Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Inimakku Innoru Peyar Anitha! and Athu Oru Nilaak Kaalam!
Inimakku Innoru Peyar Anitha! and Athu Oru Nilaak Kaalam!
Inimakku Innoru Peyar Anitha! and Athu Oru Nilaak Kaalam!
Ebook244 pages1 hour

Inimakku Innoru Peyar Anitha! and Athu Oru Nilaak Kaalam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Inimakku Innoru Peyar Anitha! and Athu Oru Nilaak Kaalam!

Read more from Rajeshkumar

Related to Inimakku Innoru Peyar Anitha! and Athu Oru Nilaak Kaalam!

Related ebooks

Related categories

Reviews for Inimakku Innoru Peyar Anitha! and Athu Oru Nilaak Kaalam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Inimakku Innoru Peyar Anitha! and Athu Oru Nilaak Kaalam! - Rajeshkumar

    17

    1

    ரிசப்ஷன். ரோஜா மாலைகளுக்கிடையே சிக்கியிருந்தார்கள் அனிதாவும் கீர்த்தியும்.

    கழுத்தில் புதிதாய் இடம்பெற்ற அந்தத் தாலிச் சரடை, வலது கையின் ஆட்காட்டி விரலால் மெல்ல நெருடுகையில் மனசுக்குள் புதுக் கவிதைகள் கோரஸாய் பாடின மாதிரி இருந்தது அனிதாவுக்கு.

    மேடையில் வலையப்பட்டியும், குன்னக்குடியும் தத்தம் வாத்தியங்களோடு மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஜனக் கூட்டம் மண்டபத்தை நிறைக்க, காற்று உஷ்ணமாய் இருந்தது. கித்தான் மறைப்புகளால் தடுக்கப்பட்ட தற்காலிக டைனிங் ஹாலில் ஒரு கணிசமான கூட்டம் உட்கார்ந்து பாதுஷாவையும் வடையையும் மென்று கொண்டிருந்தது.

    ஹலோ கீர்த்தி!

    அனிதாவிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்த கீர்த்தி சட்டென்று தலைநிமிர்ந்தான். அடுத்த கணமே முகம் மலர்ந்தான். ரோஜா மாலையினின்றும் இதழ்கள் பொல பொலவென்று உதிர எழுந்தான்.

    வாடா... பெரிய மனுஷா... இப்பத்தான் வர்றியா?

    வந்தவன் சிரித்தான். ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருந்தேன். முகூர்த்தத்துக்கு வந்து சேர்ந்துடலாம்ன்னு நினைச்சேன்! முடியலை... எனி ஹௌ ரிசப்ஷனுக்கு வந்து சேர்ந்துட்டேன்.

    கீர்த்தி அனிதாவின் பக்கமாய் திரும்பினான். அனி! இவன் என்னோட ப்ரெண்ட்... காலேஜ் மேட்... பேரு வத்சன். சரியான வாயரட்டை.

    அனிதா அவனை ஏறிட்டபடி கைகளைக் குவித்தாள். வத்சன் நல்ல உயரத்தில் சிவப்பாய் தெரிந்தான். ஒழுங்கான பல் வரிசையில் அவன் சிரிக்கையில் ஒரு இந்தி கதாநாயக நடிகனை ஞாபகப்படுத்தினான். மார்பு ரோமக் கட்டில் மெல்லிய தங்கச் சங்கிலி டாலடித்தது. க்ரீம் நிற ஸ்லாக்கும், பேண்ட்டும் அவனுக்கு பாந்தமாய் இருந்தது.

    ஏண்டா கீர்த்தி... உன்னோட புதுப் பெண்டாட்டிக்கு என்னை அறிமுகப்படுத்தற லட்சணம் இதுதானா? கொஞ்சம் புத்திசாலித்தனமா பேசினா வாயரட்டையா? சிஸ்டர்! நீங்களே சொல்லுங்க... இது நியாயமா?

    அனிதா ஒன்றும் பேசாமல் புன்னகைத்தாள். கீர்த்தி வத்சனின் முதுகைத் தட்டினான். சரி, சரி... கையில என்னடா அட்டைப் பெட்டி? எனக்கு பிரசன்டேஷனா? என்ன கொண்டு வந்திருக்கே...?

    கெஸ் பண்ணு பார்க்கலாம்?

    அயர்ன்பாக்ஸ்? பால் குக்கர்?

    நோ!

    டேபிள் லேம்ப்? காமரா?

    நோ!

    நீயே சொல்லித் தொலை! எரிச்சல்பட்டான் கீர்த்தி.

    சொல்ல மாட்டேன். உனக்கு என்னிக்கு ஃபர்ஸ்ட் நைட்? அனிதா சிவப்பான முகத்தைத் திருப்பிக் கொள்ள, கீர்த்தி சிரித்தான். மெல்லச் சொன்னான்.

    நாளைக்கு!

    அப்போ பிரிச்சு பார்த்தா போதும். அதுக்கு முன்னாடி பிரிச்சுடாதே. என்னைத் திட்டுவே...!

    அடப்பாவி! என்னடா வெச்சிருக்கே உள்ளே...?

    நிச்சயமா வெடிகுண்டு இல்லே. பயப்படாதே. நான் போய் மொதல்ல உன்னோட ரிசப்ஷன் அயிட்டத்தை முழுங்கிட்டு வர்றேன். பசி ஆளை உருவுது. - நகர முற்பட்டவன் நின்று அனிதாவிடம் சொன்னான். காங்கிராட்ஸ் சிஸ்டர்! கோயில் மாடாயிருந்த கீர்த்தியை குடும்பஸ்தனா பண்ணிட்டீங்க. கொஞ்சம் முசுடாயிருந்தாலும் நல்லவன். சின்ன விஷயத்துக்கெல்லாம் உடைஞ்சு போயிடுவான். பார்த்து ஹேண்டில் பண்ணுங்க...!

    சர்த்தான் போடா! கீர்த்தி சிரித்தபடியே வத்சனை நெட்டித் தள்ள அவன் டைனிங் ஹால் பக்கமாய் போனான்.

    என்னங்க... உங்க ப்ரெண்ட் எப்பவும் இப்படித்தான் பேசுவாரா? அனிதா கேட்டு விட்டு புன்னகைத்தாள்.

    அவனுடைய சுபாவமே அப்படித்தான். பேசிப் பேசியே எல்லாரையும் சீக்கிரமா சிநேகம் பண்ணிக்குவான். அப்பா அம்மாவெல்லாம் திருநெல்வேலி பக்கத்துல இருக்காங்க. இவன் இந்த கோயமுத்தூர்ல குப்பை கொட்டிட்டிருக்கான்.

    கல்யாணம்?

    வேண்டாம்ன்னு சொல்லிட்டிருக்கான். அனுமார் பக்தன். பிரம்மச்சாரியாவே இருந்துடப் போறதா அளந்திட்டிருக்கான்...

    இந்த அட்டைப் பெட்டியில் என்ன இருக்கும்?

    நாளைக்கு ராத்திரிதான் பிரிச்சு பார்க்கணும்ன்னு சொல்லியிருக்கான்.

    ஏதாவது அசிங்கமா இருந்துட போகுது!

    அசிங்கமா இருக்கும்ங்கிறதுனாலத்தான் நாளைக்குப் பிரிச்சுப் பார்க்க சொல்லியிருக்கான். உனக்கு ஆங்க்ஸைட்டியா இருந்தா பிரிச்சுடட்டுமா?

    வேண்டாம், வேண்டாம்! - அனிதா சொல்லச் சொல்ல கீர்த்தியின் அப்பா சீத்தாபதி அவர்களை நெருங்கினார்.

    கீர்த்தி, நீயும் அனிதாவும் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கோயிலுக்குப் போயிட்டு வந்துடுங்க. கச்சேரி முடிய நேரமாகும்.

    எந்தக் கோயிலுக்கு? கீர்த்தி எரிச்சலாய்க் கேட்டான்.

    பக்கத்திலிருக்கிற விநாயகர் கோயிலுக்கு! போம்மா அனிதா! டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு உடனடியா வரணும்.

    தலையை ஆட்டிய அனிதா, மண்டபத்தின் கோடியில் இருந்த தன்னுடைய அறையை நோக்கி மெல்ல நகர்ந்தாள்.

    அறையை நோக்கி உள்ளே புக முயன்ற நேரம், அவளுடைய மாமா எத்திராஜ் எதிர்பட்டார். அம்மா அனிதா... உன்னைப் பார்த்து பேசறதுக்காக முருகேஷ்ன்னு ஒருத்தர் - உங்க ஆபீஸ்ல முன்னாடி வேலை பண்ணிட்டிருந்தவராம், வந்திருக்கார். வரச் சொல்லட்டுமா?

    ‘முருகேஷா?’

    மனசின் மையத்தில் திக்கென்று அதிர்ந்தாள் அனிதா.

    2

    அனிதா கொஞ்சம் நிதானப்பட்டாள்.

    முருகேஷோடு பேசுவதா வேண்டாமா என்ற தீர்மானத்தில் சில விநாடிகளை செலவழித்து முடிவு காண்பதற்குள் அவளுக்குப் பின்னே அந்தக் குரல் கேட்டது.

    மிஸஸ் அனிதா கீர்த்தி! காங்கிராட்ஸ்!

    திரும்பினாள்.

    முருகேஷ் நின்றிருந்தான். கைகளில் ரோஸ்நிற ரிப்பன் சுற்றப்பட்ட அட்டைப் பெட்டி. கொஞ்சம் இளைத்த மாதிரியான உடலமைப்பு. கண்களுக்கு கீழே குடிப்பழக்கம் உண்டு என்பதை நிச்சயப்படுத்தும் சதைப் புடைப்புகள். மெலிதான மீசைக்குக்கீழ் சிகரெட் புகையால் தார் நிறத்துக்கு மாறிவிட்ட உதடுகள். தொண்டையில் நிமிர்ந்திருக்கும் ஆதாம் ஆப்பிள்.

    அனிதா ஒரு புன்னகைகூட இல்லாமல் அவனை ஏறிட்டாள். மண்டபத்தில் இருந்த ஜனக்கூட்டம் பூராவும் மேடைக் கச்சேரியில் மறைந்திருக்க, யாரும் தங்களுடைய பேச்சைக் கேட்க வாய்ப்பில்லை என்ற தைரியத்தில் பேச ஆரம்பித்தாள் அனிதா.

    நான் உங்களுக்கு இன்விடேஷனை அனுப்பலைன்னு நினைக்கிறேன்.

    முருகேஷ் மெல்ல சிரித்தான். அந்தப் பணக்கார சம்பந்தம் கிடைத்த சந்தோஷத்துல ஒருவேளை இன்விடேஷன் அனுப்ப மறந்திருப்பேன்னு நினைச்சு நானே என்னை சமாதானப்படுத்திகிட்டு வந்தேன்.

    அனிதா உஷ்ணமாய் அவனைப் பார்த்தாள்.

    ரொம்பவும் முறைக்காதே அனிதா...!

    உங்ககிட்டே நான் பேசத் தயாராயில்லை - அனிதா உள்ளே போக முற்பட, அவன் கையை நீட்டி தடுத்தான்.

    கொஞ்சம் நில்லு அனிதா!

    என்ன?

    அப்பா - அம்மா இல்லாத அநாதையான உனக்கு ஒரு குபேர வாழ்க்கை கிடைச்சதை நினைச்சு நான் சந்தோஷப்படறேன்.

    நீங்க ஒண்ணும் சந்தோஷப்படவும் வேண்டாம். வருத்தப்படவும் வேண்டாம். நீங்க மொதல்ல இங்கிருந்து போனா பரவாயில்லை!

    அனிதா, நீயும் நானும் ஒரே ஆபீஸில் வேலை செய்தவங்க. உம்மேல ஆசைப்பட்டு, உன்னோட ஆசையும் தெரிஞ்சுக்கிறதுக்காக உனக்கு ஒரு லெட்டர் எழுதினேன். அது துரதிர்ஷ்டவசமா மானேஜர் கிட்டே போயிடுச்சு. அதனோட விளைவு - இப்போ நான் சஸ்பென்ட்ல இருக்கேன்.

    அந்தப் பழைய கதையை எல்லாம் இப்போ நான் கேக்கக் கூடிய நிலைமையில் இல்லை முருகேஷ். நீங்க போலாம்...!

    நான் போறேன். அதுக்கு முன்னாடி என்னோட இந்த பிரசன்டேஷனை வாங்கிக்கணும் அனிதா!

    அனிதா கசப்பாய் புன்னகைத்தாள். நான் என் கல்யாணத்துக்கு உங்களைக் கூப்பிட்டு, நீங்களும் அந்த அழைப்போடு வந்து - எனக்கு பிரசன்ட் பண்ணினா அதை நான் சந்தோஷமா வாங்கிக்குவேன். எனக்கு விருப்பமில்லாதவங்களோட பிரசன்டேஷன்களை நான் வாங்கிக்கிறதில்லை.!

    நானூறு ரூபா சம்பளத்துல ஸ்டெனோ வேலை பார்த்துட்டிருந்த உனக்கு இப்போ பணக்கார திமிர் வந்திடுச்சு அனிதா...!

    அப்படியே இருக்கட்டும்!

    உனக்கு இந்த பிரசன்டேஷன் வேண்டாம்ன்னா பரவாயில்லை. உன்னோட கணவனைப் பார்த்து ‘கங்கிராட்ஸ்’ சொல்லி குடுத்துட்டு போறேன்...

    ஒரு கணம் அதிர்ந்தாள் அனிதா.

    அவர்கிட்ட போய் ஏதும் பேச வேண்டாம். உங்க பிரசன்டேஷனை எங்கிட்டயே குடுங்க. உம்... - கையை நீட்டினாள்.

    தட்ஸ் குட்!

    அட்டைப் பெட்டியை அவன் பவ்யமாய் கொடுக்க அவள் எரிச்சலோடு வாங்கிக் கொண்டாள். உங்களுக்கு ஒரு சின்ன ரெக்வெஸ்ட். இனிமே அழைப்பு இல்லாமே யார் கல்யாணத்துக்கும் போகாதீங்க. போனாலும் இப்படி அதிகப் பிரசங்கித்தனமா பிரசன்டேஷன் வாங்கிட்டுப் போகாதீங்க.

    தேங்க்யூ ஃபார் யுவர் கைண்ட் அட்வைஸ்... பை...த...பை நான் கொஞ்ச நேரம் கச்சேரி கேட்டுட்டுப் போறதுல உனக்கொண்ணும் ஆட்சேபணையில்லையே...!

    முறைத்தாள் அனிதா.

    இந்த முறைப்புல உன்னோட அழகு ரெண்டு மடங்கா தெரியுது அனிதா. கண்ணு கோபமா பார்க்குதே தவிர அதுல இனிமை சொட்டத்தான் செய்யுது. நீ என்ன தான் முயற்சி செஞ்சாலும் உனக்கு கோபம் வராது அனிதா!

    யூ... யூ... யூ...!

    உனக்கு திட்டவும் வராது...

    இப்போ நீங்க வெளியே போகப் போறீங்களா இல்லையா?

    உன்னோட பர்ஸ்ட்நைட் என்னிக்கு?

    யூ... ப்ளடி! வார்த்தைகளைத் தேடி அவனைக் குதற முயற்சித்த அந்த விநாடி வத்சன் அருகில் வந்தான்.

    சிஸ்டர், என்ன கலாட்டா?

    3

    அனிதா ஒருமுறை ஆழமாய் அதிர்ந்து சட்டென்று இயல்புக்கு மீண்டாள். சிநேக பாவத்தில் ஒரு புன்னகையை உதட்டில் ஒட்ட வைத்துக் கொண்டு வத்சனைப் பார்த்தாள். "கலாட்டா

    Enjoying the preview?
    Page 1 of 1