Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannil Manithargal
Mannil Manithargal
Mannil Manithargal
Ebook109 pages52 minutes

Mannil Manithargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100703371
Mannil Manithargal

Read more from Indira Soundarajan

Related to Mannil Manithargal

Related ebooks

Reviews for Mannil Manithargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannil Manithargal - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    மண்ணில் மனிதர்கள்

    Mannil Manithargal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அகிலா ஆபீஸுக்கு கிளம்பி விட்டாள். அத்தைப் பாட்டி மடியோடு செய்து கொடுத்த ரவை உப்புமாவை கேரியரில் அடக்கிக்கொண்டு, வயர் கூடையில் அதையும் கல்கி, கலைமகள், குங்குமம் என்று சஞ்சிகைகளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு அகிலா ஆபீஸுக்கு கிளம்புவது என்பது இன்று நேற்று நடக்கும் விஷயமில்லை.

    அது ஒரு பத்து வருடத்து வரலாறு. கல்லூரியிலேயே முதலாக வந்து பட்டம் வாங்கிக் கொண்டு வெளியே வந்த கையோடு வேலைக்குப் போக ஆரம்பித்தவள்தான். இன்று வரை அந்தப் பயணம் தடை இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

    ஒரு பிரபலமான தனியார் நிறுவனம் ஆரம்பத்தில் முந்நூறு ரூபாய் சம்பளத்துக்கு அவளை வேலைக்கு எடுத்துக் கொண்டது. இன்று ஏறத்தாழ மூவாயிரம் சம்பளம்!

    எதுக்குடா சிவராமா இவளை வேலைக்கு அனுப்பிண்டு? கல்யாணம் பண்ணிண்டு இன்னொருத்தன் வீட்டுக்குப் போய் தாயா மாறி குழந்தைகளை வளர்க்கற பொறுப்பு அவளுக்கு இருக்குடா. முந்நூறுக்கும் நானூறுக்கும் ஒரு பொம்மனாட்டி, குப்பை கொட்டப் போறது குடும்பத்துக்கு நல்லதில்லடா... அன்றே அத்தைப் பாட்டி தடுத்துப் பார்த்தாள்.

    அத்தே.... நோக்கு உலகம் தெரியாது! உன் காலம் வேற, இவ காலம் வேற. இன்றைய கல்யாண மார்க்கெட்ல ஒரு பொண்ணு கறுப்பா செவப்பாங்கறதுகூட இரண்டாம் பட்சம். அவ கிராஜுவேட்டா, வேலைக்குப் போறாளாங்கறது தான் பிரதான விஷயம்.

    அவரது பதிலால் அத்தைப் பாட்டியிடம் அசூயை. என்னடா கொடுமை இது. வேலைக்குப் போயிட்டா அப்புறம் பிள்ளை குட்டி பெத்துக்கறதும், அதைப் பராமரிக்கறதும் எப்படிடா?

    அதுக்குத்தான் உங்களை மாதிரி கிழடுகள் இருக்கேளே?

    என்ன இருந்தாலும் தாய்ப்பாசம் போல வருமாடா?

    "வரலேன்னா போயிட்டு போறது. மொதல்ல கல்யாணம் நடக்கணும். அவ ஒருத்தனுக்கு மொதல்ல பொண்டாட்டின்னு ஆனாதான் தாயாக முடியும் அதுக்கே வக்கில்லை. இதுல அடுத்தவா பாசம், தாய்ப்பாசம்கற விஷயங்கள்லாம் அதுக்கப்புறம்தான் தீர்மானமாகணும்.

    நாம் என்ன டாட்டாவா, பிர்லாவா? இந்த இந்திய தேசத்தோட மோசமான நடுத்தட்டு மனுஷா நாம அத்தை. நாம எப்படி வாழணும்கறதை நாம தீர்மானிக்க முடியாது. சூழ்நிலைதான் அதைத் தீர்மானிக்கறது. அதுக்கு தக்க மாதிரி நாம நடந்துக்கலைன்னா நாறிடுவோம் நாறி..."

    அன்றைக்கு சிவராமன் அப்படிப் பேசின பிறகு இன்றுவரை அத்தைப் பாட்டி வாயே திறக்கவில்லை. வயதான காலத்தில் கணவன் குழந்தைகள் என்கிற பந்தங்களுக்கு இடமேயில்லாத படி, பட்டமரமாகி விட்டவளுக்கு மருமகன் சிவராமன்தான் எல்லாம். சிவராமனுக்கும் அத்தைப்பாட்டி அபிதகுஜம்தான் அப்பா அம்மா என்று சர்வமும். மனைவி மங்களத்தை அகிலாவுக்கு நான்கு வயசாகும் போதே மஞ்சள் காமாலையின் பொருட்டு எமனுக்குக் கொடுத்தாகிவிட்டது.

    சர்க்காரில் கலெக்டர் அலுவலகத்தில் டெபுடி தாசில்தார் அளவுக்கு சிவராமனுக்கு பதவியும் உயர்ந்து விட்டது.

    ஆச்சு... இன்னும் ஆறு மாசத்தில் தாசில்தார் ரிடையர் ஆகப் போகிறார். அவருக்குப் பிறகு சிவராமன்தான் தாசில்தார். ஆபீஸ் ஜீப், டவ்வாலி என்று அமர்க்களம் பண்ணலாம்.

    இப்போதைய தாசில்தார் பத்து லட்சம் மதிப்பில் பங்களா கட்டியிருக்கிறார். எல்லாம் லஞ்சசம்ரட்சணை.

    ‘நான் பாவ புண்ணியத்துக்கு பயந்தவன். நானா காலணா கேக்க மாட்டேன். தானா கொடுக்கறதை வேண்டாம்னு சொல்ல மாட்டேன். நாளைக்கே ஒரு மந்திரி வந்தா அவருக்கு குளியல் சோப்புல இருந்து குடிக்க சோடாவரை நான்ல வாங்கித் தரவேண்டியிருக்கு. கவர்மெண்டா அதுக்கெல்லாம் காசு கொடுக்குது? - என்கிற நியாயமான வாதத்திலிருந்து நான் பார்க்க வேலைக்குச் சேர்ந்த சாதாரண குமாஸ்தா நாலு வீடு வாங்கிட்டான். இந்த ஆபீஸ்ல, ஏதோ என்னால சிம்பிளா ஒரு பங்களாதான் கட்ட முடிஞ்சது..." - என்று கழிவிரக்கப் பட்டுக் கொள்வது வரை அசல் இந்திய மண்ணின் ஒண்ணாம் நம்பர் ஊழல் புழுதி.

    இவர்கள் அளவிற்கெல்லாம் சிவராமன் போனவர் இல்லை. ஆனால், போய்தான் ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் மட்டும் நித்யம் உண்டு. நேற்றுவரை அந்த நிர்ப்பந்தங்களை ஜெயித்துவிட்டார். இன்று வேறு மாதிரி சிந்திக்க தொடங்கிவிட்டார். நாமும் கை நீட்டினால் என்ன?

    அகிலா இதுவரை கல்யாண மார்க்கெட்டில் விலை போகாததுதான் பிரதான காரணம்.

    பத்து வருஷத்தில் நூற்றுக்கும் மேல் மாப்பிள்ளைகள் பெண் பார்க்க வந்து போய்விட்டனர். சொஜ்ஜி பஜ்ஜி செலவுக்கணக்கே ஐம்பதாயிரம் தாண்டிவிட்டது.

    அகிலா கிராஜுவேட்டாக இருந்து கொண்டு வேலைக்குப் போய் மூவாயிரம் சம்பாதித்தாலும் கூட. காக்கைக் கறுப்பில் தேகம் இருப்பதாலும், ஆயில்யம் என்கிற ஒரு பெண் பிறக்கக் கூடாத நட்சத்திரத்தில் பிறந்து விட்டதாலும் அந்த இரண்டு காரணங்களிலும் அவளது கல்யாண வாழ்க்கை சிக்கிக் கொண்டு மீளுவேனா என்று கதறிக் கொண்டிருக்கிறது.

    சிவராமன் அலுத்துப் போய் விட்டார். அத்தைப் பாட்டியோ கடவுளே இல்லை என்று சொல்லும் எல்லையில்.....

    ஆனால், அகிலா இதற்கெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அரசமரம், ஆலமரம், பிள்ளையார். சண்டி முண்டி என்று தேவ விலாசம் தேடிப் போய் சுற்றின பிறகும், எள் விளக்கு, எண்ணெய்

    Enjoying the preview?
    Page 1 of 1