Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirakkaaatha Jannalgal
Thirakkaaatha Jannalgal
Thirakkaaatha Jannalgal
Ebook92 pages33 minutes

Thirakkaaatha Jannalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466411
Thirakkaaatha Jannalgal

Read more from Rajeshkumar

Related to Thirakkaaatha Jannalgal

Related ebooks

Related categories

Reviews for Thirakkaaatha Jannalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirakkaaatha Jannalgal - Rajeshkumar

    15

    1

    விசாலாட்சி, இந்தக் கதை ஆரம்பிக்கும் சாயந்தர நேர ஏழு மணிக்கு மெல்லிய பதட்டத்தோடு இருந்தாள்.

    அவளுக்கு வயது ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் யாரும் அவ்வளவு சுலபத்தில் நம்ப மாட்டார்கள். எப்போதும் நெற்றி மையத்தில் அழுத்தமான குங்குமப் பொட்டுடன் காட்சியளிக்கிற பெரும்பாலும் காட்டன் சில்க் புடவைகளை விரும்பி அணிகிற அவளைப் பார்த்தால் நாற்பத்தைந்துதான் மதிக்க முடியும்.

    இந்த நிமிஷம் பதட்டத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை புடவைத் தலைப்பால் அகற்றிக் கொண்டே, டெலிபோன் எண்களை விரல் நடுங்க அழுத்திக் கொண்டிருந்தாள்.

    ‘பீய்ய்ப்...’

    ‘பீய்ய்ப்...’

    ‘பீய்ய்ப்...’

    எங்கேஜ்ட் டோன்.

    மறுபடி மறுபடி முயன்றாள்.

    ‘இந்த தடத்தில் உள்ள இணைப்புகள் அனைத்தும் உபயோகத்தில் உள்ளன. தயவு செய்து சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்.’

    ‘The root dialed by you is now buy. Please try after some time.’

    பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் தேன் தடவிய டெசிபலில் வெளிப்பட்டது.

    சற்றே சலிப்போடு ரிஸீவரை வைத்த விசாலாட்சி மீண்டும் அதைக் கையில் எடுத்துக்கொண்டு இன்னொரு நம்பருக்கு முயற்சி செய்தாள்.

    இரண்டாவது டயலில் லைன் கிடைத்தது.

    ப்ரணேஷ்... நான்தான் பேசறேன்...

    மறுமுனை ப்ரணேஷ் அந்த நேரத்தில் அவளுடைய டெலிபோன் அழைப்பை விரும்பாத மாதிரித் தொனியில் குரலை வெளியிட்டான்,

    சொல்லும்மா...

    இவ்வளவு நேரமா உன்னோட அப்பாவுக்கு போன் பண்ணிப் பார்த்தேன்... லைன் கிடைக்கவே இல்லை... அதான் உன்னைக் கூப்பிட்டேன்...

    என்ன விஷயம்னு சொல்லு...? நான் ஒரு முக்கியமான போர்டு மீட்டிங்கில் இருக்கேன்...

    தாமினி இன்னும் காலேஜிலிருந்து வீட்டுக்கு வரலைடா...

    மணி ஏழுதானேம்மா ஆகிறது...

    வழக்கமா அவ அஞ்சு மணிக்கெல்லாம் வீடு திரும்பிடுவா ப்ரணேஷ்...

    ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸ் இருந்திருக்கலாம்...

    அப்படி இருந்தா, அவ காலையிலயே சொல்லிட்டுப் போயிருப்பா...

    திடீர்னு ஏதாவது ப்ரொக்ராம் ஃபிக்ஸ் ஆகி இருந்திருக்கலாமா...

    ப்ரணேஷ்... அவ தகவல் குடுக்காம எங்கேயும் போகமாட்டாடா...

    தாமினி சின்னப் பொண்ணு இல்லை... நீ ரொம்ப கவலைப்படறே... ஒரு நாள் அசந்தர்ப்பமா லேட் ஆகறது சகஜம்தான். நீ கண்டதையும் கற்பனை பண்ணி டென்ஷன் ஆக வேண்டாம்... போர்டு மீட்டிங்கில் முக்கியமான டிஸ்கஷன் போயிட்டிருக்கு... எதுக்கும் நீ எட்டு மணி வரைக்கும் பார்த்துட்டு அப்புறம் போன் பண்ணு... அல்லது மீட்டிங் முடிஞ்சதும் நானே உனக்கு போன் பண்றேன்...

    சொல்லிவிட்டு விசாலாட்சி மேற்கொண்டு பேச வழியில்லாமல் அவனே தொடர்பைத் துண்டித்து விட்டான்.

    அவளுடைய மனசுக்குள் சிறகடிக்கத் துவங்கியிருந்த பதட்டப் பறவைகள் அவ்வளவு சுலபத்தில் ஓய்வெடுக்க மறுத்தன.

    டெலிபோன் டயரியைப் பரபரவென்று புரட்டி தாமினியுடைய வகுப்புத் தோழி ஒருத்தியின் எண்ணைத் தேடிப் பிடித்தாள்.

    ஹலோ... நான் தாமினியோட அம்மா பேசறன்...

    சொல்லுங்கம்மா... எப்படி இருக்கீங்க...?

    நல்லாருக்கேன்மா...

    என்ன விசேஷம் திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க...?

    அது... வந்து... தாமினி இன்னும் வீட்டுக்கு வரலை...

    அந்தத் தோழி குரல் நிறைய ஆச்சரியத்தைக் கொட்டியபடி கேட்டாள்.

    என்னது... தாமினி இன்னும் வீட்டுக்கு வரலையா...?

    ஆமாம்மா... அவளுக்கு ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கா...

    செமஸ்டர் இப்பதான் ஆரம்பிச்சிருக்கு... இப்போ ஏது ஸ்பெஷல் க்ளாஸ்...? அதெல்லாம் எதுவும் இல்லையே...

    காலேஜிலிருந்து கிளம்பறப்போ அவளை நீ பார்த்தியா...?

    பார்த்தேன்...

    வேற எங்காவது போகப் போறதா உன்கிட்டே ஏதாவது சொன்னாளா...?

    இல்லைம்மா... பஸ் ஸ்டாப்புக்கு என்னோடதான் நடந்து வந்தா. நான் போக வேண்டிய பஸ் வந்ததும் ஏறிப் போய்ட்டேன்... அதுக்கப்புறம் அவ எங்கே போய் இருப்பாள்ன்னு தெரியலையே...?

    விசாலாட்சியின் மனப்பரப்பு பூராவும் குதிரைப் பந்தய மைதானமாய் மாற ஆரம்பித்திருந்தது.

    மறுபடியும் கணவர் சுந்தரலிங்கத்திற்கு எண்களை அழுத்த ஆரம்பித்தாள்.

    இந்த முறை சட்டென்று லைன் கிடைத்தது.

    டெலிபோன் ஆப்ரேட்டர் பெண் இவளுடைய குரலை உணர்ந்து கொண்டு...

    மேடம்... ஒன் மினிட் ப்ளீஸ்...

    என்று சொல்லி அவருக்கு இணைப்பைக் கொடுத்தாள்.

    சுந்தரலிங்கத்தின் அடர்த்தியான குரல் ரிஸீவர் நிறையக் கேட்டது.

    என்ன விசாலாட்சி... என்ன விஷயம்...?

    தாமினி இன்னும் காலேஜிலிருந்து வரலைங்க. அவளோட ஃப்ரெண்டுக்கு போன் பண்ணிப் பார்த்தேன்... அவ காலேஜிலிருந்து அப்பவே கிளம்பிட்டாள்ன்னு அந்த ப்ரெண்ட் சொல்றா...

    சுந்தரலிங்கத்தின் வயதும், பொறுப்புணர்வும் அனுபவ முதிர்ச்சியும் ப்ரணேஷ் மாதிரி சட்டென்று விசாலாட்சியின் போனைத் தட்டிக்கழிக்க விடவில்லை.

    ஓரு சில விநாடிகளுக்கு அவரை யோசனை மவுனத்தில் ஆழ்த்தி வைத்திருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1