Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sikappu Tajmahal
Sikappu Tajmahal
Sikappu Tajmahal
Ebook308 pages1 hour

Sikappu Tajmahal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sikappu Tajmahal

Read more from Rajeshkumar

Related to Sikappu Tajmahal

Related ebooks

Related categories

Reviews for Sikappu Tajmahal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sikappu Tajmahal - Rajeshkumar

    26

    1

    மனிதர்கள் மட்டுமல்லாது, பறவைகளும், விலங்கினங்களும் பிற ஜீவராசிகளும்கூட கனவு காண்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய கனவுகள் அதிகாலைப் பொழுதில் கண்டால் பலிதமாகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. பொதுவாக பகலில் காணும் கனவு பலிதமாவதில்லை. சிலவகை நல்ல கனவுகள் கெடுபலன்களையும், சிலவகை கெட்ட கனவுகள் நற்பலன்களையும் அளிக்கக் கூடியவை என்று நம் முன்னோர் ஆய்ந்து அறிந்து உரைத்துள்ளனர். அன்றாட நிகழ்வுகளின் ஆழ்மன பாதிப்பே உறக்கத்தில் கனவாக வருகின்றன என்றும், மனதில் எண்ணும் எண்ணங்களே கனவுகளாக வருகின்றன என்றும், பலவகையான கருத்துக்கள் அறிவு பூர்வமாக சிந்தித்து தற்போது கூறப்பட்டு வருகின்றன.

    பௌர்ணமி வெளிச்சத்தில் தாஜ்மஹால் நனைந்து கொண்டிருக்க, யமுனா நதிக்கரையோரத்தில் மெல்ல நடை போட்டுக் கொண்டிருந்தார்கள் நிகிலும் நித்யாவும்.

    நித்யா...!

    என்னடா...? நித்யாவின் உடம்பில் காதல் ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து ஓவராக கலாட்டா செய்ய ஆரம்பித்தால் இப்படித்தான் அவள் ‘டா’ போட்டுப் பேசுவாள்.

    உனக்குத்தான் ஹைக்கூ கவிதை எழுத வருமே! இப்போ பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் நனைஞ்சுட்டிருக்கிற இந்த தாஜ்மஹாலைப் பத்தி ஒரு ஹைக்கூ சொல்லேன்...

    சொன்னா பரிசு உண்டா...?

    உண்டு...

    என்ன பரிசு...?

    மொதல்ல ஹைக்கூ...

    நோ... நோ... பைனான்ஸ் கம்பெனிக்காரன் மாதிரி நீ ஏமாத்திடுவே. மொதல்ல பரிசு என்னான்னு சொல்லு

    க்ளூ தரட்டுமா...?

    சரி...

    பரிசுப் பொருளோட கடைசி எழுத்து ‘ம்’.

    அடேய் காமாந்தகா...! முத்தத்தைக் கொடுத்து ஏமாத்திடலாம்னு பார்க்கறியா...?

    அய்யய்யோ... முத்தம் இல்லை...!

    பின்னே...?

    மோதிரம்! வைர மோதிரம்... இதோ பார்...! தன் இடது கை மோதிர விரலை நித்யாவுக்குக் காட்டினான் நிகில். நிலா வெளிச்சத்தில் குட்டி சூரியனாய் ஜொலித்தது அது. கீர்த்திலால் காளிதாஸில் வாங்கியது. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்..."

    நான் சொல்ற ஹைக்கூ நல்லாயிருந்தா இந்த மோதிரத்தை எனக்கு போட்டுவிடுவியா...!

    கண்டிப்பா...!

    மவனே... ஏமாத்தக்கூடாது..!

    சேச்சே...!

    கவிதையைக் கேட்டுக்கோ...

    சொல்லு...

    நித்யா நின்று தாஜ்மஹாலையும் நடுவானில் வெள்ளித்தட்டாய் தெரிந்த நிலாவையும் பார்த்தாள். பத்து வினாடி கண்மூடித் திறந்தாள். சொன்னாள்.

    "காதல் கடவுளுக்கு

    நிலவின் நேர்த்திக் கடன்.

    பனிரெண்டு மணிநேர

    பாலாபிஷேகம்."

    நிகில், நித்யாவையே பிரமிப்பாய்ப் பார்த்தான். அவனுடைய நிலைத்த கண்களுக்கு முன்னால் தன் வலது கை விரல்களை ஆட்டிக் கொண்டே நித்யா கேட்டாள்.

    எப்படி ஹைக்கூ...?

    வாவ்...!

    வைர மோதிரம்...?

    எங்கே விரலை நீட்டு...!

    நித்யாவின் இடதுகை மோதிர விரல் நீண்டது. நிகில் தன் விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றி அவள் விரலில் போட்டான்.

    தாஜ்மஹாலுக்கு நன்றி சொல்லணும்...! நித்யா தன் விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்துவிட்டு தாஜ்மஹாலைப் பார்த்தாள்.

    லேசாய் முகம் மாறினாள். குரல் மெதுவாய் நடுங்கியது. நி... கி... ல்...!

    என்ன... நித்யா...?

    தாஜ்மஹாலைப் பாரு...

    பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்...! ஏன் நித்யா திடீர்ன்னு நெர்வஸ் ஆயிட்டே?

    நிகில்...! தாஜ்மஹாலோட உச்சிப் பகுதியைப் பாரு...! சிவப்பா ஸ்டிக்கர் பொட்டு மாதிரி ஒரு புள்ளி தெரியுதா?

    தெரியலையே...!

    எனக்குத் தெரியுது...! அந்தப் புள்ளி கொஞ்சம் கொஞ்சமா பெரிசாகுது!

    நிகில் திடுக்கிட்டான். நித்யா...! நீ என்ன சொல்றே? என்னோட கண்ணுக்கு எந்த சிகப்புப் புள்ளியும் தெரியலையே..?

    இப்ப பாரு நிகில். அந்த சிகப்பு தாஜ்மஹாலோட இடது பக்கமும் வலது பக்கமும் வேகமா பரவுது.

    நித்யா...! வாட் ஈஸ் ராங்க் வித் யூ...! தாஜ்மஹால் அப்படியேதான் இருக்கு... சிவப்பா மாறலை...!

    நோ... நிகில்... தாஜ்மஹாலின் பாதிப் பகுதி இப்போ சிவப்பாயிடுச்சு... ஏதோ... ரத்தத்துல குளிச்ச மாதிரி...!

    நித்யாவையே பயமாய்ப் பார்த்தான் நிகில். அவள் தாஜ்மஹாலையே வெறிக்கப் பார்த்தாள். அது வேகமாய் சிவப்பாக மாறிக்கொண்டு வர -

    நித்யாவுக்கு சட்டென்று விழிப்பு தட்டியது. உடம்பு முழுக்க வெள்ளமாய் வியர்த்துப் போயிருக்க - இதயம் தாறுமாறாய் துடித்துக் கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தாள். கட்டில் சத்தம் போட்டது. சுவர்க் கடிகாரத்தில் மணி 11.45. பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த நித்யாவின் அக்கா அமிர்தா சத்தம் கேட்டுத் திரும்பினாள்.

    என்ன நித்யா..?

    ஒண்ணுமில்லேக்கா... ஏதோ பூச்சி மேல ஊர்ந்துபோன மாதிரி இருந்தது.

    லைட்டைப் போடட்டுமா...?

    வேண்டாம்... அது போயிடுச்சு...!

    நித்யா கட்டிலுக்கு மறுபடியும் சாய்ந்தாள். மனசு பலமாய் யோசித்தது. ‘கடந்த இரண்டு வார காலத்தில் இந்த சிகப்பு தாஜ்மஹால் கனவு எனக்கு வருவது நான்காவது தடவை... எனக்கு ஏன் இந்தக் கனவு வர வேண்டும்?’

    அதற்குப் பிறகு நித்யா தூங்கவில்லை.

    மறுநாள் காலை பதினோரு மணி.

    சைக்யாட்ரிஸ்ட் சந்திரமௌலிக்கு முன்பாய் உட்கார்ந்திருந்தாள் நித்யா. ஏஸி அறையிலும் புருவங்களுக்கு மேல் வியர்த்து இருந்தாள். சந்திரமௌலி ஒரு வெள்ளைத்தாளையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார்.

    கடந்த ரெண்டு வார காலத்துல அந்த சிகப்பு தாஜ்மஹால் கனவு நாலாவது தடவையா வந்திருக்கு இல்லையா...?

    ஆமா டாக்டர்...

    ஒரே மாதிரியான கனவு...?

    ஆமா...!

    கொஞ்சம் கூட மாறுதல் இல்லை..?

    இல்லை...

    அந்த பாலாபிஷேக ஹைக்கூ கவிதையில் கூட மாற்றம் இல்லை...?

    இல்லை...!

    தாஜ்மஹால் சிவப்பாக மாறியதும் கனவு சட்டென்று சினிமாவில் இடைவேளை விடற மாதிரி கட்டாயிடும். இல்லையா?

    ஆமா டாக்டர்...!

    நீ என்ன தொழில் பண்றேம்மா...?

    ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்டாயிருக்கேன்.

    எந்த ஹோட்டல்?

    ப்ளு பெல் இண்ட்டர்நேஷனல்.

    நிகில் உன்னோட காதலரா...?

    ஆமா...

    அவரும் உன்கூட வந்திருக்காரா...?

    எஸ்... வெளியில் உட்கார்ந்திட்டிருக்கார்.

    சந்திரமௌலி இண்ட்டர்காம் ரிஸீவரை எடுத்து வெளியே இருக்கும் ரிசப்ஷனிஸ்ட்டிடம் பேச, அடுத்த இரண்டாவது நிமிடம் நிகில் உள்ளே வந்தான்.

    குட்மார்னிங் டாக்டர்...

    வாங்க மிஸ்டர் நிகில். உட்கார்ங்க நித்யாவுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காட்ட, அவன் உட்கார்ந்தான். கேட்டான்.

    நித்யாவுக்கு எதனால அப்படியொரு கனவு ரிப்பீட்டடா வருது டாக்டர்?

    டோண்ட் வொர்ரி... கண்டு பிடிச்சுடலாம். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட சில கேள்விகள்...

    ப்ளீஸ் டாக்டர்.

    எத்தனை வருஷமா ரெண்டு பேரும் காதலிக்கறீங்க?

    கடந்த ரெண்டு வருஷகாலமா.

    நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தாஜ்மஹாலைப் பார்க்கப் போயிருக்கீங்களா...?

    இல்லை.. நான் ஃப்ரண்ட்ஸோட தனியா போயிருக்கேன். அதே மாதிரி நித்யா காலேஜ்ல படிக்கும்போது ஆக்ரா, டெல்லி போயிருக்கா...!

    நீங்க வேலைக்குப் போறீங்களா... இல்லை பிசினஸா...?

    பிஸினஸ்! அப்பா பிரதாப்சந்தர்க்கு ஏகப்பட்ட பிசினஸ். அவருக்கு உதவியா நான் இருக்கேன்.

    உங்க வீட்டுக்கு இந்த காதல் தெரியுமா?

    தெரியாது.

    நித்யா! உன்னோட வீட்ல...?

    எனக்கு அம்மா - அப்பா கிடையாது. அக்கா மட்டுந்தான். அக்காவுக்கு இன்னும் விஷயம் தெரியாது.

    நிகில்! உங்க காதலுக்கு எதிர்ப்பு இருக்கும்னு நினைக்கிறீங்களா?

    ஷ்யூர்!

    எதிர்ப்பு வந்தா என்ன பண்ணப்போறீங்க?

    போராடி ஜெயிக்கணும்.

    முடியுமா?

    ஒரு நம்பிக்கைதான்! நிகில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனுடைய ஜீன்ஸ் பேன்ட்டில் இடம் பிடித்திருந்த செல்போன் முனகிக் கூப்பிட்டது.

    எக்ஸ்க்யூஸ்மீ... டாக்டர்!

    ஸோ வாட்... பேசுங்க...

    நிகில் செல்போனை காதுக்கு ஒட்ட வைக்க, மறுமுனையில் அவனுடைய அப்பா பிரதாப்சந்தரின் குரல் கேட்டது.

    நிகில்! நீ இப்போ எங்கேயிருக்கே?

    பீச் ரோட்டில் காரில் போயிட்டிருக்கேன்.

    இன்னிக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கு நீ ஃப்ரீயா?

    ஃப்ரீதான் டாடி...!

    நீயும் நானும் பெசன்ட் நகர் வரைக்கும் போறோம்.

    எதுக்கு...?

    நீ கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணை நீயே பார்க்கலைன்னா எப்படி...?

    நிகில் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு அதிர்ச்சியாய் எழுந்தான்.

    டாடி...! என்ன சொல்றீங்க...?

    அடுத்த வாரம் திருநீர்மலையில் வேல் க்ரூப்ஸ் கம்பெனியின் எம்.டி.கனகவேலோட பொண்ணு மிருதுளாவுக்கும் உனக்கும் கல்யாணம். ரெண்டு நாள் கழிச்சு ராணி சீதை ஹாலில் ரிசப்ஷன்.

    நோ... டாடி...!

    எஸ்’ன்னு சொல்லு. உன்னோட டாடிக்கு இந்த உலகத்திலேயே பிடிக்காத ஒரு சின்ன வார்த்தை இந்த ‘நோ’தான்.

    டா... டி...!

    சரியா பத்து நிமிஷம் கழிச்சு போன் பண்ணுவேன். அப்ப நீ ‘எஸ்’ன்னு சொல்லணும்.

    மறுமுனையில் ரிஸீவர் கவிழ்ந்து கொள்ளும் சத்தம் கேட்டது.

    2

    கனவில், கனவு காண்பவரின் உடம்பில் இருந்து இரத்தம் எடுப்பது போல் கனவு கண்டால், அவரைப் பிடித்து இம்சித்து வந்த நோய்நொடிகள் யாவும் நீங்கிக் குணம் உண்டாகும். உடல் நலம் பெற்று ஆரோக்கிய வாழ்க்கை அமையும். இரத்தத்தில் புரண்டு எழுவதுபோலக் கனவு கண்டால் எதிர்பாராத வகையில் செல்வம் கிடைத்திடும். வறுமை நீங்கி சுபிட்சம் நிலவிடும். இரத்தம் குடிப்பதுபோல் கனவுகண்டால் தகாத வழிகளில் ஈடுபடுவதோடு அடுத்தவர் உடமைகளை அபகரித்து வாழும் பாவியாக வாழும் நிலையை அடைய நேரிடும்.

    நிகில் செல்போனை காதில் ஒட்ட வைத்துக் கொண்டு அப்படியே உறைந்துபோய் உட்கார்ந்திருக்க, நித்யா கேட்டாள்.

    போன்ல யாரு நிகில்... உங்கப்பாவா...?

    ம்...

    முகம் ஒரு மாதிரி ஆயிடுச்சு... ஏதாவது பிரச்னையா?

    ஒண்ணுமில்லை... கம்பெனியில் ஒரு அட்மினிஸ்ட்ரேஷன் ப்ராப்ளம்... சாயந்தரம் அஞ்சு மணிக்கு போர்டு மீட்டிங். அப்பா என்னையும் வரச்சொன்னார். நான் ‘நோ’ன்னு சொன்னதும் டென்ஷன் ஆயிட்டார்.

    அப்பா கூப்பிட்டா போக வேண்டியதுதானே... எதுக்காக ‘நோ’ன்னு சொல்லணும்..?

    இன்னிக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கு நாம ஒரு கல்ச்சுரல் ப்ரோக்ராமுக்குப் போக முடிவு பண்ணி, ரெண்டு ஐநூறு ரூபாய் டிக்கெட் வாங்கி வெச்சிருக்கோம் மறந்துட்டியா...?

    கல்ச்சுரல் ப்ரோக்ராமைவிட போர்டு மீட்டிங் முக்கியம் இல்லை...?

    எனக்கு அது முக்கியமா படலை...

    அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த டாக்டர் சந்திரமௌலி, பேச்சில் குறுக்கிட்டார்.

    யூ... ஆர் ராங் மிஸ்டர் நிகில்...! இந்த வயசுல உங்களை மாதிரியான இளைஞர்களுக்குக் காதலைத் தவிர மற்ற எல்லா விஷயங்களுமே அற்பமாகத் தெரியலாம். அந்த மனோபாவம் தப்பு. ஒரு கம்பெனியின் போர்டு மீட்டிங் நடக்கும்போது அந்த கம்பெனியின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டராக இருக்கிற நீங்க அதை அட்டெண்ட் பண்ணவேண்டியது மிகமிக முக்கியம். வாழ்க்கையைக் கொஞ்சம் சீரியஸா - ப்ராக்டிகலா திங்க் பண்ணிப் பார்க்கணும். அதைப் பொழுது போக்கா நினைக்கக் கூடாது...

    வெரி ஸாரி டூ ஸே திஸ் டாக்டர்... எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படக் காரணமே நித்யாதான். நித்யாவோடு இருக்கிற நிமிஷங்கள்தான் எனக்குப் பிடிச்சிருக்கு... பிசினஸ் விஷயமா நான் மேற்கொள்ள வேண்டிய எத்தனையோ வெளிநாட்டுப் பயணங்களை நித்யாவைப் பிரிஞ்சு இருக்கணுமேங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக ‘போஸ்ட்பாண்ட்’ பண்ணியிருக்கேன்.

    ஸீம்ஸ் டு பி ஹெவி இடியாட்டிக்...

    மே... பி...! ஐ அக்ரி வித் யூ டாக்டர்... நிகில் தோள்களைக் குலுக்கி உதட்டைப் பிதுக்க - நித்யா முகம் சிவந்து கோபப்பட்டாள்.

    நிகில்...! இன்னிக்கு நாம கல்ச்சுரல் ப்ரோக்ராம் போகப் போறதில்லை... நீ போர்டு மீட்டிங்கை அட்டெண்ட் பண்றே...!

    நித்யா... அது வந்து...!

    பேசாதே...! நீ போர்டு மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணலைன்னா ஒரு வாரத்துக்கு நான் உன் கண்ணிலேயே படமாட்டேன்.

    நித்யா..! இது மரணதண்டனைக்குச் சமம்...

    பேசாதே நிகில்...! நாம ரெண்டு பேரும் உயிருக்குயிரா காதலிக்கிறோம். அது உண்மை... ஆனா நீ வரவர அமராவதி மஜ்னு ரேஞ்சுக்குப் போய்ட்டிருக்கே... இந்த மூர்க்கம் வேண்டாம்...

    நித்யா தன் அழகான இடதுகை ஆள்காட்டி விரலையும் குரலையும் உயர்த்திய வினாடி,

    Enjoying the preview?
    Page 1 of 1