Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Veedu Pootti Kidakkirathu
Oru Veedu Pootti Kidakkirathu
Oru Veedu Pootti Kidakkirathu
Ebook111 pages1 hour

Oru Veedu Pootti Kidakkirathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூட்டிக் கிடக்கும் வீட்டில் , பிடிபடாத மர்மங்கள்...அதன் தொடர்ச்சியாக மரணங்கள். அதன் காரணம் அறியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் காவலர்கள். திகிலுடன்,அந்த வீட்டின் கதவை திறந்து பார்ப்போமா...? ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்....

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580100406744
Oru Veedu Pootti Kidakkirathu

Read more from Rajesh Kumar

Related to Oru Veedu Pootti Kidakkirathu

Related ebooks

Related categories

Reviews for Oru Veedu Pootti Kidakkirathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Veedu Pootti Kidakkirathu - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது

    Oru Veedu Pootti Kidakkirathu

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    தாரிகா... உனக்கு போன் வந்திருக்கு, சென்னையில் இருந்து!

    வேதாசலம் உள்ளே இருந்து குரல் கொடுக்க,

    தங்கை விஜயாவுக்குத் தலை வாரி ஜடை பின்னிக் கொண்டிருந்தவள் குபீரென்று எழுந்தாள்.

    மனசுக்குள் சந்தோஷம் கும்மி அடித்தது.

    நாலே எட்டில் தாழ்வாரத்தைக் கடந்து உள்ளே ஓடிப் போய், அப்பாவின் கையிலிருந்த ‘ரிசீவரை’ வாங்கிக்கொண்டு மூச்சு வாங்கினாள்.

    வேதாசலம் சிரித்தார். உன்னோட வீட்டுக்காரர்தாம்மா பேசறார். ரெண்டு நாளா போனே பேசலைன்னு சொல்லிட்டிருந்தியே... இன்னிக்கு போன் வந்தாச்சு. பேசு. சொல்லிக்கொண்டே, இங்கிதம் தெரிந்து அந்த அறையில் இருந்து அவர் நழுவ,

    தாரிகா டன் டன்னாய் உற்சாகம் கொப்பளிக்கும் குரலில் அந்த தொலைபேசியே அதிர்ச்சியில் தெறித்துப் போய்விடுகிற மாதிரி கத்தினாள்.

    என்னங்க... நான்தான் தாரிகா...! மறுமுனையில் அவளுடைய கணவன் புஷ்பராஜ் சிரித்தான்.

    அம்மாடி! நீ இருக்கிற நெறிஞ்சிக்குடியை டெலிபோன்ல பிடிக்கிறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சி. இந்த போன் அழைப்புக்காக ரெண்டு மணி நேரமா காத்துட்டிருக்கேன்.

    இப்ப எங்கிருந்து பேசுறீங்க?

    ஆபீஸில் இருந்துதான்.

    மணி ஏழாகப் போகுது. இன்னும் ஆபீஸ்லதான் இருக்கீங்களா?

    மானேஜர் ஒரு முக்கியமான வேலையைக் குடுத்துட்டுப் போயிட்டார். அந்த வேலையை முடிச்சுட்டு, இன்னிக்கு ராத்திரியே நான் திருவனந்தபுரம் கிளம்பிப் போகணும்.

    என்னது, திருவனந்தபுரம் புறப்பட்டு போறீங்களா?

    ஆமா.

    எதுக்கு?

    ஒரு பார்ட்டிகிட்டே ரொம்ப நாளா பெரிய தொகை நிலுவை இருக்கு. அதை வசூல் பண்ற பொறுப்பை மானேஜர் என்கிட்டே கொடுத்துட்டார். நாலு நாள் ஆனாலும் அங்கேயே தங்கி இருந்து, பணத்தை வாங்கிட்டு வரும்படியா எனக்கு உத்தரவுபோட்டிருக்கார்.

    அப்படின்னா நாலு நாள் கழிச்சுதான் வருவீங்களா?

    சொல்ல முடியாது. ‘பார்ட்டி’ பணம் கொடுத்தா, உடனே புறப்பட்டு வந்துருவேன். இல்லேன்னா இருந்து வாங்கிட்டு வர வேண்டியதுதான்! ஆமா, நீ என்னிக்கு சென்னை வரப்போறே? அம்மா வீடு இன்னமும் உனக்கு சலிக்கலையா?

    என்னங்க இது? நெறிஞ்சிக்குடிக்கு வந்து மூணு நாள்தானே ஆச்சு. இன்னும் நாலஞ்சு நாள் இருந்துட்டு வர்றேனே...!

    சரி. சாவகாசமா வா. நான் வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கிட்டுப் போயிடறேன். நீ உன்கிட்டே இருக்கிற சாவியை உங்க அம்மா வீட்ல மறந்து வெச்சுட்டு வந்துடாதே. அப்புறம் தெருவில் நிற்க வேண்டியது வந்துடும்.

    நீங்க திருவனந்தபுரத்திலே இருந்து எப்பத் திரும்புவீங்கன்னு நிச்சயமாகத் தெரியாதா?

    தெரியாது.

    அங்கிருந்து போன் பண்ணுங்களேன்.

    என் போனையெல்லாம் எதிர்பார்த்திட்டிருக்காதே. உங்க அம்மா வீட்ல இன்னும் நாலு நாள் தங்கிட்டு, சென்னை புறப்பட்டு வந்துடு. நாம இருக்கிற பகுதியில் அடுத்த வாரத்தில் இருந்து புது ‘ரேஷன் கார்டு’ குடுக்கப் போறாங்களாம். ‘ரேஷன்’ ஆட்கள் வர்ற நேரத்திலே வீடு பூட்டியிருந்தா நமக்கு ‘கார்டு’ கிடைக்காதாம்.

    சரி... சரி புலம்பாதீங்க! வர்ற திங்கட்கிழமை ராத்திரி இங்கிருந்து புறப்படறேன், போதுமா?

    துணைக்கு யாரையாவது கூட்டிக்கிட்டு வா.

    என் தங்கச்சி விஜயாவைக் கூட்டிக்கிட்டு வரட்டுமா? அவளுக்கு காலேஜ் எல்லாம் முடிஞ்சு லீவு விட்டிருக்காங்க.

    கூட்டிட்டு வாயேன்.

    அப்புறம்?

    சொல்லு.

    சாப்பாடெல்லாம் எங்கே சாப்பிடுறீங்க?

    வாய்லே தான்.

    இந்த அறுவை ‘ஜோக்’கெல்லாம் வேண்டாம். ஓட்டல்ல சாப்பிடுறீங்களா? ஆபீஸ் விடுதியில் சாப்பிடுறீங்களான்னு கேட்டேன்.

    ரெண்டுமே கிடையாது.

    பின்னே?

    ஆபீஸ் ‘ஸ்டெனோ’ ஸ்வர்ணா வீட்டுக்கு...

    என்ன சொன்னீங்க?

    அடடா! அதுக்குள்ளே அவசரப்படுறியே? ஆபீஸ் ‘ஸ்டெனோ’ ஸ்வர்ணா வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு நாயர் கடை இருக்கு. அங்கேதான் மூணு நேரமும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.

    வெளியே மட்டன், சிக்கன் சாப்பிடாதீங்க.

    சரி.

    நண்பர்கள் வீட்டுக்கு சீட்டாடவோ, பீர் குடிக்கவோ போயிடாதீங்க.

    சரி.

    அப்புறம்...?

    சீக்கிரம் சொல்லு. ரெண்டு நிமிஷம் பேசியாச்சு.

    ஆபீஸ் போன்தானே? இன்னும் ரெண்டு நிமிஷம் பேசினா குடியா முழுகிடும். ஆபீசுக்காக எவ்வளவு கஷ்டப்படுறீங்க?

    சரி... சரி! விஷயத்தைச் சொல்லு.

    திருவனந்தபுரத்தில் இருந்து நீங்க வரும்போது, மலையாளப் பெண்கள் கட்டுற மாதிரி ஒரு சாண் அகலத்துக்கு சரிகை போட்ட சேலை ஒண்ணை எடுத்துட்டு வாங்களேன்.

    ஹலோ! கொஞ்சம் பலமாப் பேசு. கடைசியா நீ பேசினது எனக்குக் கேக்கவே இல்லை.

    மறுபடியும் தாரிகா அதே வாக்கியத்தை கத்திச் சொன்னாள்.

    புஷ்பராஜ் பரிதவித்துக் கத்தினான்.

    ம்ஹும்! நீ சொல்றது காதில் விழலை. பலமாப் பேசு.

    எனக்கு ஒரு சேலை, திருவனந்தபுரத்தில் இருந்து.

    ஹலோ... ஹலோ...

    "எதையாவது வாங்கிட்டு வரச் சொன்னாப் போதும்.

    Enjoying the preview?
    Page 1 of 1