Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

356
356
356
Ebook149 pages43 minutes

356

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
356

Read more from Rajeshkumar

Related to 356

Related ebooks

Related categories

Reviews for 356

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

356 - Rajeshkumar

20

1

"ரு கிலோ முந்திரி அல்வா..."

பேக் பண்ணியாச்சு ஸார்...

காரம் என்ன இருக்கு...?

வெங்காய பக்கோடா... கேஷ்யூநட் மிக்ஸர்...

ரெண்டிலும் அரை அரை கிலோ...

பொட்டலங்கள் தயாராகி நெய் வாசனையோடு கேரி பேக்கில் வந்ததும் பில் பார்த்து பணத்தைக் கொடுத்துவிட்டு ஸ்வீட் கடையிலிருந்து வெளிப்பட்டான் சந்திரவதனன். பெயர்க்கு ஏற்ற மாதிரி சந்திரவதனன் இல்லை. மாநிறத்துக்கும் ஒரு படி கீழேயிருந்த நிறம். முப்பது வயது. ஒரு தனியார் கம்பெனியில் அக்கௌண்டண்ட் உத்யோகம். சம்பளம் பத்தாயிரம் ரூபாய்க்கு நூற்றி ஐம்பது ரூபாய் குறைவு.

சந்திரவதனன் ஸ்வீட் ஸ்டாலுக்கு வெளியே காத்திருந்த டாக்ஸியை நெருங்கி அதன் பின்பக்கக் கதவின் கைப்பிடியில் கை வைத்த விநாடி --- அவனுடைய தோளில் ஒரு கை விழுந்தது.

திரும்பினான்.

அவனுடைய ஆபீஸ் கொலீக் மகுடபதி புன்னகை முகமாய் தெரிந்தான்.

கேட்டான்.

என்ன சந்திரா... இன்னிக்கு ஸ்வீட் பாக்கெட்டெல்லாம் தூள் கிளப்புது. வீட்ல ஏதாவது விசேஷமா?

சந்திரவதனன் சிரித்தான்.

விசேஷமெல்லாம் கிடையாது. வீட்டுக்கு நிறைய கெஸ்ட் வர்றாங்க... அவங்களுக்காகத்தான்... தினம்தோறும் ஆபிஸ்க்கு இதே ரோட்லதான் வர்றேன். மறந்து மறந்து போகுது... வீட்ல ஏகப்பட்ட டோஸ்.

அதான் இன்னிக்கு மறக்காமே வாங்கிட்டு போறே போலிருக்கு. ஒரு நாளைக்கு உன்னோட ஒய்ஃபைக் கூட்டிகிட்டு என்னோட வீட்டுக்கு வரலாமில்லையா...?

வர்றேன்...

எப்போ...?

ஒரு சண்டே ஈவினிங் வர்றேன்.

கண்டிப்பா வரணும். வர்றதுக்கு முன்னாடி எனக்கு ரிங் பண்ணு...

சரி... சந்திரவதனன் தலையாட்டிவிட்டு டாக்ஸிக்குள் ஏறி உட்கார்ந்தான். ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த டிரைவர் திரும்பிப் பார்த்து கேட்டார்.

இனி எங்கே ஸார் போகணும்...?

வீட்டுக்குத்தான்! அபிராமி நகர் போயிடு...

அது எங்கே ஸார் இருக்கு...?

ரத்தினபுரி போற வழியில.

ஓ...! அந்த அபிராமி நகரா... தெரியும் ஸார்... டாக்ஸியின் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார் டாக்ஸி டிரைவர். ஆர்.எஸ். புரத்தின் போக்குவரத்தில் கலந்தது டாக்ஸி.

மாலை ஆறுமணி. ஆர்.எஸ்.புரம் பெரும்பாலும் பெண்களால் நிரம்பியிருந்தது. ஷாப்பிங்கில் கணவன்மார்களின் பர்ஸ்கள் வேகமாய் இளைத்துக் கொண்டிருந்தன. ஹோட்டல் அன்னபூர்ணாவில் இடம் கிடைக்காமல் டூரிஸ்ட்கள் ரோட்டில் காத்திருந்தார்கள். இரத்தின விநாயகர் கோயிலில் சாயங்கால பூஜைக்கான மணி ஒலித்துக் கொண்டிருந்தது. பழமுதிர்சோலையில் மாம்பழ ஜூஸ் நான்கைந்து மிக்ஸிகளில் குதித்துக் கொண்டிருந்தது.

சந்திரவதனன் டாக்ஸிக்கு நன்றாக சாய்ந்து உட்கார்ந்தான். டாக்ஸி ஆர்.எஸ்.புரத்தை முடித்துக் கொண்டு கௌலி ப்ரெனன் ரோட்டில் திரும்பிய போது சந்திரவதனின் சட்டைப்பையில் இருந்த செல்போன் எலக்ட்ரானிக் முனகலோடு கூப்பிட்டது.

செல்போனை எடுத்து காதுக்குப் பொருத்தினான்.

என்னங்க, நான்தான் சுகன்யா...

சொல்லு. இப்போ புறப்பட்டு வந்துட்டிருக்கேன்...

ஸ்வீட் காரம் வாங்கினீங்களா?

ம்... வாங்கியாச்சு... ஒரு கிலோ முந்திரி அல்வா. அரைகிலோ வெங்காய பக்கோடா. அரை கிலோ கேஷ்யூநட் மிக்ஸர்...

பூ வாங்கிக்கிட்டீங்களா?

அய்யோ! மறந்துட்டேனே!

எனக்குத் தெரியுமே... சொல்ற எதையுமே ஞாபகம் வெச்சுக்க மாட்டீங்க. ஒண்ணை வாங்கினா ஒண்ணை மறந்துடுவீங்க...

இப்பவும் ஒண்ணும் பிரச்னையில்லை. வட கோயமுத்தூர்லே டாக்ஸியை நிறுத்தி கூட நிறைய பூவை அள்ளிட்டு வந்துடறேன்.

இந்த வீண் செலவுதான் வேண்டாம்ங்கிறது. எனக்கு ரெண்டு முழ பூ போதும்.

சரி வாங்கிட்டு வந்துடறேன். ஜாதிமல்லி வாங்கட்டுமா... சாதாரண மல்லி வாங்கட்டுமா...?

ரெண்டிலேயும் ஒவ்வொரு முழம்.

சரி...

வேற எங்கேயும் போகாமே நேர வீட்டுக்குத்தான் வரணும்...

உத்தரவு... செல்போனை அணைத்த சந்திரவதனன் டிரைவரின் தோளைத் தொட்டான்.

டிரைவர்... எதாவது ஒரு பூக்கடைப் பக்கம் வண்டியை நிறுத்து...

சாயிபாபா கோயில் பக்கம் போனாத்தான் பூ கிடைக்கும் ஸார்...

போற வழிதானே...! வாங்கிட்டுப் போலாம்.

டாக்ஸி கௌலி ப்ரெனன் ரோட்டில் ஒரு நிமிஷம் பயணித்து வட கோவை திரும்பியது.

டிரைவர் ஸ்டீயரிங்கைக் கையாண்டு கொண்டே மெல்ல திரும்பிப் பார்த்து புன்னகையோடு கேட்டார்.

என்ன இப்பதான் கல்யாணம் ஆச்சா சார்?

ஆமா...

எனக்கும் ரீசண்டாத்தான் கல்யாணமாச்சு ஸார்... ஆனா சந்தோஷம் இல்ல ஸார்...

ஏன்...?

எனக்கு வந்து வாய்ச்சது அப்படிப்பட்டது ஸார்... பெண் பார்க்கப் போனப்ப பூனை மாதிரி இருந்தது. இப்போ புலி மாதிரி இருக்கா ஸார். அவ எங்க வீட்ல காலடி எடுத்து வெச்ச நிமிஷத்திலிருந்து மனசுக்குள்ள நிம்மதியில்லாம போயிடுச்சு ஸார்... நீங்க படிச்சவங்க... பெரிய உத்யோகத்துல இருக்கிறவங்க... இதுக்கு ஒரு வழி சொல்லுங்க ஸார்...

சந்திரவதனன் புன்னகைத்தான். இதுக்கு ஒரே வழிதான் இருக்கு...

என்ன வழி ஸார்...?

விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதுதான்.

எவ்வளவுதான் ஸார் விட்டுக் கொடுக்கறது. என்னை ஏதாவது சொன்னாக்கூட பொறுத்துக்குவேன். என்னைப் பெத்து வளர்த்தவங்களை என் காதுபடவே மரியாதை குறைவா பேசறா ஸார்... சில சமயம் அவளை ரெண்டா வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடலாமான்னு கூட தோணும் ஸார்...

இந்த எண்ணம் உன்னோட மனசுக்குள்ளே இனியொரு தடவை வரக்கூடாது. உனக்குக் கல்யாணமாகி இப்போ எவ்வளவு மாசமாச்சு...

ரெண்டு மாசம் ஸார்...

ரெண்டு மாசத்துக்குள்ளே இவ்வளவு பிரச்னை வரக்கூடாது. வந்திருக்கு. உன்னோட ஒய்ப்புக்கு அப்பா, அம்மா இருக்காங்களா...?

Enjoying the preview?
Page 1 of 1