Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu En Kanmani
Kanavu En Kanmani
Kanavu En Kanmani
Ebook115 pages52 minutes

Kanavu En Kanmani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580100705004
Kanavu En Kanmani

Read more from Indira Soundarajan

Related to Kanavu En Kanmani

Related ebooks

Reviews for Kanavu En Kanmani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu En Kanmani - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    கனவு என் கண்மணி

    Kanavu En Kanmani

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ‘ஒருவரை ஒருவர்

    தின்று தீர்த்தோம்

    ஆயினும் இருவரும்

    மீதமும் இருந்தோம்

    மூன்றாவ தொன்றையும்

    சேர்ந்து பிடித்தோம்

    காதலே அழியமுடியாத

    விசித்திரம் நீ!’

    அனுஷா பள்ளிக்கு புறப்படத் தயாராகி விட்டாள். ஐந்து வயதில் ஒரு பூச்செடிக்கு கால் கை முளைத்தது போல் இருந்தாள். அவளுக்கு தனக்குத் தெரிந்த விதத்தில் தலை வாரி விட்டு முகத்துக்கு பௌடர் போட்டு, சிகப்புச் சாந்து பொட்டு இட்டு, பின் யூனிஃபார் மெல்லாம் அணிவித்து இரண்டடி பின்னால் நின்று அழகு பார்த்தான் சங்கரநாராயணன்.

    போதும்ப்பா... டெய்லிதானே என்னைப்பார்க்கறே. என்று செல்லமாக சிணுங்கினாள் அவளும்.

    பொட்டு நேரா இருக்கான்னு பார்த்தேம்மா. அப்புறம் தலைவகிடும் நேரா இருக்கான்னு பார்த்தேன்...

    நீ எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து தலைசீவினாலும் உனக்கு கோணலாதான் வரும்... என்று ஒரு மாதிரி கையை ஆட்டி அவள் சொன்னபோது அவனுக்கு அது மிக பிடித்தமாக இருந்தது.

    ஏம்ப்பா அப்படி?

    நீ ஆம்பள. அதனால அப்படித்தான் வருமாம் - எங்க கிளாஸ் மிஸ் சொன்னாங்க...

    அடேங்கப்பா! ஆமா நீ உன் மிஸ்கிட்ட நான் தலை சீவிவிடறேன்னுல்லாம் சொல்வியா என்ன?

    ஆமாம். ஏன் உன் தலை வகிடு மட்டும் கோணலா இருக்கு. பொட்டும் நெத்தியில எங்கியோ இருக்குன்னு அவங்க கேட்கும்போது நான் சொல்லாம என்ன செய்யறதாம்?

    அனுஷா திரும்பவும் ஒரு தினுசாக கையை ஆட்டி கேட்கவும், அவனுக்கு அதை ரசிக்க வேண்டும் போலவும் இருந்தது. அதே சமயம் கண்ணிரண்டும் கலங்கவும் செய்தன. வெளியே ஆட்டோகாரன் வந்து நின்று சப்தமும் கொடுத்தான்.

    அப்பா டாட்டா. என்று முதுகில் புத்தகமூட்டையை ஏற்றிக் கொண்டு ஓடினாள் அனுஷா.

    ஆட்டோவில் ஏற்கெனவே ஐந்தாறு பிள்ளைகள்.

    அதனுள் முண்டிக் கொண்டு உள் புகுந்தாள்.

    அந்தக் காட்சியே சங்கரநாராயணனை சங்கடப்படுத்தியது.

    நாளை முதல் நாமே அனுஷாவை பள்ளிக்கு சென்று விட்டுவிட்டு வரவேண்டும் என்கிற ஒரு எண்ணம் மிக வேகமாக உள்ளே எழும்பியது.

    பார்த்துப்பா... ஸ்லோவா போ. அவ்வளவு பேரும் குழந்தைங்க... என்று அவன் சொல்லச்சொல்ல,ஆட்டோ ஓடியே போனது.

    பார்த்துக் கொண்டே வந்தாள் ராஜேஸ்வரி!

    அவள்தான் சங்கரநாராயணனின் சமையல்காரி.

    காலை ஒன்பது மணிக்கு வந்து சமைத்து வைத்து விட்டு வீட்டையும் கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்திவிட்டு ஒரு பன்னிரண்டு மணியைப் போல பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விடுவாள்.ஆபீஸுக்கு செல்லும் சங்கரநாராயணன் ஒரு மணியைப் போல வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்கு திரும்பவும் ஆபீஸுக்கு புறப்பட்டு செல்வான்.

    ஆறு மணிக்கு அவன் வரும்போது அனுஷா வீட்டு வாசலில் உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்தபடி இருப்பாள். அவனைப் பார்க்கவும், ஓடிவந்து கழுத்தை வளைத்து கட்டிக் கொள்வாள்.

    இதை அன்றாடம் பார்க்கும் அக்கம் பக்கம் வீட்டவர்களுக்கெல்லாம் ஒரு பெருமூச்சு தினமுமே தோன்றி அடங்கும். ராஜேஸ்வரிக்கோ அந்த பெருமூச்சு ஒரு புயலாகவே வீசும்.

    ஏன் தம்பி எதுக்கு இந்த அடம்? உங்களுக்கென்ன வயசா ஆயிடிச்சு... ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்கிட்டா அனுவுக்கும் ஒரு நல்ல அம்மா கிடைச்ச மாதிரி இருக்கும், என் சமையல்ல இருந்தும் விடுதலை கிடைக்கும் இல்ல? என்று பல முறை கேட்டுவிட்டாள்.

    அன்றும் அந்த கேள்வியைக் கண்களில் சுமந்த படியே அவனைப் பார்த்தாள். அவனுக்கா தெரியாது?

    அவளது பார்வையைத் தவிர்த்தவனாக வீட்டினுள் சென்றான். ஆபீஸ் புறப்படத் தயாரானான்.

    ஆண்களின் அன்றாட அவஸ்தையான முகச் சவரத்தை சுயமாக செய்து கொள்ளத் தொடங்கினான். அவளும் ஃபிரிஜ்ஜைத் திறந்து காய்களை எடுத்து கழுவி நறுக்கத் தொடங்கினாள். நடுநடுவே அவனைப் பார்த்தாள். அப்படியே சுவரில் படமாய் தொங்கிக் கொண்டிருந்த நர்மதாவையும் பார்த்தாள். நர்மதாவின் படத்துக்கு ஒரு பிளாஸ்டிக் பூ மாலை ஒன்று போடப்பட்டிருந்தது. ஒரு சிறு மின்விளக்கு ஒன்றும் அணையாதபடி எரிந்து கொண்டிருந்தது. நெடுநாட்களாகவே ராஜேஸ்வரிக்கு நர்மதா எப்படிக் காலமானாள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை.

    அன்று கேட்டுவிடுவது என்கிற முடிவுக்கு வந்து கேட்கவும் செய்தாள்.

    அவனும் ஷேவ் செய்து முடித்திருந்தான்.

    டவலால் முகம் துடைத்தபடியே ராஜேஸ்வரி எதிரில் டைனிங் டேபிள் நாற்காலியை சற்று இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவன் பெரிதாக ஏதோ சொல்லப் போகிறான் என்பது போல அவளிடமும் ஒரு ஆர்வத் துடிப்பு.

    மஞ்சக்காமாலை வந்துச்சு ராஜேஸ்வரிக்கா. நர்மதாவை காப்பாத்த முடியல. அப்ப அனுஷாவுக்கு ரெண்டு வயசு என்று சிம்பிளாக கூறி முடித்தான்.

    காமாலைங்கறது கொடுமையான வியாதிதான். ஆனா, அதுல இருந்து காப்பாத்த இன்னிக்கு எவ்வளவோ வழிகள் இருக்கே தம்பி...

    முடியணும்னு விதி இருந்தா எல்லா வழியும் அடைஞ்சு போயிடும்க்கா. நர்மதா விஷயத்துலயும் அப்படிதான் ஆச்சு. காமாலைக்கு போட்ட தடுப்பூசியே மாறிப் போச்சு. எங்க போய் சொல்லி அழ. அழுதாலும் போனவ வரவா போறா...?

    அடக் கொடுமையே... போகட்டும். உங்க அப்பா அம்மா, அவங்க அப்பா அம்மான்னு யாருமே இல்லையா. எதுக்கு இப்படித் தனியா குழந்தையோட கஷ்டப்பட்டுக்கிட்டு...?

    நான் காதல் கல்யாணம் செய்துகிட்டவன்க்கா. பெரியவங்கள எதுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்...

    நினைச்சேன். இப்படிதான் இருக்கணும்னு நினைச்சேன். போவட்டும். அனுக்குட்டியைப் பார்த்தா தான் எப்பேர்ப்பட்ட கொரங்கு மனசு உள்ளவங்களுக்கும் மனசு மாறிடுமே... உங்க அப்பா அம்மாவுக்கு தானா மாறலை?

    ராஜேஸ்வரியின் கேள்விக்கு ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக வைத்துவிட்டு, "இதுவரை மாறலை. இனி தெரியாது. சரி... நான் குளிச்சிட்டு கிளம்பறேன். நீங்க சமையலை முடிச்சிட்டு கிளம்புங்க. போற வழில மறக்காம அனுவுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1