Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathamillamal Rathamillamal...
Sathamillamal Rathamillamal...
Sathamillamal Rathamillamal...
Ebook111 pages55 minutes

Sathamillamal Rathamillamal...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. These Novel collection is published in many popular magazines.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402156
Sathamillamal Rathamillamal...

Read more from Rajesh Kumar

Related to Sathamillamal Rathamillamal...

Related ebooks

Reviews for Sathamillamal Rathamillamal...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathamillamal Rathamillamal... - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    சத்தமில்லாமல் ரத்தமில்லாமல்…

    Sathamillamal Rathamillamal...

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    ***

    1.

    ஊட்டி, குட்டி எவரெஸ்ட்டாக மாறி சுற்றுப்புறத்தை மைனஸ் டிகிரிகளில் கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருந்தது.

    வளைந்து வளைந்து மேலேறிக் கொண்டிருந்த அந்த இலவம்பஞ்சு வர்ண மாருதிக் கார், இப்போது நமக்கு முக்கியம்.

    ஸ்டியரிங் பிடித்திருந்த அந்த அழகான இளைஞன் ராகுல். ஒட்டுண்ணி மாதிரி அவன் மேல் சாய்ந்திருப்பவள் கல்பனா.

    கல்பனாவின் கழுத்தில் மெருகு குலையாத மஞ்சள் தாலி. அவள் கையில் பளிச்சென்று மருதாணிச் சாயம். இருவரது முகங்களிலும் அதிகப் பளபளப்பு ப்ளஸ் ஆர்வம். என்ன, யூகித்து விட்டீர்களா…? உங்கள் யூகம் சரி… அவர்கள் புதுமணத் தம்பதிகள்தான்.

    ஏற்றிவிட்ட கண்ணாடிகளை ஏமாற்றிக் குளிர்காற்று உள்ளே புகுந்து, கத்தி மாதிரி பதம் பார்த்துக் கொண்டிருந்தது.

    குளிர் தாங்கலைங்க... என்றாள் கல்பனா.

    என்னை இன்னும் இறுக்கமாகப் பிடிச்சிக்க…

    இப்பவே எனக்குப் பயமா இருக்கு…

    என்ன பயம்…?

    நீங்க ஒழுங்கா கார் ஓட்டுவீங்களான்னு பயமா இருக்கு… ஒவ்வொரு ஹேர்பின் பெண்டிலும் முழுசா ஸ்டியரிங்கைத் திருப்பலைன்னா நேரா பரலோகம் போக வேண்டியதுதான். ஏற்கெனவே குளிர் தாங்காம நான் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டிருக்கேன்…

    ராகுல் குறும்பான ஒரு புன்னகையைச் சிந்தியபடியே அவளிடம் சொன்னான்.

    இது நம்ம தேனிலவுப் பயணம். நீ எவ்வளவுக் கெவ்வளவு என்னை டிஸ்டர்ப் பண்றியோ அவ்வளவுக் கவ்வளவு இனிக்கும். தொந்தரவு பண்ணலைன்னா கசக்கும்…

    என்ன, தத்துவமா...? பார்த்து… பார்த்து… எதிர்ல லாரிங்க...

    ராகுல் கரகரவென ஸ்டியரிங்கைச் சுழற்றி லாரிக்கு வழிவிட்டு ஒதுங்கிச் சென்றான்.

    கல்பனா அவனைச் செல்லமாய் முறைத்தாள்.

    நீங்க தத்துவம் சொன்னது போதும்… ஒழுங்கா கார் ஓட்டுங்க…

    ஏன் தள்ளிப் போயிட்டே கல்பனா...?

    ஹோட்டல் போய்ச் சேர்ற வரைக்கும் தள்ளி உட்கார்றதே உத்தமம்னு என் மனசுக்குப் படுது…

    உன்னால் அது முடியாது…

    முடியும்…

    சேலஞ்ச்…?

    சேலஞ்ச்…!

    சிரித்துக் கொண்டே காரின் கண்ணாடியை லேசாய்க் கீழிறக்கினான்.

    என்ன பண்றீங்க...?

    ரொம்பப் புழுக்கமா இருக்கு… அதான் ஜன்னல் கண்ணாடியை லேசாத் திறந்து விடறேன்… லேசாத்தான்…

    குளிர், உடம்பின் ஒவ்வொரு மில்லி மீட்டர் பரப்பையும் ஒரு டஜன் ஊசி முனைகளால் துளைக்க ஆரம்பித்தது. -

    புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்தி உட்கார்ந்து பார்த்தாள்.

    ம்கூம்.

    உடம்பு கிடுகிடுவென்று நடுங்க ஆரம்பித்தது.

    ஜன்னலைச் சாத்துங்க…

    மாட்டேன்...

    பற்கள் கிடுகிடுக்கச் சொன்னாள்.

    கு…கு…ளி…ர்… தா…ங்…க…லை…ங்…க...

    அதுக்காகத்தானே ஜன்னலைத் திறந்தேன்…

    இ… இப்ப… சாத்தப் போறீங்களா… இல்லையா…?

    என் பக்கத்தில் வா… சாத்தறேன்…

    ம்கூம்...

    ஓ.கே. பரவாயில்லை. ஊட்டி குளிரை நல்லா அனுபவி…

    சிரித்துக்கொண்டே சாலையில் கவனமானான்.

    இரண்டே நிமிஷத்தில் கல்பனா அவளையறியாமல் அவன் பக்கம் சாய்ந்தாள்.

    மெல்ல அவன் கைகளைக் கோத்துக் கொண்டாள்.

    கதகதப்பாய் இருந்தது.

    உங்களுக்குக் குளிரலை…?

    நீ பக்கத்தில் இருந்தேன்னா எவரெஸ்ட் குளிர்கூட எனக்குச் சம்மர் வெய்யில்தான்…

    முன்னால கண்ணேன்னு எழுதி கமா போட்டு, வாரப் பத்திரிகைக்கு அனுப்பி வைங்க… நூறு ரூபாய் பரிசு குடுப்பாங்க…

    என்ன பண்றது… ரெண்டு நாளா நான் பேசறதெல்லாம் கவிதையா வருது…

    சரி… எங்கே இவ்வளவு அருமையாக் கார் ஓட்டக் கத்துக்கிட்டீங்க...?

    ஒரு வருஷத்துக்கும் மேல கார் டீலர் கிட்ட வேலை பார்த்தேன். அப்போதான் கத்துக்கிட்டேன்… ஏன்…?

    அப்பாதான் பயந்துக்கிட்டே இருந்தாங்க… ஃப்ரெண்ட்டோட காரை வாங்கிக் கொடுத்துத் தனியா அனுப்பறோமேன்னு கவலைப்பட்டுட்டே இருந்தார்…

    ஹோட்டலுக்குப் போனதும் அவருக்கு ஒரு போன் அடிச்சிச் சொல்லிடலாம்…

    ஊட்டி டவுனுக்குள் என்டர் ஆனதுமே போன் பண்ணிடலாம்ங்க… அவர் நிம்மதியா இருப்பார்…

    ஓ.கே. ஓசி கார்னாலும் அய்யா எப்படி அநாயாசமாக ஓட்டறேன்னு நீயே அவர்கிட்ட சொல்லு…

    இந்தத் தற்பெருமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…

    இது தற்பெருமை இல்லை… உன்னோட அப்பா… அதான்… என்னோட தி கிரேட் மாமனார்… அவரை நினைச்சுத்தான் பெருமைப் படறேன்…

    எதுக்கு…?

    நம்மை மாதிரி மிடில் கிளாஸுக்கு இப்படி க்ராண்ட் ஹனிமூன் ஏற்பாடு பண்ணியிருக்கிறாரே… ரியலி ஐயாம் ப்ரெளட் ஆஃப் ஹிம்…

    என்ன பிரமாதம்...? அவர் என்ன புதுசாக் கார் வாங்கியா கொடுத்திட்டார்…? ஓசி கார்தானே...?

    கார்ல தனியா அனுப்பி வெச்சதுக்காகச் சொல்லலை… நாம போய் தங்கப்போற ஓட்டல் சித்தாரா என்க்ளேவ் பத்தி நீ கேள்விப்பட்டிருக்கியா...?

    ஊஹூம்…

    உள்ளே நுழைஞ்சதுமே சொர்க்க லோகத்துக்குள் நுழைஞ்சிட்ட மாதிரி நீ ஃபீல் பண்ணப்போற கல்பனா…

    அவ்வளவு பிரமாதமான ஹோட்டலா…?

    Enjoying the preview?
    Page 1 of 1