Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Eram Thedum Vergal and Sharmili
Eram Thedum Vergal and Sharmili
Eram Thedum Vergal and Sharmili
Ebook155 pages1 hour

Eram Thedum Vergal and Sharmili

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466176
Eram Thedum Vergal and Sharmili

Read more from Rajeshkumar

Related to Eram Thedum Vergal and Sharmili

Related ebooks

Reviews for Eram Thedum Vergal and Sharmili

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Eram Thedum Vergal and Sharmili - Rajeshkumar

    31

    ஈரம் தேடும் வேர்கள்

    1

    இரவு ஒன்பது மணியை நெருங்கியிருக்க –

    சாலையில் போக்குவரத்து கணிசமாய் காணாமல் போயிருந்தது. கடைகளில் ஷட்டர்களை வேகமாய் இழுத்து போர்த்திக் கொண்டிருந்தார்கள்.

    சோடியம் வேபர் விளக்குகள் தெரு பூராவும் இலவசமாய் மஞ்சளை இறைத்துக் கொண்டிருந்தது.

    தெரு முனையில் அந்த மாருதி வேன் திரும்பிக் கொண்டிருக்க பின் சீட்டில் உட்கார்ந்திருந்த - பவித்ரா குரல் கொடுத்தாள்.

    ட்ரைவர்! ஒரு நிமிஷம் வேனை நிறுத்துங்க.

    வேன் ரோட்டோரமாய் ஒதுங்கி நின்றது. பவித்ரா கீழே இறங்கி பஸ் ஷெல்டரை நோக்கிப் போனாள்.

    பவித்ராவுக்கு சுமார் இருபது வயது இருக்கலாம்.

    அடிக்கடி பட்டிமண்டபக் கூட்டங்களுக்கு போகிறவர்கள் அவளைப் பார்க்க நேர்ந்தால் அவர்கள் மனதில் கீழ்க்கண்ட பட்டிமண்டப தலைப்புகள் தோன்றும்.

    1. அழகு என்கிற வார்த்தை பவித்ராவின் வட்ட முகத்திற்கா இல்லை பௌர்ணமி நிலவிற்கா?

    2. பக்கத்தில் சென்றால் பளீரென்று ஈர்த்துக் கொள்வது பவித்ராவின் கண்களா...? அல்லது காந்தமா?

    3. மென்மை என்ற வார்த்தைக்கு சரியான உதாரணம் பவித்ராவின் உதடுகளா? அல்லது ரோஜா இதழ்களா...

    பஸ் ஷெல்டரை நெருங்கினாள் பவித்ரா. தோளில் போட்ட துண்டோடு பஸ் வரும் திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவரை நெருங்கி மெல்ல குரல் கொடுத்தாள்.

    அப்பா.

    பெரியவர் சட்டென்று திரும்பினார். கண்கள் உடனடி பிரவாகத்திற்கு போயிற்று.

    பவித்ரா.

    எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கிங்களா?

    ஆமாம்மா...

    எவ்வளவு நேரமா நின்னுட்டிருக்கீங்க?

    இப்பத்தாம்மா வந்து நின்னேன். மணி எட்டரை ஆயிடுச்சு. இன்னும் உன்னைக் காணோம்ன்னு பதட்டமாயிருந்துச்சு. வீட்ல உட்கார்ந்துட்டிருக்க முடியலை... பஸ் ஸ்டாப்பிலிருந்து இந்நேரத்துக்கு மேல நீ தனியாத்தானே இருட்லே நடந்து வரணும். துணையா இருக்குமேன்னு பஸ் ஸ்டாப்புல வந்து நின்னேன்.

    உடனே அம்மாவை வீட்ல தனியா விட்டுட்டு வந்துட்டீங்களாக்கும்?

    அப்பா தணிகாசலம் புன்னகைத்தார்.

    பவித்ரா லேசான கோபத்துடன் பொரிந்தாள்.

    குளிர்க்காத்து சில்லுன்னு அடிக்குது. பனி மழை மாதிரி பெய்யுது. தலைக்கு ஒரு மப்ளரைக்கூட கட்டிக்காம இப்படியா வந்து நிக்கிறது.

    இதெல்லாம் ஒரு பனியா?

    உடம்புக்கு ஏதாவது வந்தா தெரியும்.

    இந்த கட்டைக்கு ஒண்ணும் வராதும்மா.

    நான் சொல்லிட்டுத்தானேப்பா போனேன்? ஆபிஸ்ல ஆடிட்டிங் நடக்குது வர லேட்டாகும்ன்னு. இவ்வளவு நேரமா கொட்டற பனியில நின்னிருக்கீங்க. உங்க உடம்புக்கு ஒத்துக்காதே.

    படபடவென்று பொரித்தபடி பவித்ரா கோபித்தாள். தணிகாசலம் புன்னகைத்தார்.

    வயசானாலே ஏதாவது வரத்தாம்மா செய்யும் பொத்திப் பொத்தி வெச்சுகிட்டா மட்டும் உடம்புக்கு ஒண்ணும் வராமப் போயிடுமா?

    நம்ம உடம்பை ஓரளவுக்கு நாம கவனிச்சுக்கத்தான் வேணும். பஸ் ஸ்டாப்புக்கெல்லாம் வந்து நிக்க வேண்டாம்ன்னு நான் திரும்ப திரும்ப சொல்லிட்டுத்தானே போனேன்?

    நீ சொன்னே...! ஆனா எம் மனசு கேக்கலையே.

    நல்லவேளை வேன்ல போகப் போக ஒரு செகண்ட் பஸ் ஸ்டாப்பைத் திரும்பிப் பார்த்தேன். வாங்க வேனுக்கு.

    இருவரும் வேனை நெருங்கினார்கள்.

    உள்ளே உட்கார்ந்து கதவை அறைந்து சாத்தியதும், வேன் மீண்டும் இயக்கம் பெற்றது.

    லேட் ஆயிட்டா லேடி ஸ்டாஃப்பை மட்டும் ஆபீஸ் வேனிலேயே கொண்டு போய் ட்ராப் பண்ண மானேஜர் ஏற்பாடு பண்ணிட்டார். அதனாலதான் உங்களை பஸ் ஸ்டாப்புக்கெல்லாம் வந்து நிக்க வேண்டாம்ன்னு சொன்னேன்.

    அந்தத் தெருவின் அடுத்த முனையைத் தொட்டு இன்னொரு திருப்பம் திரும்பி இரண்டாவது வீட்டின் முன்னால் ஒய்ந்தது வேன்.

    பவித்ராவும், தணிகாசலமும் இறங்கிக் கொண்டார்கள்.

    வாங்க டிரைவர். காபி சாப்பிட்டுப் போகலாம்.

    பரவால்லம்மா டிரைவர் வேனை நகர்த்தினார். வேன் தெருவின் திருப்பத்தில் மறைந்ததும் வீட்டுக்குள் நுழைந்தார்கள் பவித்ராவும் தணிகாசலமும்.

    உள்ளே கட்டிலில் படுத்திருந்த அம்மாக்காரி சுப்புலஷ்மி அவசரமாய் எழுந்தாள். பத்து நிமிஷம் சேர்ந்தாற்போல நின்றிருந்தால் மூட்டில் வலி விண் விண்ணென்று தெறித்து, அன்றைக்கு இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்துவிடுகிற நோய்க்கு சொந்தக்காரி அவள்.

    பவித்ரா... தவிப்பாய் எழுந்தாள்.

    உன்னை இன்னும் காணோம்ன்னு தவிச்சுப் போயிட்டேன். கையும் ஓடலை, காலும் ஓடலை. மடியில் நெருப்பைக் கட்டிகிட்ட மாதிரி இருந்துச்சு... இப்படி ஏதாவது சொல்லி நீயும் ஒரு பாட்டம் புலம்பலை ஆரம்பிச்சிடு சொன்ன பவித்ரா வானிடி ஹேண்ட் பேகை சுவர் ஆணியில் மாட்டிக்கொண்டே புன்னகைத்தாள்.

    எங்க தவிப்பு உனக்குப் புரியாது.

    சொல்லிட்டுத்தானே போனேன். லேட்டாகும்ன்னு.

    இருந்தாலும்.

    நான் அஞ்சு வயசுக் குழந்தை இல்லைம்மா... இருபது வயசுப் பொண்ணு. நல்லது கெட்டது தெரிஞ்ச வயசு. ஏன் இப்படி அநாவசியமா கவலைப்படறீங்க.

    எத்தனை வயசானாலும் எங்களுக்கு நீ குழந்தை தான். தணிகாசலம் புன்னகையோடு மகளை ஏறிட்டார்.

    இன்னியோட உனக்கு சரியா பத்தொன்பது வயசு முடியுது. நாளைக்கு உனக்கு இருபதாவது பிறந்தநாள்... அதாவது ஞாபகம் இருக்கா?

    மறப்பேனா? என்றவள், நாசியை உறிஞ்சி இரண்டு முறை மூச்சை இழுத்தாள்.

    என்னவோ ஸ்வீட் வாசம் வருதே?

    சுப்புலக்ஷ்மியின் முகத்தில் புன்னகை.

    உன்னோட பிறந்த நாளுக்காக செஞ்சேன். உனக்குப் பிடிச்ச மைசூர்பாக்.

    ஸ்வீட் நீயாம்மா பண்ணினே?

    ஆமா.

    எவ்வளவு நேரம் ஆயிருக்கும்?

    ஏன் கேக்கறே?

    சொல்லு எவ்வளவு நேரம் ஆயிருக்கும்?

    ஒரு... அரை மணி நேரம்.

    அந்த ஸ்வீட்டை நீ செய்யத்தான் வேணுமா?

    ஏன் பவித்ரா?

    அரை மணி நேரமும் நீ நின்னுகிட்டேதானே அடுப்புல வேலை செஞ்சு இருப்பே! உனக்கே கால் முடியாம இருக்கு. மூட்டு சுத்தமா தேய்ஞ்சிருக்கு... ஒரு கோர்ஸ் மருந்து சாப்பிட்டு முடியற வரை காலுக்கு ஸ்ட்ரெய்ன் குடுக்க வேண்டாம்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார். டாக்டர் பேச்சை கொஞ்சமாச்சும் நீ சட்டை பண்றியா? அப்புறம் எப்படி உனக்கு கால் நல்லாகறது.

    அதுக்காக... எம்மக பிறந்த நாளை சும்மா விட்டுட முடியுமா?

    "உடம்புக்கு முடியலேன்னா விடத்தான் வேணும். என்கிட்ட சொல்லியிருந்தா நானே செஞ்சிருப்பேனே?

    உன்னோட பிறந்த நாளைக்கு நான் ஸ்வீட் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அதுவுமில்லாம் நீ செஞ்சு போடறதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு?

    நிமிர்ந்தாள் பவித்ரா.

    சுப்புலஷ்மி சிரிப்போடு தொடர்ந்தாள்.

    மாப்பிள்ளை வீட்டிலிருந்து தேதியைக் குறிச்சு அனுப்பிட்டாங்க. வைகாசி பதினஞ்சாம் தேதி கல்யாணம் வெச்சுக்கலாம்ன்னு முடிவு பண்ணி வர்ற இருபத்தி நாலாம் தேதி சிம்பிளா நிச்சயதார்த்தம் செஞ்சுக்கலாம்ன்னு சொல்லி விட்டிருக்காங்க.

    பவித்ராவின் முகத்தைப் பார்த்த தணிகாசலம் சின்னத் திகைப்போடு கேட்டார்.

    என்னம்மா... இதைக் கேட்டதும் ஒண்ணு சந்தோஷப்படணும் அல்லது வெக்கப்படணும். ரெண்டுமில்லாம நீ இப்படிக் கண் கலங்கிறியே?

    உங்களைப்பிரிஞ்சு போகணுமேங்கறதை நினைச்சா எனக்கு அழுகைதாம்பா வருது.

    பவித்ராவின் கண்களிலிருந்து பொலபொலவென்று நீர் சிதற ஆரம்பித்தது. தணிகாசலம் மகளின் தோளைத் தொட்டார்.

    கல்யாணம் பண்ணிட்டு எங்கேம்மா போயிடப் போறே? உள்ளூர்தானே? உன்னை அடிக்கடி பார்த்துக்கணும்ங்கற ஆசையில் உள்ளூர் மாப்பிள்ளையாப் பார்த்துப் பிடிச்சிருக்கேன்.

    அப்பா கல்யாணம்ன்னாலே எனக்கு பயம்மா இருக்கு. அது ஏன்னு தெரியலை.

    2

    ஆபீஸ் ஜுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர்கள் துடித்து துடித்து காகிதங்களை துப்ப மேஜைகள் மேல் இருந்த இண்டர்காம் முணுமுணுத்தன. ஃபைல்கள் டேபிள் விட்டு டேபிள் இடம் பெயர்ந்தன. சர்வீஸ் போட்டவர்கள் குனிந்த தலை நிமிராமல் பேனாவால் தடிமனான புத்தகங்களை உழுது கொண்டிருந்தார்கள். செக்ஷன் சூப்ரெண்டுகள் பிசினஸ் சார்ந்த நபர்களிடம் நேரிலும், டெலிபோனிலும் வெண்ணெய்போல மிருதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    பவித்ரா ஸ்பேர் பார்ட்ஸ் லெட்ஜரை மூடி வைத்து சோம்பல் முறிக்க கைகளை உயர்த்தியபோது - அட்டெண்டர் குரல் கேட்டது.

    பவித்ராம்மா... உங்களை மேனேஜர் கூப்பிட்டார்.

    பவித்ரா

    Enjoying the preview?
    Page 1 of 1