Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalattum Poongatru
Thalattum Poongatru
Thalattum Poongatru
Ebook121 pages1 hour

Thalattum Poongatru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580115705646
Thalattum Poongatru

Read more from Lakshmi Rajarathnam

Related to Thalattum Poongatru

Related ebooks

Reviews for Thalattum Poongatru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalattum Poongatru - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    தாலாட்டும் பூங்காற்று

    Thalattum Poongatru

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajaratnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    *****

    அத்தியாயம் 1

    மாணிக்கம்

    அழைத்தார் சந்திரசேகர்.

    ஓடி வந்தான் மாணிக்கம். ஐயா

    கால்கள் இரண்டும் உணர்வற்றுக் கட்டிலில் கிடக்கிறவர் சந்திரசேகர். வீல்சேரில்தான் வாசம். அழைப்பைப் புரிந்து கொண்டான் மாணிக்கம். குளிக்க வைக்கும் நேரம்.

    அழைச்சாத்தான் வருவியா?

    இல்லீங்கய்யா.... சின்னய்யா கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும். காரைத் தொடச்சிக்கிட்டு இருந்தேன்.

    முடிச்சிட்டியா?

    ஆச்சுய்யா. நீங்க குளிச்சா டிபன் சாப்பிடப் போயிரலாம்.

    சீக்கிரம் என்னைக் குளிக்க வை அலமாரியிலிருந்து அவன் வேஷ்டியை எடுத்தான்.

    பெரிய சரிகை போட்ட வேஷ்டியை எடுத்து வை.

    அவன் வேலைக்காரன். ஏன்? எதற்கு? என்று கேட்க முடியாது. அவரும் எதுவும் சொல்லவில்லை. சொல்ல மாட்டார். வார்த்தைகளை எண்ணித்தான் பேசுவார். அவரின் சுபாவத்தைப் புரிந்து கொண்டவன் மாணிக்கம். நீண்ட காலமாக அவருடன் பழகியவன். முகக் குறிப்பிலிருந்தே புரிந்து கொள்வான்.

    அவரைக் குளிக்க வைத்து உடைமாற்றி திருநீறு பூச வைத்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றான் மாணிக்கம். கண்களை மூடி சிவபுராணம் சொன்னார் சந்திரசேகர். அவனும் தியானத்தில் நின்றான்

    அடுத்தது உணவு மேஜை. அவரை உட்கார வைத்தான் மாணிக்கம்.

    குட்மார்னிங் டாட்

    ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக வந்தான் ரங்கன். ஒரே மகன். உட்கார் ரங்கா.

    உட்கார்ந்தான். மாணிக்கம் டிபனை வை. சூடான இட்லி, பொங்கல், சாம்பார், சட்னி....

    இன்னிக்கு சீக்கிரம் போகணுமா?

    ஆமாப்பா. போர்டு மீட்டிங் இருக்கு

    ஒரு விஷயம் பேசணும்.

    "சொல்லுங்கப்பா?

    அப்பாவிடம் மரியாதை உண்டு. அவனை ஆளாக்கி இவ்வளவு உயரத்தில் ஏற்றி வைத்தவர்.

    உனக்கு என்ன வயசுப்பா?

    என்னப்பா திடீர்னு?

    அவரின் இதழ்களில் புன்னகை ஓடியது. அப்பாவின் சிரிப்பைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கும். மெல்ல இதழ் விரிக்கும் தாமரை போல. மணக்கும் மல்லிகை அப்பா என்ற சொல்லே மணக்கும்.

    சாப்பிடு... நேரமாயிடுச்சு இல்ல? என்னையே பார்த்துகிட்டு இருக்கே?

    உங்க சிரிப்பைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம்.

    கலகலவென்று சிரித்தவர், இந்த வார்த்தையை வேற ஒருத்தர்கிட்ட சொல்ற காலம் சீக்கிரம் வரப்போகுதப்பா என்றவரை புரியாமல் பார்த்தான்.

    ஏதோ பஞ்ச் தெரியுது பேச்சிலே.

    என் கேள்விக்கு என்ன பதில்?

    சினிமா பாட்டோட அடி மாதிரி தெரியுது?

    பதில் உங்கிட்டதான் இருக்கு.

    என் வயசைக் கேட்டீங்க. இருபத்தஞ்சு முடிஞ்சு இருப்பத்தாறு.

    பாஸ் மார்க் வாங்கிட்டே - பரிசு தரணும்.

    என்ன பரிசு?

    அப்பாவும் மகனும் நண்பர்களாகப் பழகுவதை மாணிக்கம் ரசித்துக் கொண்டு நின்றான்.

    மாணிக்கம் சாம்பார் ஊற்று. சூடா காப்பியை கொடு!

    மகன் கிளம்பி விடுவான் என்ற நினைவு வர விஷயத்தைச் சொல்ல முயன்றார்.

    ரங்கா, இந்த வீட்ல ஒரு பெண் வந்து தீபம் ஏத்தணும். உங்கம்மா கூட நான் நிம்மதியா வாழல்ல. அது உனக்குத் தெரியும். ஆனா அவ வீட்டை கோயில் மாதிரி வச்சுகிட்டு இருந்தா.

    காப்பியை எடுத்து உறிஞ்சியபடியே அப்பாவையே பார்த்தான்.

    அம்மா இருக்கற வரைக்கும் வீடு பூராவும் கட்டுக்கட்டா கோலம் அழகு படுத்தும். வத்தல் குழம்பு வச்சா வாசனை தெரு பூரா மணக்கும். பாட்டு பாடினா இயற்கைகூட ஸ்தம்பிக்கும். ஆனா ஏம்பா உங்ககூட ஒற்றுமையா இல்ல?

    தலையைக் குனிந்தபடியே காப்பியைக் குடித்த சந்திரசேகர் விழிகளை உயர்த்தினார். நல்லவேளை! மாணிக்கம் சமையலறையில் இருந்தான்.

    உனக்கு நேரமாச்சு. ஈவ்னிங் சீக்கிரமா வந்துரு. தரகர் ரெண்டு ஜாதகம் கொடுத்தார். அதுல ஒரு வரனை வரச் சொல்லி இருக்கேன்.

    அப்ப இன்னொரு வரனை நாளைக்கு வரச் சொல்லப் போறீங்களா?

    இந்த வரனே முடியட்டுமே?

    ஏம்பா பெண் பார்க்கப் போறது தானே வழக்கம். அதென்ன பிள்ளை பார்க்க வர்றது புது பழக்கம்?

    எனக்காகத்தான் புது வழக்கமா ஏற்பாடு பண்ணினேன்.

    அப்பா, சீரியஸாத்தான் கேட்கறேன். எனக்கு கல்யாணம் அவசியமா?

    ஏம்ப்பா இப்படி கேட்கறே?

    எனக்கு பயமா இருக்குப்பா. அம்மா உங்ககிட்ட போட்ட சண்டை எல்லாம் எனக்கு பசுமரத்தாணி போல நினைவுல இருக்குப்பா.

    ரங்கா, எல்லார் வாழ்க்கையும் ஒண்ணுபோல இருக்காதுப்பா.

    அது எங்க கர்ம வினை. எங்க காலத்துல பெண் பார்க்க வந்தா பார்க்கறதோட சரி. தனியா பேசறதெல்லாம் கிடையாது. இப்ப அப்படி எல்லாம் கிடையாது. பொண்ணோட தனியாப் பேசு. பார்வை, பேச்சுனு பெண்ணை எடை போடலாம் ரங்கா.

    அப்பா அவனைப் பொறுத்தவரை இதமாகப் பேசுகிறவர். அம்மாவோட முணுமுணுப்பு.... எரிச்சல்.... இது ஏன்? அவனுக்கு இன்றுவரை புரியாத குழப்பம்தான். புரியாத ரகசியம்தான். பலமுறை விடை காண முயன்று தோல்வியுற்றான்.

    காரில் போகும் பொழுது பலவிதச் சிந்தனைகள். குழம்பிப் போனான். அலுவலகத்தில் பல பெண்கள் வேலை பார்க்கிறார்கள். யாரையும் நெருங்க விட்டதில்லை. பார்ட்டிகளில் குடிப்பதும் ஆடுவதும் இல்லை. சிந்தனை பூரா வேலை வேலைதான். அவனுக்காகவே இந்த தொழிற்சாலையை சந்திரசேகர் கட்டிக் காப்பாற்றி ஒப்படைத்திருந்தார். இதை ஒருபோதும் அவன் மறந்தானில்லை.

    தன் வாழ்வில் ஒரு பெண்ணுக்கு இடம் தர வேண்டும் என்று நினைத்தவனே இல்லை. இன்று திடீரென்று ஜாதகம் பொருந்தி பெண் வீட்டார் வரப் போகிறார்கள் என்று அப்பா சொன்ன தகவலை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்.

    அலுவலகத்தினுள் நுழைந்ததும் தன்னுடைய அலைபாயும் மனத்தை அடக்கினான். அனைவரும் எழுந்து நின்று 'குட்மார்னிங்’ என்றார்கள். கையை உயர்த்திக் கொண்டே தன்னறைக்குள் நுழைந்தான். என்றைக்கும் இல்லாமல் இன்று தண்ணீர் தேவைப்பட்டது. கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீர் உள்ளே போயிற்று.

    நினைவுக்குதிரை சண்டித்தனம் பண்ணியது. அதை அடக்க முடியாமல்.... இழுத்துப் பிடித்து நேற்றைய வேலையில் கவனத்தை செலுத்தினான். தன் உதவியாளரை அழைத்தான். தன்னுடைய அந்தரங்க காரியதரிசி என்றாலும்கூட தன்னறையில் இடம் தரவில்லை.

    முந்தைய நாள் முடித்த பேப்பர்

    Enjoying the preview?
    Page 1 of 1