Anjathe Anju
By Rajeshkumar
4.5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Anjathe Anju
Related ebooks
Thaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Miss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsUn Paarvai Naan Ariven Rating: 4 out of 5 stars4/5Enna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Matroru Mahaabaratham Rating: 3 out of 5 stars3/5Nagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsPagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsUchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsOotha Nira Devathai Rating: 5 out of 5 stars5/5Kuttrangal Kuraivathillai Rating: 5 out of 5 stars5/5Onpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsNithyavin Nimishangal Rating: 5 out of 5 stars5/52000 Sathura Adi Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsAdvance Anjali Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodu...! Rating: 4 out of 5 stars4/5Thappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/51. 1. 2000 Mudhal Nimisham... Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Theera Visaarippathey Poi! Rating: 3 out of 5 stars3/5Sathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsSila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsThinam Thinam Thigil Thigil Rating: 0 out of 5 stars0 ratingsHaritha Oru AchariyaKuri! Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanam Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Anjathe Anju
2 ratings0 reviews
Book preview
Anjathe Anju - Rajeshkumar
32
1
பத்து நிமிடங்களுக்குப் பிறகு பவித்ரா சிவந்துபோன முகத்தோடு –நந்தனம் அருகே இறங்கிக் கொண்டாள். "சாரி’ சொல்லிவிட்டு அவள் நகர்ந்து போனதும் கிருஷ்ணசந்தர் காரைக் கிளப்பினான்.
ராங்கிகாரி
பிரசன்னா திட்டினான்.
அவள் கேட்டது நியாயமான கேள்விதானே மிஸ்டர் பிரசன்னா?
எப்படி நியாயம்? எந்தக் குற்றத்தை எவன் பண்ணினாலும் கடைசியில் சட்டத்தோட பிடியில் மாட்டித்தான் ஆகணும்கிற கருத்தைச் சொல்றேனே… அது தப்பா…?
நீங்க சொல்றபடி பார்த்தால் குற்றம் பண்ணினவன் யாருமே தப்பிக்க முடியாதுன்னு சொல்றீங்க…?
ஆமா…
கிருஷ்ணசந்தர் சிரித்தான், கொஞ்சம் முன்யோசனையும், ஜாக்கிரதையும் இருந்தா அழகா ஒரு கொலையை பண்ணிட்டு – சட்டத்துக்கு டாட்டா காட்டிட்டே போயிட்டிருக்கலாம்…
அப்படி இல்லை… காதலையும், இருமலையும் மறைக்க முடியாதுன்னு சொல்லுவாங்க… அதே மாதிரிதான் செஞ்ச கொலையும்… சட்டத்தோட இரும்புப் பிடிக்கும் அவன் சிக்காமே போகமாட்டான்...
காரை ரோட்டோரமாய் நிறுத்தினான் கிருஷ்ணசந்தர். புன்னகையோடு திரும்பிப் பார்த்தான்.
பிரசன்னா… நீங்களும் நானும் ஒரு பந்தயம் போட்டுக்கலாமா…?
பந்தயமா… என்ன பந்தயம்…?
அழகா… அற்புதமா… நான் ஒரு கொலை பண்றேன்… சட்டத்தோட கண்கனை கட்டிட்டு – அதனோட பிடிக்கு சிக்காமே தப்பிக்கிறேன்…. பந்தயம் வெச்சுக்கலாமா…?
பிரசன்னா மவுனமானான்.
2
காருக்குள் சரியாய் அரைநிமிட நேரம் மவுனம் நிலவியது. கிருஷ்ணசந்தர் பின்சீட்டிலிருந்த பிரசன்னாவை திரும்பிப் பார்த்துச் சிரித்தான்.
என்ன பிரசன்னா… மவுனமாயிட்டீங்க?
நீங்க சொன்னது எனக்கு அதிர்ச்சியா இருக்கு…
இதிலென்ன அதிர்ச்சி இருக்கு? எவ்வளவோ விஷயங்களுக்கு பந்தயம் வெச்சுக்கிறோம். நான் ஒரு வியாபாரி. எந்த நேரத்துலே எதை செஞ்சா லாபம் வரும்னு யோசிக்கிறவன். நீங்க உங்களோட வாதத்துல பிடிவாதமா இருக்கீங்க. நான் என்னோட வாதத்துல பிடிவாதமாயிருக்கேன். இதுல யார் ஜெயிக்கப் போறாங்கன்னு பார்க்க வேண்டாமா?
பிரசன்னா கைத்துண்டால் தன் வியர்த்த முகத்தை துடைத்துக் கொண்டார். காய்ந்து போன உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
இது கோலி விளையாட்டு இல்லை கிருஷ்ணசந்தர், பந்தயம் வெச்சுக்க கொலை பண்றது அவ்வளவு சுலபம் இல்லை. அப்படியே பண்ணிட்டாலும், சட்டத்தோ பிடியிலிருந்து தப்பிக்கிறது அவ்வளவு சுபமில்லை. இன்னொரு தடவை இதையெல்லாம் மனசாலே நினைச்சுக்கூட பார்க்காதீங்க. காரை விடுங்க போலாம்..
அப்போ நீங்க தோல்வியை ஓத்துக்கணும்…
தேல்வியை ஒத்துக்கணுமா…?
ஆமா… ஒரு கொலையாளி சட்டத்தோட பிடியில் இருந்து சுலபமாக் தப்பிக்க முடியும்ன்னு நீங்க ஒத்துக்கணும்…
நோ… அதை என்னாலே ஒத்துக்க முடியாது… சட்டம் ஏதாவது ஒரு உருவத்துலே அவனைத் தண்டிச்சுதான் தீரும்… உப்பைத் தின்னவன் தண்ணீரை குடிச்சேயாகணும் என்கிற மாதிரி தப்பு பண்ணினவன் தண்டனையை அனுபவிச்சேயாகணும்…
நான் அந்த தண்டனையிலிருந்து தப்பிச்சு காட்டறேன்… முன்யோசனையா சில காரியங்களைப் பண்ணிட்டா… சட்டத்தை என்ன யாரையும் ஏமாத்தலாம்… நீங்களும், நானும் ஒரு ரகசிய பந்தயம் வெச்சுக்கலாம்… நான் பந்தயத்துல தோத்துட்டா என்னோட சொத்து பூராவையும் உங்க பேர்க்கு எழுதி வெச்சுடறேன்...
பிரசன்னாவின் கண்கள் விரிந்தன.
நீங்க விளையாடறீங்களா?
உண்மையா சொல்றேன்… எனக்கு இந்த மாதிரியான திரில் விளையாட்டெல்லாம் பிடிக்கும். ரெண்டு வருடத்துக்கு முன்னாடி கேப்டன் ராஜதுரையும், நானும் மான் வேட்டைக்காக ஆனைமலை காட்டுக்குப் போனோம்… ஆனைமலைக்கு… மேலே புல்லுமேடு ஒரு பயங்கரமான காட்டுப் பிரதேசம்… அங்கே போனா உயிரோடு திரும்ப முடியாதுன்னு காப்டன் ராஜதுரை சொன்னார். ஆனால் நான் கேட்கலை… ஒரு பந்தயம் போட்டேன்… புல்லுமேடு காட்டுக்கு நான் மட்டும் தனியா போய் – அந்த ஏரியாவில் மட்டும் வாழ்கிற கடாமான் ஒண்னை அடிச்சி கொண்டு வர்றதா சொன்னேன்…. காப்டன் ராஜதுரை முடியாதுன்னு சொன்னார். லட்ச ரூபாய் பந்தயம் வெச்சுகிட்டோம்… அந்த ராத்திரி நேரத்துலே – பத்து மணி நேரம் புல்லுமேடு காட்டுலே அலைஞ்சு ஒரு கடாமானை அடிச்சு கொண்டாந்து போட்டேன்… லட்ச ரூபாய் என் கைக்கு வந்தது."
பிரசன்னா புன்னகைத்தான்.
மானை வேட்டையாடறதுக்கும், மனிதனை கொலை செய்யறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு கிருஷ்ணசந்தர்?
என்னைப் பொறுத்தவரைக்கும் ரெண்டுமே ஒண்ணுதான்… பந்தயத்துக்கு ஒத்துக்கறீங்களா…? நான் சொன்ன பேச்சை மாறமாட்டேன்… இன்றைக்கு நிலவரப்படி எனக்கு இருபது லட்ச ரூபாய் சொத்து இருக்கு… நான் பண்ணின கொலைக்காக – போலீஸ்ல பிடிபட்டா சொத்து பூராவையும் உங்க பேர்க்கு எழுதி வெச்சுடறேன். அதே மாதிரி ஆறு மாசதுக்குள்ளே நான் போலீஸ்ல மாட்டாமே இருந்திருந்தா… உங்க சொத்து பூராவையும் என் பேருக்கு எழுதி வெச்சுடணும்… உங்க சொத்து மதிப்பு இன்றைக்கு இருக்கிற நிலவரப்படி பதினைஞ்சு லட்சம் தேறும்… இருந்தாலும் பரவாயில்லை… நாம் பந்தயத்தை வெச்சுக்கலாமா…?
கிருஷ்ணசந்தர்...
ம்…
இது விலை கொடுத்து வாங்கற விபரீதம்…
நான் அப்படி நினைக்கவில்லையே… இது ஒரு விளையாட்டு… இந்த விபரீத விளையாட்டு வெளியுலகுக்கு தெரியப் போறதில்லை. பார்வையாளர்கள் யாரும் கிடையாது. மைதானத்தில் நீங்களும் நானும் மட்டும்தான்…. நான் போலீஸ்ல மாட்டிக்கிட்டாலும் உங்களைக் காட்டித் தரமாட்டேன். நாம போட்ட பந்தயத்தைப் பத்தியும் சொல்ல மாட்டேன்..
பிரசன்னாவுக்கு லேசாய் ஆர்வம் பிறந்தது-
இப்போ பேசினதெல்லாம் தமாஷ் இல்லையே…|
நோ…. நோ… உண்மையிலும… உண்மை. நீங்க நல்லாயோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வாங்க. உங்களுக்கு ரெண்டு நாள் தர்றேன்..
சொல்லிக் கொண்டே கிருஷ்ணசந்தர் காரை நகர்த்தினான். பிரசன்னா யோசிப்பில் விழுந்தான்.
‘இவனால் ஒரு கொலையைப் பண்ணிவிட்டு எப்படி தப்பிக்க முடியும்…? போசாமல் தலையாட்டி விடுவோமா…?"
3
மறுநாள் காலை பத்து மணி.
கடற்கரையைப் பார்த்த மாதிரி இருந்த – அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஐந்தாவது மாடி 509 எண் அறை.
கீழே விரித்திருந்த ஒரு வட்டமான மெத்தையின் நடுவில் பிரசன்னா உட்கார்ந்திருக்க – சுற்றிலும் பட்ப்பிடிப்புக் குழுவைச் சார்ந்த நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். அடுத்த நாள் எடுக்கப்போகும் ஒரு காட்சியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
பிரசன்னா சொல்லிக் கொண்டிருந்தான், விஷம், கத்திக்குத்து துப்பாக்கி, நைலான் கயிறு, இது மாதிரியான உபாயங்களை கையாளாமே… கதாநாயகியை வில்லன் கொலை பண்ணனும்…. கொலை ஒரு புதுமையா அமையணும்… அந்த காட்சி என்னிக்குமே ரசிகர்களோட மனசைவிட்டு நீங்காத மாதிரி அமையணும்…
இப்படி பண்ணினா… எப்படியிருக்கும்ண்ணே?
எப்படி…?
ஏதோ ஒரு பத்திரிகையில சிறுகதை ஒண்ணை படிச்சேன்…. கதையில வர்ற நாயகி காலை நேரத்துல மாடி சன்னல் கம்பிகளை பிடிச்சுகிட்டு . வெளியே வேடிக்கை பாத்த்திட்டிருப்பா… கதையில வர்ற வில்லன் அவளை சாகடிக்கிறதுக்காக ஒரு புத்திசாலித்தனமான திட்டம் போடுவான்… அதாவது அந்த மாடி சன்னலையொட்டி – தெரு விளக்குக்கு மின்சார கம்பி ஒண்ணு போகும்… கைகளுக்கு மின்கடத்தா உறையை மாட்டிகிட்டு, கட்டிங் பிளேயராலே, அந்த மின்சாரகம்பியை வெட்டி சன்னல் கம்பியைத் தொட்டிட்டிருக்கிற மாதிரி பண்ணிடுவான்… இதையே நாம … கொஞ்சம் மாத்தி..
வேண்டாம்….
என்று கையமாத்தினான் பிரசன்னா. அந்தக் கதையை நானும் படிச்சிருக்கேன்… ஒருத்தரோட ஐடியாவைத் திருடி – காட்சியை அமைச்சா… நாளைக்கு தியேட்டர்ல படம் பார்க்கிற ரசிகன்… என்னைத்தான் திட்டுவான். சொந்த மூளையை உபயோகப்படுத்தி ஒரிஜினாலா ஏதாவது யோசியுங்க… இன்றைக்கு சாயந்தரத்துக்குள்ளே ஐடியா கிடைச்சு நாளைக்கு ஷூட்டிங் போயிடணும்… இல்லேன்னா மோகன் ஏவி.எம். படத்துக்காக காஷ்மீர் போயிடுவார். அப்புறம் அவரைப் பிடிக்க பதினைஞ்சு நாளாயிடும்…
பிரசன்னா சொல்லிக் கொண்டிருக்கும் போதே-
ரூம் பாய் எட்டிப்பார்த்தான்.
சார்… உங்களுக்கு போன் வந்திருக்கு… கரெண்ட் இல்லாததனாலே எக்ஸ்டென்ஷன் கனெக்ஷன் தரமுடியலை… சிரமம் பார்க்காமே கொஞ்சம் கீழே வர்றீங்களா சார்…?
ஓட்டல் ரூம்பாயிடம். இந்தாப்பா… எனக்கு போன்கால வந்தா… நான் இருக்கிறதா தயவுபண்ணி சொல்லிடாதீங்க… யாரோ போன் பண்ணினாலும் சரி..
எஸ் …. சார்….
என்று ரூம்பாய் தலையாட்டிய அதே விநாடி – பிரசன்னாவின் முதுகுப்பக்கம் அந்த குரல் கேட்டது.
"நீங்க இப்படி சொல்லி வைப்பீங்கன்னுதான்… நான் நேர்லேயே வந்துட்டேன்...
"பிரசன்னா திரும்பினான்.
கிருஷ்ணசந்தர் கையில் புகையும் கிரெட்டோடு நின்றிருந்தான் கிரீம் நிற சபாரி டிரஸ் அவனுடைய உடம்பிற்கு கச்சிதமாய் பொருந்தியிருந்தது.
வாங்க…. கிருஷ்ணசந்தர்..
வீட்டுக்கு போயிருந்தேன்… வேலைக்காரன் சொன்னான். நான் இங்கே வந்தது உங்களுக்கொண்ணும் தொந்தரவாய் இல்லையே..?
நோ…. நோ..
அப்படி காருக்கு போயிடலாமா…?
ம்
"ஓட்டல் போர்டிகோவினின்றும் இறங்கி – காரை நோக்கிப் போனார்கள், கிருஷ்ணசந்தர் மெல்லிய குரலில் கேட்டான்.
போன்லே உங்களை எரிச்சல் படுத்தினது. யார்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா…?
அந்த பத்திரிகை ரிப்போர்ட்டர் பவித்ரா… கிராதகி...
கிருஷ்ணசந்தர் சிரித்தான்.
அவளைத் திட்டாதீங்க பிரசன்னா…
ஏன்?
இன்னும் ஆறு மாசத்துலே திருமதி பவித்ரா கிருஷ்ணசந்தரா மாறப்போறவ?
அதிர்ந்தான் பிரசன்னா.
கிருஷ்ணசந்தர்! நீங்க என்ன சொல்றீங்க…? பவித்ராவை கல்யாணம் செய்துக்கப் போறீங்களா…? உங்களுக்குத்தான் ஏற்கெனவே கல்யாணமாகி ‘அஞ்சலா’ என்கிற பேர்ல ஆழகான பெண்டாட்டி இருக்காளே…! அவளை என்ன பண்ணப் போறீங்க…?
கொலை பண்ணப் போறேன்… நான் கொலை பண்ண தேர்ந்தெடுத்திருக்கிறது என் மனைவியைத்தான்.
கிருஷ்ணசந்தர் சொன்னதைக் கேட்டு, பிரசன்னா நெஞ்சின் மையத்தில் செமத்தியாய் ஒரு அதிர்ச்சி வாங்கினாள். உதடுகள் தன்னிச்சையாய் குரலை உயர்த்தியது.
கிருஷ்ணசந்தர் நீங்க என்ன சொல்றீங்க…?
உண்மையை சொல்றேன்….
உண்மையா…?
"ஆமா… நீங்களும் நானும் போட்டுகிட்ட பந்தயம் இந்த நிமிடத்திலிருந்து அது அமுலுக்கு வருது… என்னோட பந்தயப்படி நான் யாரையாவது கொலை செய்யணும்… வேற யாரையோ கொலை செய்யறதை காட்டிலும், என்னோட வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருக்கிற அஞ்சலாவை கொலை செஞ்சா எனக்கு நிம்மதி…
பிரசன்னா நாக்கு உலர்ந்தான். ஜில்லிட்டுப் போன உள்ளங்கைகளை கிருஷ்னசந்தரின் மேல் வைத்தான். சாரி… கிருஷ்ணசந்தர்... நான் பந்தயத்திலிருந்து விலகிக்கிறேன்… மனித உயிர் என்கிறது சாதாரண விஷயம் இல்லை… வீம்புக்காக ஒரு மனித உயிர் பலியாக வேண்டும்…?
கிருஷ்ணசந்தர் புன்னகைத்தான், என்ன பிரசன்னா…? திடீர்ன்னு பல்டி அடிக்கறீங்க… பந்தயத்துல தோத்து போயிடுவோம் என்கிற பயம் வந்துடுச்சா….?
பயமெல்லாம் ஒண்ணுமில்லை… நம்ம பந்தயத்துக்காக உங்க மனைவி பலியாகணுமா என்ன…?
இதோ பாருங்க பிரசன்னா….! ஒரு காரியம் பண்ணினா அது நமக்கு பயன் உள்ளதா இருக்கணும்… ஒரு புல்லைத் தூக்கி அந்தப் பக்கம் போட்டாலும் அதனால பத்து பைசா லாபம் உண்டான்னு பார்க்கிற வியாபாரி நான்… ஒரு கொலையைப் பண்ணும்போது லாப நஷ்டம் பார்க்க மாட்டேனா என்ன…? என்னோட மனைவி அஞ்சலாவை நான் கல்யாணமான நாளிலிருந்தே வெறுத்துட்டு வர்றேன்… அவகிட்டே இருக்கிற பணத்துக்காக மட்டுமே… அவள் மேலே பிரியம் இருக்கிற மாதிரி நடிச்சுட்டு வர்றேன்… நம்ம பந்தயத்துக்கு சரியான பலிகடா அஞ்சலாதான்… நான் திட்டம்போட்டு, துல்லியமா யாருக்கும் எந்த சந்தேகமும் வராத மாதிரி நான் அஞ்சலாவை தீர்த்துக் கட்டப் போறேன்…. உன்னோட சட்டம், போலீஸ், நீதி, நேர்மை, நியாயம் எல்லாமே என்ன பண்ணும்ன்னு பார்த்துடறேன்… அஞ்சலாவை தீர்த்துக் கட்டின ஆறாவது மாசம் பிரஸ் ரிப்போர்ட்டர் பவித்ராவை பதிவுத் திருமணம் பண்ணிகிட்டு – போலீசுக்கும் சட்டத்துக்கும் பெப்பே காட்டப்போறேன்…
பிரசன்னாவுக்கு பழைய சிலிர்ப்பு வந்தது. "அது மட்டும் உங்களாலே முடியாது கிருஷ்ணசந்தர், சட்டத்தை உங்களாலே ஏமாத்தவே முடியாது.
ஏமாத்தி காட்றேன்… பந்தயத்துக்கு நீங்க ரெடியா…?
பிரசன்னா தடுமாறினான். எனக்கென்னமோ நெஞ்சு ‘திக்திக்னு இருக்கு… கிருஷ்ணசந்தர்.
நீங்க எதுக்காக பயப்படணும் மிஸ்டர் பிரசன்னா…? கொலை செய்யப்போறது நான்,. அப்படியே உங்க சட்டம் தண்டிச்சாலும் – என்னத்தான் தண்டிக்கப்போகுது… நான் போலீஸ் கையில மாட்டின நிமிடமே… உங்க கைக்கு என்னோட சொத்து பூராவும் வந்துடும்… அதே மாதிரி ஆறுமாசத்துக்குள்ளே நான் போலீஸ் கையில மாட்டாமே இருந்தால்… உங்க சொத்து பூராவையும் என் பேருக்கு எழுதி வெச்சுடணும்…
பிரசன்னா நெற்றியைத் தேய்த்துக் கொண்டு யோசித்தான். முகத்தில் வியர்வை வேகமாய் அரும்பியிருந்தது.
என்ன பிரசன்னா யோசிக்கறீங்க…?
விபரீதத்தை விலை கொடுத்து வாங்கறமோன்னு பயமாயிருக்கு…
இது விபரீதமில்லை. விளையாட்டு. மூளையை உபயோகிச்சு எந்த காரியத்தைப் பண்ணினாலும் – அதை பிசிறில்லாமே பண்ண முடியும் ? இந்த சட்டத்தையும் போலீசையும் படைச்சது யாரு…? நாமதானே…?
பிரசன்னா தன் முகத்தை கர்ச்சீப்பால் அழுந்த துடைத்துக் கொண்டான். முகத்திற்கு ஒரு பிரகாசம் வந்திருந்தது.
சரி… நான் இந்த பந்தயத்துக்கு ஓத்துக்கிறேன். ஆனால்… ஒரு நிபந்தனை?
நிபந்தனையா? என்ன நிபந்தனை…?
நீங்க நாளைக்கு போலீஸ்ல மாட்டிக்கும்போது…. இந்த பந்தயத்தைப் பற்றி சொல்லி – போலீஸ்ல என்னைக் காட்டிக் கொடுக்க கூடாது…?
கிருஷ்ணசந்தர் சிரித்தான். நான் நிச்சயமா போலீசுல மாட்டிக்கப் போறதில்லை…. அப்படியே தப்பித் தவறி மாட்டிகிட்டாலும் உங்களைப் பத்தியோ – நம்ம பந்தயத்தைப பத்திய மூச்சு காட்டமாட்டேன்…ஓ…கே…?
எனக்கு இன்னொரு சந்தேகம்...?
என்ன…?
பிரஸ் ரிப்போர்ட்டர் பவித்ராவுக்கம், உங்களுக்கும் எப்பயிருந்து பழக்கம்…?
மூணு மாசமா…
அவள் உங்களை விரும்பறாளா…?
ரொம்ப அழகா விரும்பறா…
அந்த பவித்ராவும் உங்க திட்டத்துக்கு ஒத்துழைக்கிறாளா…?
நோ… நோ… இதுல அவள் சம்பந்தப்படவே மாட்டாள்… அவள் மட்டுமில்லை… என்னைத் தவிர வேற யாருமே இதுல சம்பந்தப்பட மாட்டாங்க… இந்த விஷயத்துல நான் யாரையும் நம்பவும் மாட்டேன்… என்னோட திட்டத்தை – என்னோட சொந்த மேடையில நான் மட்டுமே இருந்து அரங்கேற்றப் போறேன்..
அந்த நாடகத்தை யார் பார்க்காமே போனாலும் – சட்டம் மட்டுமாவது பார்த்துடும்…
பிரசன்னா...
என்ன…?
நம்ம பந்தயப்படி நான் போலீஸ்ல மாட்டிகிட்டா உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்னு உறுதி கொடுத்திருக்கேன்...
ஆமா...
அதோ மாதிரி… நீங்க எனக்கு ஒரு உறுதிமொழி தரணும்…?
என்ன?
போலீசுக்கு மறைமுகமாகவோ... வேறு யார் மூலமாகவோ கொலையைப் பத்தின தகவல் தரக்கூடாது… எனக்கு எதிராகவும் செயல்படக் கூடாது...
நிச்சயமாக மாட்டேன்…" – என்று சொன்ன பிரசன்னா தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து அந்த பர்சை எடுத்தான். பிரித்தான். பிளாஸ்டிக் பேப்பரின் உறைக்குள் இருந்த அந்த போட்டோவை கிருஷ்ணசந்தரின் முகத்திற்கு நேராய் நீட்டினான்.
இது யாரோட போட்டோ... ன்னு உங்களுக்குத் தெரியுமா?
தெரியும்… உங்க அம்மாவோட போட்டோ...
என்னோட அம்மா மேலே நான் வெச்சிருக்கிற பக்தி இந்த சினிமா உலகம் பூராவுக்கும் தெரியும்...
"எனக்கும் தெரியும்… உங்க பங்களா ஹால்ல உங்க