Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jeeva En Jeeva
Jeeva En Jeeva
Jeeva En Jeeva
Ebook100 pages51 minutes

Jeeva En Jeeva

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703294
Jeeva En Jeeva

Read more from Indira Soundarajan

Related to Jeeva En Jeeva

Related ebooks

Reviews for Jeeva En Jeeva

Rating: 3 out of 5 stars
3/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jeeva En Jeeva - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    ஜீவா என் ஜீவா

    Jeeva En Jeeva

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    மனிதன் இறப்பதைப் போல் மீண்டும் பிறப்பதும் கர்ம விதிப்படி தவிர்க்க முடியாத ஒன்று! வாழும் நாளில் அவனுள் ஏற்படும் தாக்கங்களில் இருந்து அவன் விடுபட்டுவிட்டதாக நினைப்பது கற்பனை. அவனையும் அறியாமல் அவனது மூளைச் செல்களில் அவை பதிந்துவிடுகின்றன. அந்த செல்கள் உடல் இறந்தாலும் ஆன்மாவோடு எண்ண அலைகளாகச் சேர்ந்தே அலைகின்றன. ஆன்மா எந்த கருப்பையில் தங்குகிறதோ அங்கு தங்கி உரிய வேளையில் நினைக்கப்படுகிறது.

    ஒரு உபநிஷதக் கருத்து

    உற்சாகமாகத் தென்பட்டாள் உமா.

    சல்வார் கம்மீசில் ஒரு தேவதையின் சொரூபம் காட்டியபடி சூட்கேஸில் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்!

    டூர் எத்தனை நாளைக்கு? ஒரு ஆடையை மடித்துத் தந்தபடி கேள்வியோடு உமாவை ஏறிட்டாள் அவள் அம்மா விசாலம்.

    "ஒரு வாரம்மா. காலேஜ்ல பிரமாதமா அரேன்ஞ் பண்ணியிருக்காங்க. கொடைக்கானல், ஊட்டின்னு வழக்கமான இடங்களுக்கே போகாம இந்த தடவை எஜுகேடிவா திட்டம் போட்டுருக்கோம்.

    ஹிஸ்டரி ஸ்டூடண்ட்ஸ் மகாபலிபுரம், பேளூர், சித்தன்னவாசல்னு சுத்துவாங்க. பாடனி ஸ்டூடண்ட்ஸ் கொல்லிமலை, ஜவ்வாதுமலைன்னு சுத்தப் போறாங்க. அவங்கவங்க படிப்புக்கு ஏற்ற மாதிரியான டூர்.

    இந்த டூர்ல இன்னொரு விசேஷம் என்னன்னா...?"

    உமா கேள்வியோடு ஒரு சுடிதாரை சுருட்டிய சமயம், அறைக்குள் நுழைந்திருந்தான் அவினாஷ்.

    என்ன விசேஷம்...? எல்லாரும் பஸ், ரயில்னு ஏறிப் போகாம நடந்தே பாதசாரிகளா ஊர் ஊரா சுத்தப் போறீங்களா?

    கிண்டலாகக் கேட்டான்.

    சும்மா இரு அண்ணே... எவ்வளவு பிளான் பண்ணி திட்டம் போட்டுருக்கோம் தெரியுமா? நீ சொன்ன மாதிரி நடந்தே ஒரு ஊருக்குப் போகற திட்டமும் இருக்கு...

    நிஜமாவா, எந்த ஊரும்மா அது? - ஆவலாகக் கேட்டபடி பேண்ட்லிருந்து லுங்கிக்கு மாறத் தொடங்கினான் அவினாஷ்.

    வேலமங்கலம்! பட்டென்று பதில் வந்தது உமாவிடமிருந்து. உடனேயே அவினாஷ் முகம் வெளிறியது.

    வேலமங்கலத்துக்கா? நறுக்கலாகக் கேட்டான்.

    ஆமாண்ணா... அங்க இருக்கற செண்பகதேவி கோயில் ரொம்ப பூர்வீகமான கோயிலாமே கேட்டுக் கொண்டே அவினாஷிடம் ஊன்றினாள் உமா. அவன் முகத்தில் சிலம்பாடத் தொடங்கியிருந்தது.

    ஏண்ணே.... அந்த ஊர் பேர் சொன்ன உடனே ஒரு மாதிரியாயிட்டே...? தூக்கலாகக் கேட்டாள்.

    "ஒண்ணுமில்லம்மா... வேலமங்கலம் செண்பகதேவி கோயில் இப்ப ரொம்ப பழுதடைஞ்சு போச்சு. அங்க கள்ளச் சாராயம், விபசாரமெல்லாம் நடக்கறதா எங்க பத்திரிகைக்கே நிறைய தகவல் வந்ததுண்டு.

    அதோட முரட்டு மலைப்பாதையில அந்த கோயிலுக்குப் போகணும். பாதையெல்லாம் தூர்ந்து போயிருப்பதனால் யாருமே இப்ப அங்க போறதில்லை.

    குறிப்பாக பெண்கள் அந்தப் பக்கம் போனா உயிரோட திரும்பறதேயில்லைன்னு சொல்றாங்க

    ஆதாரபூர்வமா எவ்வளவோ தகவல்கள். அதான் யோசிக்கிறேன்..."

    ஒரு பிரபல பத்திரிகையின் துணை ஆசிரியனாகவும் உலக விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்களில் ஒருவனாகவும் உள்ள அவினாஷின் கருத்தை உமாவால் சாதாரணமானதாகக் கருத முடியவில்லை. அவளுக்குள்ளும் கவலை வந்து பந்தல் போட்டது. உடனேயே அது பிரிந்தும் போனது.

    அண்ணே... நான் என்ன தனியாவா போறேன். என் கூட பத்துப் பதினஞ்சு பேர் வரப் போறாங்க. அதில் பாதிக்கு மேல பாய்ஸ்... சுதாரித்தாள் உமா, உடனேயே விசாலம் சிலிர்ப்பிக் கொண்டு இடைமறித்தாள்.

    அப்படி என்னடி அந்த ஊருக்குப் போய்ச் சாதிக்கப் போறீங்க? டூராம் டூர். எங்கேயும் நான் அனுப்ப மாட்டேன். இந்தமாதிரி ஆபத்தான இடத்துக்கு ஒரு கன்னிப் பொண்ணு போக வேண்டிய அவசியமில்ல... உன் மாமன் மகன் ராகவ் டெல்லியில இருந்து வரப்போறான். உன் முறைப்பையன் அவன். அவன் கூட சேர்ந்து நீ எங்க வேணும்னா போய் வா. இப்படிக் கஷ்டமான டூரெல்லாம் வேண்டாம்.

    உமா உடனேயே அதைக் கேட்டு முகத்தைக் கடூரமாக்கிக் கொண்டாள்.

    அதுவரை படு உற்சாகமாக ஊருக்குப் போகும் சந்தோஷத்தோடு மனசுக்குள் ஜ்வலித்த மத்தாப்பு, மழை பெய்து நமுத்த மாதிரி சுணங்கிப் போனது.

    "அண்ணே... ஏண்ணே அம்மாவை வெச்சுகிட்டு இப்படி எதையாவது சொல்றே. இப்ப பாத்தியா... அம்மா விட்டத்துக்கு ஏறிட்டாங்க.... ? வேலமங்கலம் டூர் எங்க வரையில ஒரு அட்வென்சர் ட்ரிப். பாதுகாப்பா போய்ட்டு திரும்பிடுவோம். நீங்க யாரும் கவலைப்படத் தேவையில்லை.

    நாங்க ஒண்ணும் பாப்பா இல்லை." உமா தீர்க்கமாகப் பேசியபடி சூட்கேஸை மூடினாள். விசாலம் கவலையோடு அவினாஷைப் பார்த்தாள்.

    அவினாஷ் எதுவும் பேசாமல் தாடையை தடவினான். பின் ஒரு முடிவோடு வாய் திறந்தான்.

    "ஓகே. உமா... உன் வேகத்தை நான் தடை செய்ய விரும்பலை. பட் பீ கேர்ஃபுல். பகல்ல பத்து மணிக்கு மேலதான் நீங்க அந்த கோயில் இருக்கற மலை மேல ஏறணும். சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் திரும்பிடணும். குரூப்பாதான் எங்கேயும் போகணும். யாராவது வம்புக்கு வந்தா பதிலுக்கு முறைச்சுக்காம உடனேயே திரும்பிடணும்.

    வேலமங்கலம் கிராமம் நல்ல வளமான கிராமம். அந்த கிராமத்துல எங்க பத்திரிகையோட வட்டார நிருபர் ஒருவர் இருக்கார். ஏதாவது அவசியம்னா அவர் உதவியைக்கூட நீங்க பயன்படுத்திக்கலாம்.

    அவர் பேர் கணேசன். இதோ அவரோட அட்ரஸ்."

    கட்டளையாகப் பேசியபடி கணேசனின் முகவரியை ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1