Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thappu Sei... Thappi Chel!
Thappu Sei... Thappi Chel!
Thappu Sei... Thappi Chel!
Ebook118 pages57 minutes

Thappu Sei... Thappi Chel!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100402291
Thappu Sei... Thappi Chel!

Read more from Rajesh Kumar

Related to Thappu Sei... Thappi Chel!

Related ebooks

Related categories

Reviews for Thappu Sei... Thappi Chel!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thappu Sei... Thappi Chel! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    தப்பு செய்... தப்பிச் செல்!

    Thappu Sei… Thappi Chel!

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    நான் படித்ததில் வியந்தது:

    சஞ்சீவி மலை என்பது ராமாயணத்தில் வரும் ஒரு மலை. லட்சுமணன் போர்க்களத்தில் அம்பால் தாக்கப்பட்டு மயக்கமடைந்த போது லட்சுமணனைக் காப்பாற்ற ஆஞ்சநேயர் மூலிகைகள் நிறைந்த மலையைத் தேடிப் போனார். லட்சுமணனின் மயக்கத்தைத் தெளிவிக்கும் மூலிகை எது என்று தெரியாத குழப்பத்தில் அந்த மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார். அவர் அப்படித்துக்கி வந்த சஞ்சீவி மலையில் அதிமுக்கியமான நான்கு மூலிகைகள் இருந்தன. முதலாவது: சாவர்ணகரணி. இரண்டாவது: விசல்யகரணி. மூன்றாவது: சந்தானகரணி. நான்காவது: மிருத சஞ்சீவினி. இந்த நான்கு மூலிகைகளில் எந்த மூலிகை லட்சுமணனுக்கு உபயோகப் படுத்தப்பட்டது என்று தெரியுமா?

    ரோம் ஏர்போர்ட்டான லியோ நார்டோ - டாவின்ஸியை விமானம் 716 தொட்டபோது மத்தியானம் பன்னிரண்டு மணி. இத்தாலிய வானம் மேக மூட்டத்தோடு மழை பெய்யலாமா... வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தது.

    ஏர்போர்ட் லெளன்ஞ்சில் பொக்கே ஒன்றை வைத்துக் கொண்டு காத்திருந்த இந்தியத் தூதரகத்தின் செயலாளர் சத்ரபதி, தூதர் லலித் சர்மாவை ஏறிட்டார்.

    ஸார்! விமானம் லேண்ட் ஆகிவிட்டது. ரிசப்ஷன் செல்லுக்குப் போய் விடலாமா?

    ஓவர்கோட் அணிந்து நல்ல உயரத்தில் இருந்த லலித் சர்மா தன் முன்புற வழுக்கையில் ஒட்டியிருந்த வியர்வைத் துளிகளைக் கைக்குட்டையால் ஒற்றியபடி நடந்தார்.

    அந்தப் பிரம்மாண்டமான விமான நிலையத்தின் எல்லாத் திசைகளிலும் விமானங்கள் பறக்கக் காத்திருந்தன. பயணிகள் கொத்துக் கொத்தாய் ஆங்காங்கே நின்று எலக்ட்ரானிக் போர்டுகளில் மாறிக் கொண்டிருந்த இத்தாலிய மொழி அறிவிப்புகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    நடந்து கொண்டிருந்த இந்தியத் தூதர் லலித் சர்மா தனக்கு இணையாய் நடந்து வந்து கொண்டிருந்த செயலாளரிடம் திரும்பினார்.

    சத்ரபதி!

    ஸார்...

    ஏதாவது கெஸ் ஒர்க் பண்ண முடிந்ததா?

    எதைப் பற்றி ஸார்?

    ராணுவத்தின் துணை அமைச்சர் சதுர்புஜன் திடீர் பயணமாக ரோம் புறப்பட்டு வருவது பற்றி?

    ஸாரி ஸார்...! ஐ ஹேவ் நோ ஐடியா... பட். சின்னதாய் ஒரு சந்தேகம்...!

    என்ன?

    இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த ஒரு நாடுமே நம்பிக்கைக்கு உரியதாய் இல்லை. அதிலும் சீனா போடுகிற ஆட்டம் நம்முடைய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கொட்டத்தை அடக்குவதற்காகவே நாம் நம் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.

    இன்றைக்கு உள்ள நிலையில் இத்தாலிய ராணுவம் பலம் வாய்ந்த ஒன்றாய் இருக்கிறது.

    அதனால்...?

    அதனால் நம் இந்திய ராணுவத்தின் துணை அமைச்சர் சதுர்புஜன் இந்த நாட்டில் உள்ள ராணுவ அமைச்சர் ப்யூஜிரோவை சந்தித்துப் பேச வந்திருக்கலாமே?

    அப்படியொரு சந்திப்பு நிகழ்வதாய் இருந்தால் இத்தாலிய அரசு எனக்கு அஜண்டா அனுப்பியிருக்குமே?

    ஸோ. திஸ் இஸ் நாட் அஃபிஷியல்?

    எஸ்...! எதுக்காக இந்த ஆஃப் த ரிக்கார்ட் ரோம் விஜயம் என்று தெரியவில்லை...?

    டோண்ட் ஒர்ரி ஸார்... இன்னும் சிறிது நேரத்தில் ராணுவ துணை அமைச்சர் சதுர்புஜனை நாம் பார்க்கப் போகிறோம். மதிய உணவுக்குப் பின் ஓய்வறையில் உட்கார்ந்து அவரோடு பேசப் போகிறோம். அப்படிப் பேசும்போது இத்தாலிக்கு இந்தியத் தூதரான உங்களிடம் அவர் எல்லா விபரங்களையும் சொல்லித்தானே ஆக வேண்டும்.

    அவர் சொல்லுவார் என்று எனக்குத் தோன்ற வில்லை. அப்படியே அவர் ஏதாவது சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்.

    எதனால் உங்களுக்கு அப்படியொரு சந்தேகம் ஸார்?

    நீங்கள் இப்போது கேட்ட கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. இத்தாலியில் நான் இந்தியத் தூதராய் பணியாற்றினாலும் எனக்குத் தெரியாமல் இந்திய அரசு இத்தாலியில் உள்ள உயர் ராணுவ அதிகாரிகளோடு தொடர்பு வைத்துள்ளார்கள்.

    நீங்கள் சொல்வது உண்மையா?

    உண்மைதான்...! ஆனால் அதை உண்மை என்று சொல்லி நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடம் இல்லை...

    ஸார்! விமானத்திலிருந்து பயணிகள் இறங்கி வர ஆரம்பித்து விட்டார்கள். நாம் இன்னும் சற்று முன்னால் போய் நின்று கொண்டால் அமைச்சரை வரவேற்க வசதியாய் இருக்கும்.

    இருவரும் முன்னால் சென்றார்கள். வரவேற்க வந்திருக்கும் நபர்களோடு கலந்து நின்றார்கள்.

    விமானத்தில் இருந்து, இறங்கிய பயணிகள் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க...

    லலித் சர்மா - சத்ரபதியின் கண்கள் ராணுவத் துணை அமைச்சர் சதுர்புஜனைத் தேடின.

    அவர் பார்வைக்குக் கிடைக்கவில்லை.

    பயணிகளின் கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அடர்த்தி குறைந்து இறுதியில் மொத்தப் பயணிகளும் காணாமல் போயினர்.

    என்ன ஸார்! ஆள் வரலை...

    அதுதான் எனக்கும் குழப்பம்.

    இந்த 716 ஃப்ளைட்தானே?

    ஆமாம்...! எனக்கு வந்த ஃபேக்ஸ் செய்தியில் 716 ஏர்பஸ்ஸில் அவர் வருவதாய்க் குறிப்பிட்டிருந்தார்கள்.

    ஃபேக்ஸ் பொய்யாய் இருக்க வாய்ப்பில்லையே?

    விமானத்தின் எண் சரியானதுதானா... என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்... என்று லலித் சர்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய செல் போன் கோட் பாக்கெட்டிலிருந்து மெலிதாய் சிணுங்கியது.

    எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

    ஒரு புது எண்.மெல்லக் குரல் கொடுத்தார்.

    எஸ்...

    மிஸ்டர் லலித் சர்மா?

    ஹோல்டிங்...

    நான் சதுர்புஜன்.

    லலித் சர்மா பதட்டமானார். மிஸ்டர் சதுர்புஜன்! நீங்கள் இப்போது எங்கிருந்து பேசுகிறீர்கள்? விமான நிலையத்தில் உங்களுக்காக நானும் என்னுடைய உதவியாளரும் காத்துக் கொண்டிருக்கிறோம். விமான நிலையத்தின் எந்தப் பகுதியில் இப்போது நிற்கிறீர்கள்?

    நான் இப்போது விமான நிலையத்தில் இல்லை.

    பிறகு?

    "ரோமின்

    Enjoying the preview?
    Page 1 of 1