Aval Oru Savithri
5/5
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Sivam Rating: 4 out of 5 stars4/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Vairam Vairam Vairam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Athai Mattum Sollathe! Rating: 5 out of 5 stars5/5Athirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5
Related to Aval Oru Savithri
Related ebooks
Yaathumaki Nindral Rating: 5 out of 5 stars5/5Abaya Vanam Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Nilave! Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5Nooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Sutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Valai Rating: 5 out of 5 stars5/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsYathirai Gnanam Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Marma Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Kannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsAathma Rating: 5 out of 5 stars5/5Uyirin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Rathamillamal... Rating: 5 out of 5 stars5/5Manathukkuthan Karpu Rating: 0 out of 5 stars0 ratingsAairam Jannal Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Neelakkal Moothiram Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Marma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsOodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5Uyiril Kalandha Uravey… Rating: 1 out of 5 stars1/5
Related categories
Reviews for Aval Oru Savithri
2 ratings0 reviews
Book preview
Aval Oru Savithri - Indira Soundarajan
http://www.pustaka.co.in
அவள் ஒரு சாவித்திரி
Aval Oru Savithri
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அவள் ஒரு சாவித்திரி
1
தேடுங்கள்...
தேடி அலையவே வாழ்க்கை!"
- சித்தன் வாக்கு.
சென்னை விமான நிலையம்... இன்னும் சில வருடங்களில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு போல ஆகிவிடும் ஆபத்தோடும் ஆளரவத்தோடும் இருக்க, அந்தக் கூட்டத்தில் அரக்க பரக்க காத்துக் கொண்டிருந்தான் சேகர். அவன் கையில் ஒரு சிறிய சந்தனமாலை!
எதிரில் பயணிகள் இறங்கி வரும் பகுதி.
நாய்க்குட்டியை அழைத்து வருவது போல வீலர் சூட்கேஸ்களை இழுத்துக் கொண்டும், லேப்டாப் பேக் தோளில் தொங்கவும் பயணிகள் வந்தபடி இருந்தனர்.
ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது லட்சாதிபதிகளுக்கு கோடீஸ்வரர்களுக்கும் மட்டுமே என்று இருந்தது. இன்று எல்லோரையும் கூவி அழைத்து வானில் பறக்கச் சொல்கிறார்கள்.
மனிதர்கள் வளமாகி விட்டார்களா இல்லை விமானம் மலிவாகி விட்டதா என்று தெரியவில்லை. சேகரும் அது தெரி யாமல்தான் நின்று கொண்டிருந்தான். பிரபல நடிகர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். ஒரு காலத்தில் அவர் நடந்தாலே அதிரும். இப்போது அவர் பத்தோடு பதினொன்றாகத்தான் தெரிந்தார்! சிலர் மட்டும் அவரை திரும்பிப் பார்த்தனர். அவரிடம் தெரிந்த முதுமை அவரை சாதாரணமாக்கி விட்டதா இல்லை மக்களிடம் மாயை தெளிந்து விட்டதா என்பதும் விளங்கவில்லை.
நல்ல வேளையாக சேகர் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனந்த். ஒரு வீல் சூட்கேசை இழுத்தபடி வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்கவும் அங்குள்ள பலரிடம் ஒரு பரபரப்பு…
அதோ ஜேஎம்டி... அதோ ஆனந்த் சார்…. பயங்கரமா இளைச்சுட்டாரே...
இப்பதாம்ப்பா பாக்க நல்லா இருக்கு…
இப்படி பலவிதமான முணுமுணுப்புகள். மலர்க்கொத்து களுடன் அவர்கள் ஓடினார்கள்...
ஆனந்த் ஒரு கோடீஸ்வரன். சின்ன அம்பானி. மீடியம் பில்கேட்ஸ் இப்படி வசதிக்கு கூறிக்கொள்ளலாம். அமெரிக்கா வில் ஒரு பல்கலைக்கழகம் அவனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்திருந்தது. ஒரு புதுமையான கம்ப்யூட்டரை அவன் இந்திய மண்ணில் பரவலாக்கி வெற்றி கண்டிருந்தான்.
அதற்காக! டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்புகின்றவனுக்குத்தான் இப்போது வரவேற்பு. அந்த கூட்டத்தில் முண்டுவது சேகருக்கு சற்று சிரமமாக இருந்த்து. ஆனால் ஆனந்த், சேகரை பார்த்துவிட்டான். காணாதவனை கண்டு விட்ட ஒரு சந்தோஷமும் மளுக்கென்று கண்களில் புகுந்து ஒளிவிட்டது. கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டு அவனாக சேகரிடம் சென்றான்.
கங்கிராஜிலேஷன்ஸ் ஆனந்த்.
நீ எப்படி இருக்கே சேகர்..?
நல்லா இருக்கேன்...
உன்னெ நான் எதிர்பார்க்கல. ரியலி இட் ஈஸ் எ பிளசண்ட் சர்ப்ரைஸ்…
நான் பேப்பர்ல பாத்து தெரிஞ்சிக்கிட்டேன்.
லெட் ஸ் மூவ்... ஆமா நீ எதுல வந்தே?
நான்... நான் ஆட்டோவுல வந்தேன் ஆனந்த்.
அப்ப நீ இப்ப என்கூட வர்ரே...?
ஆனந்த்…. நான் உன் கூடவா?
நீ மாறவே இல்லை... அதே காம்ப்ளக்ஸ்... கமான் மேன்..."
அந்த கரிய நிற நவீன கார் சென்னை நகர சாலையில் மிதக்கும் பாவனையில் ஓடத் தொடங்கியது.
உள்ளே பின்சீட்டில் சேகர் - ஆனந்த்!
சேகர் நாம கடைசியா எப்ப பாத்துகிட்டோம்னு ஞாபகம் இருக்கா?
ஆனந்திடம் நட்பின் பரிச்சயம் விரியத் தொடங்கியது.
காலேஜ் கான்வெகேஷன் டே அன்னிக்கு பாத்துகிட்டது தான்...
"நீ பி.எச்.டி. பண்ணலியா?:
ஏன்?
முடியல...
இது என்ன பதில்?
ஆனா அதுதான் உண்மை.
சரி... இப்ப என்ன பண்றே?
இப்போ.. இப்போ.. அப்பாவோட சித்த வைத்தியத்தை நான் கண்டினியூ பண்றேன்.
சித்த வைத்தியமா?
- ஆனந்த் கேட்ட விதமே அதிகபட்ச ஆச்சர்யம் கொண்டிருந்தது.
ஆமாம்... அது எங்க பரம்பரை தொழில்…. அதை ஃபாலோ பண்ணும் படியாயிடிச்சு…
நான் தெரியாமத்தான் கேக்கறேன்... அதுக்கு இப்ப மதிப்பு இருக்கா... ஐ மீன் பேஷண்ட்ஸ் வர்றாங்களா?
வராமலா நான்லாம் உயிரோட இருக்கேன்?
ஐ ஆம் சாரி... நான் தப்பா கேட்டுட்டதா நினைச்சுடாதே. ஆமா இதுக்கா நீ பி.டெக் படிச்சே?
ஆனந்த். என் சூழ்நிலை தெரிஞ்சா நீ இப்படி கேட்க மாட்டே?
"என்ன சூழ்நிலை... நான் தெரியாமத்தான் கேக்கறேன். இதுல அப்படி என்ன உனக்கு கிடைச்சிடும்?
இந்த மாதிரி BMW கார் - நீ போட்டுக்கிற கோட் சூட்டுக் கெல்லாம் இடமில்லேன்னாலும் ஒரு சந்தன மாலையோட உன்னை பார்க்க ஆட்டோவுல வர முடிஞ்சதே அந்த அளவுக்கு...
இதுவே நீ வேலைக்கு போனா மாசம் எடுத்த எடுப்புல 50 ஆயிரத்துக்கு குறையில்லாத சம்பளம் கிடைக்குமே? அவ்வளவு எதுக்கு நீ என் கம்பெனில சேர்ந்திருக்கலாமே.. நான் உனக்கு லட்ச ரூபாய்க்கு குறையில்லாம தருவேனே...?
ஆனந்த் நட்போடும் அக்கறையோடும் பேசியதை கேட்டு அமரிச்சையாக சிரித்த சேகர் ஆமா நீ நல்லா இருக்கேதானே?
என்று அவனை கேட்க தொடங்கினான்.
நெஜமா சொல்றேன் என்னை பார்த்து இப்படி யாருமே கேட்டதேயில்லை. காரணம் என்னோட உயரம். நான் ஒரு தொழிலதிபரா இருக்கிறதால நான் நிச்சயம் நல்லாதான் இருப் பேன்கறது ரொம்ப பேரோட எண்ணம்.
நான் இப்படி கேட்டதை தப்புங்கறியா இல்லை...
-சேகர் இழுக்க வாயை பொத்திய ஆனந்த..
நான் ரொம்ப சந்தோஷப்படறேன் சேகர்... ரொம்பவே சந்தோஷப்படறேன்...
நானும் ரொம்ப சந்தோஷப்படறேன் ஆனந்த். என்னை நீ எந்த அளவு பொருட்படுத்துவேன்னு ஒரு நெருடல் இருந்துகிட்டே இருந்தது.
போடா ஃபூல்... நான் இன்னும் எவ்வளவு மேலப் போனாலும் என் நண்பர்களை மறக்க மாட்டேன். அதுலயும் நீ என் பெஸ்ட் ஃப்ரண்ட். உன்னை மறப்பேனா?
அப்ப நீ என்னை மறக்கலையா?
மறந்திருந்தா இப்படி பேசுவேனா?
இல்ல... ஞாபகத்தில இருந்திருந்தா ஒரு போன். ஒரே ஒரு போன் பண்ணியிருக்கலாமே ஆனந்த்.
நான் திருப்பிக் கேட்கறேன் - நீ பண்ணியிருக்கலாமே?
நான் பண்ணேன்பா... ஒரு தடவை - பல தடவை.
எப்போ
அதெல்லாம் இப்ப எதுக்கு. உன் ஆபீஸ்ல இருக்கற செக்ரட்ரி ஒரு தடவை கூட எனக்கு லைன் போட்டுத் தரல?
வெரி சாரி சேகர்... வெரி சாரி.. என்னைப் போல் ஒரு உயரத்துக்கு மேல போயிட்டவங்களுக்குன்னே சில நடைமுறைகள் இருக்கு. பிடிக்குதோ பிடிக்கலியோ அதுல தான் நாங்க போயாகணும். நல்லவேளை நீ இன்னிக்கு நேர்ல வந்தியே... ஒன் மினிட்.
- ஆனந்த் தன் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து செகரட்ரியை தொடர்பு கொண்டான்.
ஆஷா
யெஸ் சார்.
"சேகர்னு யாராவது என்னை போன்ல காண்டாக்ட் பண்ணாங்களா?
இப்ப அப்படி யாரும் காண்டாக்ட் பண்ணல சார்.
இப்ப இல்ல முந்தி...
எனக்கு ஞாபகத்துக்கு இல்ல சார்...
இல்ல... பண்ணியிருக்காங்க. ஆனா நீ எனக்கு லைன் போட்டு தரலை…
சாரி சார். அப்ப நீங்க முக்கியமான மீட்டிங்ல இருந் திருப்பீங்க...
அப்ப இருந்திருந்தா என்ன, அப்புறமா சொல்லி இருக்கலாமே?
ஐ ஆம் வெரி சாரி சார்...
டோன் சே சாரி... இது ஒரு டர்ட்டி வேர்ட், ஓ.கே... நாளைல இருந்து நீ என் செகரட்ரி கிடையாது. அதுக்காக உன் வேலைய நான் பிடுங்கிட மாட்டேன். ஆஃபிஸ்ல நீ எதாவது ஒரு செக்ஷன்ல கம்யூட்டரோட கிடந்து பொழப்ப ஒட்டிக்கோ.
சார் ப்ளீஸ் சார்...
கெஞ்சாதே. அப்புறம் இதுகூட கட் ஆயிடும்.
ஆனாந்த போனை கட் செய்தபடி நிமிர்ந்தான். சேகரிடம் ஒருவித பிரமிப்பு.
என்ன சேகர் அப்படி பாக்கறே?
என்ன ஆனந்த் இவ்வளவு வேகமா இருக்கே?
இது வேகமா? தப்பா சொல்றே! யூ.எஸ்.ல ஒருத்தர பார்த்தேன். அஞ்சு கம்பெனிக்கு எம்.டி! மடியில ஒரே ஒரு லேப் டாப். ப்ளைட்ல என்கூட தான் வந்தார். அஞ்சு கம்பெனி மேனேஜர்களோடயும் ஃப்ளைட்ல இருந்துகிட்டே சாட் பண்ணி அட்மினிஸ்டரேட் பண்றார். நடுவுல நிறைய வோட்கா குடிச்சு மனுஷன் தண்ணியையும் எஞ்ஜாய் பண்ணான். அசந்துட்டேன்.
ஆனந்த் பேச்சை கேட்டு சிரித்தான் சேகர். அப்போது காரும் டிராஃபிக்கில் தேங்கி நின்றது. பக்கவாட்டில் பரட்டை தலையோடு இடுப்பில் காவித் துண்டோடு ஒருவர் பிளாட் ஃபாரத்திட்டின் மேல் உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார். ஆனந்த் பார்க்கவும் அவனைப் பார்த்து சிரித்தார்.
ஆனந்த் முகத்தை திருப்பிக் கொண்டு சேகரிடம் பேச்சைத் தொடர்ந்தான்.
சேகர் உனக்கு கல்யாணம் ஆயிடிச்சா?
இல்லப்பா.. ஆமா உனக்கு?
நானும் பிரம்மாச்சாரிதான்! ஆனா வீட்டுல என் அம்மா சீரியஸா பெண் பாத்துகிட்டு இருக்காங்க.
நல்ல விஷயம்தானே?
என்ன நல்ல விஷயம்... பிசினஸ்ல நான் இன்னும் ஒரு உயரத்துக்கு போக விரும்பறேன். கல்யாணம் அதை தடுத்துடு மோன்னு ஒரு சின்ன பயம் இருக்கு..
ஆனந்த் அப்படி சொன்னபோது அந்த காவித்துண்டு மனிதர், அவர் காரின் கண்ணாடி அருகே வந்து நின்று கதவின் கண்ணாடியை டொக் டொக்கென்று தட்டினார். அவனும் கண்ணாடியை இறக்கிவிட்டு அவரை எரிச்சலோடு ஏறிட்டான்.
நீ ஒரு சத்தியவான்...
என்று அவனைப் பார்த்து சொன்ன அவரும் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் அந்த டிராஃபிக் கூட்டத்தில் புகுந்து நடந்தார். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
2
‘வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட வருடங்கள்
தேவையில்லை. நொடிகள் போதும்!’
- சித்தன் வாக்கு.
‘நீ ஒரு சத்தியவான் - என்று அந்த பிச்சைக்கார சன்யாசி ஏன் சொன்னார்! எதற்காக சொன்னார்? என்று தெரியாத நிலை யில் டிராஃபிக்கும் மெல்ல விலக ஆரம்பித்தது. காரும் புறப் பட்டது. அதேசமயம் சேகரின் பார்வை அந்த சன்னியாசியை தேடுவது போல வெளியே பார்த்தது.
யாரைத் தேடறே... என்கிட்ட உளறின அந்த ஆளையா?
ஆமாம்... யார் அந்த ஆள்னு பாக்கறதுக்குள்ள மாயமா மறைஞ்சிட்டானே..?
யாரோ பைத்தியம். நீ இதை போய் சீரியஸா எடுத்துக்காதே.
பைத்தியம் மாதிரி தெரியல ஆனந்த். அதான் யோசிக்கறேன்.
பைத்தியம் இல்லேன்னா அவன் செயல்ல அடுத்தடுத்த காரணம் காரியம் இருந்திருக்கும். பிச்சை கேட்டுருப்பான். இவன் பாட்டுக்கு வந்தான், சொன்னான், போயிட்டான்! ஒரு ஒழுங்கு இல்லாதவங்கள வேற என்னன்னு சொல்றது?
நீ சொல்ற மாதிரிதான் இருக்கணும். அவன் பைத்தியமா இருந்துட்டா ரொம்ப நல்லது.
இல்லேன்னாதான் என்ன இப்போ..? என்னை சத்திய வான்னு தானே சொன்னான். அது ஒரு விதத்துல கரெக்ட்தான். ஏன்னா நான் சத்தியத்தை எப்பவும் ‘கீப்அப்’ பண்றவன். அதை ரொம்ப பெருசா நினைக்கிறவன்.
ஆனந்த் பெருமைப்பட்டுக் கொண்டான். காரும் சென்னை நகரச் சந்தடியில் ஊர்ந்து தான் போக வேண்டியிருந்தது.
ஒரு வேடிக்கை பார்த்தியா..? எங்கேயோ இருக்கு டெல்லி. அங்க இருந்து நான் சென்னைக்கு மூணு மணி நேரத்துல வந்துட்டேன். ஆனா இங்க இருக்கற என் பங்களாவுக்கு போகவும் அதே அளவு நேரமாகுதுன்னா இதை என்னன்னு சொல்றது?
பெரிய விஷயம் லாம் இப்ப சின்னதாயிடிச்சு. அதே சமயம் சின்ன விஷயமெல்லாம் பெருசாயிடிச்சோ என்னவோ?
சேகர் பதிலுக்கு திருப்பிச் சொன்னதைக் கேட்ட ஆனந்த்,
இது நல்லாயிருக்கே?
என்றான்.
நான் சும்மா நீ சொன்னதை வெச்சு சொன்னேன்.
"ஆனா அதுலயும் பெரிய உண்மை இருக்கே சேகர். முந்தி எல்லாம் சினிமா ரொம்ப பெரிய விஷயம். இப்ப செல்போன்ல அதை ‘லோட்’ பண்ணி பாக்க முடியுது. வீட்ல ரேடியோ வெச்சி ருந்தா லைசென்செல்லாம் வாங்கணும். இப்ப செல்போன்லயே ரேடியோ வந்தாச்சு. முந்தி பேங்குக்கு போனா பணம் கட்டவும் சரி, எடுக்கவும் சரி மணிக்கணக்குல காத்திருக்கணும். ஆனா இப்ப ஏ.டி.எம். வந்து அதுவும் சின்னதாயிடிச்சு.
இப்படி பல பெரிய விஷயங்கள் சின்னதாயிடிச்சு. அதே மாதிரி முந்தி நடக்கறது ரொம்ப சின்ன விஷயம். ஆனா அதை இப்ப டாக்டரே சொல்ற அளவு வந்திடிச்சு. நடக்கறது இப்ப பெரிய விஷயம். அதே மாதிரிதான் தண்ணியும். நல்ல குடி தண்ணீரை வீட்ல பானைல ஊத்தி வெட்டிவேரைப் போட்டு வெச்சிருப்பாங்க. ஜில் லுன்னு குடிக்க அவ்வளவு நல்லா இருக்கும். இப்ப நல்ல தண்ணின்னா அது மினரல் வாட்டர் மட்டும்தான். அதுலயே கூட கலப்படம். இல்ல...?"
அவர்கள் இருவரும் தங்களையும் அறியாமல் வெகு யதார்த்தமாக அதே சமயம் அர்த்த புஷ்டியுடன் பேசிக் கொண்டனர்.
இதை தான் காலமாற்றம்... கலி காலம்னு சொல்றாங்களோ?
இருக்கலாம் யார் கண்டது!
- சேகர் கேட்க, ஆனந்த் ஆமோதிக்க எதிரில் பாடையில் பிணம் ஒன்று சுடுகாடு நோக்கி பயணப்பட்டபடி இருந்தது. பாடையின் மேல் ஏராளமான மாலைகள். அந்த மாலைகளை பிய்த்து போகிற வழியில் போட்டபடியே போய்க் கொண்டிருந்தனர். முன்னாலே தாரை, தப்பட்டையுடன் குடித்துவிட்டு ஒரு கூட்டம் ஆடியபடி இருந்தது.
சேகர் இந்த கண்றாவியை பார்க்கும்போது உனக்கு என்ன தோணுது?
மனித ஜென்மம் மட்டும் அவ்வளவு சுலபத்துல திருந்தாதுன்னு தோணுது.
"கரெக்டா சொன்னே. ஒருத்தர் இறந்துட்டா துக்கத்துல பேச்சே வராது. அங்க மெளனம்தான் பிரதானமாக இருக்கும். இல்ல அழுகை சப்தம் இருக்கும். இப்படியா குஷியும் கூத்தும் இருக்கும்?
இதை விட கொடுமை, இந்த பூக்களை தெரு வுல இறைச்சு கிட்டே போறதுதான். நல்ல காரியத்துக்காக இதே தெருவுல போகறவங்க இருப்பாங்க. அவங்க இதைப் பார்த்து சலனப்படுவாங்க.
"உண்மைதான். சம்பிரதாயமும் சடங்குகளும் மனிதனை மேன்மைப்படுத்தற துக்கு பயன்படனும். இப்படி கீழ்மைப் படுத்த கூடாது. பை த பை... நான் செத்தா யாரும் அழவோ ஒப்பாரி வைக்கவோ கூடாதுன்னு எழுதியே வெச்சிடப்போறேன். இந்த மாதிரி மாலை மரியாதை கூத்தெல்லாம் கூடாது. என்ன சொல்றே?
ஆனந்த் தன் பேச்சில் அப்படி ஒரு கேள்வியிடம் வந்து நிற்பான் என்று சேகர் எதிர்பார்க்கவேயில்லை. பதிலுக்கு ஆனந்தை வெறித்து பார்த்தான்.
என்ன பாக்கறே?
இல்ல இப்ப எதுக்கு ஆனந்த் உன் சாவு வரைக்கும் போயிட்டே...?
என்ன சேகர் உனக்குள்ளேயும் சென்டிமென்ட்ஸா? நான் சும்மா ஜாலியா தாம்ப்பா பேசினேன்.
ஜாலியா பேசும்போது சந்தோஷமான விஷயம்ல வரும்?
வாஸ்தவம்தான்... ஆனா எனக்கென்னமோ அடிக்கடி மரணம் தொடர்பான நினைவுதான் வருது. தூக்கத்துல, கனவுல கூட நான் இறந்து என் சவ ஊர்வலம் நடக்குது. எல்லாரும் சுத்தி நின்னு அழுதுகிட்டே வர்றாங்க.
ஆனந்த் பேசப் பேச சேகருக்கு சற்று அதிர்வாகக்கூட இருந்தது. அதற்குள் ஆனந்தின் பங்களா வந்துவிட கார் அதனுள் நுழைந்து நின்றது.
இறங்கு, வீடு வந்து டுச்சி பார்...
" என்றபடியே ஆனந்த் இறங்கினான். அவன் வருகை தெரிந்து ஆரத்தி எடுக்கத் தோதாக அவன் அம்மாவும் மற்ற உறவினர்களும் நின்று கொண்டிருந்தனர்!
அம்மா இதெல்லாம் என்ன கூத்து?
கூத்தில்லடா... இதுதான் வழக்கம். எவ்வளவு பெரிய விருது வாங்கிட்டு வர்ரே. எத்தனை பேர் கண்ணு பட்டுதோ?
என்றபடியே ஆரத்தி திலகம் இட்டு அதை எரிகின்ற கற்பூரத்துடன் வீட்டு வாசலில் ஊற்றிவிட்டு திரும்பி வந்தாள் அவன் அம்மா தேவகி.
அவளிடம் சேகரை அறிமுகம் செய்து வைத்தான்.
பின் எல்லோரும் உள்ளே சென்றார்கள்.
சேகர், இருந்து சாப்ட்டுட்டு தான் போரே
என்று சேகரை யும் கட்டிப் போட்டுவிட்டான். இடையில் ஒரு போன் கால். அதற்காக ஒதுங்கினான். சேகர் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருக்க அவன் எதிரில் தேவகியும் வந்து அமர்ந்தாள். சகஜமாக பேசத் தொடங்கினாள்.
உனக்கு கல்யாணம் ஆயிடிச்சாப்பா?
இல்லம்மா...
எப்ப கல்யாணம் பண்ணிக்க போறே?
தங்கச்சி இருக்காம்மா.
ஒ... அவளுக்கு பண்ணிட்டு தான் நீ பண்ணிக்கணுமா?
ஆமாம்மா...
நல்ல விஷயம்தான். அண்ணன் தானே தங்கைக்கு பொருத்தமான மாப்ளையை பார்க்க முடியும்? ஆமா பாக்க ஆரம்பிச்சிட்டியா?
இல்லம்மா... இனிதான் ஆரம்பிக்கணும்!
உன் தங்கை எவ்வளவு படிச்சிருக்கா?
அவ ஒரு எம்.காம். ஸ்டூடண்ட், ஆடிட்டர் ஒருத்தர்கிட்ட வேலைக்கு போய்க்கிட்டு இருக்கா. சி.ஏ. எழுதி ஆடிட்டர் ஆகணும்ங்கறது அவளது ஆசை.
உனக்கு அப்பா இருக்காருல்ல?
இல்லம்மா... அவர் இறந்து ஏழெட்டு வருஷம் ஆச்சு. நான்தான் குடும்பத்தை பாத்துக்கறேன்.
நீ என்ன பண்றே.
சித்த வைத்யம்மா!
சேகர் பதிலைத் தொடர்ந்து ஆச்சரியமாக ஏறிட்டாள் தேவகி.
என்னம்மா அப்படி பாக்கறீங்க?
உன் மாதிரி ஒரு வாலிபன் ஐ.டி. கம்பெனில அம்பதாயிரம், அறுபதாயிரம் சம்பாதிக்கிறதா சொல் லியே கேட்டு பழகிட்டேனா, அதான் நீ சித்த வைத்தியம்னு சொல்லவும் ஒரு ஆச்சரியம்.
என் வரைல இது எல்லாருக்கும் நடக்கறதுதான்.
அது சரி... இந்த காலத்துல சித்த வைத்தியத்துக்கு வரவேற்பு இருக்கா?
ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர் சம்பாதிக்கிற அளவு சம்பா திக்க முடியாதுதான். ஆனா குறைவா சம்பாதிச்சாலும் நிறைய புண்ணியத்தை சம் பாதிச்சுக்கறோம். இயற்கைக்கு உறுதுணையா இருக்கோம்கற திருப்தி இருக்கும்மா.
மூலிகை செடிகளை வளர்க்கறத சொல்றீயா?
ஆமாம்மா... விருட்ச சாஸ்திரம்னு ஒரு சாஸ்திரம் இருக்கு. அதுல ஒரு விஷயம் அழுத்தமா சொல்லப்பட்டிருக்கு. தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கறதுதான் புண்ணியம். அதைவிட பெரிய புண்ணியம் அந்த தண்ணியை எல்லாருக்கும் கிடைக் கும்படியா கிணறு வெட்டித் தர்றது. அதைவிட பெரிய புண்ணியம் ஒரு மரம் நட்றதுன்னு சொல்வாங்க.
சேகர், ஆனந்த் அம்மாவிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர் வரவும், தேவகி அவரைப் பார்த்து முகம் மலர்ந்தவளாக வாங்க ஜோசியரே..
என்றாள். அவரும் வந்து அமர்ந்தார். ஆனால் அவர் முகத்தில் பெரிய உற்சாகமில்லை. ஒரு இனம் தெரியாத சோகம் ஒட்டிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது.
காலை இருந்தே உங்களுக்காக நான் காத்து கிட்டு இருக்கேன்
என்று தேவகி அவரை எதிர்கொண்டாள். அவரும் சற்று செயற்கையாக அதற்கு சிரித்தார். அப்படியே சேகரை பார்த்தார்.
"இந்த தம்பி ஆனந்தோட சினேகிதன்... என்றாள். சேகர் அவருக்கு பதில் வணக்கம் செய்தான்.
அப்புறம் ஜோசியரே ஆனந்தோட ஜாதகத்தை பார்த்துட்டீங்களா. குரு பார்வை வந்தாச்சா. நான் பொண்ணு பாக்கலாமா?
ஆஹா தாராளமா... நீங்க எப்பவேணா தம்பி ஜாதகத்தை எடுக்கலாம்.
ரொம்ப சந்தோஷம். ஜாதகம் வர வர உங்களுக்கு அனுப்பி வைக்கறேன். நீங்களே பொருத்தம் பார்த்துடுங்க.
அதுக்கென்னம்மா பாத்துட்டா போச்சு.
ஏன் சுரத்தே இல்லாம ஒரு மாதிரி பேசறீங்க...
தம்பி ஜாதகத்துல...
என்று இழுத்தவர், சேகரைப் பார்த்து தம்பி நீங்க கொஞ்சம் வெளிய போக முடியுமா. நான் அம்மா கூட கொஞ்சம் தனியா பேசணும்
என்றார். அதற்கு ஏற்ப மாடியில் இருந்து போன் பேசி முடித்த நிலையில் ஆனந்தும் சேகரை மேலே அழைத்தான். சேகரும் திரும்பித் திரும்பி பார்த்தபடியே மாடிப்படிகளில் மேலே ஏறினான்.
ஜோதிடரும், தேவகி யிடம் தான் சொல்ல வந்ததை சொல்லத் தொடங்கினார்.
அம்மா... உங்க பையனுக்கு இப்ப நேரம் சரியில்லை. மரணத்துக்கு சமமான கண்டம் ஒண்ணு இருக்கு. அது நீங்க வழியும் இருக்கு.
ஐய்யையோ என்ன ஜோசியரே குண்டைத் தூக்கி போடறீங்க?
கட்டத்துல இருக்கறத படிச்சு சொல்றவன் தானேம்மா நான்.
சரி, கண்டம் நீங்க என்ன வழி?
உங்க குல தெய்வத்தோட கோவில் எங்கம்மா இருக்கு?
அது. அது சுருளி மலை மேலே இருக்கற செண்பக வள்ளி அம்மன்தான் எங்க குலதெய்வம். மலைக்கு மேல சின்ன கோயில் அது.
சின்ன கோயிலோ பெரிய கோயிலோ... அந்த கோயி லுக்கு போய் உங்க மகனுக்கு முடி காணிக்கை கொடுத்தா தலைக்கு வந்தது தலைப் பாகையோட போன மாதிரி உங்க மகன் தப்பிச்சிடுவாரு இல்லேன்னா எது வேணா நடக்கலாம்.
ஜோசியர் அழுத்தமான குரலில் கூறினார். தேவகியும் அதைக் கேட்டு கலங்கிய நிலையில், மேலே ஆனந்த், சேகரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
சேகர் இந்த ஜோசியத்துல எல்லாம் எனக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது. ஆனா கீழ வந்திருக்கிற ஜோசியர் மேல எங்கம்மாக்கு பயங்கர நம்பிக்கை
என்று...
3
ஆனந்த் ஜோசியக் காரர் பற்றி சொன்ன கருத்தைக் கேட்டு மெலிதாக சிரித்தான் சேகர்.
என்ன சிரிக்கறே... உனக்கு ஜோசியத்துல நம்பிக்கை உண்டா?
ம்…
உண்டா?
பதில் கேள்வி மிக வேகமாக வந்தது ஆனந்திடம்.
உண்டு. ஏன் உனக்கு அது ஆச்சரியமா இருக்கா?
நிச்சயமா. என் வரைல ஜோசியம் ஒரு ஹம்பக்.
நீ சரியான ஜோ சி யரை சந்திக்கல. அதனாலதான் இப்படிச் சொல்றே?
ஒ... இதுல இப்படி வேற இருக்கா. அப்ப நீ சந்திச்சிருக்கியா?
சந்திக்கிறதென்ன... நான் ஒரு நல்ல ஜோசியக்காரருக்கு மகனாவே பிறந்திருக்கிறவன் ஆனந்த்.
"ஒ.. உன் அப்பா ஒரு ஜோசியரா... சித்த வைத்தியர் னுல்ல சொன்னே?
ஜோசியமும் அவருக்கு தெரியும் ஆனந்த்.
அப்பாவே ஜோசியர்ங்கறதால உன்னால அதை நம்பாம இருக்க முடியல - அப்படித்தானே?
"நிச்சயமா இல்லை... சொல்லப் போனா நானும் உன்ன மாதிரி ஜோசியம்னாலே அது ஊரை ஏமாத்தற விஷயம்தான் நினைச்சிருந்தேன். ஆனா என் அப்பா தன்னோட சாவை ஆறு மாசத்துக்கு முந்தியே வினாடி சுத்த மா என்கிட்ட சொல்லிட்டார். அதே மாதிரி அவர் உயிர் பிரிஞ்சதுக்கு பிறகுதான் ஜோசியம் பொய் இல்லை. அது ஒரு கணக்குன்னு புரிஞ்சி