Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

November Raththirigal
November Raththirigal
November Raththirigal
Ebook86 pages23 minutes

November Raththirigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
November Raththirigal

Read more from Rajeshkumar

Related to November Raththirigal

Related ebooks

Related categories

Reviews for November Raththirigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    November Raththirigal - Rajeshkumar

    12

    1

    காப்பியை ஒரே மூச்சில் உறிஞ்சிவிட்டு எழுந்தான் சுபாஷ். சொன்னான்.

    அத்தை நான் புறப்படறேன்... மாமா... கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்து சேருங்க... சரியா முகூர்த்த நேரத்துக்கு வந்து சேர்ந்தீங்கன்னா எனக்கு சரியான கோபம் வந்துடும். அப்புறம் உங்கக்கூட பேசக்கூட மாட்டேன்...

    வந்துடறேண்டா பெரிய மனுஷா...! கல்யாண மாப்பிள்ளை நீயே வந்து ஸ்பெஷலா கூப்பிட்டிருக்கே... வராம இருப்போமா?... ரெண்டு நாள் என்ன. மூணு நாளைக்கு முன்னாடியே வந்து உட்கார்ந்துடறோம்... இப்போ கொடைக்கானல்ல ஆப் சீசன்தானே...? என்னோடு பேக்கரி வியாபாரமும் சரியில்லை... அத்தையையும், சாந்தாவையும் கூட்டிக்கிட்டு வந்துடறேன்...

    சுபாவின் மாமா திருஞானம் தன் பொய்ப்பல் வரிசையோடு சிரிக்க - அவருடைய மகள் சாந்தா அடுத்த அறையினின்றும் வெளிப்பட்டாள். சுமாரான அழகில் கண்களை உறுத்தாமல் இருந்தாள்.

    என்ன சுபாஷ். புறப்பட்டிங்களா...? இருந்து ராத்திரி தங்கிட்டு நாளைக்கு காலையில் புறப்படலாமே.

    நோ... நோ... இன்னும் ஏகப்பட்ட பேர்க்கு இன்விடேஷன் தரணும்... அம்மா வேற உடம்புக்கு முடியாம படுத்திட்டதினாலே, எல்லாத்தையும் நானே பார்க்க வேண்டியிருக்கு... நியாயப்படி பார்த்தா... அம்மாதான் கூப்பிட வரணும்...!

    சுபாஷ் சொல்லிக்கொண்டே - டீபாயின் மேலிருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் கவிழ்த்துக்கொண்டான் மோட்டார் பைக் சாவியை கையில் எடுத்துக்கொண்டான்...

    நான் வர்றேன்... இப்போ புறப்பட்டாத்தான் ராத்திரி பத்து மணிக்காவது மதுரை போய் சேரமுடியும்.

    பார்த்து போடா சுபாஷ்... ரெண்டு நாள் பேஞ்ச மழையில ரோடெல்லாம் படுமோசமா இருக்காம்... இன்னிக்கு காலைல கார் ஒண்ணு - கவுந்துடுச்சாம்...

    அத்தைக்காரி சத்தம் போட்டு சொல்ல - சுபாஷ் சிரித்தான்.

    சரி... அத்தை! பார்த்தே போறேன்...

    அம்மாவை கேட்டதா சொல்லு...

    சொல்றேன்

    வீட்டைவிட்டு வெளியே வந்தான் சுபாஷ். கொடைக்கானல் வெளியே குளிரோடு இருந்தது. சரிவுகளில் வெளிச்சத்தோடு வீடுகள் தெரிந்தது. தொலைவில் தெரிந்த மலைகளில் பஞ்சு பஞ்சாய் மேகம் ஒட்டிக் கொண்டிருந்தது.

    சுபாஷ் ஹோண்டா மோட்டார் பைக்கை உதைத்து அதன்மேல் பரவினான். வாசல் வரை வந்து வழி அனுப்பிய மாமாவையும், அத்தையையும் பார்த்து கையசைத்துவிட்டு விருட்டென்று கிளம்பி ரோட்டுக்குப் போனான்.

    திருஞானம் தன்னுடைய மனைவியை புன்னகையோடு பார்த்தார். கடைசியில் உன்னோட அண்ணி தன்னோடு பையனுக்கு கல்யாணத்தை நடத்தப் போறா... பொண்ணு வீடு எப்படி...? ரொம்ப வசதியோ...?

    அப்படித்தான் தெரியுது...

    தம் பையனுக்கு உன்னோடு அண்ணி எக்கச்சக்கமாய் வரதட்சணை வாங்கியிருக்காலாம். புரோக்கர் சொன்னார்...

    எவ்வளவாம்...?

    அம்பதாயிரம்.

    என்னோட அண்ணன் மாத்திரம் உயிரோட இருந்திருந்தா... சுபாஷுக்கு சாந்தாவைத்தான் கட்டி வச்சிருப்பார்...

    அம்மா...

    ரேடியோவைத் திருப்பிக் கொண்டிருந்த சாந்தா கோபமாய் எழுந்து வந்தாள்.

    ஏம்மா உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்... எனக்கும் சுபாஷுக்கும் நடக்காமபோன கல்யாணத்தைப் பத்தி பேசாதேன்னு. நீ மட்டும் கேக்க மாட்டியே...?

    எம்மனசு கேக்கலையடி சாந்தா... நீ பிறந்த அன்னிக்கே என்னோட அண்ணன் ஆஸ்பத்திரியில் எல்லார் முன்னாடியும் ‘சுபாஷுக்கு பொண்ணைத்தேட அவசியமில்லாம பண்ணிட்டியே ராஜம்’ன்னு சிரிச்சார்... அவர் சொன்ன வாக்கியம் இன்னிக்கு பொய்யா போயிடுச்சு...

    விட்டுத்தள் குப்பையை... நம்ம பொண்ணுக்கு சுபாஷைக் காட்டிலும் நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். கடவுள் காரணமில்லாம எதையும் செய்யமாட்டார்...

    சாந்தா ஏதோ சொல்ல வாயெடுத்த அதே வினாடி உள்ளே டெலிபோன் கூப்பிட்டது...

    போம்மா... யாருன்னு போய் பாரு... திருஞானம் சொல்ல சாந்தா வேக வேகமாய் போய் ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    மறுமுனையில் ஒரு பெண் குரல் கேட்டது.

    ஹலோ... அங்கே சுபாஷ் இருக்காரா...?

    இல்லே. அவர் இப்பத்தான் மதுரை புறப்பட்டுப் போனார்.

    இப்பத்தான் புறப்பட்டுப் போனாரா...? எவ்வளவு நிமிஷம் இருக்கும்?

    அஞ்சு நிமிஷம்... ஆமா நீங்க யாரு...?

    சாந்தா கேட்க கேட்க - மறுமுனையில் பட்டென்று ரிஸீவரை சாத்தினார்கள்.

    ஹலோ... ஹலோ... சாந்தா பட்டனைத் தட்டி லைனை உயிருக்கு கொண்டு வர முயற்சித்தாள்.

    லைன் ‘கொர்" என்றது.

    யாரம்மா போன்ல...?

    கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் திருஞானம்.

    யாரோ தெரியல்லேப்பா... சுபாஷைக் கேட்டாங்க. அவர் இப்பத்தான் புறப்பட்டு போறதா சொன்னேன்... நீங்க யாருன்னு கேட்கவே போனை வெச்சுட்டாங்க...

    பேசினது ஆணா பெண்ணா?

    Enjoying the preview?
    Page 1 of 1