Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kaal Suvadu Thodargirathu...!
Oru Kaal Suvadu Thodargirathu...!
Oru Kaal Suvadu Thodargirathu...!
Ebook89 pages52 minutes

Oru Kaal Suvadu Thodargirathu...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரபல தொழிலதிபர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து குத்திக்கொலை செய்யப்படுகிறார். தன் தந்தையின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸின் துணை நாடுகிறாள். இதில் பல இடர்பாடுகளை சந்திக்கிறாள்.அவள், தன் முயற்சியில் வெற்றி பெற்றாளா....இல்லையா?

வாசிப்போம் ராஜேஷ்குமாரின் பரபரப்பான நடையில்...

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580100406743
Oru Kaal Suvadu Thodargirathu...!

Read more from Rajesh Kumar

Related to Oru Kaal Suvadu Thodargirathu...!

Related ebooks

Related categories

Reviews for Oru Kaal Suvadu Thodargirathu...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kaal Suvadu Thodargirathu...! - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    ஒரு கால்சுவடு தொடர்கிறது…!

    Oru Kaal Suvadu Thodargirathu…!

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ஃப்ளைட் ஜிவ்வென்று கீழே இறங்குவதை உணர்ந்தாள் ராகினி. எலிப்ஸ் வடிவ ஜன்னலில் ரன்வே ப்ரவுன் கார்ப்பெட்டாய் தெரிந்தது. திரும்பி - சரியாய் ஐந்து மணி நேரத்துக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் பழக்கமான மந்தாகினியின் தோளைத் தொட்டு உசுப்பினாள்.

    மந்தாகினி கண்ணைத் தேய்த்தாள்.

    இன்னும் தூக்கமா? சென்னை வந்தாச்சு.

    அவள் முகத்தைக் கையால் வழித்துவிட்டு மணிக்கட்டைப் பார்த்தாள். சீக்கோவின் வண்ண டயலின் மேல் ஓடிப்பிடித்துக் கொண்டிருந்த முட்கள் 5.55ஐக் காட்டின.

    இப்பதான் ஃப்ளைட் ஏறினமாதிரி இருக்கு. நேரம் போனதே தெரியலை.

    இப்படி இமாலயத் தூக்கம் போட்டுட்டு வந்தா நேரம் போறது எப்படித் தெரியும்? எனக்குத் தூக்கமே வரலை. செமத்தியான போர்.

    சொன்ன ராகினி அந்த நிமிஷம் கிழக்கு வான விளிம்பில் உதயமாகிக்கொண்டிருந்த புதுச் சூரியனின் இளம் மஞ்சள் நிறத்தை அப்படியே பெற்றிருந்தாள். பளபளவென்றிருந்த தலைப்பிரதேசத்திலிருந்து ஒரு கொத்து முடிக்கற்றை அவள் கன்னப்பரப்பில் வந்து விழுந்து, முகத்துக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

    ப்ரீஃப்கேஸை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மந்தாகினியைப் பார்த்துக் கேட்டாள்:

    உன்னை ரிசீவ் பண்றதுக்கு யாராவது வருவாங்களா?

    ம்... என்னுடைய ஹப்பி வருவார். இந்த ஆறு மாசத்துல ரொம்பவும் தவிச்சுப் போயிருப்பார்! உன்னை ரிசீவ் பண்ண யார் வருவாங்க?

    அப்பா வருவார். அப்புறம்...

    சில விநாடி நிதானித்துவிட்டு ராகினி மறுபடியும் சொன்னாள்:

    இன்னொருத்தரும் வரலாம்.

    இன்னொருத்தர்?

    கேட்டபடி நிமிர்ந்து அவளை ஏறிட்ட மந்தாகினி, அவளின் செர்ரிப்பழமாய் சிவந்து போயிருந்த முகத்தைப் படித்துவிட்டுப் புன்னகைத்தாள்.

    என்ன காதலா?

    ம்...

    "உங்க ஃபாதருக்கு இந்தக் காதல் விவகாரம் தெரியுமா?'

    இது வீட்டுக்குத் தெரியாத காதல்!

    இன்ட்ரெஸ்டிங். அவர் பேரென்ன?

    சுதாகர்.

    என்ன பண்ணிட்டிருக்கார்?

    சொந்தமா பிஸினெஸ்.

    அவரோட பேரன்ஸுக்குத் தெரியுமா!

    அவருக்கு அம்மா மட்டும் இருக்காங்க. கிராமத்தில் இருக்கற அவங்களுக்கும் இந்த விஷயம் தெரியாது. இந்த தடவை எல்லாருக்கும் தெரியப்படுத்தி மேரேஜுக்குத் தலையாட்ட வெக்கணும்.

    புன்னகையோடு ராகினி சொன்னபோது, விமானம் நின்று மற்ற பயணிகள் இறங்க ஆரம்பித்ததை உணர்ந்தார்கள். எழுந்தார்கள். இணைக்கப்பட்ட ஸ்டேர்ஸில் சரிந்தார்கள்.

    லவுஞ்சுக்கு வந்தபோது அந்தக் குரல் கேட்டது.

    மந்தாகினி...

    மந்தாகினி திரும்பிப் பார்த்து, குப்பென்று சந்தோஷத்துக்குப் போனாள்.

    ராகினி... என் ஹப்பி வந்துட்டார்.

    ராகினி திரும்பிப் பார்த்த பக்கம், ஜெர்கின் அணிந்திருந்த - கையில் ஹெல்மெட்டை அதக்கியிருந்த - மந்தாகினியின் கணவன் தெரிந்தான். ரிசீவ் பண்ண லவுஞ்சில் காத்திருந்த ஏராளமான ஜனங்களிடையே அவன் பளிச்சென்று தெரிந்தான்.

    மந்தாகினி சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு அவன் கையைப் பற்றினாள். ஆறுமாதமாய்ப் பிரிந்து விட்ட ஏக்கம் - இரண்டுபேரும் அழுத்தமாய்க் கையைப் பற்றியிருந்த விதத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது. சுற்றுச் சூழ்நிலையில் யாருமே இல்லாமலிருந்திருந்தால் ஒரு டூயட் பாடுகிற வேகம் இருந்தது.

    ஜர்னி எப்படி இருந்தது?

    நல்லா தூங்கிட்டேன்.

    நீ வரப்போற சந்தோஷத்துல நாலுநாளா எனக்குத் தூக்கமே சுத்தமா இல்லை தெரியுமா?

    ‘க்கும்' என்று தொண்டையைச் செருமினாள் ராகினி.

    சுதாரிப்புக்கு வந்தாள் மந்தாகினி.

    உங்களைப் பார்த்த சந்தோஷத்துல மறந்துட்டேன். இது மிஸ் ராகினி. சிங்கப்பூர் ஏர்போர்ட்ல பழக்கம். ஜர்னில ராகினிதான் எனக்கு கம்பெனி.

    தூங்கறதுக்கா?

    மூன்று பேரும் சிரித்தார்கள்.

    அவர்களோடு பேசிக்கொண்டே ராகினி லவுஞ்ச் முழுக்க பார்வையைச் சுழலவிட்டாள். அப்பா ஜகதீஸ்வரனைத் தேடினாள்.

    மந்தாகினியின் கணவன் விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான்.

    "மிஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1