Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ratthamillatha Manithan
Ratthamillatha Manithan
Ratthamillatha Manithan
Ebook144 pages54 minutes

Ratthamillatha Manithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ratthamillatha Manithan

Read more from Rajeshkumar

Related to Ratthamillatha Manithan

Related ebooks

Related categories

Reviews for Ratthamillatha Manithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ratthamillatha Manithan - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ரிசப்ஷன் அமர்க்களமாய் ஆர்க்கெஸ்ட்ரா முழக்கத்தோடு உற்சாகமாய் இருந்தது. 'நெலா அது வானத்து மேலே, பலானது ஒடத்து மேலே' என்று சுரேந்தர் உருண்டை மைக்கை கையில் வைத்துக் கொண்டு பாடிக் கொண்டிருக்க, ராஜ கணேசன் எழுந்து டையை இறுக்கிக் கொண்டு எழுந்தார்.

    என்ன... புறப்பட்டுட்டீங்க...? இருந்து நைட் டின்னர் சாப்பிட்டுப் போலாமே...? கல்யாண வீட்டைச் சேர்ந்த ஒரு நபர் ராஜ கணேசனின் கையைப் பிடித்துக் கொள்ள, ஸாரி... நான் அவசரமா திருச்சி போகணும்... இவ்வளவு நேரம் இருந்தது பெரிசு... வீட்ல வேற ஒய்ப் காத்திட்டிருப்பா... சொல்லிக் கொண்டே கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே வந்தார் ராஜ கணேசன். மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தார். எட்டு மணி. இருட்டறை ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் கார்களும் ஸ்கூட்டர்களும் அடைசலாய் நின்றிருக்க ஐம்பதடி தள்ளி இருட்டில் நின்றிருந்த தன் காரை தேடிக் கொண்டு போனார்.

    காரை நெருங்கியவர்

    ஆச்சர்யப்பட்டார்.

    நிலா தவறியிருந்த வானம்.

    நேரம் 10.45.

    தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை போகும் மாநில நெடுஞ்சாலை. சுற்றிலும் பரவியிருந்த கார்பன் பேப்பர் இருட்டில் முப்பத்தியிரண்டாம் நெம்பர் புளிய மரத்தின் கீழ் நின்றிருந்தது அந்த லாரி. அதன் முதுகு பூராவும் அம்பாரமாய் குவிக்கப்பட்ட கருங்கற்கள். ஒவ்வொன்றும் செம கனம் எம கனம். முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு லாரியின் கேபினுக்குள் ஸ்டீரியங்கைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த ஹீராவின் உதடுகளினின்றும் கெட்டியாய் பீடிப்புகை வழிந்து கொண்டிருக்க அவனுடைய பார்வை தீர்க்கமாய் நெடுஞ்சாலையின் கோடி வரைக்கும் விழுந்திருந்தது.

    இந்த முப்பது வயது ஹீராவைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் சொல்ல வேண்டும். சாராயக்கடையைப் பார்த்த இடத்திலேயே லாரியை நிறுத்தி விட்டு முன்னூறு மில்லி போட்டுக் கொள்ளாத ஒரு டிரைவர் உண்டென்றால் அது ஹீராதான். நெடுஞ்சாலையின் புளிய மரங்களுக்குப் பின்னால் நின்று மல்லிகை மணத்தோடு 'பலான' வேலைக்கு கூப்பிடும் பெண்கள் கண்டு கொள்ளாத ஒரு டிரைவர் உண்டென்றால் அது ஹீராதான். ரோட்டோர புரோட்டா கடைகளில் மற்ற டிரைவர்கள் கொத்துக் கறியும் சிக்கன் ரோஸ்ட்டும் புரோட்டாவுக்கு தொட்டுக் கொள்ள ஆர்டர் செய்யும் போது வெஜிடபிள் குருமாவுக்கு ஆர்டர் பண்ணும் ஒரு டிரைவர் உண்டென்றால் அது ஹீராதான்.

    அந்த உத்தமமான டிரைவர் ஹீரா இன்னும் அரைமணி நேரத்தில் செய்யப் போகிற ஒரு வேலையைக் கேட்டால் உங்கள் புருவங்கள் ஆச்சர்யத்தால் மேலேறும். அவரவர் தாய் பாஷைகளில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவீர்கள். ஹீரா பண்ணப் போகிற அந்த வேலை?

    ஒரு கொலை.

    கையில் இருந்த கடைசி சென்டி மீட்டர் சின்ன பாரதிக் கொடி பீடியை வீசிவிட்டு லாரியின் கேபினிலிருந்து கீழே இறங்கி நின்றான், ஹீரா. ஆறடி உயர் உடம்பு. மேலுதட்டை மறைக்கிற அளவுக்கு ஆரோக்கியமான

    மீசை. முரட்துத்தனமான காக்கி பேண்ட், காக்கி சர்ட். வலது கை மணிக்கட்டில் ஒரு செம்பு வளையம்.

    ஹீராவின் பார்வை நெடுஞ்சாலையின் இருட்டை துளைத்த அதே நேரம் கொஞ்சம் தொலைவில்

    வித்தியாசமான ஹார்ன் சத்தத்தோடு ஒரு பைக் ஹெட்லைட் வெளிச்சத்தோடு பிரசவமாகி பீறிட்டுக் கொண்டு வந்தது.

    'த்தட் த்த்ட்' என்று சில விநாடி நேரத்தில் அவனை நெருங்கியது. நின்று புகைவிட்டது. பைக்கின் மேல் ஆரோகணித்திருந்தவன் இரண்டு பக்கமும் கால்களை ஊன்றிக் கொண்டான்.

    ஹீரா கேட்டான்:

    என்ன ரஹ்மான்... பார்ட்டி புறப்பட்டாச்சா...?

    புறப்படற நேரம்... சரியா அஞ்சு நிமிஷம் கழிச்சு லாரியை ஸ்டார்ட் பண்ணிக்க... மெதுவா ஒட்டிகிட்டு போ... ஹவுஸிங் யூனிட்டையும், டான்டெக்ஸ் பனியன் கம்பெனியையும் தாண்டி ரோட்டோரமா மரத்துக்குக் கீழே லாரியை நிப்பாட்டிக்க... ராஜ்தூத் பைக். பைக்கோட முகப்புல ரெண்டு சைடும் நீல நிற லைட். சைலன்ஸர் கொஞ்சம் அதிகமா சத்தம் போடும்... இந்த அடையாளம் போதுமா? இன்னும் ஏதாவது வேணுமா...?

    பைக்ல வர்றது யாரு...?

    அந்த விபரமெல்லாம் உனக்கு வேண்டாம். லாரியை செம வேகத்துல கிளப்பிகிட்டுப்போய்பைக்கையும் அதுல வர்றவனையும் , சட்னியாக்கிறதுதான் உன்னோட வேலை... சட்னியாக்கிட்டு எந்த காரணத்தைக் கொண்டும் லாரியை நிறுத்திடாதே... போயிட்டே இருக்கணும்.

    ஹீரா சட்டையின் மேல் பாக்கெட்டில் இருந்த பீடிக்கட்டிலிருந்து ஒரு பீடியை உருவி வாயில் பொருத்திக் கொண்டு பைக்கில் உட்கார்ந்திருந்தவனை ஏறிட்டான்.

    பைக்ல வர்ற ஆசாமி ஆக்ஸிடெண்ட்ல செத்தது மாதிரி காட்டணும். அவ்வளவுதானே?

    ஆமா...

    கச்சிதமா முடிச்சுடறேன்...

    புதுக்கோட்டை போய் சேர்ந்ததும் லாரியை ஏதாவது ஒரு ஆத்தோரமா நிறுத்தி கழுவிடு... இல்லேன்னா ரத்தக்கறைகள் உன்னைக் காட்டிக் கொடுத்துடும்...

    எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்... நீ கவலைப்படாமே போய்கிட்டே இரு. சொல்லிக் கொண்டே ஹீரா லாரிக்குள் தாவி ஏறினான்.

    பீடியின் தலைக்கு தகனம் நடத்தி கன்னிப் புகையை விட்டுக் கொண்டே இக்னீஷியனை உசுப்பி ஸ்டீரியங்கைப் பிடித்தான்.

    லாரி தன் சக்கரங்களை உருட்டியது.

    2

    காரின் பின்பக்க கதவு லேசாய் திறந்திருக்க அந்த இடைவெளியில் கால் ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது.

    ராஜ கணேசன் லேசாய் கோபத்திற்குப் போனார். ஏய்... யாரது...? கேட்டுக் கொண்டே

    Enjoying the preview?
    Page 1 of 1