Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Geetham... Sangeetham
Geetham... Sangeetham
Geetham... Sangeetham
Ebook122 pages48 minutes

Geetham... Sangeetham

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603191
Geetham... Sangeetham

Read more from Devibala

Related to Geetham... Sangeetham

Related ebooks

Reviews for Geetham... Sangeetham

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Geetham... Sangeetham - Devibala

    http://www.pustaka.co.in

    கீதம்… சங்கீதம்

    Geetham… Sangeetham

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    கச்சேரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் வத்சலா.

    அவளது பக்கவாத்தியக்காரர்களும், மற்ற இசைக் கருவிகளுடன் ஏற்கனவே மாருதி வேனில் புறப்பட்டுப் போயிருந்தார்கள்.

    போலாமா வத்சலா?

    நான் ரெடிம்மா?

    வத்சலா தன் அம்மாவுடன் வாசலில் கால் வைத்த நிமிடம் ஆட்டோ வந்து நின்றது.

    பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பினான் ஜெகன்.

    வத்சலாவின் முகத்தில் இருந்த சிரிப்பு தொலைந்தது.

    என்ன வத்சலா கச்சேரியா? வாணி மஹால்தானே? போஸ்டர் பார்த்தேன். ஜமாய். நீங்க ரெண்டு பேரும் கிளம்பியிருக்க மாட்டீங்கனு தெரிஞ்சுதான் வந்தேன்!

    வத்சலா, அம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.

    என்ன அக்காவைப் பாக்கறே? உன்னோட ஜோடியா சபா வாசல்ல இறங்கறதுன்னு தீர்மானிச்சிட்டேன். எல்லா கச்சேரிக்கும் இனி வரப்போறேன். எப்படி?

    பெரிய நகைச்சுவை போல அவனே உரக்கச் சிரித்தான்.

    வத்சலா விருட்டென உள்ளே போய் விட்டாள். தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டாள்.

    ஓடிட்டா. விட்ருவேனா?

    மறுபடியும் சிரித்தான்.

    ஜெகன், உனக்கு வெக்கமா இல்லே?

    ஏன்? நானென்ன அம்மணமாவா ஆட்டோல வந்து இறங்கினேன், வெக்கப்பட?

    அவளுக்கு மூடே போயாச்சு. இன்னிக்கு கச்சேரி நாள். என்னாகும் நிலமை? ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏங்கிட்டு இருப்பாங்க அவ பாட்டைக் கேட்க!

    நான் வேண்டாம்னா சொல்றேன்?

    உன்னைக் கண்டாலே அவளுக்குப் பிடிக்கறதில்லை ஜெகன். இது புரிஞ்சும் நீயேன் தொந்தரவு பண்றே?

    ஜெகனின் முகம் கடுகடுப்பானது.

    அக்கா! நான் உன் சொந்தத் தம்பி!

    அந்த உறவு காரணமாத்தான் உன்னை உள்ளேயே விடறேன் நான்!

    வத்சலாவை கட்டிக்கப் போறவன்!

    அதை நீ மட்டும் தீர்மானிக்க முடியாது ஜெகன்.

    என்ன சொல்றே?

    ஆமாம்! அவ பெரிய இசையரசி! அவ குரலைக் கேட்டு மயங்க லட்சக்கணக்கான மக்கள் தவமிருக்காங்க. சரியாப் படிக்காம, உத்யோகம் பார்க்காம, ஊரைச் சுத்தற உனக்கு என்ன யோக்யதை இருக்கு ஜெகன், வத்சலாவைக் கட்டிக்க?

    அக்கா! அளவுக்கு மீறி என்னை நீ அவமானப்படுத்தறே!

    இல்லை! நிஜம்பேசறேன். சரஸ்வதியோட அம்சம் எம்பொண்ணு! அவள மனசால நினைக்கக் கூட உனக்கெல்லாம் தகுதி கிடையாது.

    ஜெகன் முகம் ரத்தமிழந்து பயங்கரமாகக் காட்சியளித்தது.

    த பாரு ஜெகன்! கடைசியா உன்னை நான் எச்சரிக்கிறேன். இத்தனை நாள் கூடப்பிறந்த தம்பியாச்சேனு பொறுத்துட்டுப் போனேன். வத்சலாவை மனசால தீண்டக் கூட ஒரு தகுதி வேணும். உனக்கு அது இல்லை. அந்த எண்ணம் இருந்தா இந்த வீட்டுக்கு இனி நீ வராதே! வெறும் தாய் மாமனா மட்டும் யோக்யமா வர்றதா இருந்தா வா!

    டிரைவர் உள்ளே வந்தான்.

    கச்சேரிக்கு நேரமாச்சே! தங்கச்சி புறப்படலையா?

    தோ வந்துட்டோம் பீட்டர். நீ போய் வண்டில இரு! நீ புறப்படு ஜெகன்!

    ஜெகன் கால்களை நகர்த்தினான். சட்டெனத் திரும்பினான்.

    அக்கா!

    சீக்கிரம் சொல்லு!

    ஊர்ல என்ன பேசிக்கறாங்க தெரியுமா?

    என்ன?

    புருஷனே இல்லாம நீ புள்ளை பெத்தவன்னு

    ஜெகன்…!

    வத்சலாவோட அப்பா யாருன்னு ஊரே கேக்குது. என்ன பதில் சொல்லப் போறே? அட, ஏன்... நானே கேக்கறேன்! யாரு வத்சலாவோட அப்பா? நான் கூடப் பார்த்ததில்லையே! முறை தவறிப் பொறந்த பொண்ணுக்கு பாடகிப் பட்டம். அவளை விட எந்த விதத்துல நான் தாழ்ந்து போனேன். உம் பொண்ணு இசைல குயிலா இருக்கட்டும். வேர் தெரிஞ்சா வெறும் பய.கூட அவளைக் கட்டிக்க வர மாட்டான். அப்ப இந்த மாமனைத் தேடி அவளே ஓடி வருவா. நான் வர்றேன்!

    படியிறங்கிப் போய்விட்டான்.

    அம்மா இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள்.

    டெலிபோன் ஒலித்தது.

    வத்சலா வெளியே வந்தாள். அம்மாவை ஒரு நொடி பார்த்து விட்டு ரிசீவரை எடுத்தாள்.

    ம்! நான்தான் பேசறேன். தவிர்க்கமுடியாத சில காரணங்கள். இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே இருப்போம்... ஸாரி! ரிசீவரை வைத்தாள்.

    அம்மா... அம்மா உன்னைத்தான்!

    எ... என்ன வத்சலா?

    போலாமா?...............! என்ன இடிஞ்சு போயிட்டே? கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்டுட்டானா அவன்?

    வத்சலா?

    கச்சேரில உட்கார்ந்தா ஒழுங்கா தம்புரா போட முடியுமா உன்னால?

    நான் போடறது இருக்கட்டும். உன்னால சரியா பாட முடியுமா?

    நிச்சயம் முடியும்! எதுக்காகவும் என் சங்கீதத்தை எப்பவும் நான் இழக்க மாட்டேன். என் சங்கீதத்துக்காக எதையும் இழக்க தயங்கவும் மாட்டேன் - அவசியம் வந்தா! புறப்படு!

    காரில் ஏறினார்கள்.

    என்ன, அந்த ஆள் வந்து தொந்தரவு தருதா தங்கச்சி? ஒரு வார்த்தை சொல்லு! நாலு தட்டுத் தட்டி உட்கார வச்சிர்றன் ஒரு முலைல!

    வேணாம் பீட்டர்! அவனுக்கு முக்கியத்துவம் தரணும்னு அவசியமில்லை வண்டிய எடுங்க! அதன் பிறகு யாரும் பேசவில்லை.

    சபா செக்ரட்டரி வாசலில் நின்று கொண்டிருந்தார் பதட்டத்துடன்.

    வந்துட்டீங்களா? பயந்துட்டேன்!

    ஏன் பயம்? ஒப்புகிட்டா, எப்ப தவறியிருக்கேன் நான்? பக்க வாத்தியமெல்லாம் மேடைக்கு வந்தாச்சா?

    ஆச்சும்மா!

    அம்மாவுடன் வத்சலா மேடை ஏறினாள். நடுவில் நின்று கை கூப்பினாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1