Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koottirkkul Puhuntha Uyir
Koottirkkul Puhuntha Uyir
Koottirkkul Puhuntha Uyir
Ebook118 pages1 hour

Koottirkkul Puhuntha Uyir

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580100704582
Koottirkkul Puhuntha Uyir

Read more from Indira Soundarajan

Related to Koottirkkul Puhuntha Uyir

Related ebooks

Related categories

Reviews for Koottirkkul Puhuntha Uyir

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koottirkkul Puhuntha Uyir - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    கூட்டிற்குள் புகுந்த உயிர்!

    Koottirkkul Puhuntha Uyir!

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    திருமணம் என்பது மட்டும் மனிதர்கள் - திட்டமிட்டுச் செய்வதால் நிகழும் ஒன்று இல்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றிற்காக எல்லோரும் கூடிச் செயல்பட திருமணம் தன்னைத் தானாய் நடத்திக் கொள்கிறது என்பதுதான் உண்மை!

    மெடிக்கல் ரிப்போர்ட்டுடன் வெளியே வந்த சாரதியின் முகத்தில் ஏகத்துக்கும் வாட்டம் ஒரு பெரிய காக்கி கவருக்குள் ஏராளமான எக்ஸ்ரே படங்கள், பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் என்று ஆய்வு செய்யப்பட்ட ரிப்போர்ட்டுகள்! சற்று பருத்து கனமாக காட்சியளித்த ரிப்போர்ட் கவரை ஆஸ்பத்திரிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த காரின் பின் ஸீட்டில் எறிந்துவிட்டு சோர்வாக டிரைவிங் ஸீட்டில் ஏறி அமர்ந்தான் சாரதி.

    ஸாரி மிஸ்டர் சாரதி! அதிகபட்சம் பதினைஞ்சு நாள் உங்க அப்பா உயிரோட இருந்தா அதுவே ரொம்ப அதிகம். அமெரிக்கா, ஐரோப்பான்னு எங்கே போனாலும் காப்பாத்த வழியில்லை. வேணும்னா கொஞ்சமும் வலியில்லாதபடி இந்த பதினைஞ்சு நாளும் அவர் வாழ நாங்க ஏதாவது செய்ய முடியும். அதுக்குகூட சிங்கப்பூரில் இருந்து இன்ஜெக்ஷனை வரவழைக்கணும். இந்த மாதிரி கேஸ்களுக்குள்ளே ஹ்யூமன் கூரியர் மாதிரி சிலர் இருக்காங்க. அவங்களுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து ஒரு சார்ஜ் கொடுத்துட்டா போதும். நமக்காகவே சிங்கப்பூர் போய் மருந்தை வாங்கிக்கிட்டு அடுத்த ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவாங்க. என்ன சொல்றீங்க? என்ற டாக்டர் சிவராமகிருஷ்ணன் தன் ஸ்கொயர் ஸ்பெக்ஸ் கண்ணாடியைத் துடைத்தபடியே சொன்னது சாரதியின் காதுகளில் அலை மோதியது. அதற்காக ஒரு பதினைந்தாயிரம் ரூபாயக்கு செக் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு டிராவல் ஏஜென்ஸிக்கும் போன் செய்து சிங்கப்பூருக்கு டிக்கெட் ரிசர்வ் செய்ததையும் எண்ணிப் பார்த்தபடியே காரை கிளப்பினான்.

    அந்த படகு கார் டிராஃபிக்கில் ரதம் போல் ஓடியது. ஆனால், சாரதியின் மனதுக்குள்தான் ஏகப்பட்ட தடுமாற்றங்கள், குழப்பங்கள்!

    சாரதியின் அப்பா ராம்மோகன் ஒரு பெரிய பிஸினஸ் மேக்னட்! மதுரையில் பிறந்து வளர்ந்தவராக இருந்தபோதிலும் சென்னைக்கு ஓடிவந்துவிட்டவர். அப்படி அவர் ஓடிவந்தபோது அவர் பாக்கெட்டில் இருந்தது மூணரை ரூபாய்.

    ஆனால், இப்போது கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய்க்கு மாதாமாதம் கார்மெண்ட்ஸ் பிஸினஸ் செய்பவர். ஈசா கார்மென்ட்ஸ் என்றால் கீழ்த்திசை நாடுகளில் அப்படி ஒரு பெயர். தொடக்கத்தில் தெருத்தெருவாய் அலைந்தவர் ஒரு டெய்லர் கடையில் வேலைக்குச் சேர்ந்து முதல் ஆறு மாதங்களுக்கு அந்த டெய்லருக்கு டீ காபி வாங்கி வந்து தருவதைத்தான் தொழிலாகவே செய்தார். பின் கடையிலேயே ஒரு மூலையில் படுத்துத் தூக்கம்... ஆறு மாதம் கழித்து முதன்முதலாக கற்றுக்கொண்டது காஜா எடுக்க... அதன் பின் இரண்டு வருடத்தில் தையல்கலையின் அத்தனை நுட்பங்களும் ராம்மோகனுக்கு வசமாகிவிட்டன.

    வாடிக்கையாளர்களும் அவர் தைத்து தரும் பேண்ட் சர்ட்தான் அளவு மிக் கச்சிதமாக இருப்பதாகக்கூற, கடைக்கார முதலாளி, நீ வேற இடம் பார்த்துக்க என்று கழற்றிவிட்டு விட்டார். அதன் பின் ஒரு வாடிக்கையாளர்தான் தன் வீட்டில் ஒரு தையல்மெஷின் பல வருஷங்களாக ஓடாமல் ஒரு மூலையில் கிடப்பதை நினைவுகூர்ந்து அதை வைத்துக் கொண்டு ஏதாவது செய் என்று சொல்லி அவர் வீட்டு முன்பக்கம் மரத்தடியில் கொஞ்சம் இடமும் ஒதுக்கிக் கொடுக்க, அதில் பிக் அப் ஆக ஆரம்பித்தது ராம்மோகனின் தொழில்!

    இன்று ராம்மோகனின் ஈசா கார்மெண்ட்ஸுக்குள் நுழைந்தால் ஒரு கண்ணாடி அறைக்குள் அந்த தையல் எந்திரமும் அதற்குமேல் அதை ராம்மோகனுக்கு தந்து உதவிய அந்த வாடிக்கைக்காரரின் புகைப்படமும்தான் முதலில் கண்ணில் படும்.

    கூடவே 'நன்றி மறப்பது நன்றன்று' என்கிற குறள்வரிகள் வேறு!

    ஒரு டெய்லராக வாழ்க்கையை ராம்மோகன் தொடங்கியபோது அவர் வயது இருபது. இன்று ஐம்பது... எங்கிருந்து எப்படி வந்தது அந்த இரைப்பை புற்றுநோய் என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம்...

    கடந்த மூன்று மாதங்களாகவே சிகிச்சை சிகிச்சை என்று ஆஸ்பத்திரி வாசம்தான். இப்பொழுது அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டு அவர் மொத்த வாழ்க்கையே வெறும் பதினைந்து தினங்கள் என்று சுருங்கிவிட்டது.

    அந்த உண்மையும்கூட டாக்டருக்கும் அவருக்கும் பிறகு ராம்மோகனின் மூத்தமகன் சாரதிக்கு மட்டும்தான் தெரியும்.

    ரிப்போர்ட்டோடு படுக்கையில் இருந்த ராம்மோகனை சாரதி பார்த்தபோது அவர் அவனைப் பார்த்த விதமே சரியில்லை.

    என்னப்பா.... நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு டாக்டர் சொன்னார்... என்றுதான் கேட்டிருந்தார். சாரதியும் எப்படியோ அவரைச் சாமாளித்து வெளியே வந்தான். அப்போதெல்லாம் அவன் இதயம் துடித்த துடிப்பு...

    'பாம்பாம்... பாம்பாம்... கீய்ங்ங்…' டிராஃபிக்கில் ரெட்சிக்னல் விழுந்தும் சாரதியிடம் பிரக்ஞையில்லை. அப்பா கேட்டது, சமாளித்தது என்று அதே எண்ணம் டிராஃபிக் போலீஸ்காரர் ஓடிவந்து கதவைத் தட்டி, ஏய்! யாருய்யாது? என்று பலமாக கத்தவும்தான் அவனுக்கு தன்னை மறந்துவிட்டதே நினைவுக்கு வந்தது.

    ஸாரி சார்... என்று சாமாளித்து வழிந்துவிட்டு காரை திரும்பவும் கிளப்பினான். காரும் வளசரவாக்கத்தில் இருக்கும் அவனது பங்களா நோக்கித்தான் ஓடியது!

    வாட்ச்மேன் கேட்டைத் திறந்த விட, உள்ளே புகுந்த காரைப் பார்த்துவிட்டு சாரதியின் மனைவி இந்துமதி, அவன் தங்கை தேவி என்று இருவரும் ஓடி முன்வாசலில் வந்து நின்றனர். இறங்கி உள்ளே நுழைந்தவனை ஆவலாதியோடு பார்த்தனர்.

    டாக்டர் என்னங்க சொன்னார்... இன்னிக்கு ஃபைனல் ரிப்போர்ட் கிடைச்சிடும்னு சொல்லியிருந்தாரே... என்று அவன் உள்ளே நடக்கும்போது கூடவே ஆரம்பித்து விட்டாள் இந்துமதி.

    சாரதி எதுவும் பேசாமல் போய் சோபாவில் விழுந்தான். தேவி அவன் மெளனத்தை கச்சிதமாக புரிந்து கொண்டாள். எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படிப்பவளுக்கு எந்த வியாதிக்கு எவ்வளவு சக்தி என்று கூடவா தெரியாது?

    என்னண்ணே... டாக்டர் கை விரிச்சிட்டாரா! என்று கச்சிதமாக கேட்டாள். அவனும் மௌனத்தில் அதனை அங்கீகரித்தான். "எனக்குத் தெரியும்... அந்த கான்சர் வந்து அதிகநாள் வாழ்ந்துகிட்டிருக்கிறவர் அனேகமா நம்ம அப்பாவா மட்டும்தான் இருக்க முடியும். எப்ப காது மூக்கு வழியா ரத்தம் வெளிய

    Enjoying the preview?
    Page 1 of 1