Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathirukka Sonnaye!
Kaathirukka Sonnaye!
Kaathirukka Sonnaye!
Ebook100 pages59 minutes

Kaathirukka Sonnaye!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100702727
Kaathirukka Sonnaye!

Read more from Indira Soundarajan

Related to Kaathirukka Sonnaye!

Related ebooks

Related categories

Reviews for Kaathirukka Sonnaye!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathirukka Sonnaye! - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    காத்திருக்கச் சொன்னாயே!

    Kaathirukka Sonnaye!

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காதல்! இது ஒரு பருவக் கிறுக்கு

    2. காதல்! இது ஒரு வாலிப மின்சாரம்

    3. காதல்! இது ஒரு கிரியா ஊக்கி

    4. காதல்! இது ஒரு ரகசிய அணுகுண்டு

    5. காதல்! இதயத்தின் மோசமான நண்பன்

    6. காதல்! உணர்ச்சிகளில் இது அமிர்தம். ஆனால் உண்ணாத வரைதான் வாழ்வு

    7. காதல்! இதில் தோற்பதே உண்மையான வெற்றி!

    8. காதல்! உணர்வை மின்சாரமாக்கும் ரசவாதி!

    9. காதல்! இது பணியில் எரியும், நெருப்பில் அணையும் வினோதம்

    10. காதல்! இது ஒரு ‘மதில் மேல் பூனை!"

    என்னுரை

    இந்தத் தொகுப்பில் உள்ள இரண்டு நாவல்களும் காதலை மையமாகக் கொண்டவை. காதல் என்றால் என்னவென்று கூறத் தேவையில்லை.

    பருவ வயதில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உடல்ரீதியாக ஏற்படும் ஈர்ப்புக்குப் பேர்தான் காதல். இதை மிகப் புனிதமானது என்றும் தெய்வீகமானது என்றும் சில இலக்கியவாதிகளும், இன்றைய சினிமாக்காரர்களும் குறிப்பாக அவர்களில் கவிஞர்களும் சொல்லி வருகின்றனர்.

    என்னால் அப்படி நினைக்க முடியவில்லை.

    அன்பு என்பது புனிதமானது… தெய்வீகமானது! இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. அதனால்தான் 'அன்பே சிவம்' என்ற இரு வார்த்தைகளில் அதற்கு ஒரு இமாலய உயர்வைக் கொடுத்துள்ளார்கள்.

    காதல் என்பது நூறு சதம் சந்தேகத்திற்கிடமில்லாத ஒரு வகை உடல் ஈர்ப்பு மட்டுமே.

    கண்டவுடன் காதல் வருகிறது என்று நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    எதைக் கண்டவுடன்?

    உடம்பையன்றி வேறு எதை அவன் காண்கிறான்?

    உண்மையில் காதல் என்பது உடல் கவர்ச்சியல்ல - அது குணக்கவர்ச்சி, அறிவுக் கவர்ச்சி என்பதாகச் சொன்னால் இன்று ஊனமுற்ற பெண்களைத் திருமணம் செய்விக்க அவர்களது பெற்றோர்கள் பலர் சிரமப்பட வேண்டிய அவசியங்களே வராது.

    அது மட்டுமல்ல….

    பார்வையில்லாத பெண்ணொருத்தியின் கூர்மை வேறு எவரிடமும் இல்லை. அவர்களுக்கெல்லாம்தான் முதலில் திருமணங்கள் நடந்தேறியிருக்கும்.

    நானறிந்தவரை பார்க்க சகிக்க முடியாத உருவ அமைப்பு கொண்ட ஒருவர் மனம் ஒன்றிக் காதலித்ததாகவோ, கற்பனைவானில் சஞ்சரித்ததாகவோ, அதில் வெற்றி பெற்றதாகவோ யாரும் கதைகளில் கூட எழுதவில்லை.

    எனவே காதல் என்றாலே அது காமக் கலப்பான அன்புதான் என்பதற்கு ஒரு பட்டிமன்றம் தேவையே இல்லை. அதுதான் உண்மை.

    அப்படி ஒரு அன்பு உருவாவதைக் குறை சொல்லவும் தேவையில்லை. மனித குலத்துக்கு எவ்வளவோ உணர்ச்சித் தேவைகள் உள்ளது. அதில் காதலும் ஒன்று.

    காதலை அழகு சார்ந்தது... ரசனை சார்ந்தது... விருப்பம் சார்ந்தது என்று கூறுங்கள். துளியும் பிழையில்லை. ஆனால் அது புனிதமானது, தெய்வீகமானது, மகத்துவம் மிக்கது என்றெல்லாம் கயிறு திரிப்பதுதான் தவறு.

    நானறிந்தவரை காதல் உணர்ச்சிக்கு ஆட்படாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும்கூட இருந்திருக்க முடியாது. எனக்கு இவரோ அல்லது இவரைப் போன்றவரோ மனைவியாய்க் கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? என்று வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு பெண் நினைத்திருப்பாள்.ஆண் பலமுறை நினைத்திருப்பான்.

    ஆனால் என்னதான் நாம் நினைத்தாலும், ஆசைப்பட்டாலும் எப்பொழுதும் வாழ்க்கையில் நடப்பதுதான் நடக்கிறது. அதன்பின் எது கிடைத்திருக்கிறதோ அதை நேசிக்க வேண்டிய ஒரு அடி அமைப்பு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.

    வாழ்க்கையில் வயிறு என்றும் ஒரு விஷயம் இருக்கிறதே...? அதற்குத் தீனி போடுவது, பிறகு ஆசை, அந்தஸ்து பார்த்தல், இவைகளுக்குப் பிறகு வீடு, வாசல், வாகனம் என்று விருத்திகளை நோக்கிச் செல்வது என்கிற திசைமாறல்களும் நிறைய இருக்கின்றன.

    இதற்கு நடுவே வயதாவதும், முதுமை தட்டுவது போன்றவையும் இயல்பாக நடந்தேறி விடுவதால் கிடைத்ததை ஒப்புக்கொண்டு வாழும் வாழ்க்கையில் ஆண் பெண் இருவரிடமும் பெரிய கருத்து வேற்றுமை எழும்பி அது பிளவு வரை செல்லும் சாத்தியங்கள் தவிர்க்கப்பட்டுவிடுகின்றன.

    நூற்றுக்குத் தொண்ணூறு பேர் வாழ்வு இன்று இப்படித்தான் இருக்கிறது. சொச்சமுள்ள பத்து சதவிகிதத்தில்தான் வேறுவிதமான நிலைப்பாடுகள்.

    இந்தப் பத்து சதவிகிதத்தில்தான் காதல் மிகப் பெரிய வெற்றியையோ அல்லது தோல்வியையோ சந்திக்கிறது.

    கணவன் இறந்த அதே நாளில் மனைவி மரணம் என்கிற செய்தியும் சரி, மனைவி தலையில் கணவன் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தான் என்கிற செய்தியும் சரி - இதெல்லாம் இந்தப் பத்து சதவிகிதத்துக்குள் அடங்கிக் கிடப்பவர்களிடம் இருந்துதான் வருகிறது.

    ஏனோ இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கெல்லாம் இந்தப் பத்து சதம்மேல்தான் கண். இயல்பாக உள்ள அந்தத் தொண்ணூறு சதத்தில் அவர்கள் வேறு பிரச்சினைகளைப் பார்க்கத்தான் விரும்புகிறார்கள். மனம் சார்ந்த அன்யோன்னியத்தையோ இல்லை கோணல் மாணல்களையோ அவர்கள் இந்தப் பத்து சதவிகிதத்துக்குள் இருந்தே காண விரும்பி கற்பனையும் செய்கிறார்கள். (இந்தப் புத்தகத்தில் உள்ள இரு நாவல்களும்கூட கிட்டத்தட்ட இந்தப் பத்து சதத்துக்குள் அடங்கியதுதான்…)

    இவர்களால்தான் காதலுக்கு இன்று ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1