Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raavana Raajyam
Raavana Raajyam
Raavana Raajyam
Ebook113 pages33 minutes

Raavana Raajyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Raavana Raajyam

Read more from Rajeshkumar

Related to Raavana Raajyam

Related ebooks

Related categories

Reviews for Raavana Raajyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raavana Raajyam - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    நீண்டநேரம் யோசித்தபின் பொன்ராஜ் அந்த விபரீத முடிவுக்கு வந்தான். ஷிஃப்ட் முடிந்ததுமே சைக்கிளை எடுத்துக் கொண்டு - யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அந்த ராத்திரி வேளையில் சைக்கிளை மிதித்தான்.

    மஞ்சரி...!

    கணவன் சிவகணேஷ் குரலைக் கேட்டு நிலைக்கண்ணாடி முன் நின்றிருந்த அந்த அழகான மஞ்சரி சிணுங்கினாள்.

    வந்துட்டேன்...

    வா... வா... சீக்கிரமா... வா... நான் டைனிங் டேபிள்ல உட்கார்ந்தாச்சு... பசி வயித்துக்குள்ளே கொடிபிடிச்சு போராட்டம் நடத்துது

    ஒரே நிமிஷம்! வந்துட்டேன். இந்த ஸ்டிக்கர் பொட்டு சரியா ஒட்ட மாட்டேங்குது...

    அப்புறமா போய் ஒட்டிக்கலாம்... வா... மஞ்சரி... நான் கம்பெனிக்குள்ளே பத்து மணிக்கெல்லாம் இருக்கணும்

    இதோ... ஆச்சு...

    மஞ்சரி நெத்தியில் மின்னும் மாங்காய் ஸ்டிக்கர் பொட்டோடு அறையினின்றும் வெளிப்பட்டாள். வயது இருபத்தைந்துக்குள் எந்த எண்ணையும் சொல்லலாம். சற்று கறுப்புத்தான். ஆனால், களையான முகம். உடம்பின் எல்லா அவயங்களும் சாமுத்ரிகா லட்சணத்திற்கு உட்பட்டிருந்தன.

    சிவகணேஷ் விசிலடித்தான்.

    "வா...! என் கறுப்பு தேவதையே!'

    மஞ்சரி முறைத்தாள்.

    என்ன சொன்னீங்க...?

    உண்மையைச் சொன்னேன். இந்த ஒயிட் ஆர்கென்ஸா சேலையைக் கட்டிகிட்டு இன்னிக்கு நீ அமர்க்களம் பண்றே... பேசாமே கம்பெனிக்கு லீவு போட்டுட்டு இன்னிக்குப் பூராவும் உன் பக்கத்திலேயே இருந்துடலாம் போலிருக்கு...

    உதை விழும்... டைனிங் டேபிள் மேலிருந்த கரண்டியை எடுத்து ஓங்கினாள் மஞ்சரி.

    சிவகணேஷ் அவளுடையை கையைப் பிடித்து விருட்டென்று இழுக்க - மஞ்சரி அவனுடைய மடியில் ஒரு மலர்ச்சரமாய் சரிந்தாள்.

    போச்... போச்...

    என்ன போச்சு...?

    அரைமணி நேரமா கண்ணாடி முன் நின்று பண்ணிகிட்ட டச்சப் எல்லாமே போச்சு...

    மறுபடியும் பண்ணிகிட்டா போச்சு... மஞ்சரியின் கன்னத்தில் தன் முகத்தை வைத்து தேய்த்தான்.

    மஞ்சரி...

    ம்...

    பெட்ரூமுக்கு போயிடலாமா...?

    என்னங்க இது... ஆபீஸ் போற நேரத்துல...? ஒன்பதே முக்கால் மணிக்கெல்லாம் நான் எம்.டி. வீட்ல இருக்கணும். நீங்க பத்து மணிக்கு உங்க கம்பெனிக்கு போயாகணும்...

    எனக்கு தெரியுது... ஆனா மூடைக் கெடுத்துட்டியே. உன்னை இப்படியே கட்டிப் பிடிச்சிட்டிருக்கணும் போலிருக்கு...

    எல்லாம் ராத்திரிக்கு...

    ஊ... ஹும்... இப்பவேதான்...

    சொன்னா... கேட்கணும்

    மாட்டேன்...

    மஞ்சரி சிணுங்கினாள், டேய்... சிவகணேஷா! பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்... பசின்னு சொன்னியே இட்லி வெக்கட்டுமா?

    அந்த பசி போயிடுச்சு...

    உன்னை இப்போ உதைக்கப் போறேன்

    நீ என்ன பண்ணினாலும் சரி... இன்னிக்கு உன்னை விடப் போறதில்லை.

    கடிச்சுடுவேன்...

    தாராளமா கடி... என் உடம்புல எங்க வேணும்ன்னாலும் கடி... அயாம் ரெடி...

    மஞ்சரி சிவகணேஷின் வலது காது நுனியை தன் அரிசிப் பற்களால் கவ்விப் பிடித்த விநாடி –

    வாசலில் காலிங் பெல் கூப்பிட்டது.

    கணவனின் பிடி தளற - அவனிடமிருந்து உருவிக் கொண்டு எழுந்தாள் மஞ்சரி.

    காலிங்பெல் கண்டுபிடித்த புண்ணியவான் வாழ்க

    சிவகணேஷ் எரிச்சல்பட்டான்.

    யார் அந்த பூஜைக்கரடின்னு போய்ப் பாரு?

    மஞ்சரி சேலையைச் சரிப்படுத்திக் கொண்டு வேக வேகமாய் வாசல் கதவை நோக்கிப்போய் தாழ்ப்பாளை விலக்கினாள்.

    வெளியே -

    அவளுடைய ஆபீஸ் ஜி.எம். கருணசேகர். கழுத்து டையை இறுக்கிக் கொண்டு நின்றிருந்தார். ஐம்பது வயது. தொப்பை பிரதானமாய் தெரிய - வழுக்கை பிரகாசித்தது.

    குட்மார்னிங் ஸார்...

    குட்மார்னிங் மஞ்சரி...

    சர்ப்ரைஸ் விசிட்... உள்ளே வாங்க ஸார்...

    உள்ளே வர நேரமில்லேம்மா. எம்.டி. உன்னை வீட்டுக்கே வரச் சொன்னார். கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் போன் வந்தது. நீ ரெடியா இருக்கியாம்மா கார்லயே போயிடலாம்...

    நான் இன்னும் ப்ரேக்பாஸ்ட் முடிக்கலை ஸார். ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணீங்கன்னா வந்துடுவேன்...

    நோ ப்ராப்ளம்... நிதானமாவே சாப்பிட்டு வாம்மா!... உன் வீட்டுக்காரர் உள்ளே இருக்காரா...?

    இருக்கார் ஸார்... வாங்க

    கருணசேகர் உள்ளே வர வரவே உள்ளேயிருந்து சிவகணேஷ் வெளிப்பட்டான்.

    வணக்கம் ஸார்...

    வாங்க சிவகணேஷ்... எப்படியிருக்கீங்க?

    ஃபைன்...

    பிசினஸ்...?

    ஏதோ போயிட்டிருக்கு ஸார்...

    என்ன சலிச்சுக்கறீங்க...?

    "பிசினஸ்ல இப்போ ஏகப்பட்ட போட்டி ஸார். நல்ல சரக்குக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1