Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Patharathey Bharath
Patharathey Bharath
Patharathey Bharath
Ebook96 pages49 minutes

Patharathey Bharath

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மகேந்திரன் என்பவன் கிரானைட் கம்பெனியின் முதலாளி. மகேந்திரன் தம்பி ரஞ்சன் சீமாவை காதலித்து கரம்பிடித்தானா? மகேந்திரன் மனைவி வினிதாவிற்கு கர்ப்பத்தடை ஏற்பட யார் காரணம்? பணத்தாசை காரணமாக மகேந்திரனை திட்டம் தீட்டி கொன்றவர் யார்? குற்றம் செய்தவர் தண்டனையை ஏற்றுக் கொண்டாரா? வாங்க குற்றவாளியை தேடலாம்...

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580100908089
Patharathey Bharath

Read more from Pattukottai Prabakar

Related to Patharathey Bharath

Related ebooks

Reviews for Patharathey Bharath

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Patharathey Bharath - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பதறாதே பரத்

    Patharathey Bharath

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    இந்தக் கதையில் இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்துப் போகப் போகிற ஆசாமிதான் ‘மகி’ என்று வினிதா செல்லமாக அழைக்கும் மகேந்திரன்.

    தற்சமயம் கட்டிலின் மேலே மகேந்திரன். இவனுக்கும் கீழே இவன் தொட்டு தாலி கட்டி அ.மிதித்து. அ.பார்த்து சொந்தமாக்கிக் கொண்ட மனைவியான போன பாராவில் வந்த வினிதா.

    ஆகவே அந்தரங்கத்தைக் கலைக்காமல், வர்ணிப்பதற்காக ஜன்னல் வழியாகப் பார்த்தோமென்றால்... சோம்பலாய் வானம் விடிந்து கொண்டிருந்தது. ஸ்கேல் வைத்துப் போட்டக் கோடுகளாய் தெரிந்த டெலிபோன் கம்பிகள் மேல் சாம்பல் நிறக் குருவிகள் உட்கார்ந்து ‘இன்றைக்கு எந்த திசையில்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தன.

    பங்களா வாசலில் இரண்டு கார்களைக் கழுவித் துடைத்துக் கொண்டிருந்தார்கள். 106 டிகிரி கொண்ட வெயில் காலமென்பதால் புல்வெளியின் உச்சந்தலையில் பனித் துளிகள் இல்லை.

    காம்பௌண்ட் கேட் அருகே கிரானைட்டில் தங்க எழுத்துக்களில் ‘சௌந்தர்யா’ - மகேந்திரனின் செத்துப் போய் விட்ட அம்மாவின் பெயர். சிமெண்ட் கூண்டுக்குள் உட்கார்ந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்த நைட் வாட்ச்மேன் விழித்து வாயோரம் துடைத்துக் கொண்டு வெளிவந்து கைகளைக் கோர்த்து சோம்பல் முறிப்பதை பாதியில் நிறுத்தி, குட் மார்னிங் சார் என்றான்.

    மரியாதை தரப்பட்ட மகேந்திரனின் தம்பி ரஞ்சன் வெள்ளை டி ஷர்ட், வெள்ளை ஷார்ட்ஸ், வெள்ளை கான்வாஸ் ஷூ என்று ஜாகிங் உடையில் இருந்தான்.

    குட் மார்னிங் இருக்கட்டும். என் ரூமுக்கு கேக்குதே குறட்டை.

    சார், இப்பத்தான் பத்து நிமிஷம் முன்னாடி லேசா கண்ணைச் சொக்கிச்சு. அப்படி சாய்ஞ்சேன். தூங்கலிங்க என்றான் தன் செக்யூரிடி சர்வீஸ் இன்ஷியல்கள் கொண்ட தொப்பியைச் சரியாக அணிந்தபடி.

    சரி, கேட்டைத் திற!

    திறக்கப்பட்டதும் வேகமான நடையில் வெளியே நடந்தான் ரஞ்சன்.

    கேள்வி: ரஞ்சன் பற்றி சிறு குறிப்பு வரைக.

    பதில்: ஐந்தடி எட்டங்குலம். பூரி ஞாபகம் ஏற்படுத்தும் கன்னங்கள். கோரை தலைமுடியில் ஒரு பக்கமாக மருதாணி பூசி பிரௌனாக்கியிருந்தான். ஹவுஸ் ஃபுல்லாக மீசை, போன ஆகஸ்டில் இருந்து காதலிக்கத் துவங்கியிருப்பவன். படித்து விட்டு அண்ணனின் ‘சௌந்தர்யா கிரானைட்ஸ்’ என்கிற பிரமாண்டமான நிறுவனத்தின் நிர்வாகத்தில் மகேந்திரனுக்கு வலது கை, வலது காலாக விளங்குபவன். எல்.ஓ.வி.ஈ. சமாச்சாரம் இன்னும் வீட்டில் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருப்பவன். பலம்: சரளமான ஆங்கிலமும், புத்திக் கூர்மையும், பலவீனம்: விடாமல், சிகரெட் பிடிப்பதும், சட்டென்று ஆர்ப்பரிக்க வைக்கிற முன் கோபமும்.

    மகேந்திரன் இன்னும் தன் காரியத்தில் மும்முரமாய் இருந்தான். அவனுடைய இடது கையைப் பார்த்து விட்டு வரலாம்.

    மாடியில் மற்றொரு அறையில் வஜ்ராசனத்தில் அமர்ந்து, கண்களை மூடி பூரண முத்திரை பிடித்து மகத் பிரணாயாமம் செய்து கொண்டிருக்கும், நெற்றியில் விபூதி பூசிய, இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்த, சற்று முன் குளித்த சுதாகர், வினிதாவின் தம்பி.

    இப்போது மாதிரியான ஒரு கட்டில் மயக்க நேரத்தில் வினிதா, ஏங்க, என் தம்பி சுதாகர் டிகிரி முடிச்சுட்டு வேலை கிடைக்காம அலைஞ்சிட்டிருக்கானே, அவனை உங்க ஆபீஸ்ல போட்டு டிரைனிங் கொடுத்து முன்னுக்கு கொண்டு வரக் கூடாதா என்றாளா?

    யோசிக்கலாம். முதல்ல திரும்பு என்றானா?

    முதல்ல பதில் சொல்லுங்க. அப்பத்தான் என்றாளா?

    சரி! சரி! சரி! என்றானா?

    ஆகவே சுதாகர் இங்கே வந்து வீட்டோடு தங்கி ஆபீசுக்குப் போய் ரஞ்சனுக்கு உதவியாக இருக்கத் துவங்கி இரண்டு வருடமாயிற்று.

    சுதாகருக்கு ட்வெண்ட்டி ப்ளஸ் டூ வயது. பிடரி வழிய கேசம். லென்ஸ் வைத்தது போல நீல நிற சிவரஞ்சனிக் கண்கள். தவறாமல் நெற்றியில் விபூதி. அதற்குப் பின் நெற்றியில் குங்குமம்.

    தமிழகத்தில் மொத்தம் எத்தனை அம்மன் கோயில்கள் உள்ளன? எத்தனை கோயில்களில் வலம்புரி விநாயகர் இருக்கிறார்? பஞ்ச பூதங்களுக்கும் சிலைகள் எந்தெந்த ஊரில் இருக்கின்றன? திருமணமான பெண் ஏன் மெட்டி அணிய வேண்டும்? ஆண் எதற்காக இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுகிறான்? மாணிக்க வாசகருக்கு எப்போது எப்படி ஞானம் பிறந்தது?

    இந்த நீதிக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு விடை தெரியுமா? தெரியாவிட்டால் நீங்கள் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1