Thittamitta Thiruppam
5/5
()
About this ebook
வணக்கம்.
நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் தம்பி திரு. R. அசோகன் திருமணத்தில் நிறைய முன்னணி எழுத்தாளர்களை சந்தித்தேன். இந்த எழுத்தாளர்களிடம் பேசி மகிழ நிறைய இளைஞர்கள் வந்திருந்தனர். வயதானவர்களும் வந்திருந்தனர். இந்த வயதானவர்கள் ப. கோ. பிரபாகரின் சமூக நாவல்களை மிகவும் விரும்பிப் படிப்புதாகவும் அவர் சமூக நாவலையே எழுதவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டனர். இளைஞர்கள் க்ரைம் நாவலுடன் சமூக நாவலையும் விரும்பிப் படிப்பதாகக் கூறியது அவர்களுடைய நல்ல ரசணை உணர்வை வெளிப்படுத்தியது.
க்ரைம் நாவல் என்றால் வன்முறையை தூண்டி விடும் என்று பெரியவர்கள் தப்புக்கணக்கு போட்டுள்ளனர். நீதிபதி மோகன் காந்தியடிகளின் கொலைவழக்கை பற்றி ஒரு நீண்ட கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார். அதைப் படிக்கும் போது தேர்ந்த க்ரைம் நாவல் ஆசிரியர்கள் எழுதிய நாவலைப் போலவே அமைந்திருந்தது. தேச பிதாவைக் கொல்ல எத்தனை சூழ்ச்சி! அதில் சிக்கிய பெரிய மனிதர்கள் எத்தனை! இப்படி பல விஷயங்கள். இந்த அடிப்படையில் தான் ப. கோ. பி. அவர்களும் க்ரைம் நாவலை எழுதுகிறார். வயதானவர்களும் பயப்படாமல் படிக்கலாம். நாட்டில் நடப்பது தான் ‘திட்டமிட்ட திருப்பமாக’ உருவாகிறது. வாசகர்களே நான் சொல்வது சரிதானே!
Read more from Pattukottai Prabakar
Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsBharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5
Related to Thittamitta Thiruppam
Related ebooks
Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsBharath Bharath Paranthu Vaa Rating: 0 out of 5 stars0 ratingsSirithu Sirithu Ennai... Rating: 5 out of 5 stars5/5Brindha Private Limited Rating: 5 out of 5 stars5/5January Iravugal Rating: 2 out of 5 stars2/5L Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Vilaga Vilaga Vibareetham Rating: 5 out of 5 stars5/5Aarambaththil Appadiththaan Rating: 5 out of 5 stars5/5January February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Uyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Onpathavathu Thisai! Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Maranam Unnai Mannikattum Rating: 4 out of 5 stars4/5Patharathey Bharath Rating: 5 out of 5 stars5/5Vivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5Aarthikku Aabathu! Rating: 4 out of 5 stars4/5Nil, Oru Nibanthanai Rating: 5 out of 5 stars5/5Kaadhalikku Kalyanam Rating: 5 out of 5 stars5/5From Zero To Hero Rating: 5 out of 5 stars5/5Red Signal Rating: 5 out of 5 stars5/5Sodukkinal Sorgam Rating: 5 out of 5 stars5/5Currency Vettai Rating: 5 out of 5 stars5/5Ithu Bharath Style Rating: 0 out of 5 stars0 ratingsIrakka Piranthaval Sindhu Rating: 4 out of 5 stars4/5Udaiyatha Vennila! Rating: 0 out of 5 stars0 ratingsAabathu Ingey Aarambam Rating: 5 out of 5 stars5/5Irappathu Sugam... Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Thittamitta Thiruppam
2 ratings1 review
- Rating: 5 out of 5 stars5/5G o o o d s t o r y
Book preview
Thittamitta Thiruppam - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
திட்டமிட்ட திருப்பம்
Thittamitta Thiruppam
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
முன்னுரை
என் அன்பான வாசகர்களுக்கு
வணக்கம்.
நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் தம்பி திரு. R. அசோகன் திருமணத்தில் நிறைய முன்னணி எழுத்தாளர்களை சந்தித்தேன். இந்த எழுத்தாளர்களிடம் பேசி மகிழ நிறைய இளைஞர்கள் வந்திருந்தனர். வயதானவர்களும் வந்திருந்தனர். இந்த வயதானவர்கள் ப. கோ. பிரபாகரின் சமூக நாவல்களை மிகவும் விரும்பிப் படிப்புதாகவும் அவர் சமூக நாவலையே எழுதவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டனர். இளைஞர்கள் க்ரைம் நாவலுடன் சமூக நாவலையும் விரும்பிப் படிப்பதாகக் கூறியது அவர்களுடைய நல்ல ரசணை உணர்வை வெளிப்படுத்தியது.
க்ரைம் நாவல் என்றால் வன்முறையை தூண்டி விடும் என்று பெரியவர்கள் தப்புக்கணக்கு போட்டுள்ளனர். நீதிபதி மோகன் காந்தியடிகளின் கொலைவழக்கை பற்றி ஒரு நீண்ட கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார். அதைப் படிக்கும் போது தேர்ந்த க்ரைம் நாவல் ஆசிரியர்கள் எழுதிய நாவலைப் போலவே அமைந்திருந்தது. தேச பிதாவைக் கொல்ல எத்தனை சூழ்ச்சி! அதில் சிக்கிய பெரிய மனிதர்கள் எத்தனை! இப்படி பல விஷயங்கள். இந்த அடிப்படையில் தான் ப. கோ. பி. அவர்களும் க்ரைம் நாவலை எழுதுகிறார். வயதானவர்களும் பயப்படாமல் படிக்கலாம். நாட்டில் நடப்பது தான் ‘திட்டமிட்ட திருப்பமாக’ உருவாகிறது. வாசகர்களே நான் சொல்வது சரிதானே!
1
பூக்கள் தெளிக்கப்பட்ட முதலிரவுப் படுக்கையைப் போல வானம் முழுக்க நட்சத்திரங்கள். தலையணைகளாய் மேகங்கள். சாயங்கால மழையால் சத்தோஷப்பட்டிருந்த மரங்கள் முத்தமிட்டு, முத்தமிட்டு தங்களைத் தேடி வந்த காற்றின் கன்னங்களை ஈரம் செய்து கொண்டிருக்க...
மறைமலையடிகள் பாலத்தில் இருந்து இறங்கி அடையாறை நோக்கி விரைந்து கொண்டிருந்த அந்தக் காரின் மூக்கு, முதுகு, பின் பக்கமெல்லாம் கோலம் வைத்துப் பழகும் சாரல் வைத்த புள்ளிகள்.
இடது கையால் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். வலது கை சிகரெட்டையும், நெற்றி சிந்தனையையும் சுமந்திருந்தன. டேஷ் போர்டில் சுந்தர். ஜி என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்நெகர் ஒட்டியிருக்க, ஜி. சுந்தர் கடைசி பப் இழுத்து விட்டு நிகோடின் சேமித்த பில்டர் முனையை சாலையோர நீர்த்தேக்கத்தில் சுண்டினான்.
சுந்தர் மேல் தட்டு ஆசாமி, படுக்கப் போகிற வரை, கழுத்தில் டை, காலில் ஷூ சுமக்கிற பிள்ளையை ஊட்டி கான்வெண்ட்டில் படிக்க வைக்கிற, பியூட்டி பார்லர், ஸ்விம்மிங் பூல், லேடீஸ் கிளப் என்று ஊர் சுற்றுகிற பெண்டாட்டிகளைக் கட்டிக் கொள்கிற, போன் அடித்தால் எடுத்து வந்து கையில் கொடுப்பதற்கு வேலைக்காரன் வைத்துக் கொள்கிற, இன்றைக்கு எந்தச் சட்டை போடலாம் என்கிற நம் யோசிப்பைப் போல் இன்றைக்கு எந்தக் காரில் போகலாம் என்று யோசிக்கிற, குழந்தைக்கு பர்த்டேயை ஆபட்ஸ்பரியில் கொண்டாடுகிற, ஜலதோசம் என்றால் அப்பல்லோவுக்கு விரைகிற... மேல் தட்டு! தட்டு
கிண்டி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் போன மாதம் வெற்றிகரமான ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடின இந்தியன் பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரிசின் பத்து டைரக்டர்களில் ஒருவன். நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றவன். தவிர நான்கு வேறு வேறு கம்பெனிகளிலும் பங்குதாரராய் இருப்பவன்,
இரண்டு வருடங்களுக்கு முன் திருமணமானவன், காதல்! கம்பெனிப் பொருள்களின் விளம்பரத்திற்குப் புதிய மாடல் முகம் தேவை என்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தியதில்... இண்ட்டெர்வியூவிற்கு வந்தவள் இனியா. அவளைப் பார்த்த பத்தாவது நிமிடம் சுந்தர் கம்பெனி உபயோகத்துக்கு வேண்டாம், சொந்த உபயோகத்திற்கு இருக்கட்டும் என்று தீர்மானித்தான்.
கொட்டியது மேளம், குவித்தது கோடி மலர், கட்டினான் மாங்கல்யம்.
பஸ் டெர்மினசைத்தாண்டி சற்றுத்தள்ளி இடதுகைப் பக்கம் திரும்பிய கார். மூன்றாவது நிமிடம் அந்த பங்களாவின் காம்பௌன்ட்டிக்குள் நுழைந்தது.
போர்ட்டிகோவில் சிக்கென்று ஒரு வெள்ளை மாருதி. அதனைத் துடைத்துக் கொண்டு வெள்ளை சாரதி. இது சுந்தரின் பங்களா அல்ல.
காரை விட்டு இறங்கினான். கதவுகள் திறந்திருக்க உள்ளே வந்தான்.
வாங்க சார்
என்றாள் கவுன் போட்ட, கொண்டை போட்ட லிப்ஸ்டிக் போட்ட கண்ணாடி போட்ட தாம்சனின் செகரெட்டரி.
எப்ப வந்தாரு பம்பாய்லேர்ந்து
காலைலயே வந்துட்டாரு.
ஏன் முன்னாடியே தெரிவிக்கலை? ஏர்ப்போர்ட்டுக்கு கார் அனுப்பியிருப்பேனே...
பாஸ் தான் தெரிவிக்க வேணாம்னு சொன்னார்.
அது அவரைத்தான் கேக்கணும்.
"என்ன செய்றார்?''
படம் பார்த்துக்கிட்டிருக்கார்.
என்னை உடனே வரச்சொல்லி போன் செஞ்சார்.
அப்படியா, சொல்றேன். உக்காருங்க
அவள் பஞ்சு மேல் நடப்பவள் போல் பாதம் வைத்து நடந்து இண்ட்டெர்காம் எடுத்தாள். பாஸ், மிஸ்டர் சுந்தர் வந்துருக்கார். சரி.
சுந்தர் ஒரு சிகரெட் கொளுத்திக்கொண்டு எழுந்தான்.
உங்களை மேலே வரச் சொல்றார். எக்ஸ்கியுஸ்மி, சிகரெட் புகை அவருக்கு ஆகாது
என்று அவனிடமிருந்து சிகரெட்டை வாங்கி அருகில், ஆஷ்ட்ரே பள்ளத்தில் நசுக்கினாள்.
சுந்தர் கம்பளம் விரித்த படிகளில் ஏறி மேலே வந்து, அறைக்கதவில் செல்லத் தட்டல் செய்து அறைக்குள் வந்தான். நடக்கையில் தரையின் விரிப்பு நசுங்கி நிமிர்ந்தது. குளிர் உடை மூடாத உடலின் பகுதிகளை உரசியது. அறையின் வெளிச்சம் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது
பாலிஷ் போடப்பட்ட தேக்கு மர ஆடும் நாற்காலியில் இரவு உடையில் தாம்சன் அமர்ந்திருந்தார். மடியில் ரிமோட் கண்ட்ரோல் பீஸ். எதிரே இருபத்தி நான்கு இஞ்ச் டி. வி. திரையில் ஓடிக்கொண்டிருந்த ஆங்கிலப் படத்தின் கதாநாயகிக்கும் அதே இஞ்ச்தான் ஊகிக்கலாம்.
தாம்சனுக்கு அருகில் வட்ட பீப்பாய். அதன் மேல் வறுத்த முந்திரியும், கிளாஸ் டம்ளர்களும், அளவு குறைந்த ஜின் பாட்டிலும், ஐஸ் பெட்டியும் இருந்தன.
குட் ஈவினிங் சார்
என்றான் சுந்தர்.
பதிலுக்கு நல்ல மாலைக்கு வாழ்த்தாமல் உக்காரு
என்றார் ஒரே வார்த்தையில். திரையில் காட்சியைக் கழுவினார். எதிர்நாற்காலியில் அசவுகரியமாய் அமர்ந் திருந்த அவன் பக்கம் திருப்பினார். எப்படி இருக்கே மேன்?
என்றார்.
நல்லா இருக்கேன் சார்
ஜின்?
ஒரே ஒரு பெக் போதும் சார்
எடுத்துக்கோ.
சுந்தர் அதிக ஓசை ஏற்படுத்தாமல் கண்ணாடி டம்ளரில் சரித்துக் கொண்டான். இடுக்கி வைத்து இண்டு ஐஸ் கட்டிகளை எடுத்துப் போட்டுக் கொண்டு அவர் முகத்தையே பார்த்தான்.
இந்தியன் பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரியில் முக்கியமான டைரக்டர் தாம்சன். அவர் சொன்னால் சரி என்று உடனே சம்மதிக்கிற நான்கு டைரக்டர்கள் அவரின் மாமா, சித்தப்பா, மருமகன் என்று நெருங்கிய உறவினர்கள்.
தாம்சனுக்கு உடலில் எத்தனை மச்சமோ, இந்தியாவில் அத்தனை பங்களாக்கள். அதில் இந்த சென்னை பங்களாவும் ஒன்று.
தாம்சனுக்கு ஐம்பத்தி நான்கு வயதிலும் முப்பத்தி இரண்டு பற்கள், டை அடிக்காமலேயே சுறுப்புத் தலை, ஊசியோ, மாத்திரையோ, தெளித்துக் கொள்ள மருந்தோ தேவையில்லாமலேயே ஒரு மனைவி மற்றும் மூன்று துணைவிகளைச் சமாளிக்கிறார். தொழிலில் படு நேர்மை, எந்த தேதியில் வருமான வரிக்காரன் போனாலும் எமாற்றத்தோடுதான் திருப்புவான்.
சென்னையில் இந்த பிளாஸ்டிக் கம்பெனியை அதிகார பூர்வமாக நிர்வகிப்பது சுந்தர் தான் என்றாலும்... முழுக்க தாம்சனின் ஆலோசனைகளே. அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் போல.
ஒரு முக்கியமான விஷயம் பேசலாம் சுந்தர்?
என்றார் தாம்சன்
சொல்லுங்க சார்
என்றான் கிளாசை வைத்து விட்டு.
மூணாவது வருஷம் நம்ம கம்பெனியோட லாபம் என்னப்பா?
இருபத்தி ரெண்டு லட்சம் சார்.
போன வருஷம்?
இருபது லட்சம் சார்
இந்த வருஷம்?
பத்தொன்போது லட்சம் சார்
கம்பெனி ஏம்ப்பா கீழேயே போய்க்கிட்டிருக்கு?
அதான் விவரமா டைரக்டர்ஸ் மீட்டிங்ல சொன்னேனே சார். முமுவிவரத்தையும் ரிப்போர்ட்டாவும் தயாரிச்சிக் கொடுத்தேனே சார்
"யெஸ், யெஸ், கொடுத்தே. அதாவது தொழிலாளர்களுக்கு சம்பளம் ஏத்த வேண்டியதா இருக்கு. நிர்வாகச் செலவுகள் கூடுது. மார்க்கெட்ல போட்டி கம்பெனிகள் அதிகரிச்சிட்டாங்க. விற்பனையை அதிகப்படுத்த விளம்பரச் செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கு, வியாபாரிகளுக்கு டிஸ்கவுண்ட் அதிகமா கொடுக்க வேண்டியதா இருக்கு. அரசாங்கம் வரியை உயர்த்திடுச்சி. அதுக்கு எத்த மாதிரி