Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paal Nila Raathiri
Paal Nila Raathiri
Paal Nila Raathiri
Ebook84 pages52 minutes

Paal Nila Raathiri

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
Paal Nila Raathiri

Read more from Rajeshkumar

Related to Paal Nila Raathiri

Related ebooks

Related categories

Reviews for Paal Nila Raathiri

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paal Nila Raathiri - Rajeshkumar

    17

    1

    அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் பர்ச்சேஸை முடித்துக் கொண்ட வனிதா தன் பொன்னிற மணிக்கட்டில் அப்பியிருந்த வாட்ச்சில் நேரம் பார்த்தாள். நேரம் 7.15.

    கெளண்டரில் பணம் கொடுத்துவிட்டு அங்கே உட்கார்ந்திருந்த இளைஞனிடம் கேட்டாள்

    ஒரு போன் பண்ணிக்கலாமா?

    தாராளமா பண்ணுங்க மேடம்

    வனிதா டெலிபோனை நெருங்கி ரிஸீவரை எடுத்துக் கொண்டாள். டயலில் சில எண்களைத் தட்டிவிட்டு காத்திருக்க மறுமுனையில் ரிஸீவர் எடுக்கப்பட்டது.

    ஹலோ...

    கணவன் புருஷோத்தமன் குரல்.

    என்னங்க... நான் வனிதா...

    பர்ச்சேஸிங் முடிஞ்சுதா?

    ம்... முடிஞ்சுது உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்... பேக்கிங் ஆயிட்டிருக்கு! புறப்பட்டு வர்றீங்களா?

    ஸாரி வணிதா...

    என்ன... ஸாரி...?

    கம்பெனியில இன்னும் வேலை முடியலை... நான் வர லேட்டாகும்... நீ ஒரு டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு போயிடு

    என்னது... டாக்ஸி பிடிச்சு போறதா?

    ஆமா... ஆமா...

    சாயந்திரம் அஞ்சு மணிக்கு போன் பண்ணி என்ன சொன்னீங்க...?

    என்ன சொன்னேன்?

    ஏழு மணியிலிருந்து ஏழரை மணிக்குள்ளே பர்ச்சேஸை முடிச்சுகிட்டு ஷாப்பிங் காம்ப்பாக்ஸ் வாசல் நில்லு... நான் கம்பெனியிலிருந்து வந்து பிக்அப் பண்ணிக்கிறேன்னு நீங்க சொல்லலை...

    ஆமா... சொன்னேன்... ஆனா... நான், எதிர்பார்த்தபடி கம்பெனியில் வேலை முடியலையே.

    அது நம்ம சொந்த கம்பெனி தானே... அந்த வேலையை அப்படியே போட்டுட்டு நாளைக்கு போய் பார்த்துக்கக் கூடாதா?

    மறுமுனையில் புருஷோத்தமன் சிரித்தான்.

    சரியாப் போச்சு... சொந்த கம்பெனி வேலையைத்தான் உடனே பார்க்கணும். நான் வேற ஒரு கம்பெனியில் வேலை செய்றதாயிருந்தா அஞ்சு மணிக்கே - விட்டுக்கு வந்திருக்க மாட்டேனா?

    இப்ப என்ன... சொல்றீங்க? கார் வருமா வராதா?

    ஸாரி... என் ப்ரிய சகி ஒரு டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு போயிடு!

    அது எனக்குத் தெரியும் நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்...

    கோபமா வனிதா...?

    இல்ல ரொம்ப சந்தோஷம்... ரிஸீவரை டொக்கென்று வைத்தாள் கோபத்தில் முகம் காரெட் நிறம் வாங்கியிருந்தது.

    "வீட்டுக்கு வரட்டும்...!’

    அம்மா... உங்க பேக்கிங் ரெடி... கொண்டு போய் கார்ல வெக்கட்டுமா...? டிபார்ட்மெண்டல் ஸ்டோர் சிப்பந்தி எதிரில் வந்து நின்றான்.

    கார் வரலை... ஒரு டாக்ஸி பாரப்பா...

    சரிங்கம்மா... அவன் வெளியே போக, வனிதா அங்கே போடப்பட்டிருந்த ஸ்டூலில் கோபமாய் உட்கார்ந்தாள்.

    எப்போ பார்த்தாலும் வேலை... வேலை வேலை... ஒரு நாளாவது சொன்னபடி வந்திருப்பாரா...?

    ‘ரெண்டு நாளைக்கு அவர்கிட்ட பேசக்கூடாது’

    யோசிப்பில் இரண்டு நிமிஷங்களைக் கரைத்திருந்து போது சிப்பந்தி வந்தான்

    அம்மா... டாக்ஸி வந்தாச்சு...

    வனிதா ப்ளாஸ்டிக் கேரி பேக்குகளை கையில் எடுத்துக் கொள்ள, சிப்பந்தி ஒரு பெரிய பையை எடுத்துக் கொண்டான். டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வாசலில் டாக்ஸி நின்றிருக்க, ட்ரைவர் வேக வேகமாய் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான் வனிதாவை பார்வையில் வாங்கியதும், கையில் வைத்திருந்த சிகரெட்டை எறிந்து விட்டு டாக்ஸியின் பின்பக்க கதவைத் திறந்துவிட்டான்.

    எங்கம்மா போகனும்...?

    சைதன்யா நகர்.

    மீட்டர்க்கு மேல் பத்து ரூபாய் போட்டுக் குடுத்துடுங்கம்மா...

    சரி... சரி...

    பேக்கேஜ் உள்ளே திணிக்கப்பட்டது ட்ரைவர் டாக்ஸியின் டிரைவிங் சீட்டுக்கு வந்தான்

    டாக்ஸி நகர்ந்தது.

    வனிதா பின் சீட்டுக்கு சாய்ந்து உட்கார்ந்தாள் கணவனின் மேல் இருந்த கோபம் இன்னமும் ஆறாமல் நீறுபூத்த நெருப்பாகவே இருந்தது.

    ‘பொண்டாட்டி மேல கொஞ்சம் கூட அக்கறையில்லை!’

    ‘எப்போ பார்த்தாலும் பிசினஸ் தான்?’

    ‘வாரேன்னு சொல்ல வேண்டியது அப்புறம் வராமே ஏமாத்திட வேண்டியதுதான்’

    ‘ராத்திரிக்கு வரட்டும்... பேசிக்கிறேன்’

    அம்மா...

    வனிதா, ட்ரைவரின் குரல் கேட்டு, யோசனைகளிலிருந்து மீண்டாள்.

    என்ன ட்ரைவர்?

    ஒரு விஷயம் கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?

    என்ன... கேளுங்க.

    உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.

    அப்படியா... எங்கே பார்த்தீங்க?

    அதான் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறேன். ஞாபகமே வரலை.

    "நான் அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர்க்கு அடிக்கடி வருவேன் அங்கே

    Enjoying the preview?
    Page 1 of 1