஞ்சமி திதி விசேஷமானது.... ஒவ்வொரு நாட்களும் 'கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம்' என்கிற ஐந்து அங்கங்களால் ஆனதுதான். இதில் அமாவாசைக்கு ஐந்தாவது நாள் வரும் திதி தான் பஞ்சமி திதியாகும். அதே போல பெளர்ணமிக்கு ஐந்தாவது நாள் வரும் திதியும் பஞ்சமி திதியாகும். இதில் அமாவாசையை அடுத்து வரும் திதியானது வளர்பிறையை அடிப்படையாகக் கொண்ட சுக்ல பட்ச திதியாகும். பெளர்ணமிக்குப் பிறகு வரும் திதியானது தேய்பிறையை அடிப்படையாகக் கொண்ட திதி கிருஷ்ணபட்ச திதியாகும்.

    சரி... திதி என்றால் என்ன?

    சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரமே திதி எனப்படுகிறது. இது ஒவ்வொரு நாளும் கூட்டிக் குறைவதால் அதற்கேற்ப பிரதமை திதி, துவிதியை திதி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஐந்தாம் நாள் வரும் பஞ்சமி திதிக்குச் சில சிறப்புகள் உள்ளன.

    குறிப்பாக ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியைத்தான் நாகபஞ்சமி திதி என்கின்றனர். இன்றைய தினத்துக்கான சக்திகள் அலாதியானது!'

    நெடிய அந்த தார்ச்சாலையின் இரு புறங்களிலும் பிசாசுத்தலைபோல புளிய மரங்கள்!

    மூன்று மாதத்திற்கு முன்னால் ஒரு வாரத்துக்கு அடை மழையானது விடாமல் ஒரு அடி அடித்திருந்தது.

    அதன்பின் கார்த்திகை, மார்கழி என்கிற அனல் தணிந்த காலக்கட்டங்கள், இதில் அந்த புளிய மரங்கள் நன்கு ஊட்டம் கண்டு விட்டன.

    அதன் எதிரொலி தான் சடைசடையாகக் காய்கள். இளம்பச்சையில் இலைகளும் துளியும் வெளிச்சம் தரையில் படாதபடிக்குப் பந்தல் போல் படர்ந்திருந்தன. பார்க்கவே ரம்மியமாக இருந்தது. சூரியக்கதிர்களால் கூட அந்த மரங்களுக்குள் குடைந்து கொண்டு உள்நுழைய முடியவில்லை.

    அந்த மரத்தின் உடம்பில் திண்டு திண்டாய் முடிச்சு விழுந்தது போல கண்டுகள். பல இடங்களில் தலையை உள் நுழைக்கலாம். அப்படி துவாரங்கள்! மரக்கிளைகளில் எல்லா ஜாதி பறவைகளும் தங்கள் கூட்டினைக் கட்டியிருந்தன.

    பட்சிகளைப் பொறுத்தவரை அந்த புளியமரம் மிகப் பாதுகாப்பான ஒரு மரமாகும். ஏன் என்றால், ஒரு வேட்டைக்காரன் கூட அந்தப் பக்கம் வரமாட்டான். வந்தாலும் குறிப்பிட்ட அந்தப் புளிய மரத்தின் முன்னால் துப்பாக்கியைக் கீழே போட்டு விடுவான்.

    இந்த நாட்டில் மரங்களைத் தெய்வங்களாகக் கருதி வழிபட்டு வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் இந்தப் புளிய மரத்தைத் தெய்வமாக அல்ல... ஒரு தெய்வம் வாழ்ந்திடும் கோயிலாகவே எல்லோரும் நினைப்பது தான் ஆச்சரியம். உச்சிநேரம் ஆகாயத்திற்கு வரும் சூரியனின் கதிர்களால்கூட வெளிச்சப்புள்ளிகளை உருட்டி விளையாட முடியவில்லை. மோர்ப் பானையின் உள்பாகம் போல படு இதமான நிழல்!

    அந்தச் சாலை வரிசையில் உள்ள முன்னூறு வருஷத்து புளிய மரம் அது. அடித்தண்டில் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டெல்லாம் அதற்கு வைத்திருந்தார்கள்.

    பாணாமுனி வாசம் செய்வதாகக் கூறப்படும் அந்தப் புளிய மரத்தைத் தாண்டும் போது மட்டும் தார்ச்சாலை வாகன ஓட்டிகள் கொஞ்சம் போல தேங்கி நின்று உட்கார்ந்த நிலையில் ஒரு அரைக்கும்பிடு போட்டு விட்டுத் தான் போவார்கள். பலர் ஒரு ரூபாய், இரு ரூபாய் என்று நாணயங்களை மரத்தை நோக்கி வீசி எறிந்து விட்டுச் செல்வார்கள்.

    அப்படிப் பறந்து வந்து விழும் காசுகளை எல்லாம் பொறுக்கித் தன் துணிப்பையில் போட்டுக்கொள்வது தான் அங்குள்ள முத்துப்பேச்சி என்கிற பெண்ணின் வேலை!

    ஐந்தாறு நாள் அழுக்கோடு கூடிய பாவாடை தாவணி, அடக்கி ஒடுக்கி விளக்கெண்ணெய் போட்டு வாரிய தலைப்பின்னல். நெற்றியில் அந்தப் பாணாமுனிப் பிரசாத விபூதி, குங்குமம் என்று பார்க்க ஒரு வெகுளித்தனமான பதினெட்டு வயது கிராமத்துப் பெண்ணாகத் தெரிந்த முத்துப்பேச்சி பக்கத்து மரங்களின் புளியங்காய்களைத் தன் தாவணி முகப்பில் போட்டு மூடிக் கொண்டிருந்தாள்.

    அவ்வப்போது அதில் ஒன்றை எடுத்து நுனி நாக்கில் சீண்டி பின் உச்சி மண்டை வரை அதன் புளிப்புச் சிலிர்ப்பு ஏறிட, உடம்பைச் சிலிர்த்து விட்டுக் கொண்டு அமர்ந்திருப்பது தான் அவளது வாடிக்கை.

    நடுநடுவே 'ணணங்... ணணங்...' சப்தமுடன் ஒரு ரூபாய் நாணயங்கள் உருண்டு அவள் காலடிக்கே வரும். பொறுக்கி எடுத்துக் கொள்வாள்.

    அவள் அதைப் பொறுக்கிப் பொறுக்கி துணிப்பையில் போட்டுக் கொள்வதைப் பார்த்து பெருமூச்சு விடும் ஒருவனும் இருக்கிறான். ராஜமாணிக்கம் என்கிற அவன் காலை பத்து மணிக்கெல்லாம் தனது செம்மறி ஆட்டுக் கூட்டத்தோடு 'பிர்ர் பிர்ர்..தாதா...' என்கிற குரல் ஒலியோடு சவத்தூரில் இருந்து வந்து விடுவான்.

    பாம்பு நெளிந்த மாதிரி ஒரு மண்சாலை. அதன் மேல் புழுதி பறக்க அவன் வரும்போது தான் அருப்புக்கோட்டையில் இருந்து சவத்தூருக்கான தபால் பையைக்கொண்டு வரும் மதுரை பஸ்ஸும் வரும்.

    சரியான டங்கர் டப்பா வண்டி அது!

    அதன் சப்தம் கேட்டு செம்மறி ஆடுகள் மிரண்டு நாலா புறமும் ஓட, அவைகளை ஒன்றுபடுத்தித் திரும்பச் சேர்ப்பதற்குள் அவனுக்கு நாக்கு தள்ளி விடும்.

    அப்போதெல்லாம் முனிப்பா... இந்த பஸ்ஸைக் கவுத்தி கால் காசுக்குப் பெறாதபடி இதை ஆக்கமாட்டியா? அப்படி நீ செய்யும்போது, இந்த டிரைவர்ப் பய கைகால் அந்து போய் உன் மரத்தடிக்கு வந்து பிச்சை எடுக்கணும். அதை நான் பார்க்கணும். அப்பத்தான் இவன் ரோதனைல இருந்து என் ஆடுங்க தப்பிக்கும்... என்று முணுமுணுப்பான் ராஜமாணிக்கம்!

    அவன் முணுமுணுக்கும்போதே காது சவ்வைக் கிழிக்கும் ஏர்ஹாரனை ஒரு அழுத்து அழுத்தி, எஹேய்... எலேய் ஆட்டுக் கோட்டிப்பயலே.. என்று டிரைவரின் கத்து வரும். கத்தலா அது. அது ஒரு வித உற்சாகம். ஆடுகளும் அரண்டு போய் 'பாபா'. என்று திரும்பவும் நாலாபுறமும் பிரிந்து ஓடும்.

    அப்பொழுது அந்த ஆடுகளை அடக்கி வந்து கட்டுவதில் முத்துப்பேச்சியும் அவனுக்கு ஒத்தாசை செய்வாள். பஸ் பிரயாணிகள் வீசி எறியும் காசுகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்வது கூட பிறகு தான்.

    ராஜமாணிக்கமும் பதிலுக்கு ஒரு ஸ்நேகப்பார்வை பார்ப்பான்.

    "ஏன்ல... தெனம் இந்தக் காரு வரும்போதே உன் ஆடுங்களோட வரே?

    Enjoying the preview?
    Page 1 of 1