Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meluguvatthigal
Meluguvatthigal
Meluguvatthigal
Ebook153 pages32 minutes

Meluguvatthigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465568
Meluguvatthigal

Read more from Rajeshkumar

Related to Meluguvatthigal

Related ebooks

Reviews for Meluguvatthigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meluguvatthigal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    பி -5 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு, சங்கர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு வந்த சங்கர சுப்பிரமணியன் எழுதிக் கொள்ளும் கடிதம். நீங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் நிமிஷம் நான் இந்தக் குடிசையின் உத்தரத்திலிருந்து - நாக்கு வெளித் தள்ளி - கண்கள் பிதுங்கி மகா கோரமாய்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பேன். என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. என் மனம் ரொம்ப நாட்களுக்கு முன்பே இறந்து போன காரணத்தினால் - இன்று உடலையும் மண்ணுக்குக் கொடுக்க விரும்புகிறேன். நான் இறந்த பிறகு என் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்குக் கொண்டுபோவீர்கள் என்பது தெரியும். போஸ்ட் மார்ட்டம் முடிந்த பின் - என் உடம்பை மூட்டையாய்க் கட்டி - குதிரை வண்டியில் ஏற்றி - நொய்யல் ஆற்றுச் சுடுகாட்டுக்குக் கொண்டு போய்ப் புதைத்து விடாதீர்கள். என் உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் - மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களாக அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு வேலையில்லா பட்டதாரியின் உடல் - மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவட்டும்.

    இப்படிக்கு மனம் இறந்து போன

    சங்கர சுப்பிரமணியன்

    மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் கடிதத்தை எழுதி முடித்த - சங்கர சுப்பிரமணியன் - அந்தக் கடிதத்தின் வாசகங்களை மறுபடியும் ஒரு தடவை படித்துப் பார்த்தான். பிறகு அதை நான்காய் மடித்துச் சட்டைப் பையில் செருகிக் கொண்டு - சற்று முன்னால் மொய்தீன் பாய் கடையில் வாங்கிய இரண்டு மீட்டர் தாம்புக் கயிற்றுச் சுருளை எடுத்துக் கொண்டான்.

    குடிசையை இரண்டாய்ப் பிரித்த - உத்தரத்துக்குக் கயிற்றை வீசி - ஸ்டூலின் மேல் ஏறி நின்று இறுக்கமாய் முடிச்சுப் போட்டான்.

    இப்போது கயிறு '0' என்று சொல்லியபடி ஊசலாடியது. சங்கர சுப்பிரமணியன் மெதுவாய் நடந்து போய் - குடிசையின் மூலையிலிருந்த பானையில் - தண்ணீரை மொண்டு ஒரு வாய் குடித்தான். பிறகு அன்றாடம் வணங்கும் புகை படிந்து போன முருகர் படத்துக்கு முன்னால் வந்து நின்றான்.

    முருகா! சில பேர் பேசும்போது இப்படிச் சொல்வாங்க. 'அந்தக் கடவுளே வந்தாலும் கூட இதைச் செய்ய முடியாது!’ன்னு... அப்படி உன்னால் செய்ய முடியாத காரியங்களில் எனக்கு வேலை வாங்கித் தர முடியாத காரியமும் ஒண்ணுங்கிறதை நான் இப்போ புரிஞ்சுக்கிட்டேன். தினமும் உன்னோட படத்துக்கு முன்னாடி நின்னு உன்னைக் கெஞ்சிட்டிருக்க என்னால முடியாது. நான் போறேன். அடுத்த ஜென்மத்துல மனுஷனா பொறக்க வைக்காதே. சாக்கடையில் நெளியற புழுவா பொறக்க வை...

    கண்ணீரால் நிரம்பி விட்ட கண்களைத் துடைத்துக் கொண்டே ஸ்டூலின் மேல் ஏறி நின்றான், சங்கர சுப்பிரமணியன்.

    கயிற்றின் '0'வுக்குள் தலையை நுழைத்து - கயிறு கழுத்தை இறுக்கும்படியாய்ச் சுருக்கிட்டுக் கொண்டான். சாகும்போது யாரை நினைத்துக் கொள்ளலாம்?

    'என்றைக்கோ செத்துப்போன அம்மா அப்பாவையா?'

    'போன மாதம் செத்துப்போன தங்கை விஜயாவையா...?' யோசித்துக் கொண்டிருந்த அதே நிமிஷம் - குடிசைக்கு வெளியே - வாசலில் ஏதோ சத்தம். தொடர்ந்து...

    டொக்... டொக்...

    கதவை யாரோ தட்டும் சத்தம்.

    சங்கர சுப்பிரமணியன் கழுத்தில் மாட்டின கயிறோடு அப்படியே நின்றான். மனசுக்குள் யோசனை பரபரவென்று ஓடியது.

    'இந்நேரத்திற்கு யார் வந்து கதவைத் தட்டுகிறார்கள்?'

    டொக்... டொக்.

    இந்தத் தடவை கதவு கொஞ்சம் வேகமாய்த் தட்டப்பட்டது. தொடர்ந்து ஒரு கட்டையான குரல் கூப்பிட்டது.

    சங்கர சுப்பிரமணியன்!

    கழுத்திலிருந்து சுருக்கைத் தளர்த்தி - தலையை விடுவித்துக் கொண்டு வேகவேகமாய் நடந்து போய் - கதவை நெருங்கி - தாழ்ப்பாளை விலக்கினான். வெளியே இருட்டில் யாரோ நின்றிருந்தார்கள்.

    யாரது...?

    இருட்டில் நின்றிருந்த அந்த நடுத்தர வயது ஆசாமி - வெளிச்சத்திற்கு வந்தான். கலைந்த தலை. முகத்தில் மினுமினுப்பாய் வியர்வை. உலர்ந்து போன உதடுகளை அசைத்து அவன் கேட்டான்.

    நீங்கதானே சங்கர சுப்பிரமணியன்?

    ஆமா...

    உங்களை டாக்டர் சீதாராமன் கூட்டிகிட்டு வரச் சொன்னார்.

    எதுக்கு...?

    தெரியலை...

    நீங்க யாரு?

    நான் அவரோட கார் டிரைவர். கொஞ்சம் சீக்கிரம் வந்தீங்கன்னா பரவாயில்லை. டாக்டர் உங்களைக் கையோட கூட்டிட்டு வரச் சொன்னார்.

    குடிசைக்குக் கொஞ்சம் தள்ளிக் கார் நின்றிருந்தது.

    சரி... நீங்க போய்க் கார்ல இருங்க. நான் வீட்டைப் பூட்டிக்கிட்டு வந்துடறேன். - சொன்ன சங்கர சுப்பிரமணியன் உள்ளே போய்ச் சட்டைப் பையிலிருந்த லெட்டரை எடுத்து - மேஜை டிராயருக்குள் போட்டு விட்டு - பூட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். அந்த மரக் கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு காரை நெருங்கினான்.

    டிரைவர் காரின் பின் கதவைத் திறந்து விட்டான். சங்கர சுப்பிரமணியன் உள்ளே போய் மெத்தென்ற சீட்டில் அமுங்கி உட்கார்ந்தான்.

    அரை நிமிஷம் தாமதமாகியிருந்தாலும் - நான் தூக்குக் கயிற்றில் - ஊசலாடிக் கொண்டு இருந்திருப்பேன். ஆனால் இந்த நிமிஷம் கார் பயணம்.

    'டாக்டர் சீதாராமன் எதற்காகக் கூப்பிட்டிருப்பார்?'

    கார் வேகம் பிடித்து - க்ராஸ்கட் ரோட்டில் சீறி - நார்த் கோயமுத்தூரைத் தொட்டு, கௌலி பிரவுன் சாலைக்குள் நுழைந்து - மரங்கள் அடர்ந்த அந்த நர்சிங் ஹோமின் முன்னால் தன் என்ஜின் உதறலை நிறுத்திக் கொண்டது.

    டிரைவர் இறங்கிக் காரைத் திறந்துவிட - சங்கர சுப்பிரமணியன் தயக்கமாய்க் கீழே இறங்கி நின்றான்.

    "உள்ளே போங்க

    Enjoying the preview?
    Page 1 of 1