Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athirshtakkaatru
Athirshtakkaatru
Athirshtakkaatru
Ebook103 pages48 minutes

Athirshtakkaatru

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386583116
Athirshtakkaatru

Read more from Indira Soundarajan

Related to Athirshtakkaatru

Related ebooks

Related categories

Reviews for Athirshtakkaatru

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athirshtakkaatru - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    அதிர்ஷ்டக் காற்று

    Athirshta Kaatru

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    என்னுரை

    வா

    சக உலகின் அபரிமிதமான வரவேற்பைப் பெற்ற இரு நாவல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

    இதில் ஒன்றில் அமானுஷ்யம் மிகுந்து இருக்கும். ஆனால் நம்பமுடியாத ஒன்றாகவோ கதையில் மட்டும் நடக்க முடிந்த ஒரு விஷயமாகவோ அதைக் கூற முடியாது.

    இன்னொன்றில் அமானுஷ்யத்திற்கெல்லாம் துளிகூட இடம் இல்லை. எது மானுட பலம் என்பதை சொல்லும் நாவல்தான் அதிர்ஷ்டக்காற்று! இந்த இரண்டு நாவல்களை எழுதும்போதும் நான் பரம சுகமாக உணர்ந்தேன்.

    திட்டிவாசல் மர்மத்தை எழுதும்போது என்னுள் நிறையவே சரித்திரத் திவலைகள். நாவலை வாசிப்பவர்களுக்கும் அது தவிர்க்கப்பட முடியாததே…

    இன்றும் தஞ்சைப் பகுதியில் தமிழர் அல்லாத வேற்று இனத்தவர்களாக மராத்தியர்களும் சௌராஷ்டிரர்களும் வாழ்ந்து வருகின்றனர். புலம் பெயர்ந்து வந்த இவர்கள் இன்று இனத்தால் வீட்டுக்குள் மராத்தியர்களாகவும் சௌராஷ்டிரர்களாகவும் திகழ்ந்தாலும் வெளியே தமிழர்களாகத்தான் பார்க்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு இந்த மண்ணோடு அவர்கள் பல தலைமுறைகளாகவே கலந்துவிட்டனர். அப்படி ஒரு தலைமுறையைப் பற்றி கதைதான் திட்டிவாசல் மர்மம்.

    பலநேரங்களில் நான் நாவலை எழுதி முடித்துவிட்டு பிறகே பொருத்தமாக தலைப்பிடுவேன். ஒரு மாறுதலாக ‘திட்டிவாசல் மர்மம்’ என்கிற தலைப்பிற்காகவே இந்த நாவலை நான் கற்பனை செய்து எழுதினேன்.

    திட்டிவாசல் என்றால் என்னவென்றே பலபேருக்குத் தெரியாது. மிகப்பெரிய கோட்டைக் கதவுகள் மூடியிருக்கும் போது ஒருசிலர் அதைத் திறந்துகொண்டு அவ்வப்போது வெளியே செல்ல சிரமப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களின் சிரமங்களுக்காக அந்தப் பெரிய கதவின் ஒரு பக்கத்தில் ஒரு நபர் நுழைந்து செல்லத் தோதாக ஒரு சிறு கதவு அமைக்கப்பட்டிருக்கும். அந்த சிறு கதவுகொண்ட பாகத்தைத் தான் திட்டிவாசல் என்பார்கள். திட்டிவாசலை மையமாக வைத்து ஒரு நல்ல பழமொழி கூட நம்மிடம் உண்டு.

    ‘பெரிய கோட்டைக் கதவு மூடப்பட்டாலும் அதில் ஒரு திட்டிவாசல் வழியிருக்கும்!’ என்று சொல்வார்கள். அது இனி வழியே இல்லை அவ்வளவுதான் என்று சோர்ந்துவிட்டவர்களைத் தட்டி எழுப்பிவிட பெரிதும் பயன்படும் ஒரு பழமொழியாகும்.

    இந்தக் கதைகூட அப்படி ஒரு வழியைக் கதையின் நாயகனுக்குக் காட்டுகிறது. அதுதான் மர்மமும்கூட…

    இதில் வரும் ஒரு பாட்டி பாத்திரம்தான் அமானுஷ்யமான ஒரு பாத்திரமாகும். இறந்தபிறகும் அந்தப் பாட்டியின் ஆத்மத் துடிப்பு எப்படி வெளிப்படுகிறது என்பதில்தான் அமானுஷ்யமும் ஒளிந்துள்ளது.

    அது ஒன்றும் கற்பனை இல்லை. இந்த உலகின் பல வீடுகளில் பலருக்கு அதுபோல சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

    மொத்தத்தில் திட்டிவாசல் மர்மம் ஒரு வித்தியாசமான கதைக்களம்!

    அதிர்ஷ்டக் காற்று இதற்கு நேர் எதிரான கதை. முதலில் ஒரு இளைஞன் ஒரு விபத்தில் காலை இழக்கிறான். பின் அதனாலேயே காதலியை இழக்கிறான். எல்லாமே போய் விட்டதாக அவன் கருதும்போது எதுவுமே உன்னைவிட்டுப் போகவில்லை என்பதை அவன் தாத்தா அவனுக்கு உணர்த்துகிறார். அவனும் உணர்ந்து பெரிய வெற்றியாளன் ஆகிறான்.

    அதிர்ஷ்டக் காற்று அவன் பக்கம் வீசியதா, இல்லை அவன் தன் முயற்சியால் அதை வீசவைத்தானா என்பதே கதை!

    படித்துப் பாருங்கள்

    நிச்சயம் மனத்துக்கு நிறைவாக இருக்கும். கதையின் கருப்பொருள், மற்றும் களத்துக்கு ஏற்ப கதை சொல்வதே என் வழக்கம். சில கதைக் களங்கள் மிக யதார்த்தமாக மண்வாசனையுடன் வெளிப்படும். சில கதைக் களங்கள் சம்பவச் சிறப்புடன் திருப்பங்களுடன் வெளிப்படும்.

    வெகுஜன ரசனையைக் குறிவைத்து எழுதும்போது நிறைய கட்டுப்பாடுகளும் தேவைகளும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    இந்தக் கதைகளில் அவைகள் எவை என்பதை வாசகர்களே போகிற போக்கில் உணரலாம். எது எப்படி இருந்தால் என்ன? இந்தப் புத்தகம் உங்கள் மனத்தை மேம்படுத்தி நம்பிக்கை அளிக்கும். வாழ்க்கை என்பது நமது சிந்திக்கும திறனுக்கும் வெளியே நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத எல்லைகளைக் கொண்டிருப்பதை உணர்த்தும்.

    கொஞ்சம் பிரமிப்பு, கொஞ்சம் ஆயாசம், கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் குழப்பம் என்று கலவையான உணர்வு நிலைகள் உங்களுக்குள் தோன்றப்போவது மட்டும் உறுதி! நன்றி.

    பணிவன்புடன்

    இந்திரா சௌந்தர்ராஜன்

    1

    ‘பஞ்சபூதங்களில் காற்று மிக மாறுபட்டது. பல விசேஷ குணங்களை உடையது. மற்ற பூதங்களைப் பார்க்க முடியும். காற்றை உணர மட்டுமே முடியும். எனவே காற்றை இறைவடிவம், மன வடிவம் என்றெல்லாம் சொல்வார்கள். அடுத்து காற்றால்தான் மனிதன் பிரபஞ்சத்தொடர்போடு இருக்கிறான். காற்று அறுந்து போனால் மற்ற நான்கு பூதக் கட்டுகளால் ஆன உடலில் வெப்பம் விலகிட, உடம்பானது ஜலம் பெருக்கி நிலமிசை உடைந்து ஒழுகிப்போகும். காற்றுதான் ஆதாரசக்தி. இந்த சக்தியை பிரதானமாகக் கொண்ட தெய்வம்தான் அனுமன். வாயுமைந்தன் என்பதும் அவர் பெயர்களில் ஒன்று. காற்றின் குணங்களில் மேலான ஒன்று ஓரிடத்தில் அதை வீசவும் வைக்கலாம்: விலக்கியும் வைக்கலாம். கூடிக் குறைக்க அது இடம் கொடுக்கிறது. மனித வாழ்வில் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களும்

    Enjoying the preview?
    Page 1 of 1