Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Unnodu! Nee Yaroodu…?
Naan Unnodu! Nee Yaroodu…?
Naan Unnodu! Nee Yaroodu…?
Ebook345 pages1 hour

Naan Unnodu! Nee Yaroodu…?

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Naan Unnodu! Nee Yaroodu…?

Read more from Rajeshkumar

Related to Naan Unnodu! Nee Yaroodu…?

Related ebooks

Related categories

Reviews for Naan Unnodu! Nee Yaroodu…?

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Unnodu! Nee Yaroodu…? - Rajeshkumar

    28

    1

    "வணக்கம் டாக்டர்…"

    என்ன ஜெயதேவ்…. ரொம்ப நேரமா காத்திட்டிருக்கயா?

    ஆமா, டாக்டர்.

    வேதநாயகம் ஹாஸ்பிட்டல்ல ஒரு நடிகைக்கு தாவாக்கட்டையில் சின்னதா ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி… முடிச்சுட்டு வர்றேன்… அவளுக்கு டபுள் கின்.

    ஜெயதேவ் புன்னகைத்தான்

    இந்த பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன் வந்ததிலிருந்து எல்லா நடிகைகளும் தங்களுக்கு வேண்டாத உறுப்புகளை பென்சில் சீவர மாதிரி சீவிக்க ஆரம்பிச்சுட்டாங்க டாக்டர். பிளாஸ்டிக் சர்ஜரி அவங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மாதிரி.

    யூ ஆர் கரெக்ட ஜெயதேவ். பிரம்மா படைக்கும் போது கொஞ்சம் அழகுக் குறைச்சலா படைச்சுட்டாலும் டாக்டர்ஸ் அதை சரிப்படுத்தக் கூடிய நிலமையில் இருக்காங்க. ஆமா… நீ போன காரியம் என்னாச்சு?

    போட்டோவோட வந்திருக்கேன்.

    குட். மேலே வா.

    டாக்டர் கவுதம் மாடிப்படிகளில் உயர அவரைப் பின்தொடர்ந்தான் ஜெயதேவ். மாநிறத்தை உடம்பில் காட்டின ஜெயதேவுக்கு முன் பல் இரண்டும் லேசான தூக்கலில் இருந்தது. கம்பளிப் பூச்சி மீசைக்குக் கீழே சிகரெட்டை ஆழகாக நேசிக்கும் உதடுகள், பேசும்போது வெளிப்பட்ட பல் வரிசையில் ‘பானி’ கரை கெட்டியாய்த் தெரிந்தது. பிரகாசமில்லாத கலங்கலான கண்களில் நிரந்தர சிவப்பு டென்ட் அடித்திருந்தது. கால்களை அகட்டின மாதிரி நடை.

    உள்ளே வா ஜெயதேவ்.

    தன்னுடைய அறைக்குள் நுழைந்தார் கவுதம். சோபாவில் சாய்ந்து கொண்டே எதிரேயிருந்த நாற்காலியை ஜெயதேவுக்குக் காட்டினார்.

    உட்கார்.

    அவன் உட்கார்ந்தான்.

    எங்கே போட்டோவைக் காட்டு பார்க்கலாம்…?

    ஜெயதேவ் தன் சட்டைப் பையிலிருந்து அந்த பாஸ்போர்ட் போட்டோவை எடுத்து டாக்டரிடம் நீட்டினான்.

    கவுதம் முக்குக் கண்ணாடியை கோட்டில் தேய்த்து பளபளப்பாக்கி மறுபடியும் கண்களுக்குக் கொடுத்தபடியே போட்டோவைப் பார்த்தார்.

    போட்டோவில் அந்த இளைஞன் காமிராவை முறைக்கிற மாதிரி பார்த்திருந்தான். போட்டோவில் கண்களைப் பதித்திருந்த டாக்டரின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மலர்ச்சிக்குப் போயிற்று. ஜெயதேவ் நாற்காலி நுனிக்கு வந்தான். கிசுகிசுத்தான்.

    என்ன டாக்டர். ஆள் எப்படி?

    அற்புதம்…

    நான் சொன்னப்ப நம்ப மாட்டேன்னு சொன்னீங்களே.

    இப்போ நம்பறேன். அவன் பேரென்ன?

    வல்லப்…

    வல்லப்…!

    ஆமா டாக்டர். பைனோட அப்பா ஒரு சுதந்திரப் போராட்ட கால வீரராம். வல்லபாய் படேல் மேல அபரிதமான பக்தியாம். அதான் பையனுக்கு வல்லப்ன்னு பேரை வெச்சிருக்கார்.

    வல்லப்போட அப்பா இன்னும் இருக்காரா…?

    அவர் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே காலமாயிட்டார். வல்லபுக்கு அம்மா மட்டுந்தான், அந்த அம்மாவும் நாட்களை எண்ணிட்டிருக்காங்க…

    இவன் என்ன படிச்சிருக்கான்?

    எட்டாவது வரைக்கும்…

    படிப்பு கொஞ்சம் கம்மிதான்.

    நமக்கு படிப்பா முக்கியம் டாக்டர்?

    என்ன உயரம்?

    அஞ்சடி பதினோறு அங்குலம்.

    நிறம்?

    நீங்க சொன்ன நிறம்!

    வல்லபை நான் பார்க்கணுமே? எங்க கூட்டிட்டு வர்றே?"

    இங்கே… உங்க பங்காளவுக்குத்தான்…

    வேண்டாம். இங்கே கூட்டிகிட்டு வர வேண்டாம் ஜெயதேவ், அந்த பையனை நாளைக்கு சாயந்திரம் ஹோட்டல் பிரஸிடெண்ட்டுக்கு கூட்டிட்டு வா. அங்கே வெச்சு பேசிக்கலாம்.

    சரி டாக்டர்.

    ஜெயதேவ் எழுந்தான். டாக்டர் தன் பாக்கெட்டில் கையை நுழைத்து பர்ஸை உருவி – நான்னைகந்து நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்டினார் அவனிடம்.

    வேண்டாம் டாக்டர்… நான் அப்புறமா மொத்தமா வாங்கிக்கறேன். அவன் மறுக்க டாக்டர் அவனுடைய கைககளில் ரூபாய் நோட்டுக்களை வலுக்கட்டாயமாய்த் திணித்தார்.

    நான் இன்னிக்கு, ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். வாங்கிக்க…

    "அம்மா… நீ ரெடியா?"

    அறைக்கு வெளியே மாடிப் படிகளில் உமாவின் குரல் கேட்டதும் தேவகி பதற்றமானாள். சீ! அந்தாண்டை தள்ளி போங்க. உமா வந்திட்டிருக்கா. நான் நிமிஷத்துல புடவையை மாத்திட்டு வந்துட்றேன்.

    சிரித்த நாகமாணிக்கம் தன் முன்பக்க விஸ்தாரமான வழுக்கையைத் தடவிக் கொண்டே ஹால் பக்கமாய் வர – உமா பளபளப்பான பனா பனாரஸ் புடவையில் கண்களைப் பறிக்கும் படியாய் எதிர்ப்பட்டாள், கத்தினாள்.

    என்னப்பா., அம்மா இன்னுமா ரெடியாகலை?

    ஆயிட்டிருக்கா…

    ஆயிட்டிருக்காளா? மணி எவ்வளவு தெரியுமா? ஏழு! ரிசப்ஷன் இந்நேரம் நடத்திட்டிருக்கும். அண்ணன் கம்பெனியிலிருந்து வந்து, அம்மா சேலை கட்டி முடிஞ்சு புறப்படறதுக்குள்ளே – ரிசப்ஷன் முடிஞ்சு பொண்ணும் மாப்பிள்ளையும் சாந்தி முகூர்த்த ரூமுக்குள்ளே போயிடுவாங்க.

    ஏண்டி சத்தம் போடறே. நான் ரெடி பட்டுப் புடவையின் தலைப்பை சரிப்படுத்திக் கொண்டே அறையினின்றும் வெளியே வந்தாள் தேவகி.

    உங்கம்மாவும் வந்தாச்சு உமா. இனி ஜானகிராமன் தான் வரணும். கம்பெனிக்கு போன் பணிணி அவன் புறப்பட்டானா இல்லையான்னு கேளு.

    உமா டெலிபோனை நோக்கிப் போனாள். அவள் ரிஸீவரை எடுப்பதற்கு முன் அதுவாக கதறியது. ரிஸீவரை எடுத்தாள். குரல் கொடுத்தாள்.

    ஹலோ…?

    உமா, நான் அண்ணன் பேசறேன்.

    என்னண்ணா நீ… கம்பெனியிலிருந்து இன்னுமா புறப்படலே? தேசாய் வீட்டு கல்யாண ரிசப்ஷனை மறந்துட்டியா?

    மறந்திருந்தா உனக்கு போன் பண்ணுவேனா?

    எப்போ வர்றதா உத்தேசம்?

    இதோ புறப்பட்டுட்டேன் இன்னும் பத்து நிமிஷத்துல பங்களா போர்ட்டிகோவில நான் இருப்பேன். ஆறு மணிக்கே புறப்பட்டிருப்பேன், புறப்படற சமயத்துல கம்பெனியில் ஒரு பிராப்ளம், பாக்டரி மானேஜரை லேபர் ஒருத்தன் அடிச்சுட்டான்.

    சரி சரி... எதையாவது சொல்லிட்டிருக்காதே. உடனே புறப்பட்டு வா. அம்மாவும் அப்பாவும் ரெடியா இருக்காங்க.

    வந்துட்டே இருக்கேன்.

    மறுமுனையில் ரிஸீவரை சாத்தினான் ஜானகிராமன்.

    டெலிபோனில் சொன்ன மாதிரியே பத்து நிமிஷ அவகாசத்தில் மாருதியில் பறந்து வந்தான் ஜானகிராமன். தோற்றத்தில் நடிகர் ராஜேஷை ஞாபகத்தில் கொண்டு வந்து – நிறத்தில் அவரை மறக்கடித்தான். க்ரீம் நிற ஸபாரி ட்ரஸ் அவனுடைய தேகாப்பியாச உடம்போடு ஒத்துப் போயிருந்தது. கண்களைக் கவ்வி இருந்த ரே – பான் குளிர்க் காண்ணாடியைக் கழற்றி – சட்டைப் பைக்கு கொடுத்துக் கொண்டே போர்டிகோ படிகளில் தாவி ஏறினான்.

    உமா பொரிந்தாள். சந்தன நிற மணிக்கட்டைக் காட்டினாள்.

    மணி ஏழேகால்.

    அஞ்சு நிமிஷம், வேற ட்ரஸ்சில் பூந்து வந்துடறேன்.

    சீக்கிரம்.

    ஹாலின் கோடியிலிருந்த தன்னுடைய அறையை நோக்கி ஓடினான் ஜானகிராமன். ஐந்து நிமிஷம் கழித்து வெளியே வந்த போது – ஆளே மாறியிருந்தான். காலர் பகுதிகளில் பூ வேலை செய்த சந்தன நிற ஜிப்பா, அதே நிற பைஜாமா… முகத்தில் பவுடர் பூச்சு. கோல்ட் ப்ளேம் செண்ட் வாசனையின் வீச்சு… கலர் காகிதத்தால் சுற்றப்பட்ட பரிசுப் பெட்டி.

    பங்களாவின் வாசல் கதவைப் பூட்டிக்கொண்டு நான்கு பேரும் மாருதிக்குள் புகுந்தார்கள், காரைக் கிளப்பிக் கொண்டே கேட்டான்.

    ரிசப்ஷன் எத்தனை மணி வரைக்கும்?

    உமா சட்டென்று சொன்னாள், ராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும்…

    நான் லேட்டா வந்த கோபம் உமாவுக்கு… நான் என்ன பண்ண முடியும்? கம்பெனியில தினசரி ஏதாவது ஒரு பிராப்ளம்…

    சரி… சரி... காரை ரொம்பவும் விரட்டாதே… ரிசப்ஷனுக்கு போறதுக்கு பதிலா ஜி.ஹெச்சுக்கு போயிருவோம்…

    டேய் ஜானகி… தேவகி கூப்பிட்டாள்.

    என்னம்மா?

    பிரசண்டேஷன் என்ன வாங்கினே…?

    ஸீனரி வால் கிளாக்…

    ரொம்பவும் சீப்பா இருக்கோடா…

    இது சீப்பா….? ஏம்மா இதனோட விலை என்ன தெரியுமா…? அறுநுறு ரூபாய்… தேசாய் வீட்டுக் கல்யாணத்துக்கு இந்த பிரசண்டேஷன் போதும்…

    நாகமணிக்கம் குறுக்கிட்டார். நம்ம ஸ்டேட்டசுக்கு இந்த பிரசண்டேஷன் ரொம்ப அல்பம்… மாப்பிள்ளை கைக்கு ஒரு வைர மோதிரம் வாங்கியிருக்கலாம். தேசாய் நம்ம கம்பெனிக்கு நல்ல பிசினஸ் குடுத்துட்டிருக்காறே…?

    தேசாய் சும்மாவா பிசினிஸ் தர்றார்? நாம கமிஷனை கொட்டி அழலை…? மாசமானா கமிஷன் மட்டும் அறுபதாயிரம் ரூபா வாங்கிறார்… தெரியுமா? ரிசப்ஷன் நடக்கும் ஹோட்டல் அட்லாண்டிகாவுக்குள் கார் நுழைந்து. நின்றருந்த ஏராளமான, கார்களுக்கு மத்தியில் பார்க்கிங் இடம் தேடியது, திணறியது.

    காரை ஓரமாய் நிறுத்தினான். ஜானகிராமன்.

    அப்பா… திரும்பினான்.

    என்னடா…?

    நீங்க இறங்கி உள்ளே போங்க… நான் வசதியான இடமாய் பார்த்து காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்…

    நாகமாணிக்கம் தேவகி, உமா மூன்று பேரும் இறங்கி நியான் லைட்டில் வெல்கம் சொன்ன வாசலை நோக்கிப் போக – ஜானகிராமன் மெதுவாய் நகர்த்தி கார்களுக்கு மத்தியில் இடத்தைத் தேடினான், ஊர்ந்தான்.

    கடைசியில் இரண்டு அம்பாசிட்டர்களுக்கு மத்தியில் – மாருதி நுழையக்கூடிய இடம் தெரிய – அந்த இடைவெளியில் காரை சொருகி நிறுத்தினான். எஞ்சினை அணைத்து – கார் கதவுகளை லாக் செய்து கீழே இறங்கி முன்புறக் கதவை சாத்திய விநாடி –

    பின்பக்கம் அந்தக் குரல் கேட்டது.

    ஹலோ ஜானகிராமன்…

    திரும்பினான்.

    டாக்டர் கவுதம் நின்றிருந்தார். உதட்டில் இறுக்கமான புன்னகை.

    2

    "ஹல்லோ டாக்டர்" என்றான் ஜானகிராமன். முகம் நிஜமான சந்தோஷத்தில் ததும்பியது. பல்வரிசை தெரிய சிரித்துக் கொண்டே போய் அவருடைய கையைப் பற்றி குலுக்கினான்.

    என்ன நீங்களும் தேசாய் வீட்டு மேரேஜ் ரிசப்ஷனுக்குத் தானா…?

    ஆமா…

    வாங்க போகலாம். உங்க கார் எங்கே நிக்குது?

    லெப்ட் சைட் கார்ன்ர்ல. காலேஜ்ல் சீட் கூட பிடிச்சுரலாம் போலிருக்கு…. கார் பார்க்கிங்ல இடம் பிடிக்கிறது பிரம்மப் பிரயத்தனமாயிருக்கு… ஆமா அப்பா, சித்தி, உமா வரலையா?

    அவருக்கு இணையாய் நடந்து கொண்டிருந்த ஜானகிராமன் தட்டென்று நின்றான். முகம் லேசாய் மாறிப் போயிருந்தது.

    டாக்டர்…

    நான் எற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கேன். சித்தியை நான். சித்தியா நினைக்கிறதில்லை. அம்மான்னு தான் நினைக்கிறேன். அம்மான்னுதான் கூப்பிடறேன். தயவு பண்ணி அவங்களை சித்தின்னு மென்ஷன் பண்ணாதீங்க…

    ஸாரி ஜானகிராமன்… நீங்க ஏற்கனவே சொல்லியிருந்தும் நான் மறந்துட்டேன், வெளி வெரி ஸாரி.

    ஜானகிராமன் புன்னகைத்தான்.

    டாக்டர், டோண்ட் மிஸ்டேக். மீ. எனகென்னமோ அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரியே தோணலை நான் பொறக்கும்போதே அம்மாவை பறிகொடுத்தவன். எனக்கு அஞ்சு வயசாறபோது போட்டோவில் சந்தனமாலைக்கு மத்தியில் சிரிச்ச அம்மா எம்னசுலே ஓட்டலை. அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டபோது எல்லாரும் என்கிட்ட வந்து உனக்கொரு சித்தி வரப் போறான்னு சொன்னாங்க. அவ கொடுமைப்படுத்துவான்னு சொனனாங்க. ஆனா சித்தியை நேரிலே பார்க்கும்போது எனக்கு அப்படித் தோணலை… என்னைப் பெத்த அம்மா மாதிரியே தோற்றம் காட்டினாங்க.

    "உங்களுக்கு இருக்கிற மென்டாலிடி மாதிரி எல்லாருக்கும் வந்துடாது. இனிமேல் அவங்களை மென்ஷன் பண்ணும்போது அம்மான்னே சொல்றேன், போதுமா?"

    தாங்க் யூ டாக்டர்…

    இருவரும் லானில் நடந்தார்கள். லானின் இரண்டு பக்கமும் குளோப் மாதிரி வெட்டி விடப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகளிக் மேல் ஈஸ்ட்மென் நிறத்தில் சீரியல் பல்புகள் வைரக் கற்களாய் மின்ன ஹோட்டலின் உள்ளேயிருந்து ஆர்க்கெஸ்ட்ராவின் தொம் தொம் என்ற ட்ரம் சத்தம் திறந்திருந்த கண்ணாடி ஜன்னல்கள் வழியாக வழிந்தது.

    தேசாயோட கறுப்புப் பணம் எப்படி விளையாடுது பார்த்தீங்களா, ஜனாகிராமன்? டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

    தேசாய் உங்களுக்கு எப்படி சார் பழக்கம்?

    அவரோட இரண்டாவது பெண்ணுக்கு ஃபயர் ஆக்ஸிடெண்டாகி முகம் கருகி போனப்ப பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி முகத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தேதே நான்தானே. அந்தப் பொண்ணு எங்கே என்னைப் பார்த்தாலும் சரி, கால்ல விழுந்துடுவா…"

    பிரம்மாண்டமான கண்ணாடிக் கதவை மகாராஜா யூனிபார்மில் இருந்த பேரர் ஒருவர் திறந்துவிட உள்ளே நுழைந்தார்கள். இப்போது ஆர்க்கெஸ்ட்ரா சத்தம் அதிகப்பட்டது. சிவப்பு வெல்வெட் வேய்ந்த ஹால் முழுக்க ஜனங்கள் கொத்துக்கொத்தாய்த் தெரிந்தார்கள். எல்லாருமே லாக்கர்களில் வைர நகைகளை தூங்கப் பண்ணி விட்டு நாள் முழுக்க நாசிக் தாள்களை எண்ணி பாங்க் பாலன்சை உயர்த்துபவர்கள், உயர்த்திப் பேசிய கைகளில் மோதிரங்கள் தாங்கள் இருக்கும் இடங்களைக் காட்டிக் கொடுத்தன. பர்மிட் வாங்கி வைத்துக் கொண்டு பாரின் லிக்கர்களை சப்பி சப்பி தத்தம் உடம்புகளுக்கு பவுன் நிறத்தை கொடுத்திருந்தார்கள்.

    அவர்கள் உள்ளே நுழைந்ததும் –

    தேசாய் ஓடிவந்து இரண்டு பேர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு ஆர்பப்பாட்டமாய் மணமக்களின் அருகே கூட்டிப் போனார். ஜரிகை மாலைகளோடும், லாவண்டர் செண்ட் வாசனையோடும், ரெடிமேட் சிரிப்பு சிரித்த மணமக்களின் கைகளில் பரிசுப் பொருள்களை திணித்து வாழ்த்துகளைச் சொன்னான் ஜானகிராமன். டாக்டர் கவுதம் வெறும் கங்கிராட்ஸை மட்டும் உதிர்த்து விட்டு நகர்ந்து கொண்டார்.

    அப்பாவும் அம்மாவும் வந்தாங்களே எங்கே? ஜானகிராமன் தேசாயிடம் கேட்க, தேசாய் பஃப்பே பார்ட்டி நடக்கும் டைனிங் ஹாலைக் காட்டினார். ஜானகிராமன் திரும்பிப் பார்க்க நாகமாணிக்கம், தேவகி, உமா மூன்று பேரும் பீங்கான தட்டுக்களை கையில் ஏந்தியபடி எதையோ கொரித்துக் கொண்டிருந்தார்கள்.

    வாங்க டாக்டர் அப்பாகிட்டே போகலாம்…

    இருவரும் கும்பலுக்கு மத்தியில் புகுந்து நடந்தார்கள், மெலிதான வெளிச்சத்தில் தன்னை அடையாளம் கண்டு கொண்டவர்களுக்கு ஹலோக்களை சொல்லிக் கொண்டே அப்பாவை நெருங்கினான் ஜானகிராமன்.

    தயிர் சேமியாவை ஸ்பூனில் அள்ளிக் கொண்டிருந்த நாகமாணிக்கம் ஜானகிராமனின் அருகே வந்து கொண்டிருந்த டாக்டர் கவுதமைப் பார்த்தும் ஒரு பிரகாசத்திற்குப் பேனார்.

    ஹலோ டாக்டர் வாங்க ஸ்பூனை தயிர் சேமியாவில் குத்தி விட்டு டாக்டரின் கையைப் பற்றிக் கொண்டார்

    Enjoying the preview?
    Page 1 of 1