Adhu Mattum Ragasiyam
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Sivam Rating: 4 out of 5 stars4/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Thirakkathey Aabathu Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Oodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5
Related to Adhu Mattum Ragasiyam
Related ebooks
Aairam Jannal Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Kannale Kollathey! Rating: 5 out of 5 stars5/5Kai Niraiya Vairam Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Mohana Mupathu Naal Rating: 0 out of 5 stars0 ratingsRagasiyam Parama(n) Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Oru Athikaalai Kolai Rating: 0 out of 5 stars0 ratingsIrandil Ondru Rating: 0 out of 5 stars0 ratingsBharath Bharath Paranthu Vaa Rating: 0 out of 5 stars0 ratingsThapu Thapai Oru Kolai Rating: 5 out of 5 stars5/5Thirakkatha Jannalgal Rating: 5 out of 5 stars5/5Thittamitta Thiruppam Rating: 5 out of 5 stars5/5Valaivugal Abayam Rating: 1 out of 5 stars1/5Naalai Yaaro? Rating: 5 out of 5 stars5/5Shimla Ramya Rating: 5 out of 5 stars5/5Aabathu Ingey Aarambam Rating: 5 out of 5 stars5/523-vathu Jannal Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pootti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsUdaiyatha Vennila! Rating: 0 out of 5 stars0 ratingsEndrendrum Un Ethiri Rating: 4 out of 5 stars4/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Puthu Brahma Rating: 0 out of 5 stars0 ratingsArai Millimeteril Oru Abathu Rating: 5 out of 5 stars5/5Ainthaam Pirai Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Piditha Minnal Rating: 0 out of 5 stars0 ratingsUlaraatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsAthikalai Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Adhu Mattum Ragasiyam
0 ratings0 reviews
Book preview
Adhu Mattum Ragasiyam - Indira Soundarajan
http://www.pustaka.co.in
அது மட்டும் ரகசியம்
Adhu Mattum Ragasiyam
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarrajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
1
வி
டிந்தும் விடியாத காலைப் பொழுது!
அழகர் கோயில் மலைச் சரகத்தை ஒட்டிய ஆயிரம் வேலிக்காட்டுக்குள்நுழைந்து கொண்டிருந்தது ஒரு படகுக் கார். கப்பி மண் சாலையில் புழதிப் புயலை உருவாக்கிய படி ஊர்ந்து கொண்டிருந்த அதை வயல்களில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சிலர் பார்த்துவிட்டு கண்களை அகலத் திறந்து விட்டுக்கொண்டார்கள்.
கங்காணி ஏழுமலை மட்டும் பார்த்ததோடு நில்லாமல் கார் செல்லும் பாதையில் பின்னாலயே ஓடத் தொடங்கினான்.
ஏழுமலை, ஆருவே அது... முதலாளி ஒறம்பறைங்களா?
வயலுக்குள் இருந்து கொண்டு ஒரு பெண் கேள்வியை அனுப்பினாள். ஓடிக்கொண்டே கங்காணி பதிலைச் சொல்லலானான்.
நம்ம நாட்டாமை பேரனும் பொஞ்சாதியும் வந்திருக்காங்கங்கோய்... இன்னிக்கு நமக்கெல்லாம் கோழி அடிச்சு பிரியாண்தாரங்…
கார் அடர்த்தியான தென்னந்தோப்பு ஒன்றில் நுழைந்திருந்தது. தோப்பின் மையத்தில் ஒரு கருங்கல் பங்களா! பார்த்த நொடி கண்களில் அகலம் தட்டிப் போய்விடும். அப்படி ஒரு விஸ்தீரணம். வாட்டசாட்டம்!
காரிலிருந்து இறங்கிய சந்திரமோகனும் பங்களாவை பார்த்து அசந்துதான் போயிருந்தான். அவனோடு சேர்த்து இறங்கிய அவன் மனைவி ஸ்ரீமதி சந்திரா… என்னப்பா இது நம்ம லண்டன் பேலஸ் மாதிரியே இருக்கே! ஐ நெவர் எக்ஸ் பெக்ட் இட்!
என்று அவளது ரோஸ் நிற உதட்டை ஒரு சுழி சுழித்துக் கொண்டாள்.
மகனும் மகளும் அசந்துபோய் விட்டதைப் பார்த்த படியே கூடவே காரிலிருந்து இறங்கியிருந்தார் ரத்ன சபாபதி. பெரிய தொழிலதிபர்!
பங்களாவை மட்டும் பார்த்துட்டு அசந்து நின்னா எப்படி.? இந்த ஆயிரம் வேலிக் காட்டுக்குள்ள அங்குலத்துக்கு அங்குலம் உனக்கு ஆச்சரியம் காத்திருக்கு. சந்திரமோகன்
என்றார்.
ஆயிரம் வேலிக்காடுங்கற பேரே என்னவோ மாதிரி இருக்கு… ஆளை விடுங்கப்பான்னு சொன்னியே இப்ப என்ன சொள்றே…? ஒரு பிக்னிக் ஸ்பாட்டுக்கு வந்த மாதிரி இல்லே?
-கேள்வியோடு தனது சஃபாரி சூட்டின் சுருக்கத்தை எடுத்துவிட்டுக் கொண்டார்.
சந்திரமோகன் ஆமோதிப்பதாக சிரித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரவேற்பு, விசாரிப்பு என்கிற விஷயங்கள் ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன.
காரிலிருந்து இறங்கிய மூவரையும் உற்சாகமாக உள்ளே அழைத்துச் செல்ல ஆரம்பித்தார் அந்த கருங்கல் பங்களாவில் இருந்து வந்திருந்த கழுகாசலத் தேவராயர்.
மாப்பிள்ளைக்கும் மருமகனுக்கும் இப்பதான் இந்த பக்கம் வரணும்னு தோணிச்சாக்கும்?
என்று அவர் குரலில் விஸ்தாரமான ஆதங்கம்.
கழுகாசலத் தேவராயரின் கருத்தை அப்படியே எதிரொலித்தாள் அவரோடு வாசலுக்கு வந்திருந்த அவரது பத்தினி சங்கவை நாச்சி.
வாங்க மாப்ள… எம்புட்டு நாளாச்சு…?
நாளா… வருஷமாச்சுன்னு சொல்லு சங்கா…
எப்படியோ இப்பவாச்சும் வந்தீகளே… எலேய் கோபாலு, ஆரு வந்துர்காங்கன்னு பாருடா…
சங்கவை நாச்சி திரும்பி, உள் கொட்டாரம் அதிரும் வண்ணம் கத்தினாள். அவள் கூப்பிட்ட கோபால் என்னும் இளைஞன் நல்ல மஸ்லின் வேட்டியும் மடக்கி விட்ட சட்டையுமாக, வா சந்திரா… வாங்க மிஸஸ் சந்திரமோகன்
என்றபடியே எதிரில் வந்து கை குலுக்கினான். பின் எல்லோரும் உள்ளே நுழைய ஆரம்பித்தனர்.
ஸ்ரீமதி, பங்களாவுக்குள் பிரவேசித்த நொடிப் பொழுதில் இருந்தே பிரமிப்பில் தான் இருந்தாள். அமெரிக்காவில் இருந்து கிளம்பியபோது ஒரு பட்டிக்காட்டுக்குள் நுழையப் போவதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆடும் மாடும் அலைந்தபடி இருக்கும் ஒரு அழுக்குக் கிராமம்தான்அவள் மனக்கண்ணில் இருந்தது. இங்கோ எல்லாமே நேர்மாறாக இருக்கிறது.
ஒரு ரிஸார்ட்டுக்குள் வந்தது போல ஆச்சரிய உணர்ச்சி. அதைவிட ஆச்சரியம், பங்களா வேலைக்காரர் பலர் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும் ஒரே சீராக கையைக் கட்டிக் கொண்டும் நிற்கும் அந்தப் பணிவுதான். கூடவே ஒரு நூலிழைப் பருமனில் புது பணிவா, இல்லை அடிமைத்தனத்தின் வெளிப்பாடா என்னும் சந்தேகமும்…
காரைப் பார்த்துவிட்டு பின்னாலேயே மூச்சிரைக்க ஓடிவந்திருந்த கங்காணி ஏழுமலையும் பங்களாவுக்குள் பிரவேசித்திருந்தான்.
வந்த வேகத்தில் ரத்னசபாபதியைப் பார்த்து நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தான். ரத்னசபாபதியும் அவனை எழுப்பி கட்டிக் கொண்டார்.
என்ன ஏழுமலை, எப்படி இக்கே?
நல்லா இருக்கேன்யா… என்னய்யா நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா?
நான் மட்டுமா… என்னய்யா கேள்வி இது. பாரு என் மகன் வந்துருக்கான், மருமகள் வந்துருக்கா…
ரொம்ப சந்தோஷமய்யா… அம்மா வரலீங்களா?
அவ இப்ப பயணம் பண்ணக் கூடாது ஏழுமலை. டாக்டர் நல்லா ரெஸ்ட்ல இருக்கணும்னு சொல்லியிருக்கார்.
அம்மாக்கு என்னங்க உடம்புக்கு?
அதையெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. அவ ஒரு ஹார்ட் பேஷண்ட். ஆனா எப்படியும் நம்ம குல தெய்வம் கோயில் பூஜைக்கு வந்துடுவேன்னு சொல்லியிருக்கா.
ரத்னசபாபதி, ஏழுமலையின் தோளைக் கட்டிக் கொண்டு வாஞ்சையாகப் பேசியது கழுசாசலத் தேவராயருக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ… முகம் ஒரு மாதிரி மாறிப் போயிருந்தது.
ஏலேய் ஏழுமலை… பேசுனது போதுண்டா… போய் சோலி மசுரைப் பாரு! மாப்ள, நீங்க வாங்க. பயணக் களப்பு நெட்டி முறிக்குமே? முதல்ல நல்ல ரெஸ்ட் எடுங்க… கோவாலு, மாப்ளயை, சந்திராவை மாடி ரூமுக்கு கூட்டிகிட்டு போய் ஆகவேண்டியதைப் பாரு…
தேவராயரின் குரலில் அதட்டல் தூள் பறந்தது. அவர் அப்படிப் பேசியது ஸ்ரீமதிக்குப் பிடிக்கவில்லைபோல தோன்றியது. அவளது தக்காளிச் சிவப்பு முகத்தில் ஊதிவிட்டது போல ஒரு கடுமை தெரிந்தது.
மூவரும் மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினார்கள். ஒவ்வொரு படியும் க்ரானைட்டில் சிலீரென்று பதியும் பாதங்களை ஜில்லிட வைத்தது.
பக்கவாட்டுச் சுவர்களில் பாடம் செய்த எருமைத் தலையும், சிங்க முகங்களும் அவைகளுக்குள் உயிர் இருப்பது போன்ற மிரட்சியைக் கொடுத்தன.
இந்த நூற்றாண்டின் கட்டட நுட்பம் எங்குமே தெரியவில்லை. ஸ்ரீமதியும் சந்திரமோகனும் பலமுறை ரோம்நகருக்குப் போயிருக்கிறார்கள். ஆங்கே ஜூலியஸ் சீசர் காலத்து அரண்மனைச் சிதைவுகளையும் தென்னைமரம் போன்ற உயரமான தூண்களையும் பார்த்து பிரமித்திருக்கிறார்கள்.
அந்த வரலாற்று வாசனை ஸ்ரீமதிக்குள் இப்பொழுதும் தோன்றிச் சில்ர்ப்பையூட்டியது. கோபால் அவளது சிலிர்ப்பைப் புரிந்துகொண்டவன் போல அவளுக்கு பதில் தரத் தொடங்கினான்.
மிஸஸ் சந்திரா… இந்த பங்களா இப்ப கட்டின பங்களா இல்லை. கிட்டதட்ட 250 வருஷங்களுக்கு முன்னால் சேதுபதி ராஜாக்கள் காலத்துல கட்டப்பட்டது. இந்த பங்களாவோட கன்ஸ்ட்ரக்டர் ஒரு வெள்ளைக்காரர்!
அவன் பதிலைக் கேட்டு ஸ்ரீமதி ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்தாள்.
என்னை ஸ்ரீமதின்னே நீங்க கூப்பிடலாம்
என்றாள். சொன்னபடியே அறைக்குள் நுழையவும் ஜில்லென்று ஏசியின் ஆதிக்கம். அவன் குறிப்பிட்ட சரித்திர கால கட்டடத்துக்குள் நிகழ்கால விஞ்ஞானம் வந்து ஓர் ஓரமாக ஆக்ரமித்துக் கொண்டிருப்பதையும் சொல்லாமல் சொல்லிற்று.
உள்ளே ஒரு காட்டையே அழித்து மேஜையும் நாற்காலியும் செய்தது போல மரத்தாலான நாற்காலிகள், மேஜைகள், பீரோக்கள், பல்புகள்! சந்திரமேகன் ஊவ்வ்… என்று கூறியபடியே சிம்மாசனம் போன்றதொரு நாற்காலியில் அமர்ந்தான். ‘பியூட்டிஃபுல்’ என்றான்.
ரத்னசபாபதி, கோபாலின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு அங்கிருந்து அவர்களை விட்டு பால்கனியை நோக்கி நகர்ந்திருந்தார்.
என்ன மாமா… ஒரு பத்து நாளாவது இருப்பீங்க தானே?
அவன்தான் கேட்டான்.
இருப்பேன்னுதான் நினைக்கறேன் கோபால். ஆமாம், நம்ம கோவிலை இப்ப யார் பார்த்துக்கறாங்க…?
என்ன மாமா கேள்வி இது…? அப்பாதான் எப்பவும் அதோட ட்ரஸ்ட்டி!
மெயினா கோயிலுக்குதான் கோபால் வந்துருக்கோம். ஆமா, பூஜை எல்லாம் ரெகுலரா நடக்குதா?
நடக்குதாவா… அப்பா சாப்பிட, தூங்க கூட மறப்பார். அதை மட்டும் மறக்கமாட்டார்.
குட்… ரொம்ப நாளாயிடிச்சு இல்லையா… எனக்கு இப்ப கோவில் எந்தத் திசைல இருக்கன்னு கூட தெரியாது. முதல்ல போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வரணும்.
வாங்களேன், இப்ப கூட போயிட்டு வருவோம்.
போவோம், போவோம். இதோ பார் கோபால், நான் இப்ப கோவிலுக்குப் போறது கூட முக்கியமில்ல. சந்திரமோகனும் ஸ்ரீமதியும் அங்க போகணும். நம்பிக்கையோட போகணும். அப்படியே அவன் நம்ம குடும்ப வழக்கப்படி மொட்டையும் அடிச்சிக்கணும். அது மட்டும் நல்லபடியா நடந்துட்டா போதும் எனக்கு…
நீங்க பேசறத பார்த்தா சந்திராவுக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லாத மாதிரி தெரியுதே?
ஆமாம் கோபால். வசதியான இடத்துல பொறந்து வளர்ந்துட்ட பிள்ளை. கஷ்டம்னா என்னன்னே தெரியாத நிலை. அதான் கடவுளைப் பத்தி நினைக்க வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லாமப் போயிடிச்சு.
ரத்னசபாபதி பெருமூச்சுடன் சொன்னதில் ஏராளமான ஆதங்கம். காற்று ஏதோ பூவை நீவுகிற தினுசுக்கு மிக நிதானமான வேகத்தில் அவரது நரைத்த தலையில் வகிடெடுத்தபடி வீசிக் கொண்டிருந்தது.
பால்கனியில் இருந்து பார்க்க முடிந்த வயல்வெளியில் நண்டைத் தேடி அலையும் கொக்குக்கூட்டம் ஒன்று, பறக்கிறதா இல்லை அந்தரத்தில் நீந்துகிறதா என்பது தெரியாதபடி திரிந்துகொண்டிருந்தது.
கோபால் அதை எல்லாம் ரசிக்காமல் ரத்னசபாபதி சொன்னதில் தூண்டில் போட ஆரம்பித்திருந்தான்.
இத்தனை வருஷம் இல்லாம இப்ப என்ன மாமா திடீர்னு குலதெய்வம் கோயில் பூசை?
காரணமிருக்கு கோபால். உங்கப்பாகிட்டையும் விவரமா பேசணும். எனக்கு நீதான் ஒரு உதவி செய்யணும்.
சொல்லுங்க
சந்திரமோகனை எப்படியாவது மொட்டை போட சம்மதிக்க வைக்கணும்.
அது அவ்வளவு கஷ்டமா மாமா?
"கஷ்டம்தான் கோபால். படிப்பு, வளர்ப்பு, வேலை, வாழ்க்கை எல்லாமே அவன் வரைல, மேல்நாடுன்னே ஆயிடுச்சு.
நம்ம குடும்ப பழக்கவழக்கம், நம்ம நம்பிக்கைங்க, வழிபாடுங்க எதுவுமே தெரியல அவனுக்கு. நம்ம நம்பிக்கைகளைச் சொன்னாலே கசந்து வழியறான். ஆனா எதுக்குமே கைகூப்பியிராத அவனை இப்ப காலம் ஒரு விஷயத்துக்காக கைகூப்ப வெச்சிருக்கு. அவனோ முடியாதுங்கறான்!"
என்ன மாமா, என்னென்னவோ சொல்றீங்க?
உள்ளதைத்தான் சொல்றேன்.
மீண்டும் பெருமூச்சுடன் புதிர் போட்ட அந்த மனிதர், பால்கனிக்கு வெளியே எதிரில் ஒருபுறம் தென்னையும் ஒருபுறம் வயலுமாய் தெரியும் ஆயிரம் வேலிக்காட்டை ஒருவித தேடலுடன் பார்த்தார்.
யாரைப் பார்க்கறீங்க மாமா...?
சொல்றேன்… சொல்றேன்…
ரத்னசபாபதி தொடர்ந்து பார்வையைத் துழாவவிட்டார்.
வயல் வரப்பில் தொலைவில் ஒருவன் கட்டைக் காலுடன் கெந்திக் கெந்தி வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்க்கவும் அவர் முகத்தில் ஒருவித பரவசம். காதுக்குள்ளே குடும்ப ஜோதிடர் கிருஷ்ணன் பணிக்கர் சொன்னது ஒரு ஓட்டம் ஓட ஆரம்பித்தது.
நீங்க உங்க குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடப் போங்க. போன இடத்துல போய்ச் சேர்ந்த பதினைந்தாவது நிமிஷத்துல ஒரு கால் இல்லாத முடவன் உங்க கண்ணுல பட்டா குலதெய்வத்தோட கருணை உங்களுக்கு கட்டாயமாக உண்டு… இல்லேன்னா…!
2
ர
த்னசபாபதி முகத்தில் தெரிந்த பரவசமும் அவர் கண்ணில் மளுக்கென்று தொற்றிக்கொண்ட ஒருவித வெளிச்சமும் கோபாலுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
மாமா… என்ன மாமா எதுக்காக அந்த காலில்லாதவனைப் பார்த்து இவ்வளவு சந்தோஷப்பட்றீங்க. என்ன விஷயம் மாமா?
பால்கனி கைப்பிடிச் சுவரின் மேல் ஏறி அமர்ந்தபடி கேட்டான்.
பணிக்கர் சொன்னபடியே எல்லாம் நடக்குது. பணிக்கர் பணிக்கர்தான்!
-அவர் பதில் அவனைக் கொஞ்சம் குழப்பியது.
யார் அந்த பணிக்கர்?
குடும்ப ஜோசியர் கோபால்… சும்மா சொல்லக் கூடாது, பணிக்கர் நல்ல தெய்வாம்சமுள்ள சோதிடர் தான்.
அவருக்கும் நீங்க காலில்லாத வைத்தியலிங்கத்தைப் பார்த்ததுக்கும் என்ன சம்பந்தம்?
நிறைய இருக்கு கோபால். அதான் சொன்னேனே உங்ககிட்ட நிறைய்ய பேசணும்.
உங்க பேச்சு, கவலை, அப்புறமா உங்க பரவசம்… எனக்கு எல்லாம் ஒரே புதிரா இருக்கு… என்ன விஷயம் மாமா…?
கோபாலை, ரத்னசபாபதி கொஞ்சம் பெருமூச்சோடு பார்த்தார். அவர் சொல்ல நினைத்த விஷயங்களை அவருக்குள் ஓட ஆரம்பித்தன!
சந்திரமோகன் நல்ல அழகு! மணிரத்னம் கூட அவனை தன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டதாக கேள்வி. ஆனால் அவனோ நடிப்பை மறத்துவிட்டு படிப்பு பெரிது என்று அமெரிக்கா போய் படித்து முடித்ததில் இன்று அவன் ஒரு நம்பர் ஒன் சாஃப்ட்வேர் எஞ்ஜினீயர்.
போன இடத்தில் சேலம் உமாகாந்த் என்பவரின் இருபத்தி இரண்டு வயசுப் பெண்ணான ஸ்ரீமதி மேல் காதல் கொண்டு, அமெரிக்காவிலேயே லிவர்மோர் எனும் ஊரில் உள்ள இந்து கோவில் ஒன்றில் வைத்து அவளைத் திருமணமும் செய்து கொண்டான். அப்புறமாய்த்தான் அப்பா ரத்னசபாபதிக்கே தெரியும். அதன்பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
ரத்னசபாபதிக்கு முதலில் கோபம் எகிறியது. பிறகு டீ.P எகிறியது. அதன்பின் எல்லாமே ஒரு பத்து பதினைந்து நாளில் சரியாகி அரை மனசாக அவன் கல்யாணத்துக்கு ஒப்புதல் கொடுத்தார். அவர் கொடுத்தார் என்பதை விட கொடுக்க வைக்கப்பட்டார் என்றால் சரியாக இருக்கும்.
கிரீன் சிக்னல் கிடைக்கவும் சந்திரமோகனும் ஸ்ரீமதியோடு சென்னைக்குத் திரும்பி வந்து அவர் காலில் விழுந்து எழுந்தான். அப்படியே சேலம் வரை போய் ஸ்ரீமதியின் அப்பா உமாகாந்த் காலிலும் விழுந்து எழுந்தனர்.
காதல் திருமணங்கள் அங்கீகாரத்திற்குத் தவிப்பது பெரும்பாலும் மிடில் கிளாஸில்தான். மேல் மட்டம் அதிகபட்சம் பதினைந்து நாளில் சமாதானமாகி சரியாகி விடுகிறது.
அப்புறமென்ன…? திரும்பவும் அமெரிக்கா. ஃபோர்ட் காரில் பயணம், சொகுசான வாழ்க்கை என்று நாளும் ஓட ஆரம்பித்தது. ஆனால் ஓரே ஒரு விஷயம் மட்டும் தள்ளிக் கொண்டே போனது. (போய்க் கொண்டும் இருக்கிறது!)
ஸ்ரீமதியால் ஒரு தாயாக முடியவில்லை! இப்படி ஒரு சிக்கலின்போது டாக்டர்களிடம் போகாமல் இருப்பார்களா என்ன?
அதிலும் சந்திரமோகன் மாசம் ஐந்து லட்ச ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிக்கும் ஒரு சூப்பர் குபேர வருமானப் பேர்வழி. ஸ்ரீமதியும் இந்திய ரூபாய் மதிப்புக்கு இரண்டு மூன்று லட்சம் சம்பாதிக்கிறாள். எனவே அமெரிக்காவிலேயே நம்பர் ஒன் எனும் டாக்டரிமே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருவரும் போய் அவரைச் சந்தித்தார்கள்.
அவரும் செமன் டெஸ்ட்டிலிருந்து ஒரு டெஸ்ட் பாக்கி இன்றி செய்து பார்த்துவிட்டு, ஒரு கோளாறும் இல்லை சந்திரா. அற்புதமாக இருக்கு, இரண்டு பேரோட உயிர்த்துளிகளும். அப்படி இருக்க ஏன் குழந்தை பிறக்கலேங்கறது தான் ஆச்சரியமாக இருக்கு. இந்த மாதிரி இடங்கள்ள கடவுள்தான் இரண்டு கண்ணையும் போட்டுகிட்டு நல்லா எட்டிப்பார்க்கறாரு. ஸோ நீ போய் அவர்கிட்ட முறையிடு. இனிமே அவர் மனசு வெச்சாதான்…
என்று கூறிவிட்டார்.
அந்த டாக்டரிடம் போனதில் இரண்டு விஷயங்கள் சந்திரமோகனுக்குத் தெரிந்து போயிற்று. ஒன்று தங்களிடம் எந்தக் குறையும் இல்லை. அடுத்தது கடவுளை நம்பச் சொல்லும் டாக்டர்கள் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். இப்படியாக கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஓடிவிட்ட கையோடும் புதிதாகத் தெரிந்த அந்த இரண்டு விஷயங்களோடும் இந்தியா திரும்ப நேரிட்டது.
அப்போது ஸ்ரீமதியைப் பார்ப்பவர்கள் முதலில் கேட்ட கேள்வியே ‘நீ எப்படி இருக்கே?’ எனும் நலன் விசாரிப்பு இல்லை. ‘இன்னுமா உன் வயத்துல ஒரு புழு பூச்சி வரலை?’ என்பதுதான்.
அப்போதெல்லாம் சந்திரமோகனுக்கு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியது போல கோபம் வரும்.
எங்களுக்குக் குழந்தை வேண்டாம்னு முடிவு செய்திருக்கோம் அதான் பெத்துக்கலை…
என்று அப்படிக் கேட்டவர்கள் வாயை அடைக்கப் பார்த்தான். அவர்களோ ஒரு அவுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். பின் பக்கமாய்ப் போய் ‘என்ன கோளாறோ என்ன குந்தகமோ?" என்று வாயை மெல்லவும் ஸ்ரீமதியால் தாள முடியவில்லை. ஒருநாள் ‘ஓ’ என்று வாய்விட்டு அழுது விட்டாள். அது ரத்னசபாபதியை ரொம்பவே பாதித்து விட்டது. இந்த மாதிரி தருணங்களில் தானே பலரும் ஜாதகத்தைக் கையில் எடுப்பார்கள்?
ரத்னசபாபதியும் இருவர் ஜாதகத்தையும் கையில் எடுத்தார். கிருஷ்ணன் பணிக்கர் என்று ஒரு